என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Satyendar Jain"
- ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிறையில் உள்ள குளியலறையில் சத்யேந்தர் ஜெயின் இன்று திடீரென விழுந்தார். உடனடியாக அவரை சிறை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை சிறையின் குளியலறையில் விழுந்ததில் அவரது முதுகெலும்பில் அடிபட்டது. இந்த காயத்திற்காக அவர் சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் இன்று பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது இடுப்பில் பெல்ட் அணிந்து மிகவும் பலவீனமாக காணப்படுகிறார். அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து சுமார் 35 கிலோ வரை உடல் எடை குறைந்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் நலம்பெற பிரார்த்தனை செய்வதாக கூறி உள்ளார்.
சத்யேந்தர் ஜெயின் ஆதரவாளர்களும் கட்சி தொண்டர்களும் அவரது உடல்நிலை குறித்து கவலையை தெரிவித்துள்ளனர். மேலும் அவரை கொல்ல பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜக பதில் அளித்துள்ளது. கைது செய்யப்படுவதற்கு முன்பு சத்யேந்திர ஜெயின் அதிக உடல் எடையுடன் இருந்ததாகவும், இப்போது எடை குறைந்து சரியான அளவில் இருப்பதாகவும் பாஜக தெரிவித்துள்ளது.
- டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
- சத்யேந்தர் ஜெயின் மிரட்டியதாக 2 அதிகாரிகள் புகார் செய்துள்ளனர்.
புதுடெல்லி :
டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின், சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போதிருந்து டெல்லி திகார் சிறையில் இருந்து வருகிறார்.
சிறையில் அவர் மசாஜ் செய்து கொள்வதும், வெளி உணவை சாப்பிடுவதும் வீடியோவாக வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்தநிலையில், சத்யேந்தர் ஜெயின் மீது திகார் சிறை கூடுதல் ஐ.ஜி., சிறை சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு, உதவி சூப்பிரண்டு, சட்ட அதிகாரி ஆகியோர் டி.ஜி.பி.யிடம் (சிறைகள்) புகார் தெரிவித்துள்ளனர்.
அதில், ''சத்யேந்தர் ஜெயின் அனுபவிக்கும் வசதிகளை நாங்கள் தடுக்க முயற்சிப்பதால் அவர் எங்களை வசை பாடுகிறார். 'நான் வெளியே வந்த பிறகு கடுமையான பின்விளைவுகளை சந்திப்பீர்கள்' என்று மிரட்டுகிறார்'' என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதுபோல், நோட்டீஸ் கொடுக்க சென்ற தங்களை சத்யேந்தர் ஜெயின் மிரட்டியதாக 2 அதிகாரிகள் புகார் செய்துள்ளனர். இதுகுறித்து ஆம் ஆத்மி தரப்போ, டெல்லி அரசு தரப்போ எதுவும் கூறவில்லை.
- திகார் சிறையில் டெல்லி மந்திரிக்கு மசாஜ் செய்தவர் பிசியோதெரபி நிபுணர் இல்லை.
- டிசம்பர் 4-ந்தேதி, டெல்லி மாநகராட்சி தேர்தல் நடக்கிறது.
புதுடெல்லி :
டெல்லியில் நடந்து வரும் ஆம் ஆத்மி அரசில் மந்திரியாக இருப்பவர் சத்யேந்தர் ஜெயின். சுகாதாரத்துறை பொறுப்பு வகித்து வந்தார். சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. கடந்த 5 மாதங்களாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு சிறப்பு சலுகைகளும், விசேஷ உணவு வகைகளும் அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையே, சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் 'மசாஜ்' செய்யப்படும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அவர் படுத்தபடி முதுகு, கால்களுக்கு மசாஜ் எடுத்துக் கொள்வதும், நாற்காலியில் அமர்ந்தபடி தலைக்கு மசாஜ் எடுத்துக் கொள்வதும் இடம்பெற்றிருந்தன. இதையொட்டி, ஆம் ஆத்மியை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
ஆனால், சத்யேந்தர் ஜெயினுக்கு 'மசாஜ்' செய்யப்படவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்தது. அவர் முதுகு தண்டுவட காயத்தால் பாதிக்கப்பட்டதால் 'பிசியோதெரபி' சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறியது.
இந்தநிலையில், டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. அவருக்கு மசாஜ் செய்பவர், பிசியோதெரபி நிபுணர் அல்ல, கற்பழிப்பு குற்றத்துக்காக 'போக்சோ' சட்டத்தில் கைதாகி, திகார் சிறையில் இருக்கும் கைதி என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் பெயர் ரிங்கு.
இதைத்தொடர்ந்து, சத்யேந்தர் ஜெயினை பதவி நீக்கம் செய்யுமாறு பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் கவுரவ் பட்டியா கூறியதாவது:-
புதிய தகவல் வெளியான நிலையில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு மணி நேரத்தில் இதற்கு பதில் சொல்லத் தயாரா? அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
சத்யேந்தர் ஜெயின் ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கக்கூடாது. அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். அந்த பொறுப்பை நிறைவேற்ற முடியாவிட்டால், அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டிசம்பர் 4-ந் தேதி, டெல்லி மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில், ஆம் ஆத்மி மந்திரி பற்றிய தகவல்கள், புயலை கிளப்பி உள்ளது.
- சிறையில் சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்வது போல வீடியோ வெளியானது.
- இதற்கு டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா மறுப்பு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயின் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
இதற்கிடையே, திகார் சிறையில் சொகுசு வசதிகளுடன் சத்யேந்திர ஜெயின் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சிறையில் சொகுசு படுக்கைகளுடன் சத்யேந்திர ஜெயின் மசாஜ் செய்வது போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 முறை அறுவை சிகிச்சை செய்துள்ளதால் பிசியோதரபி சிகிச்சை அளிக்கப்பட்டது எனக் கூறிய துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா, சிறையில் அவருக்கு சகல வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.
- ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டார்.
- சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின், அவரது உறவினர்கள் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தினர்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியிம் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின்.
இதற்கிடையே, டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினை அமலாக்கத் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு உள்ளார் என அமலாக்கத்துறை தெரிவித்தது.
இந்நிலையில், டெல்லி சுகாதாரத் துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் வீடு, அவரது உதவியாளர் மற்றும் உறவினர்கள் இல்லங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.2.83 கோடி, 133 தங்க நாணயங்கள் உள்ளிட்ட 1.80 கிலோ தங்கத்தை அமலாக்கத்துறை கைப்பற்றி உள்ளது.
சத்யேந்திர ஜெயின் வீட்டில் நகைகள், பணம் கைப்பற்றிய நிலையில், அவரை ஏன் பதவி நீக்கம் செய்யவில்லை என டெல்லி பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்