search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Primary Health centre"

    • ஆரம்ப சுகாதார நிலையம், உட்கட்டமைப்பு வசதிகள், தேவையான மருத்துவ உபகரணங்கள் ஆகியவை குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்ட கங்களை கலெக்டர் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், சூராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், தேவையான மருத்துவ உபகரணங்கள் ஆகியவை குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இளையான்குடி வட்டாரம், சாலைக்கிராமம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட சூராணம் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் சுற்று வட்டாரத்திலுள்ள 22 ஆயிரம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் 8 துணை சுகாதார நிலையங்கள் மூலம் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் தொற்றா நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சூராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அருகிலுள்ள கிராமங்களில் இருந்தும், தினசரி சுமார் 120 பேர் வெளிநோயாளிகள் சிகிச்சைக்காகவும், மாதந்தோறும் சராசரியாக 5 பிரசவங்களும் நடைபெறு கிறது. இதன்மூலம் அருகில் உள்ள கிராமங்களில் கர்ப்பிணித் தாய்மார்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

    இந்த மருத்துவமனையின் செயல்பாடுகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் 1989-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு மதிப்பீட்டு அறிக்கை பொதுப்பணித்துறையின் சார்பில் பெறப்பட்டு, அரசிற்கு கருத்துரு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்ட கங்களை கலெக்டர் வழங்கி னார். துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) விஜய்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் ஆரோன் அரவிந்த்ரேசிஸ், மருத்துவ அலுவலர் செந்தில்குமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    • செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
    • 25 லட்ச ரூபாய் செலவில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ராமசாமி நகரில் கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா முடிந்தும் டாக்டர்கள் மருத்துவ பணியாளர் நியமிக்கப்படாமல் கட்டடம் காட்சிப்பொருளாக மாறி வருகிறது.

    உடுமலை நகராட்சியில் 33வது வார்டுகளில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர் .மக்களின் அடிப்படை மருத்துவம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய திட்டங்களுக்காக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் வக்கீல் நாகராஜன் வீதியில் செயல் படுகிறது.

    அங்கு தினமும் நூற்றுக்கணக்கான கர்ப்பிணிகள், தாய்மார்கள் வருவதால் இடம் நெருக்கடி ஏற்படுகிறது. நகரின் தெற்கு பகுதியில் 14 வார்டுகளில் வசிக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வர வேண்டி உள்ளது.

    எனவே தெற்கு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். ராமசாமி நகரில் 25 லட்ச ரூபாய் செலவில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது.

    பணி முடிந்து கடந்த 2 மாதத்திற்கு முன் கட்டிடத்திற்கு திறப்பு விழா நடத்தப்பட்டது .ஆனால் இதுவரை நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் சுகாதார நிலையம் செயல்படாமல் உள்ளது

    இது குறித்து சுகாதார துறையினர் கூறுகையில், நகர்ப்புற ஆரம்பசுகாதார நிலையங்களுக்கென அரசு உத்தரவு அடிப்படையில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். பணி நியமனத்துக்கான உத்தரவு எதுவும் இதுவரை அரசால் வழங்கப்படவில்லை என்றனர்.

    • சிங்கம்புணரி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர்.
    • பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் நபீஷா பானு மற்றும் அனைத்து பிரிவு மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மு.சூரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரவுறுதி தரநிலைகள் குழுவினர் டெல்லியில் இருந்து வருகை தந்து ஆய்வு செய்தனர்.இந்த சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுவதற்காக தினந்தோறும் வெளி நோயாளிகள் அதிகம் வருகின்றனர். இங்கு 24 மணி நேரமும் பிரசவம் நடக்கிறது. இந்த குழுவை சேர்ந்த டாக்டர்கள் சசிகலா, கிர்திமன் மஹர்தா ஆகியோர் கட்டிட வசதி, வெளி நோயாளிகள் வருகை, மருத்துவ பரிசோதனை கருவிகளின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டனர்.

    நோயாளிகளின் விபரங்கள், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், பிரசவமான குழந்தைகளின் எண்ணிக்கை, நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட சேவைகள் குறித்து தனித்தனியாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு மாலை வரை நீடித்தது. பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் நபீஷா பானு மற்றும் அனைத்து பிரிவு மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.

    • சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவரும், மூன்று செவிலியா்களும், ஒரு மருந்தாளுநரும் பணியாற்றி வருகின்றனா்.
    • பொதுமக்கள் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். இதில், உழவா் உழைப்பாளா் கட்சி மாவட்டத் தலைவா் ஆா்.ஈஸ்வரமூா்த்தி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

    தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தென்னை சாகுபடி செய்து வருகின்றனா். தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சியின் காரணமாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபா் வரையில் அரசின் நேரடி கொள்முதல் நிலையமானது காங்கயம், பொங்கலூா், உடுமலை, பெதம்பட்டி ஆகிய நான்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெற்றது.

    அலங்கியம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களின் தேங்காய் பருப்பைக் கொண்டு செல்ல சிரமத்துக்குள்ளாகினா். ஆகவே, வரும் நாள்களில் தமிழக அரசு தேங்காய் பருப்பை நேரடியாக கொள்முதல் செய்தால் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் ஒரு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மங்கலம் கிராம நீரினைப் பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவா் சி.பொன்னுசாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் மாநகராட்சி வாா்டு எண் 38, 39க்கு உள்பட்ட பெரியாண்டிபாளையம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் குளத்துப்புதூரில் இயங்கி வருகிறது. இந்த வாா்டுகளில் சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவரும், மூன்று செவிலியா்களும், ஒரு மருந்தாளுநரும் பணியாற்றி வருகின்றனா்.இங்கு கா்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசியும் போடப்படுகிறது. இந்த சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஊழியா்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு வருவதில்லை.

    மாலையில் சிகிச்சை வரும் நபா்களை மறுநாள் காலையில் வரச்சொல்கின்றனா். இதனால் இப்பகுதி பொதுமக்கள் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மாநகராட்சி நகா் நல அலுவலா் சுகாதார நிலையத்தை நேரில் ஆய்வு செய்து நோயாளிகளுக்குமுறையான சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கூடுதல் படுக்கை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்
    • மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை

    திருவண்ணாமலை:

    தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப் படை வசதிகள், பராமரிப்பு குறித்து மத்திய அரசின் சுகாதார குழுவினர் கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் 5ம்தேதி வரை ஆய்வு செய்தனர். அதன்படி கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர். திருவண்ணாமலை, தர்மபுரி, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் 14 ஆரம்ப சுகாதார நிலையங்களை மத்திய அரசின் சுகாதார குழுவினர் ஆய்வு செய்தனர்.

    இதில் கலசப்பாக்கம் அடுத்த மேல்வில்வ ராயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நவம்பர் மாதம் குஜராத் மாநிலத்தை சேர்ந்த டாக்டர் வியாஸ், சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த மிக்கியா லெப்சான் கொண்ட மருத்துவ க்குழுவினர்

    ஆய்வு செய்து அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர். இதில் 93.46 மதி

    ப்பெண்கள் பெற்று மேல்வில்வ ராயநல்லூர் சுகாதார நிலையம் முதலிடம் பெற்றது.

    இங்கு அடிப்படை வசதிகள், தரமான சிகிச்சை, நோயாளிகள் பராமரிப்பு உள்ளிட்டவற்றில் சிறப்பான செயல்பாடு உள்ளதாக தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த அறிக்கை மத்திய அரசு மூலம் மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    பின்னர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரத்த வங்கி, கூடுதல் கட்டிடம், அறுவை சிகிச்சை மையம், கூடுதல் படுக்கை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படஉள்ளது.

    இந்த சுகாதார நிலையத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி பல்வேறு வசதிகள் செய்து தருவதன் மூலம் மேல்வில்வராயநல்லூர். மேலாரணி, சேங்கபுத்தேரி, மோட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுவார்கள். தனி யார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    • குழந்தை பிறந்து சிறிது நேரத்திலேயே இறந்தது. மேலும் அரங்கநாயகியின் உடல்நிலை மிகவும் மோசமானது.
    • ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறான சிகிச்சையால் தாய் மற்றும் குழந்தை இறந்ததாக கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வ.புதுபட்டியை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி அரங்க நாயகி (வயது 19). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், பிரசவத்திற்காக புதுபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று இரவு சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு இன்று அதிகாலை 5 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தது. மேலும் அரங்கநாயகியின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

    ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பிறந்த குழந்தை மற்றும் தாய் அடுத்தடுத்து இறந்ததால் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தாய் மற்றும் குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறான சிகிச்சையால் தாய் மற்றும் குழந்தை இறந்ததாக கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • கூட்டுறவு வங்கி இயக்குனர் வலுப்பூரசாமி,சுகாதார ஆய்வாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சைக்கு வரும் புற நோயாளிகள் தங்குவதற்காக மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து ரூ.7 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் காத்திருப்போர் அறைஅமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தரவேல் வரவேற்றார். இந்த பூமி பூஜை நிகழ்ச்சியின்போது காத்திருப்போர் அறை அமைக்கும் பணியை ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதை தொடர்ந்து உகாயனூர் ஊராட்சியில் ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலும், சேமலைக்கவுண்டம்பாளையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலும் கான்கிரீட் சாலை அமைப்பிற்கான பூமி பூஜையும் நடைபெற்றது. மேலும் நாச்சிபாளையம், பெருந்தொழுவு, மசநல்லாம்பாளையம் ஆகிய அரசு பள்ளிகளுக்கு ரூ. 4லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் மாணவர்களுக்கான இருக்கைகளும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பாலசுப்ரமணியம், செல்வராஜ், மதிவதநேசன், தர்மராஜ், வலுப்பூர் அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சிதம்பரம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் அனந்த கிருஷ்ணன், சந்திரன், சின்னச்சாமி மற்றும் ஆவின் இயக்குனர் குமார், கூட்டுறவு வங்கி இயக்குனர் வலுப்பூரசாமி,சுகாதார ஆய்வாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் செந்தில்ராஜ் அங்குள்ள பதிவேடுகள் மற்றும் அதனை பராமரித்தல் பற்றியும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடு பற்றியும் ஆய்வு செய்தார்.
    • சுகாதார நிலையத்திற்கு கடந்த ஆண்டிற்கான மத்திய தேசிய தர நிர்ணய சான்றிதழையும் வழங்கினார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    அப்போது அங்குள்ள பதிவேடுகள் மற்றும் அதனை பராமரித்தல் பற்றியும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடு பற்றியும் ஆய்வு செய்தார்.

    சிறந்த முறையில் செயல்பட்டதற்காக ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர் சீனிவாசன், சித்த மருத்துவ அலுவலர் நந்தினி, சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோ, மகராஜன் உள்ளிட்டோரை கலெக்டர் பாராட்டினார். அத்துடன் இந்த சுகாதார நிலையத்திற்கு கடந்த ஆண்டிற்கான மத்திய தேசிய தர நிர்ணய சான்றிதழையும் வழங்கினார்.

    மேலும் தொழுநோயாளிகளுக்கான மருத்துவ முகாமையும் பார்வையிட்டு நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

    இந்த ஆய்வு பணியின் போது தூத்துக்குடி சுகாதார பணிகளின் துணை இயக்குநர் பொற்செல்வன், வட்டார மருத்துவ அலுவலர் மெர்வினோ, மாவட்ட நல கல்வியாளர் முத்துக்குமார், தொழுநோய் துணை இயக்குநர் யமுனா, மருத்துவ மேற்பார்வையாளர்கள் நியூட்டன், சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பூமி பூஜை நடந்தது
    • வந்தவாசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த வழூரில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய ஆய்வக கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது.

    வந்தவாசி ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் இந்த புதிய ஆய்வக கட்டிடம் கட்டப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கு திமுக மாவட்டச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்தார். வந்தவாசி ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயமணி ஆறுமுகம் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் எம்.ஆர்.ஆனந்தன் வரவேற்றார்.

    வந்தவாசி எம்.எல்.ஏ. எஸ்.அம்பேத்குமார் பூமி பூஜை மற்றும் கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார்.

    வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர் சு.வி.மூர்த்தி, வந்தவாசி நகர்மன்றத் தலைவர் எச்.ஜலால், திமுக ஒன்றியச் செயலார்கள் எஸ்.பிரபு, சி.ஆர்.பெருமாள், வழூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி தனசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
    • மக்கள் நலன் கருதி உடனடியாக தாலுகா மருத்துவமனையாக ஆக்ககோரி அரசுக்கு கோரிக்கை வைப்பதாக எம்.எல்.ஏ. கூறினார்.

    கயத்தாறு:

    கயத்தாறில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திறப்பு விழா நடைபெற்றது. கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பொருத்தப்பட்ட குடிநீர் எந்திரத்தை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.


    தூத்துகுடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், ஓன்றிய மாணவரணி செயலாளர் நவநீதகிருஷ்ணன், பேரவை செயலர் சிந்தாதுரை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் திலகவதி, சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 40 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இங்கு 2 மருத்துவர்கள் பணியாற்றி வந்தனர்.தற்போது ஒருவர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார். இங்கு 30 வருடங்கள் பிரேத பரிசோதனை கூடம் செயல்பட்டு வந்தது.

    கயத்தாறு தாலுகா உருவாக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் இந்த மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக உயர்த்துவது குறித்து கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது, தற்போது இங்கு மாதத்திற்கு 15 முதல் 20 பேர் குழந்தை பேரு நடைபெறுகிறது.வெளிநோயாளிகள் தினமும் 150முதல் 200 பேர் வந்து மருத்துவ சேவை பெற்று செல்கின்றனர். மருந்து மாத்திரைகள் கட்டுப்பாடாக உள்ளது எனவும், இந்த மருத்துவமனையை மக்கள் நலன் கருதி உடனடியாக தாலுகா மருத்துவமனையாக ஆக்ககோரி அரசுக்கு கோரிக்கை வைப்பதாக எம்.எல்.ஏ. கூறினார்.

    • வானூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் வசதி வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
    • மேல் தளம் சேதம டைந்துள்ளதால் மழை நீர் மருத்துவமனை முழுவதும் ஒழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பொம்பூர் கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றகர். பொம்பூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழை காலங்களில் மேல் தளம் சேதம டைந்து ள்ளதால் மழை நீர் மருத்து வமனை முழுவதும் ஒழுகும் நிலை ஏற்பட்டு ள்ளது.இதனால் நோயாளிகள் அவதி ப்படுகி ன்றனர். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை இதனால் கர்ப்பிணி பெண் ஒருவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்கு வந்த போது மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டி யம்பாக்கம் ஆஸ்ப த்திரிக்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் அந்த கர்ப்பிணி பெண் மரணம் அடைந்து உள்ளார். எனவே பொம்பூர் மருத்து வமனைக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் சேவை தொடங்க வேண்டும். இல்லை யென்றால் 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைத்து சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    • தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய துப்புரவு ஒப்பந்த பணியாளர்கள் சங்க மண்டல பேரவை கூட்டம் நடைபெற்றது.
    • துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய (ஆர்.சி. எச்) துப்புரவு ஒப்பந்த பணியாளர்கள் சங்க மண்டல பேரவை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார், மாநிலத் துணைத் தலைவர் நிலா ஒளி, மாநில பொருளாளர் ராஜலட்சுமி, மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பழனிமுத்து வரவேற்புரை யாற்றினார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் மாநில பிரச்சார செயலாளர் சிவகுரு, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் சிங்காரம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மாதம் ரூ..1500 மட்டுமே வழங்கி, வரும் இன்றைய காலச் சூழ்நிலையில் குடும்பம் நடத்த முடியாத அவல நிலையில் உள்ளனர். அரசு விதிப்படி 8 மணி நேர வேலை, வார விடுமுறை, அரசு விடுமுறை, இலவச சீருடை, இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.விழுப்புரம் கள்ளக்குறிச்சி கடலூர் மாவட்டச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×