என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Raksha Bandhan"
- கடந்த 2017-ம் ஆண்டு முதல் ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறுகளை கரூர் பரணிபார்க் பள்ளி மாணவ, மாணவிகள் அனுப்பி வருகிறார்கள்
- ராக்கி கயிறுகளில் படைமாட்சி அதிகாரத்தில் உள்ள திருக்குறளை பள்ளியின் ஆசிரிய, ஆசிரியர்களே பொறித்தனர்.
கரூர் :
ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு, ராணுவ வீரர்களுக்கு 1.5 லட்சம் ராக்கி கயிறுகளை கரூர் பரணிபார்க் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனுப்பினர்.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறுகளை கரூர் பரணிபார்க் பள்ளி மாணவ, மாணவிகள் அனுப்பி வருகிறார்கள்.
நிகழாண்டு நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூறும் வகையிலும், பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கி, முப்படை களின் தலைவராகவும், குடியரசுத் தலைவராகவும் பதவியேற்ற திரெளபதி முர்முவை கௌரவப்படுத் தும் வகையிலும் இப்பள்ளியில் 1.5 லட்சம் ராக்கி கயிறுகள் தயாரிக்கும் பணி நடைபெற்றது.
இதில், 75,000 ராக்கி கயிறுகளில் படைமாட்சி அதிகாரத்தில் உள்ள திருக்குறளை பள்ளியின் ஆசிரிய, ஆசிரியர்களே பொறித்தனர். மீத முள்ள 75,000 ராக்கி கயிறுகளை மாணவ, மாணவிகள் தயாரித்தனர். இந்தப் பணி திங்கள்கிழமை நிறைவு பெற்றதை அடுத்து கரூர் ரயில் நிலைய மேலாளர் ராஜராஜன் முன்னிலை பள்ளித் தாளாளர் எஸ்.மோகனரெங்கன், செயலாளர் பத்மாவதி, அறங்காவலர் சுபாஷினி ஆகி யோர் தலைமையில் ரயில் மூலம் புதுதில்லிக்கு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து பள்ளி முதன்மை முதல்வர் சொ.ராமசுப்ரமணியன் கூறுகையில்,நிகழாண்டு சற்று வித்தியாசமாக திருக்குறளை 18 வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து, ஒவ்வொரு ராக்கியிலும் ஒருமொழியில் திருக்குறளை ஆசிரியர்களாகிய நாங்களே பதித்துள் ளோம்.
இந்த ராக்கி கயிறுகள் முன்னாள் எம்.பி. தருண் விஜய்யிடம்வழங்கப்பட்டு, அவர் ஆகஸ்ட் 11ஆம்தேதி நடைபெறும் ரக்ஷா பந்தன் விழாவில் ராணுவ அதிகா ரிகளிடம் வழங்குவார். அவர்கள் மூலம் 18 மொழிகள் கொண்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாட்டை பாதுகாத்துக்கொண்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்களின் கைகளில் அணிவிக்கப்பட உள்ளது என்றார்.
- ரக்ஷா பந்தன் பண்டிகை, சகோதர-சகோதரி பந்தத்தை கொண்டாடுகிறது.
- மாநில எல்லைகளுக்குள் ஓடும் பேருந்தில் பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படாது.
ராஜஸ்தான் மாநிலத்தில், ரக்ஷா பந்தன் அன்று பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
வரும் ஆகஸ்டு 11-ம் தேதி அன்று ராக்கி என்றும் அழைக்கப்படும் ரக்ஷா பந்தன் பண்டிகை, சகோதர-சகோதரி பந்தத்தை கொண்டாடுகிறது.
ராஜஸ்தான் சாலை மார்க்கத்தில் பேருந்துகளில், ஏசி, வால்வோ மற்றும் அகில இந்திய அனுமதி பெற்ற பேருந்துகளை தவிர, மாநில எல்லைகளுக்குள் ஓடும் பேருந்தில் பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் நடந்த ‘ரக்ஷா பந்தன்’ கொண்டாட்டத்தில் ‘ராக்கி’ கட்டிய சகோதரிகளுக்கு, அவர்களின் சகோதரர்கள் கழிவறைகள் கட்டி பரிசாக கொடுத்துள்ளனர். பெலகாவி முழுவதும் இவ்வாறாக 2,400 ஆயிரம் கழிவறைகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன.
பெலகாவி மாவட்ட மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி ராமசந்திரன் வீடுகளில் கழிவறைகள் கட்டுவதன் அவசியம் குறித்து பல்வேறு முறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். இதில் ‘ரக்ஷா பந்தன்’ கொண்டாட்டத்தில் சகோதரிகளுக்கு கழிவறைகள் கட்டி கொடுத்து பரிசாக அளிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இவருடைய முயற்சியின் நடவடிக்கையாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #RakshaBandhan
இந்நிலையில், ரக்சா பந்தனை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் இயங்கும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ரக்சா பந்தனை முன்னிட்டு ஆகஸ்ட் 26-ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 10 அணி வரை டெல்லி போக்குவரத்து கழகத்தின் ஏசி மற்றும் ஏசி அல்லாத அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்’ என டெல்லி போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து பணிமனை மேலாளர்களுக்கும் போக்குவரத்துக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. #RakshaBandhan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்