search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sealed"

    • நெல்லையப்பர் கோவில் 4 ரதவீதிகளிலும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது.
    • கோவிலுக்கு செலுத்த வேண்டிய வாடகை கட்டணம் ரூ.5 லட்சத்து 15 ஆயிரத்து 748 -ஐ உடனடியாக கட்டுமாறு அறநிலைய த்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர்.

    நெல்லை:

    நெல்லையப்பர் கோவில் 4 ரதவீதிகளிலும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது.

    சுவாமி சன்னதி தெருவில் சுவாமி அனுப்பு மண்டபத்தில் முருகன், பொன்னையா என்பவர்கள் கடை நடத்தி வருகிறார்கள். இவர்கள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் வாடகை செலுத்தாமல் வந்துள்ளனர்.

    இதுவரை கோவிலுக்கு செலுத்த வேண்டிய வாடகை கட்டணம் ரூ.5 லட்சத்து 15 ஆயிரத்து 748 ஆகும். இதனை உடனடியாக கோவில் நிர்வாகத்திடம் கட்டுமாறு அறநிலையத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் வாடகை செலுத்தாத 2 கடைகளையும் சீல் வைக்குமாறு உத்தரவிட ப்பட்டுள்ளது. அதன்பேரில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா முன்னிலையில் இன்று சம்பந்தப்பட்ட 2 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    பின்னர் 2 கடைகளின் சாவிகளும் நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணியிடம் வழங்கப்பட்டது.

    அப்போது கண்காணிப்பாளர் சுப்பு லெட்சுமி, மேற்கு பிரிவு இன்ஸ்பெக்டர் தனலெட்சுமி என்ற வள்ளி, வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து, கிராம நிர்வாக அதிகாரி ராஜா, அங்கப்பன், தலையாரி முண்டசாமி, இன்ஸ்பெக்டர் இளவரசர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    • தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    அருப்புக்கோட்டை

    தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் அறிவுறுத்தலின் பேரில் டி.எஸ்.பி. சகாய ஜோஸ் அருப்புக்கோட்டை நகர் காவல் துறையில் தனிப்படை அமைத்து செயல்படுத்தினார்.

    தனிப்படை சார்பு ஆய்வாளர் தாமரைக் கண்ணன், நாகராஜ பிரபு, தலைமை காவலர் அன்பழகன் ஆகியோர் அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் கடைகளை சோதனை செய்தனர். அப்போது 3 இடங்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை இருப்பது தெரியவந்தது.

    வெள்ளக்கோட்டை, மலையரசன் கோவில் தெரு மற்றும் பாலையம்பட்டி பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இது குறித்து நகர் காவல்துறையினர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் காசிமிடம் புகார் செய்தனர்.

    உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நேரில் ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருளை விற்ற ேமற்கண்ட 3 கடைகளுக்கும் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார்.

    நாகை மாவட்டத்தில் மாற்று முறை மருத்துவம் என்ற பெயரில் போலியாக செயல்பட்டு வந்த பல்கலைக்கழகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். #NagaiFakeUniversity #UniversitySealed
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவேள்விக்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் குத்தாலத்தில் அகில உலக திறந்தவெளி மாற்றுமுறை மருத்துவ பல்கலைக்கழகம் என்ற பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வந்தார்.

    தொலைதூர பல்கலைக்கழகம் என்ற பெயரில் இவர் நாடு முழுவதும் ஆயுர்வேதா, சித்தா ஆகிய மருத்துவ துறைகளின் கீழ் சான்றிதழ்கள் அளித்துள்ளார்.

    இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இருந்து இவரிடம் பணம் கட்டி ஆயிரக்கணக்கானோர் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மருத்துவ பட்டங்களை பெற்றுள்ளனர். இவரிடம் சான்றிதழ் வாங்கிய ஆயிரக்கணக்கானோர், இந்தியா முழுவதும் மாற்றுமுறை மருத்துவராக மருத்துவம் பார்த்து வருகின்றனர்.

    இந்தநிலையில் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர விண்ணப்பங்கள் வரவேற்பதாக இவர் அளித்த விளம்பரம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்களுக்கு பல்கலைக்கழகம் குறித்து சந்தேகம் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து குத்தாலம் மேலசெட்டித்தெருவில் ஒரு வீட்டில் செயல்பட்ட அந்த பல்கலைக்கழகத்துக்கு அதிகாரிகள் வந்தனர்.

    சென்னையில் உள்ள மருத்துவ விழிப்புணர்வு பணி துணை போலீஸ் சூப்பிரண்டு தாமஸ்பிரபாகர் தலைமையில், மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குனரக அதிகாரிகள் மற்றும் நாகை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் திறந்தவெளி மாற்றுமுறை பல்கலைக்கழகத்தில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அந்த பல்கலைக்கழகம் போலியாக செயல்பட்டது தெரியவந்தது.



    இதைத்தொடர்ந்து அங்கு இருந்த போலி சான்றிதழ்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் குத்தாலம் தாசில்தார் சபீதாதேவி முன்னிலையில் மருத்துவ அதிகாரிகள் போலி பல்கலைக்கழகத்தை மூடி சீல் வைத்தனர்.

    இதுபற்றி சுகாதாரத்துறை இணை இயக்குனர் மகேந்திரன் கூறியதாவது:-

    இந்த போலி மருத்துவ பல்கலைக்கழகம், மாற்றுமுறை மருத்துவம் என்பதை பதிவு செய்யப்படவில்லை. தமிழகத்தில் வேறு எந்த பல்கலைக்கழகத்திலும் பதிவு செய்யப்படவில்லை. இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் போலி சான்றிதழ்களை பெற்று மருத்துவம் பார்த்து வருவதாக தெரிகிறது. இதில் அதிகமாக கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள், சென்னை, மதுரை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்றுள்ளனர். அவர்களது விவரங்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள சுகாதார துறை இணை இயக்குனர்களுக்கு அனுப்பி போலி டாக்டர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #NagaiFakeUniversity #UniversitySealed


    சத்தீஸ்கர் மாநிலத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பு கருதி, வாசலில் சுவர் எழுப்பி சீல் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ChhattisgarhElections #EVMProtection
    ராய்ப்பூர்:

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 12-ந்தேதியும், மீதமுள்ள 72 தொகுதிகளுக்கு 20-ந்தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக 74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீலிடப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் அதிக நாட்கள் இருப்பதால் வாக்கு எந்திரங்களை பாதுகாப்பது சவாலானதாக இருக்கும். எனவே, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    தலைநகர்  ராய்ப்பூரில் மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு பாதுகாப்பாக ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.



    இந்நிலையில், பீமதாரா மாவட்ட தலைமையகத்தில் 3 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளள. வாக்கு எந்திரங்கள் உள்ள அறையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அதிலும் திருப்தி ஏற்படாததால், அந்த அறையின் வாசலில் செங்கற்களால் சுவர் எழுப்பி முற்றிலும் அடைத்துவிட்டனர். வன்முறைக் கும்பல்கள் வாக்குப்பதிவு எந்திரத்தை சூறையாடிவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. #ChhattisgarhElections #EVMProtection

    திருட்டு சி.டி. விற்பனை செய்யும் பர்மா பஜார் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதா? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. #chennaiHighcourt

    சென்னை:

    சென்னை பத்ரியன் தெருவில் உள்ள மொத்த பூ விற்பனை கடைகளுக்கு ‘சீல்’ வைத்து இழுத்து மூட ஐகோர்ட்டு நீதிபதி சுப்பிரமணியம் உத்தர விட்டார். அதனடிப்படையில், 139 பூக் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன. இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பூ வியாபாரிகள் மேல் முறையீடு செய்தனர்.

    இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் கே.கே.சசிரதன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மொத்த பூ வியாபாரிகளை தான் அப்புறப்படுத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால், சில்லரை பூ வியாபாரிகளையும் அதிகாரிகள் விரட்டுகின்றனர் என்று அவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறினார்.

    அப்போது நீதிபதிகள், ‘மொத்த பூ வியாபாரிகளின் கடைகளுக்கு மட்டும் தான் ‘சீல்’ வைக்கப்பட்டதா? அல்லது பூக்கடை பகுதியில் உள்ள பூக்கடை போலீஸ் நிலையத்துக்கும் ‘சீல்’ வைத்து விட்டனரா?’ என்று நகைச்சுவையாக கூறினர்.

    பின்னர், ‘சில்லரை வியாபாரிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றால், அவர்களுக்கு முதலில் நோட்டீசு அனுப்ப வேண்டுமே? அவ்வாறு நோட்டீசு அனுப்பப்பட்டதா?. அப்படியே திருட்டு சி.டி.க்கள் விற்பனை செய்யும் பர்மா பஜாரில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினர்.

    பின்னர், இந்த வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளி வைத்தனர். #chennaiHighcourt

    திருட்டுத்தனமாக டி.வி.டி தயாரித்து விற்கப்படுவது தொடர்பாக மயிலாடுதுறை தியேட்டருக்கு சீல் வைக்கப்பட்டது.
    மயிலாடுதுறை:

    தமிழ் சினிமாவில் திருட்டுத்தனமாக படங்கள் இணையத்தில் வெளியாவதும் டிவிடிக்கள் தயாரித்து விற்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான ‘ஒரு குப்பை கதை’ படம் இணையதளத்திலும், திருட்டு டி.வி.டி.யாகவும் வெளியானது.

    இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் முகம்மது அஸ்லம் நேற்று கடலூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    ‘வெளிநாட்டு உரிமை கொடுத்தால் அதன் மூலம் திருட்டுத்தனமாக படம் வெளியாகிவிடுகிறது என்பதால் என்னுடைய படத்துக்கு வெளிநாட்டு உரிமையை யாருக்கும் கொடுக்கவில்லை. எனவே வெளிநாடுகளில் படம் வெளியாகவில்லை.

    ஆனாலும் இணையத்திலும் திருட்டு டிவிடியிலும் படம் வெளியாகி எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த டிவிடியை வாங்கி ஆராய்ந்ததில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் மயிலாடுதுறை கோமதி திரையரங்கில் தான் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிய வந்தது.

    எனவே சம்பந்தப்பட்ட இணையதளம், திரையரங்கு உரிமையாளர், திரையரங்க மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

    இவ்வாறு புகாரில் கூறி இருந்தார்.

    போலீசார் நடவடிக்கை எடுத்து அதிரடியாக அந்த திரையரங்கிற்கு சீல் வைத்தனர். அந்த திரையரங்க ஊழியர் ஒருவரையும் கைது செய்தனர். #tamilnews
    ×