search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ravi Shankar Prasad"

    வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதளங்களை தேசவிரோத செயல்களுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். #WhatsApp #RaviShankarPrasad
    புதுடெல்லி :

    நாடுமுழுதும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்கள் மூலம் பரவலாக வதந்திகள் பரவிவருகிறது, தமிழகம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் குழந்தை கடத்தல் பற்றி பரவிய வதந்தியை உண்மை என நம்பி  பொதுமக்கள் கும்பலாக சேர்ந்து தாக்குதல் நடத்தியதில் அப்பாவிகள் சிலர் உயிரிழந்தனர்.

    அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு எதிராகவும் இவ்வாறான வதந்திகள் பரப்பப்பட்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற வழிவகுக்கிறது.

    இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய  தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப  மந்திரி ரவிசங்கர் பிரசாத், வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் குறிபிட்டுள்ளதாவது :-

    வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு  கடிதம் எழுதியுள்ளது. அதனபடி, ஒரே நேரத்தில் பார்வேர்டு செய்திகளை 5 பேருக்கு மட்டுமே அனுப்ப வாட்ஸ்அப் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மேலும், அனுப்பப்படும் செய்தி பார்வேர்டு செய்தி தானா ? என்பதை அறிந்துகொள்ளும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. 

    யாரேனும், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களை தேசவிரோத செயல்களுக்கு பயன்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #WhatsApp #RaviShankarPrasad
    ஓட்டுனர் உரிமத்துடனும் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். #aadhaarcard #ravishankarprasad
    புதுடெல்லி:

    பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களுள் ஒன்று ஆதார் அட்டை. தனி மனித அடையாளமாக அறிவிக்கப்பட்ட இந்த ஆதார் வங்கி கணக்கு முதல் அனைத்திலும் இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

    இதன்மூலம் மக்கள் பல்வேறு சிரமத்துக்கு உள்ளான நிலையில், ஆதார் எண்ணை கொண்டு ஊழல் செய்ய பா.ஜ.க அரசு முயற்சிப்பதாகவும், தனி மனித விவரங்களை அரசு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு அளித்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.

    மேலும், இந்த ஆதார் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும், வழக்குகளும் நிலுவையில் உள்ளன.



    இந்நிலையில், ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரியுடன் மத்திய சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். சுமார் ஒரு ஆண்டாக இந்த பேச்சு வார்த்தை குறித்த தகவல் வெளியாகி வருகிறது.

    இந்நிலையில், இன்று, செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத், ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், சாலைகளில் மதுபோதையிலோ அல்லது வேறு காரணங்களினால் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் ஓட்டுனர்களை இதன் மூலம் எளிதில் பிடித்து விட முடியும் என்றும், மாநிலம் விட்டு வேறு மாநிலத்துக்கு தப்பிச்சென்றாலும் ஓட்டுனரை கைது செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

    மேலும், ஒருவர் தன் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை மட்டுமே மாற்றியமைக்க முடியும் என்றும் கைரேகையினை மாற்ற முடியாது எனவும் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். #aadhaarcard #ravishankarprasad
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க நீண்டகால தீர்வு முறையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார். #RaviShankarPrasad #PetrolDiesel
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் இந்தியாவில் மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக உயர்த்தி வருகின்றன.

    டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகளும், டீசல் விலை 26 காசுகளும் நேற்று உயர்ந்தது. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80-ஐ தாண்டியது. தொடர்ந்து 10-வது நாளாக எரிபொருட்களின் விலை உயர்ந்துள்ளது.



    இந்த நிலையில் டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய சட்டமந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் பெட்ரோல், டீசல் உயர்வு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில், “அடிக்கடி எரிபொருட்களின் விலை உயருவது விவாதத்துக்கும், கவலைக்கும் உரிய ஒன்றாகும். இது குறித்த முழுமையான நடைமுறைகளில் மத்திய அரசு மிகவும் தீவிர கவனத்துடன் ஈடுபட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க நீண்டகால முறையில் தீர்வு காண்பதற்கும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது” என்றார்.

    எரிபொருட்கள் மீது விதிக்கப்படும் வரி குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கும்போது, “இந்த வரிகள் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. வரிகளில் கிடைக்கும் வருமானத்தில்தான் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற சாலைகள் அமைக்கப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது. எனவே வரி விதிப்பது தவிர்க்க முடியாதது” என்றார்.  #RaviShankarPrasad #PetrolDiesel
    ×