search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajinikanth 166"

    பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கும் அனிருத் இசையமைக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. #Rajinikanth166 #ARMurugadoss #Anirudh
    கார்த்திக் சுப்புராஜ் இயக்க ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படத்திற்கும் அனிருத்தே இசையமைக்க இருக்கிறார்.

    ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அனிருத் அளித்த பேட்டியில், ரஜினியின் அடுத்த படத்திற்கு இசையமைப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.



    விரைவில் ஒட்டுமொத்த நடிகர்கள் தேர்வையும் முடித்துவிட்டு, மார்ச் இறுதியில் படப்பிடிப்புக்குச் செல்ல தயாராகி வருகிறது படக்குழு. முருகதாஸ் திரைக்கதை வடிவத்தை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ரஜினிகாந்த் 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். பெரும்பாலான காட்சிகளை மும்பையில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது. #Rajinikanth166 #ARMurugadoss #Anirudh

    பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் தேசிய விருது வென்ற பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். #Rajinikanth166 #SanthoshSivan
    2.0, பேட்ட படங்களை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த நடிகர்கள் தேர்வையும் முடித்துவிட்டு, மார்ச் இறுதியில் படப்பிடிப்பை துவங்க படக்குழு முடிவு செய்துள்ளது.


    முருகதாஸ் திரைக்கதை வடிவத்தை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்.



    இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, தளபதி படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி சாருடன் இணைவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் 27 வருடங்களுக்கு பிறகு ரஜினி படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Rajinikanth166 #ARMurugadoss #SantoshSivan



    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ரஜினியின் 166-வது படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காமெடி நடிகர் யோகி பாபுவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. #Rajinikanth166 #YogiBabu
    ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. முதல்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்துக்கான நடிகர்கள் தேர்வை தொடங்கியுள்ளது படக்குழு.

    இதில் படம் முழுக்க ரஜினியுடனே வரும் முக்கிய காமெடி கதாபாத்திரத்துக்கு யோகி பாபுவிடம் பேசியுள்ளனர். யோகிபாபு தற்போது ‘தளபதி 63’ படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு எப்போது என முடிவானவுடன் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.



    இதன்மூலம் ரஜினியுடன் முதன்முறையாக நடிக்க உள்ளார் யோகிபாபு. முன்னதாக ‘பேட்ட’ படத்தில் முனீஸ்காந்த் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் யோகிபாபுவிடம் தான் பேசினார்கள். தேதிகள் பிரச்சினையால் அவரால் நடிக்க முடியாமல் போனது. இந்த மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த நடிகர்கள் தேர்வையும் முடித்துவிட்டு, மார்ச் இறுதியில் படப்பிடிப்புக்குச் செல்ல தயாராகி வருகிறது படக்குழு. முருகதாஸ் திரைக்கதை வடிவத்தை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். #Rajinikanth166 #YogiBabu #ARMurugadoss

    `பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth166 #ARMurugadoss
    ரஜினி நடிப்பில் `பேட்ட’ படம் பொங்கலுக்கு ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரியில் துவங்கவிருப்பதாக கூறப்படுக்கிறது. 

    சமீபத்தில் படத்தின் தலைப்பு குறித்து பரவிய வதந்திக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முற்றுப்புள்ளி வைத்த நிலையில், தற்போது படத்தில் ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. ரஜினி இதற்கு முன்பாக மூன்று முகம், பாண்டியன், கொடி பறக்குது உள்ளிட்ட படங்களில் போலீசாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



    2.0 படத்தை தொடர்ந்து, ரஜினி நடிக்கும் இந்த படத்தையும் லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதுதவிர சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமாரிடமும் ரஜினி கதை கேட்டுள்ளாராம். பேட்ட படத்திற்கு கிடைத்த வரவேற்பால், தனக்காக மற்றுமொரு கதையை தயார் செய்யும்படி கார்த்திக் சுப்புராஜிடம், ரஜினி கூறியுள்ளாராம். மேலும் ரஜினி - ராஜமவுலி கூட்டணியும் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. #Rajinikanth166 #ARMurugadoss

    `பேட்ட' படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் நிலையில், அதற்கு அடுத்ததாக அஜித் பட இயக்குநருடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth167 #Rajinikanth
    `2.0' படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `பேட்ட' படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாகிறது.

    `பேட்ட' படத்திற்கு பிறகு ரஜினி முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த படம் லஞ்சம், ஊழலுக்கு எதிரான கதையம்சம் கொண்டது. `முதல்வன்' பட பாணியில் முருகதாஸ் ஸ்டைலில் திரைக்கதை இருக்கும் என்கின்றனர். ரஜினி அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் இந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த படத்தை முடித்த பிறகு ரஜினி அடுத்ததாக `சதுரங்க வேட்டை' படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    வினோத் சொன்ன ஒரு கதை ரஜினிக்கு பிடித்துபோனதாகவும், அதன் திரைக்கதையை மேலும் நன்றாக செதுக்கும்படி அவர் அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் தனுசும் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    வினோத் தற்போது, அஜித்தை வைத்து `பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கி வருகிறார். தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த இரு படங்களையும் முடித்த பிறகு ரஜினி - வினோத் கூட்டணி இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏ.ஆர்.முருகதாஸ், எச்.வினோத் இயக்கும் இரு படங்களையும் முடித்த பிறகே ரஜினி கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. #Rajinikanth166 #Rajinikanth167 #Rajinikanth #HVinoth

    `பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், முருகதாஸ் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். #Rajinikanth166 #ARMurugadoss
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படம் ரிலீஸ் ஆகி வசூலை குவித்து வருகிறது. படத்தின் முதல் வார வசூல் ரூ.500 கோடியை தாண்டியிருந்த நிலையில், விரைவில் ரூ.1000 கோடி வசூலை தொடவிருக்கிறது.

    இந்த நிலையில் ரஜினி நடிப்பில் அடுத்ததாக `பேட்ட’ படம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்ட படத்தில் ரஜினியுடன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

    பேட்ட படத்திற்கு பிறகு ரஜினி முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. அந்த தகவலை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உறுதிப்படுத்தி உள்ளார்.



    சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட முருகதாஸ், ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதாகவும், அந்த படம் சர்கார் படம் மாதிரி அரசியல் சம்பந்தப்பட்ட படம் இருக்காது என்றார். மேலும் சூப்பர் ஸ்டார் படத்தில் இடம்பெறும் அம்சங்கள் அனைத்தும் இருக்கும் என்றும் முருகதாஸ் விளக்கினார்.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு ஜனவரியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Rajinikanth166 #ARMurugadoss

    பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், அந்த படத்தில் ரஜினி அரசியல்வாதியாக நடிப்பதாக கூறப்படுகிறது. #Naarkali #Rajinikanth166 #ARMurugadoss
    ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படம் ரிலீஸ் ஆகி வசூலை குவித்து வருகிறது. முதல் வாரத்திலே படத்தின் வசூல் ரூ.500 கோடியை தாண்டியிருப்பதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.

    இந்த நிலையில் ரஜினி நடிப்பில் அடுத்ததாக `பேட்ட’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதில் படக்குழு தீவிரமாக இருக்கிறது. பேட்ட படத்தில் ரஜினியுடன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

    பேட்ட படத்திற்கு பிறகு ரஜினி முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த படம் முருகதாசின் கத்தி, சர்கார் படங்களை போலவே அரசியல் படமாகத் தான் இருக்கும் என்கிறார்கள்.



    ரஜினியும் அரசியலில் இறங்கியிருக்கும் நிலையில், இது அவரது அரசியலுக்கு ஏற்ற வகையில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

    அந்த வகையில் ரஜினி படத்துக்கு நாற்காலி என்று பெயர் வைப்பதற்கான ஆலோசனைகள் நடப்பதாக கூறப்படுகிறது. முருகதாஸ் படங்களின் பெயர்கள் எப்போதுமே பரபரப்பை ஏற்படுத்தும். நாற்காலி என்று தலைப்பு வைக்கும் பட்சத்தில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரிக்கும். படத்தில் ரஜினி முதல்வராக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. #Naarkali #Rajinikanth166 #ARMurugadoss

    ×