search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saina Nehwal"

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதியுடன் வெளியேறினார். #WorldBadmintonChampionships2018 #Saina
    நான்ஜிங்:

    24-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நான்ஜின் நகரில் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில்  ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொண்டார். இதில் கடுமையாகப் போராடிய சாய்னா நேவால், 6-21, 11-21 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

    இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் சிறப்பாக விளையாடிய சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- அஸ்வினி பொன்னப்பா ஜோடியும் காலிறுதியுடன் வெளியேறியது. இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- அஸ்வினி பொன்னப்பா ஜோடி சீனாவின் ஜெங் சிவெய்- ஹூவாங் யாகிகோன் ஜோடியை எதிர்கொண்டது.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சீன ஜோடி, 21-17, 21-10 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    இந்தியா தரப்பில் பி.வி.சிந்து, சாய் பிரனீத் ஆகியோர் மட்டுமே தற்போது களத்தில் உள்ளனர். #WorldBadmintonChampionships2018 #Saina
    உலக பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா, சிந்து, பிரனீத் உள்ளிட்டோர் கால்இறுதிக்கு முன்னேறினர். மற்றொரு முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார். #WorldBadmintonChampionships2018
    நான்ஜிங்:

    24-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நான்ஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 4-ம் நிலை வீராங்கனையான ராட்சனோக் இன்டானோனை (தாய்லாந்து) சந்தித்தார். ஆக்ரோஷமாக ஆடிய சாய்னா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியதுடன் முதல் செட்டை 22 நிமிடங்களில் வசப்படுத்தினார்.

    இரண்டாவது செட்டிலும் ஆரம்பத்தில் சாய்னாவின் கை ஓங்கி நின்றாலும், அதன் பிறகு முன்னாள் சாம்பியனான இன்டானோன் சரிவை சமாளித்தார். ஒரு கேம் 32 ஷாட் வரை நீடித்ததால், ரசிகர்கள் பரவசமடைந்தனர். 19-19 என்று சமனுக்கு கொண்டு வந்த இன்டானோன் அதன் பிறகு, பந்தை வெளியிலும், வலையிலும் அடுத்தடுத்து அடித்து தவறிழைத்தார். இதனால் 2-வது செட்டும் சாய்னாவின் வசம் ஆனது.

    47 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் சாய்னா 21-16, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தார். சாய்னா அடுத்து ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினுடன் (ஸ்பெயின்) மல்லுகட்ட இருக்கிறார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய புயல் பி.வி.சிந்து 21-10, 21-18 என்ற நேர் செட்டில் சுங் ஜி யென்னை (தென்கொரியா) சாய்த்தார். இதில் 2-வது செட்டில் சிந்து ஒரு கட்டத்தில் 11-13 என்று பின்தங்கி இருந்த போதிலும் எழுச்சி பெற்று எதிராளியை அடக்கினார்.

    42 நிமிடங்களில் வெற்றியை சுவைத்த சிந்து கால்இறுதியில் நடப்பு சாம்பியன் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறார். இவரிடம் தான் கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து இறுதி ஆட்டத்தில் நீண்ட ‘யுத்தம்’ நடத்தி தோற்று இருந்தார். அதற்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்க சரியான சந்தர்ப்பம் சிந்துவுக்கு கனிந்துள்ளது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-13, 21-11 என்ற நேர் செட்டில் ஹான்ஸ் கிறிஸ்டியனை (டென்மார்க்) விரட்டியடித்தார். சாய் பிரனீத் கால்இறுதியில் ஜப்பானின் கென்டோ மோமோட்டாவை சந்திக்கிறார். அதே சமயம் 6-ம் நிலை வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் 18-21, 18-21 என்ற நேர் செட்டில் மலேசியாவின் டாரன் லீவ்விடம் வீழ்ந்தார். இதே போல் 5 முறை உலக சாம்பியனான சீனாவின் லின் டானும் 3-வது சுற்றை தாண்டவில்லை. அவரை சக நாட்டவர் ஷி யுகி 21-15, 21-9 என்ற நேர் செட்டில் பந்தாடினார்.

    கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி- அஸ்வினி பொன்னப்பா ஜோடி 20-22, 21-14, 21-6 என்ற செட் கணக்கில் மலேசியாவின் கோ சூன் ஹியாட்- ஷிவோன் ஜெமி இணையை வீழ்த்தி கால்இறுதியை எட்டியது. #WorldBadmintonChampionships2018
    சீனாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். #SainaNehwal
    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முன்னாள் சாம்பியன் வீராங்கனையான தாய்லாந்தின் ரட்சனோக் இந்தானோன்-ஐ எதிர்கொண்டார்.

    இதில் சாய்னா நேவால் 21-15 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொள்கிறார்.



    கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - அஸ்வினி பொன்னப்பா ஜோடி மலேசியாவின் கோஹ் சூன் ஹயாத் - ஷெவோன் ஜெமி லாய் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 20-22, 21-14, 21-6 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
    உலக பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். #SainaNehwal
    நான்ஜிங்:

    24-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நான்ஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், 72-ம் நிலை வீராங்கனை அலியே டெமிர்பாக்கை (துருக்கி) சந்தித்தார்.

    38 நிமிடம் நடந்த இந்த மோதலில் சாய்னா 21-17, 21-8 என்ற நேர்செட்டில் டெமிர்பாக்கை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். சாய்னா அடுத்து தாய்லாந்து வீராங்கனை ராட்சனோக் இன்டானோனை எதிர்கொள்கிறார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-15, 21-16 என்ற நேர்செட்டில் 87-ம் நிலை வீரர் ஹட் நுயேனை (அயர்லாந்து) விரட்டியடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 37 நிமிடம் தேவைப்பட்டது. 2-வது சுற்று ஆட்டத்தில் ஸ்ரீகாந்த், ஸ்பெயின் வீரர் பாப்லோ அபியானை சந்திக்கிறார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத்தை எதிர்த்து விளையாட வேண்டிய தென்கொரியா வீரர் சன் வான் ஹோ காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகியதால், சாய் பிரனீத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 2-வது சுற்றை எட்டினார்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 21-19, 12-21, 21-19 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் மார்கஸ் எல்லிஸ்-கிறிஸ் லாங்கிரிட்ஜ் இணையை வீழ்த்தியது.

    இதே போல் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி 19-21, 21-10, 21-17 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் சியாங் காய் சின்-ஹூங் ஷி ஹான் இணையை சாய்த்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

    கலப்பு இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-அஸ்வினி பொன்னப்பா இணை 21-9, 22-20 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் மார்க் லாம்ஸ்புஸ்-இசபெல் ஹெர்ட்ரிச் ஜோடியை வெளியேற்றியது. #SainaNehwal

    கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தோல்வியடைந்தார். #SainaNehwal
    கோலாலம்பூரில் மலேசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் 2-வது சுற்றில் ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்த்து விளையாடினார்.

    உலகின் நம்பர்-2 வீராங்கனையான யமகுச்சியின் ஆட்டத்திற்கு சாய்னாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 15-21, 13-21 என சாய்னா தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.



    36 நிமிடத்தில் தோல்வியைத் தழுவிய சாய்னாவிற்கு, யமகுச்சிக்கு எதிரான 6-வது தோல்வி இதுவாகும். 2014-ம் ஆண்டு யமகுச்சியை வீழ்த்தியிருந்தார். அதன்பின் தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளார்.

    முதல் சுற்றில் யமகுச்சி 9-2 என முன்னிலைப் பெற்றிருந்தார். அதன்பின் சாய்னா சிறப்பாக விளையாடி 10-11 என முன்னேறி வந்தார். அதன்பின் யமகுச்சி 18-11 என முன்னேறி, இறுதியில் 21-15 என வெற்றி பெற்றார். 2-வது சுற்றில் யமகுச்சி 8-2 என முன்னிலைப் பெற்று, அதன்பின் 21-13 என வெற்றி பெற்றார்.
    மலேசியாவில் இன்று தொடங்கிய பேட்மிண்டன் தொடர் போட்டியின் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். #MalaysiaOpenbadminton #SainaNehwal #Malaysiaopenbadminton2018

    மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் இன்று தொடங்கின. இதில் இந்தியாவின் சாய்னா நேவால், பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், எச்.எஸ். பிரனோய் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனையான சாய்னா நேவால், ஹாங்காங் வீராங்கனையான யிப் புய் யின்னை எதிர்கொண்டார்.

    இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சாய்னா முதல் செட்டை 21-12 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் இரண்டாவது செட்டையும் 21-16 என கைப்பற்றினார். 

    இறுதியில் 21-12, 21-16 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சாய்னா நேவால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். சாய்னா தனது இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இரண்டாம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகனே யமகுச்சியை எதிர்கொள்கிறார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வெர்மா, இந்தோனேசியாவின் டாமி சுகியார்டோவிடம் 21-13, 21-5 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறினார். #MalaysiaOpenbadminton #SainaNehwal 
    ×