search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற 3 கடைகளுக்கு சீல்
    X

    தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

    தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற 3 கடைகளுக்கு சீல்

    • தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    • தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    அருப்புக்கோட்டை

    தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் அறிவுறுத்தலின் பேரில் டி.எஸ்.பி. சகாய ஜோஸ் அருப்புக்கோட்டை நகர் காவல் துறையில் தனிப்படை அமைத்து செயல்படுத்தினார்.

    தனிப்படை சார்பு ஆய்வாளர் தாமரைக் கண்ணன், நாகராஜ பிரபு, தலைமை காவலர் அன்பழகன் ஆகியோர் அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் கடைகளை சோதனை செய்தனர். அப்போது 3 இடங்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை இருப்பது தெரியவந்தது.

    வெள்ளக்கோட்டை, மலையரசன் கோவில் தெரு மற்றும் பாலையம்பட்டி பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இது குறித்து நகர் காவல்துறையினர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் காசிமிடம் புகார் செய்தனர்.

    உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நேரில் ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருளை விற்ற ேமற்கண்ட 3 கடைகளுக்கும் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார்.

    Next Story
    ×