search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரக்சா பந்தன் நாளில் டெல்லி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்
    X

    ரக்சா பந்தன் நாளில் டெல்லி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்

    ரக்சா பந்தன் அன்று டெல்லியில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #RakshaBandhan
    புதுடெல்லி:

    சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் பண்டிகை நாளை மறுநாள் (ஆகஸ்ட் 26) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுபவர்களின் கையில் ராக்கி கட்டி மகிழ்வார்கள். எனவே, அனைத்து சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கும் இது மிகவும் விசேஷமான நிகழ்வாக உள்ளது.



    இந்நிலையில், ரக்சா பந்தனை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் இயங்கும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ‘ரக்சா பந்தனை முன்னிட்டு ஆகஸ்ட் 26-ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 10 அணி வரை டெல்லி போக்குவரத்து கழகத்தின் ஏசி மற்றும் ஏசி அல்லாத அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்’ என டெல்லி போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அனைத்து பணிமனை மேலாளர்களுக்கும் போக்குவரத்துக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. #RakshaBandhan
    Next Story
    ×