search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிரசவத்தில் தாய்-குழந்தை உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு
    X

    பிரசவத்தில் இறந்த பெண்ணின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிரசவத்தில் தாய்-குழந்தை உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு

    • குழந்தை பிறந்து சிறிது நேரத்திலேயே இறந்தது. மேலும் அரங்கநாயகியின் உடல்நிலை மிகவும் மோசமானது.
    • ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறான சிகிச்சையால் தாய் மற்றும் குழந்தை இறந்ததாக கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வ.புதுபட்டியை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி அரங்க நாயகி (வயது 19). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், பிரசவத்திற்காக புதுபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று இரவு சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு இன்று அதிகாலை 5 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தது. மேலும் அரங்கநாயகியின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

    ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பிறந்த குழந்தை மற்றும் தாய் அடுத்தடுத்து இறந்ததால் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தாய் மற்றும் குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறான சிகிச்சையால் தாய் மற்றும் குழந்தை இறந்ததாக கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    Next Story
    ×