search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Raksha Bandhan"

    • கடந்த 2017-ம் ஆண்டு முதல் ரக்‌ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறுகளை கரூர் பரணிபார்க் பள்ளி மாணவ, மாணவிகள் அனுப்பி வருகிறார்கள்
    • ராக்கி கயிறுகளில் படைமாட்சி அதிகாரத்தில் உள்ள திருக்குறளை பள்ளியின் ஆசிரிய, ஆசிரியர்களே பொறித்தனர்.

    கரூர் :

    ரக்‌ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு, ராணுவ வீரர்களுக்கு 1.5 லட்சம் ராக்கி கயிறுகளை கரூர் பரணிபார்க் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனுப்பினர்.

    கடந்த 2017-ம் ஆண்டு முதல் ரக்‌ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறுகளை கரூர் பரணிபார்க் பள்ளி மாணவ, மாணவிகள் அனுப்பி வருகிறார்கள்.

    நிகழாண்டு நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூறும் வகையிலும், பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கி, முப்படை களின் தலைவராகவும், குடியரசுத் தலைவராகவும் பதவியேற்ற திரெளபதி முர்முவை கௌரவப்படுத் தும் வகையிலும் இப்பள்ளியில் 1.5 லட்சம் ராக்கி கயிறுகள் தயாரிக்கும் பணி நடைபெற்றது.

    இதில், 75,000 ராக்கி கயிறுகளில் படைமாட்சி அதிகாரத்தில் உள்ள திருக்குறளை பள்ளியின் ஆசிரிய, ஆசிரியர்களே பொறித்தனர். மீத முள்ள 75,000 ராக்கி கயிறுகளை மாணவ, மாணவிகள் தயாரித்தனர். இந்தப் பணி திங்கள்கிழமை நிறைவு பெற்றதை அடுத்து கரூர் ரயில் நிலைய மேலாளர் ராஜராஜன் முன்னிலை பள்ளித் தாளாளர் எஸ்.மோகனரெங்கன், செயலாளர் பத்மாவதி, அறங்காவலர் சுபாஷினி ஆகி யோர் தலைமையில் ரயில் மூலம் புதுதில்லிக்கு அனுப்பப்பட்டது.

    இதுகுறித்து பள்ளி முதன்மை முதல்வர் சொ.ராமசுப்ரமணியன் கூறுகையில்,நிகழாண்டு சற்று வித்தியாசமாக திருக்குறளை 18 வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து, ஒவ்வொரு ராக்கியிலும் ஒருமொழியில் திருக்குறளை ஆசிரியர்களாகிய நாங்களே பதித்துள் ளோம்.

    இந்த ராக்கி கயிறுகள் முன்னாள் எம்.பி. தருண் விஜய்யிடம்வழங்கப்பட்டு, அவர் ஆகஸ்ட் 11ஆம்தேதி நடைபெறும் ரக்‌ஷா பந்தன் விழாவில் ராணுவ அதிகா ரிகளிடம் வழங்குவார். அவர்கள் மூலம் 18 மொழிகள் கொண்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாட்டை பாதுகாத்துக்கொண்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்களின் கைகளில் அணிவிக்கப்பட உள்ளது என்றார்.

    • ரக்‌ஷா பந்தன் பண்டிகை, சகோதர-சகோதரி பந்தத்தை கொண்டாடுகிறது.
    • மாநில எல்லைகளுக்குள் ஓடும் பேருந்தில் பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படாது.

    ராஜஸ்தான் மாநிலத்தில், ரக்‌ஷா பந்தன் அன்று பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

    வரும் ஆகஸ்டு 11-ம் தேதி அன்று ராக்கி என்றும் அழைக்கப்படும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை, சகோதர-சகோதரி பந்தத்தை கொண்டாடுகிறது.

    ராஜஸ்தான் சாலை மார்க்கத்தில் பேருந்துகளில், ஏசி, வால்வோ மற்றும் அகில இந்திய அனுமதி பெற்ற பேருந்துகளை தவிர, மாநில எல்லைகளுக்குள் ஓடும் பேருந்தில் பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் நடந்த ‘ரக்‌ஷா பந்தன்’ கொண்டாட்டத்தில் ‘ராக்கி’ கட்டிய சகோதரிகளுக்கு, அவர்களின் சகோதரர்கள் 2,400 கழிவறைகளை கட்டி பரிசாக கொடுத்துள்ளனர். #RakshaBandhan
    பெங்களூரு :

    சகோதர-சகோதரிகள் இடையேயான பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ‘ரக்‌ஷா பந்தன்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் நேற்று முன்தினம் ‘ரக்‌ஷா பந்தன்’ கொண்டாடப்பட்டது.

    இந்த கொண்டாட்டத்தின்போது சகோதரிகள் தங்களின் சகோதரர்கள் மற்றும் பிற ஆண்களுக்கு சகோதர பாசத்துடன் அவர்களின் கைகளில் ‘ராக்கி’ கட்டுவார்கள். இதைத்தொடர்ந்து சகோதரிகளுக்கு, சகோதரர்கள் பரிசுகளை வழங்குவார்கள்.



    இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் நடந்த ‘ரக்‌ஷா பந்தன்’ கொண்டாட்டத்தில் ‘ராக்கி’ கட்டிய சகோதரிகளுக்கு, அவர்களின் சகோதரர்கள் கழிவறைகள் கட்டி பரிசாக கொடுத்துள்ளனர். பெலகாவி முழுவதும் இவ்வாறாக 2,400 ஆயிரம் கழிவறைகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன.

    பெலகாவி மாவட்ட மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி ராமசந்திரன் வீடுகளில் கழிவறைகள் கட்டுவதன் அவசியம் குறித்து பல்வேறு முறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். இதில் ‘ரக்‌ஷா பந்தன்’ கொண்டாட்டத்தில் சகோதரிகளுக்கு கழிவறைகள் கட்டி கொடுத்து பரிசாக அளிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இவருடைய முயற்சியின் நடவடிக்கையாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #RakshaBandhan
    சகோதர-சகோதரிகளின் பாசத்தை உணர்த்தும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பல்வேறு துறைகளை சேர்ந்த 55 பெண் பிரபலங்களை பின்தொடர்ந்தார். #PMModiTwitter #PMModifollows
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடியின் அலுலவக டுவிட்டர் பக்கத்தை சுமார் 2 கோடியே 70 லட்சம் அபிமானிகள் பின்தொடர்ந்து வருகின்றனர். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் உள்பட 438 பேரை அவரது அதிகாரப்பூர்வ அலுலவகத்தின் டுவிட்டர் பக்கம் பின்தொடர்கிறது.

    இதேபோல், நரேந்திர மோடி என்ற பெயர் கொண்ட தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில் அவரை சுமார் 4 கோடியே 30 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். சுமார் 2 ஆயிரம் பேரின் டுவிட்டர் பக்கங்களை அவர் பின்தொடர்கிறார்.

    இந்நிலையில், சகோதர-சகோதரிகளின் பாசத்தை உணர்த்தும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை நாளான இன்று விளையாட்டு, ஊடகம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 55 பெண் பிரபலங்களை டுவிட்டரில் அவர் பின்தொடர்ந்தார்.

    பேட்மிண்டன் வீராங்கனை அஷ்வினி பொன்னப்பா, டென்னிஸ் வீராங்கனைகளான சானியா மிர்ஸா மற்றும் கர்மான் கவுர், ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷா, முன்னாள் இந்திய அழகியும் குழந்தைகள் நல ஆர்வலருமான சுவரூப், பத்திரிகையாளர்கள் ரோமானா இஸார் கான், சுவேதா சிங், பத்மஜா ஜோஷி, ஷீலா பட், ஷாலினி சிங். 

    நடிகை கோயெனா மித்ரா, பளுதூக்கும் வீராங்கனை கர்னம் மல்லேஸ்வரி, பத்திரிகை புகைப்படக் கலைஞர் ரேணுகா புரி மற்றும் சில பெண் பா.ஜ.க. உறுப்பினர்கள் மற்றும் சில மாநிலங்களை சேர்ந்த மந்திரிகளையும் அவர் பின்தொடர்ந்துள்ளார்.

    அவர்களில் சிலர் தங்களை பின்தொடர்வதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்ததுடன் ரக்‌ஷா பந்தன் நல்வாழ்த்துகளையும் பரிமாறி கொண்டனர். #PMModiTwitter #PMModifollows
    சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் ராக்கி கயிறு கட்டி வாழ்த்து தெரிவித்தார். #HappyRakshaBandhan #RakshaBandhan
    புதுடெல்லி:

    சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்‌ஷா பண்டிகை வட மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுவது உண்டு. பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டுவர், அதற்கு பதிலாக ஆண்கள் தங்களது சகோதரிகளுக்கு பரிசுகள் கொடுக்க வேண்டும். இன்று ரக்‌ஷா பந்தன் பண்டியை வெகு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.



    டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பெண்கள் மற்றும் சிறுமிகள் ராக்கி கட்டினர். அதேபோல, பிரதமர் மோடிக்கும் சிறுமிகள், பெண்கள் ராக்கி கயிறு கட்டி வாழ்த்து தெரிவித்தனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் ராக்கி கட்டி வாழ்த்து கூறினார்.



    ரக்சா பந்தனை முன்னிட்டு உ.பி.யில் அரசு பேருந்துகளில் பெண்கள் இரண்டு நாள்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #RakshaBandhan
    லக்னோ:

    சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் பண்டிகை நாளை மறுநாள் (ஆகஸ்ட் 26) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுபவர்களின் கையில் ராக்கி கட்டி மகிழ்வார்கள். எனவே, அனைத்து சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கும் இது மிகவும் விசேஷமான நிகழ்வாக உள்ளது.



    இந்நிலையில், ரக்சா பந்தனை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இயங்கும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுதொடர்பாக, மாநில போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரக்சா பந்தனை முன்னிட்டு ஆகஸ்ட் 25 மற்றும் 26-ம் தேதிகளில் உ.பி. மாநில போக்குவரத்து கழகத்தின் ஏசி மற்றும் ஏசி அல்லாத அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்’ என தெரிவித்துள்ளது. #RakshaBandhan
    ரக்சா பந்தன் அன்று டெல்லியில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #RakshaBandhan
    புதுடெல்லி:

    சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் பண்டிகை நாளை மறுநாள் (ஆகஸ்ட் 26) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுபவர்களின் கையில் ராக்கி கட்டி மகிழ்வார்கள். எனவே, அனைத்து சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கும் இது மிகவும் விசேஷமான நிகழ்வாக உள்ளது.



    இந்நிலையில், ரக்சா பந்தனை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் இயங்கும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ‘ரக்சா பந்தனை முன்னிட்டு ஆகஸ்ட் 26-ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 10 அணி வரை டெல்லி போக்குவரத்து கழகத்தின் ஏசி மற்றும் ஏசி அல்லாத அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்’ என டெல்லி போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அனைத்து பணிமனை மேலாளர்களுக்கும் போக்குவரத்துக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. #RakshaBandhan
    ×