search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "resuce"

    கேரளாவில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கிய மனைவி மற்றும் குழந்தையை அவரது கணவர் மீட்டு பத்திரமான இடத்திற்கு அழைத்துச் சென்றார். #keralarain #keralafloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவை புரட்டிப்போட்ட மழை வெள்ளம் காரணமாக குடும்பத்தையும், உற்றார் உறவினர்களையும் இழந்தும், பிரிந்தும் தவிப்பவர்கள் ஏராளம்.

    தற்போது கேரளாவில் இயல்புநிலை திரும்பும் சூழ்நிலை உருவாகி வருவதால் பிரிந்து சென்றவர்களை தேடும் பணியிலும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

    செங்கனூர் விருவன் மண்டூர் பகுதியை சேர்ந்தவர் அகிலா. இவரது கணவர் அருண். பிரசவத்திற்காக சில மாதங்களுக்கு முன்பு அகிலா தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு 2 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து அவர் தாய் வீட்டிலேயே வசித்துவந்தார்.

    இந்த நிலையில் அவரது வீட்டை மழை வெள்ளம் சூழ்ந்ததால் அவரால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. இதனால் குழந்தை மற்றும் வயதான பெற்றோருடன் அகிலா அந்த வீட்டின் மாடியில் தஞ்சமடைந்தார்.

    போன் மூலம் தனது கணவர் அருணுக்கு இது பற்றி தெரிவித்தார். உடனே அவர் அங்கு செல்ல முடியாதபடி அதிகளவு வெள்ளப் பெருக்கு காணப்பட்டது. 5 நாட்கள் தவிப்புக்கு பிறகு தனது உறவினர்கள் சிலர் உதவியுடன் ஒரு படகு மூலம் அங்கு சென்ற அருண் தனது மனைவி, குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்டு பத்திரமான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

    செங்கனூர் பகுதியை சேர்ந்த லெட்சுமி என்ற பெண்ணும் தனது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்ற போது அவரது வீட்டை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தனது 11 மாத குழந்தை மற்றும் பெற்றோருடன் தனது வீட்டு மாடியில் பாதுகாப்பாக தங்கிக்கொண்டார். அவரது வீட்டு அருகே வசிக்கும் 14 பேரும் அவரது வீட்டில் தஞ்சம் அடைந்தனர்.



    3 நாட்களாக அவர்கள் பகுதிக்கு உதவிக்கு யாரும் வரவில்லை. செல்போன் செயல்படாததால் இவர்களாலும் தங்கள் நிலைமையை மற்றவருக்கு தெரியப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் அங்கு படகில் சென்ற மீட்புபடையினர் மூலம் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். #keralarain #keralafloods
    தஞ்சை வெண்ணாறில் 9 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் குளித்து கொண்டிருந்த சிறுமி நீரில் அடித்து சென்றபோது அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை வெண்ணாறில் குளித்து கொண்டிருந்தபோது தண்ணீரின் அதிக வேகத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுமியை உயிருடன் மீட்ட நிலையில் மற்றொரு சிறுமியின் உடலை தேடி வருகிறார்கள்.

    தஞ்சை அருகே உள்ள கூடலூர் நந்தவனத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகள் வசந்தகுமாரி (வயது 15). அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகள் தர்ஷினி (13).

    அய்யம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வசந்த குமாரி 9-ம் வகுப்பும், தர்ஷினி 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். நேற்று சுதந்திர தின விடுமுறை என்பதால் நண்பர்களான இருவரும் மதியம் வெண்ணாற்றில் குளித்து கொண்டிருந்தனர்.

    வெண்ணாற்றில் வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் இருவரையும் இழுத்து சென்றது. இதில் இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.

    இதைப்பார்த்த அப்பகுதியில் உள்ள வாலிபர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி மாணவி தர்ஷினியை உயிருடன் மீட்டனர். ஆனால் வசந்தகுமாரியை காணவில்லை.

    பின்னர் இதுகுறித்து தஞ்சை தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். உடனே அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வசந்தகுமாரியை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். பிறகு இரவு நேரமாகி விட்டதால் வசந்தகுமாரியை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் வெண்ணாற்றில் மாணவியின் உடலை தேடி வருகின்றனர்.

    மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
    ×