search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajkiran"

    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி-2' படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Sandakozhi2 #Vishal
    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் `சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் சமீபத்தில் வெளியான பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தநிலையில் படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    விஷாலின் 25-வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரித்துள்ளார். படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ரிலீஸாக இருக்கிறது. #Sandakozhi2 #Vishal #KeerthySuresh 

    விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் `சண்டக்கோழி 2' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், விவசாயிகளுக்கு உதவும் வகையில் நடிகர் விஷால் ரூ.11 லட்சம் வழங்கினார். #Sandakozhi2 #Vishal
    விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `சண்டக்கோழி 2'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விஷால் 25 விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் மோகன்லால், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு பேசினார்கள். 

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பதவியேற்பு விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஒவ்வொரு டிக்கெட்டின் லாபத்திலிருந்து ஒரு ரூபாய் நலிந்த ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி தற்போது விஷால் விஷால் 25 நிகழ்ச்சியில் தேர்தெடுக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட நலிந்த விவசாயிகளுக்கு 11 லட்சம் வழங்கினார். துப்பறிவாளன் மற்றும் இரும்புத்திரை படத்தின் டிக்கெட் விற்று கிடைத்த லாபத்தில் விஷால் இதை வழங்கியுள்ளார்.



    அதன் பின்னர் பேசிய விஷால், இது எனக்கு மகிழ்ச்சியான தருணம். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கால் வைக்க முடியும். விவசாயிகளுக்கு நம்மால் உதவ முடிகிறது என்பது மிகப்பெரிய விஷயம். நாம் 30 விவசாயிகளுக்கு உதவுவதை பார்த்து மேலும் 2 பேர் நாம் உதவியதை விட அதிகமான விவசாயிகளுக்கு உதவுவார்கள். நாம் பலருக்கு முன்னுதாரணமாக உள்ளது மகிழ்ச்சி. இதை போல் எல்லோரும் விவசாயிகளுக்கு உதவி அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும். 



    அப்போது மேடையிலிருந்து இயக்குனர் பாண்டிராஜ், விஷால் எதற்கு என்னை விவசாயிகளுக்கான உதவி தொகையை வழங்க சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்த எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியை தந்தது. நான் வேகமாக படமெடுப்பவன். விஷால் எனக்கு கதகளி திரைப்படத்தை வேகமாக முடித்து தந்து சொன்ன தேதியில் வெளியிட்டார் என்றார் பாண்டிராஜ். #Sandakozhi2 #Vishal #KeerthySuresh

    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஷால், படத்தை தயவு செய்து விமர்சனம் செய்யாதீர்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார். #Sandakozhi2 #Vishal
    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் விஷால், கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லிங்குசாமி, நடிகர் ராஜ்கிரண், ஒளிப்பதிவாளர் சக்தி, எடிட்டர் பிரவீன் கே.எல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

    விழாவில் நடிகர் விஷால் பேசும் போது,

    25 படங்களில் என்னுடன் சேர்ந்து பயணம் செய்த அனைவருக்கும் நன்றி. சண்டக்கோழி எனக்காக எழுதப்பட்ட கதையில்லை. விஜய் அல்லது சூர்யாவுக்காக எழுதப்பட்டது. இந்த மாதிரி ஒரு கதை இருப்பதாக எனக்கு தெரியவந்து நான் தான் லிங்குசாமியிடம் சென்று கேட்டேன். அவர் என்னை ஒரு அக்ஷன் ஹீரோவா கொண்ட வந்து நிறுத்திவிட்டார். 24 படங்களை முடித்துவிட்டு 25-வது படத்தில் சண்டக்கோழி-2 படத்தில் நடித்திருக்கிறேன். கண்டிப்பாக இந்த படம் எனது வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும். கீர்த்தி உடன் நடித்ததில் பெருமை. 



    கூடியவிரைவில் நான் படம் இயக்குகிறேனோ இல்லையோ, கீர்த்தி சுரேஷ் படம் இயக்குவார். சண்டக்கோழி-2 ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி வெளியாகும். 

    தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஒரு கோரிக்கையை வைக்கிறேன். படத்திற்கு விமர்சனம் செய்பவர்கள் தயவுசெய்து 3 நாட்களுக்கு பிறகு விமர்சியுங்கள். அப்போது தான் சிறிய படம் என்றாலும், பெரிய படம் என்றாலும் வரவேற்பு கிடைக்கும். நான் அனைவரையும் சொல்லவில்லை, குறிப்பிட்ட நபர்களுக்கு தான் வேண்டுகோள் வைக்கிறேன். #Sandakozhi2 #Vishal

    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் `சண்டக்கோழி-2' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Sandakozhi2 #Vishal
    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் `சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் 24-ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    யுவன் ஷங்கர் ராஜா இசையில் படத்தில் இருந்து ஏற்கனவே செங்கராட்டன் கோட்டையிலே, கம்பத்து பொண்ணு உள்ளிட்ட இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
    இதில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    விஷாலின் 25-வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரித்துள்ளார். படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ரிலீஸாக இருக்கிறது. #Sandakozhi2 #Vishal #KeerthySuresh #VaralakshmiSarathKumar

    தனுஷ் இயக்கிய பா.பாண்டி படத்தை அடுத்து மீண்டும் கதையின் நாயகனாக ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ராஜ்கிரண் நடிக்க இருக்கிறார். #Rajkiran
    முதலில் கதாநாயகன், முக்கிய கதாபாத்திரம், குணச்சித்திர வேடம், வில்லன் என பல அவதாரங்கள் எடுத்த ராஜ் கிரண், தனுஷ் இயக்கிய ‘பா.பாண்டி’ படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் கதையின் நாயகனாக நடிக்க இருக்கிறார். 

    ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தை டைரக்டு செய்தவர், ராம்பிரகாஷ் ராயப்பா. இவர், அந்த படத்தை அடுத்து, ‘போக்கிரி ராஜா’ படத்தை டைரக்டு செய்தார். தற்போது, ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது. இதையடுத்து ராஜ்கிரண் முன்னணி கதாபாத்திரத்தில் வைத்து படம் இயக்குகிறார். 



    ராஜ்கிரணுடன் டி.வி. புகழ் ரக்‌ஷன் நடிக்கிறார். மற்ற நடிகர்-நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது, நவீன தொழில்நுட்பத்தை விரிவாக அலசும் படமாக உருவாகிறது. கல்பத்தரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கிறார்.
    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் `சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில், நடிகை வரலட்சுமி தனது டப்பிங்கில் முதல் பாதியை முடித்துள்ளார். #Sandakozhi2 #VaralakshmiSarathKumar
    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் `சண்டக்கோழி-2' உருவாகி வருகிறது. விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில், நடிகை வரலட்சுமி படத்தின் முதல் பாதிக்கான தனது டப்பிங்கை முடித்துவிட்டதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கிடையே யுவன் ஷங்கர் ராஜா இசையில் படத்தில் இருந்து கம்பத்து பொண்ணு என்ற பாடல் வரிகள் அடங்கிய வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    விஷாலின் 25-வது படமாக உருவாகும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரித்துள்ளார்.

    ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வருகிற அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. #Sandakozhi2 #Vishal #KeerthySuresh #VaralakshmiSarathKumar

    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் - கீர்த்திசுரேஷ், வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் சண்டக்கோழி-2 படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், மொத்த படக்குழுவுக்கும் விஷால், லிங்குசாமி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர். #Sandakozhi2 #Vishal
    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் `சண்டக்கோழி-2' படம் உருவாகி வருகிறது. விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன் படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் படக்குழுவினருக்கு தங்க நாணயம் வழங்கினார். அதைத் தொடர்ந்து நாயகன் விஷால் மற்றும் இயக்குனர் லிங்குசாமி ஆகியோர், தனித்தனியாக படக்குழுவினர் 150 பேருக்கு தலா ஒரு தங்க நாணயத்தை பரிசாக வழங்கியதுடன், அனைவருக்கும் விருந்தளித்து படக்குழுவினரை மகிழ்ச்சியடைய வைத்துள்ளனர். 



    விஷாலின் 25-வது படமாக உருவாகும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் சமீபத்தில் வெளியாகிய `செங்கரட்டான் பாறையில' என்ற பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 



    ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வருகிற அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. #Sandakozhi2 #Vishal #KeerthySuresh

    செங்கரட்டான் பாறையில பாடல் வீடியோ:


    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் - கீர்த்திசுரேஷ், வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் சண்டக்கோழி-2 படத்தின் சிங்கிள் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Sandakozhi2 #Vishal #KeerthySuresh
    விஷால் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்தில் நடித்து வருகிறார். விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

    விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 
    விஷாலின் 25-வது படமாக இந்த படம் உருவாகி வருகிறது. படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அக்டோபர் 18-ல் ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக படத்தின் முதல் சிங்கிள் வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Sandakozhi2 #Vishal #KeerthySuresh

    லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், டார்லிங் வருவுக்கு நன்றி என்று கூறியுள்ள விஷால் வரலட்சுமியை பாராட்டியுள்ளார். #Vishal #Sandakozhi2
    `இரும்புத்திரை' படத்தை தொடர்ந்து விஷால் தற்போது `சண்டக்கோழி-2' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், வரலட்சுமி அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து விஷால் தெரிவித்துள்ளதாவது,

    சண்டக்கோழி-2 படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டோம். இன்றுடன் வரலட்சுமி சரத்குமாரின் காட்சிகள் முடிந்துவிட்டது. இது சிறப்பானது. கிளைமேக்ஸ் சண்டைக்காட்சிகள் அதிரவைக்கும்படியாக வந்துள்ளன. டார்லிங்க வருவுக்கு நன்றி. நான் பார்த்த சிறந்த தொழில் தெரிந்த நடிகை. அக்டோபர் 18-க்காக காத்திருப்போம்.

    இவ்வாறு கூறியுள்ளார். 

    விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷாலின் 25-வது படமாக இந்த படம் உருவாகி வருகிறது. படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அக்டோபர் 18-ல் ரிலீசாக இருக்கிறது. 

    விஷால், வரலட்சுமி இடையே காதல் இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வரும் நிலையில், சண்டக்கோழி-2 படத்தில் வரலட்சுமியின் வில்லத்தனத்தை நடிகர் விஷால் பாராட்டியிருக்கிறாராம். #Vishal #Varalakshmi
    விஷாலுடன் மதகஜராஜா படத்தில் தான் அறிமுகமானார் வரலட்சுமி. ஆனால் அந்த படம் சில சிக்கல்களால் வெளியாக வில்லை. போடா போடி முதல் படமாக அமைந்தது.

    அதன் பின் தாரை தப்பட்டை மூலம் தன்னை நிரூபித்தவர் தொடர்ந்து கனமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய்யை வைத்து முருகதாஸ் இயக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பவர், விஷால் நடிக்கும் சண்டக்கோழி-2 படத்தில் விஷாலுக்கே வில்லியாக நடிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.



    இந்த நிலையில், இதுவரை எடுத்த காட்சிகளை பார்த்த விஷால், வரலட்சுமியின் நடிப்பை பார்த்து அசந்து போனாராம். சண்டக்கோழி முதல் பாகத்தில் வில்லன் லாலின் மிரட்டலான நடிப்பு தான் படத்துக்கு பலமாக அமைந்தது. அதற்கு சமமான வில்லத்தனத்தை காட்டிவிட்டார் வரலட்சுமி என்று நண்பர்களிடம் பாராட்டி வருகிறார். விஷால் அடுத்து டெம்பர் படத்தின் தழுவலாக உருவாகும் அயோக்கியாவில் நடிக்கிறார்.

    அதற்கு அடுத்து விஷாலை வைத்து படம் இயக்க 5-க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் சண்டக்கோழி-2 படத்தின் படப்பிடிப்பில் கதை கேட்பதாக கூறி இருக்கிறது விஷால் தரப்பு. விரைவில் தேனியில் சண்டக்கோழி-2 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. #Vishal #Varalakshmi #Sandakozhi2

    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் - கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் `சண்டக்கோழி-2' படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் விஷால் அறிவித்துள்ளார். #Vishal #Sandakozhi2
    விஷால் நடிப்பில் கடந்த வாரம் ரிலீசாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் `இரும்புத்திரை'. இந்த படத்தை தொடர்ந்து விஷால் தற்போது `சண்டக்கோழி-2' படத்தில் நடித்து வருகிறார். லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

    வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

    விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. 



    விஷாலின் 25-வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரபேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விஷால் பேசும்போது, 

    `சண்டக்கோழி-2' முந்தைய படத்தை விட பல மடங்கு நன்றாக வந்திருக்கிறது. இன்னும் 40 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. செப்டம்பர் 18 அன்று விநாயகர் சதுர்த்தியில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். சங்கத்திலும் அனுமதி கேட்க இருக்கிறோம் என்றார். #Vishal #Sandakozhi2

    ×