என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "public impact"
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் கடந்த ஓரு வாரத்திற்கு முன்புவரை கனமழை பெய்தது. தற்போது மழை நின்று வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது.
மழைகாரணமாக ஆங்காங்கே தேங்கியிருந்த தண்ணீர் முழுவதும் பூமிக்குள் இறங்கி வடியத் தொடங்கி வருவதால் பல இடங்களில் தேயிலைத் தோட்ட பகுதிகளில் மண்சரிவும் , பூமியில் விரிசல்கள் ஏற்பட்டும் வருகிறது. இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி, நடுமலை,சோலையார்,கருமலை,உருளிக்கல் உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் மண்சரிவும் பூமி விரிசலும் ஏற்பட்டுள்ளது.
இதனால் எஸ்டேட் நிர்வாகங்கள் பாதுகாப்பு நலன் கருதி தொழிலாளர்களை தேயிலை இலை பறிக்கும் பணிக்கு அனுப்பவில்லை. அய்யர்பாடி, சோலையார் எஸ்டேட் பகுதிகளில் குடியிருப்புகளுக்கு அருகில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால் எஸ்டேட் நிர்வாகங்கள் அப்பகுதி தொழிலாளர்களுக்கு வேறு பகுதிகளில் குடியிருப்பு வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.
வால்பாறை எஸ்டேட் பகுதியில் மண் சரிவு, விரிசலை சிலர் நிலநடுக்கம் என நினைத்து பீதியில் உள்ளனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே கரிக்குளம் பகுதியில் நகராட்சி குப்பை கிடங்கு மற்றும் உரக்கிடங்கு 50 ஏக்கரில் அமைந்துள்ளது. மேலும் 25 ஏக்கரில் உரமும், பிளாஸ்டிக் குப்பைகளும் பிரித்து மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு அங்கு பிரித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குப்பையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியைச் சுற்றிலும் புகை மூட்டமாக காட்சி அளித்தது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருவிடை மருதூர் மற்றும் கும்பகோணம் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் தீயை அணைக்க போராடி முயன்றனர். இரவு நேரம் என்பதால் தீ பிடித்த இடத்திற்கு செல்ல முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர். இதனால் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் அந்த பகுதியில் உள்ளவர்கள் மூச்சு திணறல் மற்றும் துர்நாற்றத்தினால் அவதிபட்டனர்.
குப்பை கிடங்கில் தீ தொடர்ந்து எரிவதால் 2-வது நாளாக இன்றும் தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த தீவிபத்தினால் ஏற்பட்டுள்ள புகை மூட்டத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கடும் கோடை வெயில் இருக்கும். ஜூலை மாதத்தில் வெயில் குறைந்து காற்று வீசத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூலை முடிந்து ஆகஸ்டு 3-வது வாரம் தொடங்கி விட்ட நிலையிலும் இதுவரை காற்று வீசவில்லை.
அதே நேரத்தில் கோடையை விட அதிக வெப்பமான வெயிலின் தாக்கம் உள்ளது. மதியம் 12 மணிக்கு மேல் வீசும் வெயிலில் கடும் வெப்பத்தால் மக்கள் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், புதுவையில் கோடை காலத்தை விட அதிக வெப்பத்துடன் கூடிய வெயில் வாட்டி வருகிறது.
இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடும் வெயிலால் புதுவை மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
முதுகுளத்தூர்:
கமுதி உப மின் நிலையத்தில் இருந்து முதுகுளத்தூர், அபிராமம், கடலாடி, சாயல்குடி அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்சாரம் சப்ளை செய்யபடுகிறது. கமுதியில் இருந்து முதுகுளத்தூருக்கு வரும் மின் வழிப்பாதைகள் கண்மாய்கள், ரோட்டோரங்கள், வயல்வெளிகளில் அமைக்கபட்டுள்ளதால், சிறு காற்றடித்தாலே மின் வயர்கள் பழுதாகி, அடிக்கடி மின் வினியோகம் துண்டிக்கபடுகிறது.
இதனால் அரைமணிக்கு ஒருமுறை மின்வெட்டு அமல் படுத்தபட்டு பொதுமக்கள், குழந்தைகள் வீடுகளில் தங்க முடியாமலும், மாணவர்கள் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சாயல்குடி,கடலாடி, பெருநாழி, முதுகுளத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். பொதுவாக மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை தான் உப மின்நிலையத்தில் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த மாதம் எந்த வித அறிவிப்புமின்றி மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் வணிக நிறுவனத்தினர், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.
அரசு அலுவலகங்களில் வேலைகள் பாதிக்கப்பட்டனர். சரியாக அறிவித்த பின் மின்சாரம் நிறுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.
தொண்டி:
திருவாடானை தென் பகுதியில் உள்ள அரும்பூர், ஆதியூர், குளத்தூர், திருவெற்றியூர், விளக்குடி, புலிக்கொடி, பகவதி மங்கலம் போன்ற 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தொண்டி துணைமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த கிராமங்களில் 20 நாட்களுக்கு மேலாக பகலில் பல மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. இரவு நேரத்திலும் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. முன்னறிவிப்புமின்றி மின்தடை செய்யப்படுவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சிரமப்படுகின்றனர்.
மேலும் திருவெற்றியூரானது முக்கியமான பாகம் பிரியாள் கோவில் உள்ளதால் வணிகதலமாகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வரும் முக்கியமான ஆன்மீக தலமாகவும் உள்ளது.
இந்தப்பகுதியில் முன்னறிவிப்பு இல்லாமல் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. இதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்படுகிறது. பகலில் பல மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுவதால் குடிதண்ணீர் மோட்டார்களை இயக்க முடியாமல் ஊராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. இதனால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
வீடுகளில் மின்விசிறிகள் இயங்காமல் குழந்தைகள் முதியவர்கள் அவதிப்படுகின்றனர்.
நகரங்களை விட கிராமங்களில் மின்தடை சற்று அதிகமாக இருப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் பகல் முழுவதும் தடை செய்வது மின்வாரியத்தின் மோசமான நடவடிக்கை ஆகும்.
மின்தடை செய்யும்போது கிராமங்களுக்குள் பாகு பாடில்லாமல் அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிக நேரம் செயற்கையாக மின்தடை செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.
எனவே மாவட்ட அதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கையை கண்டித்து முன்னறிவிப்போடு மின் தடைசெய்ய வேண்டும் என கிராம மக்கள் மின்வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்