search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petition to collector"

    • திருப்பூரை சேர்ந்த டாக்டர் கே.கிங் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து மனு கொடுத்தார்.
    • ஜீனியஸ் எபிடெமிக்ஸ் என்ற விதிப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஓமியோபதி மருந்தை கொடுக்கலாம்.

    திருப்பூர் : 

    தமிழ்நாடு அரசு ஓமியோபதி மருத்துவ முன்னாள் ஆலோசகரும், ஓமியோபதி டாக்டர்கள் சங்க முன்னாள் மாநில தலைவருமான திருப்பூரை சேர்ந்த டாக்டர் கே.கிங் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து மனு கொடுத்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    200 ஆண்டுகளுக்கு முன்பே டெங்கு காய்ச்சலுக்கு ஓமியோபதி மருந்து பயன்பாட்டில் இருந்துள்ளது. ஓமியோபதி மருந்துகள் பெரும்பாலும் உள்நாட்டு, வெளிநாட்டு மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. குறைந்த செலவில் இந்த மருந்தை அதிகப்படியான மக்களுக்கு வழங்கி டெங்கு காய்ச்சலை குணப்படுத்த முடியும். ஒரே வகையான நோய் அறிகுறியால் (எபிடெமிக்) பலரும் பாதிக்கப்படும்போது ஜீனியஸ் எபிடெமிக்ஸ் என்ற விதிப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஓமியோபதி மருந்தை கொடுக்கலாம்.

    கடந்த 2009-ம் ஆண்டு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பன்னீர்செல்வம் இருந்தபோது, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஏற்பாடு செய்திருந்த ஆயுஷ் மாநாட்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் குணப்படுத்தும் ஓமியோபதி மருந்து பெட்டகத்தை நான் வழங்கினேன். விளக்கத்தை கேட்டு, மருத்துவர்கள் மத்தியில் தடுப்பு மருந்தை அமைச்சர் உட்கொண்டார்.

    தற்போது மீண்டும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக அறியப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், போர்க்கால அடிப்படையில் டெங்கு தொற்று பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்கு ஓமியோபதி டாக்டர்கள் சங்கம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. டெங்கு காய்ச்சல் தடுப்பு, குணப்படுத்தும் ஓமியோபதி மருந்தின் குறிப்புகளை பெற்று உடனடியாக மக்களுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை ஆணையாளர், இந்திய மருத்துவத்துறை ஆணையாளர், தலைமை செயலாளர் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். இதை அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

    • பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டித்தர கோரிக்கை
    • பள்ளி வளாகத்திற்குள் கழிப்பறை வசதி இல்லாததால் மாணவர்கள் வேதனை

    கோவை,

    கோவை க.கா சாவடி பகுதியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் பெற்றோருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.

    அப்போது அவர்கள் கலெக்டரிடம் கொடுத்து உள்ள மனுவில், எங்கள் பள்ளி ஆரம்ப பள்ளியாக இருந்து, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. அங்கு தற்போது 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.

    ஆனால் தரம் உயர்த்தப்பட்டு 6 ஆண்டுகளுக்கு பிறகும் அங்கு தற்போதுவரை கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படவில்லை. கழிவறை வசதிகள் இல்லை. எனவே கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் கழிவறை வசதி செய்து தர வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

    பின்னர் மாணவ-மாணவிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எங்கள் பள்ளியில் தமிழ்-ஆங்கில வழி என 2 பிரிவுகளும் ஒரே வகுப்பறையில் நடத்தப்படுகிறது. மாணவர்கள் பள்ளிக்கு அருகில் உள்ள பொதுக்கழிவறையை உபயோகப்படுத்த வேண்டி உள்ளது.

    பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கு தனி கழிப்பறை வசதி இல்லை. மேலும் அங்குள்ள வகுப்பறைகள் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால் மாணவர்களை பெரும்பாலும் வெளியில் அமர வைத்து ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி வருகின்றனர். விளையாட்டு மைதானங்களும் இல்லை. இதுகுறித்து பலமுறை அரசு நிர்வாகிகளிடம் புகார் மனு அளித்தும் தற்போதுவரை நடவடிக்கை இல்லை.

    எனவே தற்போது கலெக்டரிடம் மனு அளிக்க வந்து உள்ளோம்.

    -இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இலவச மின்சாரத்தை பயன்படுத்த வேண்டுமேயானால் மின்சார கணக்கீட்டாளர் மற்றும் உதவி பொறியாளருக்கு பணம் தர வேண்டும் என மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நாகல்நகர், பாரதிபுரம், வேடப்பட்டி பகுதிகளில் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 200 யூனிட் வரை உள்ளது.

    இந்நிலையில் தொடர்ந்து இலவச மின்சாரத்தை பயன்படுத்த வேண்டுமேயானால் மின்சார கணக்கீட்டாளர் மற்றும் உதவி பொறியாளருக்கு பணம் தர வேண்டும் என மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.

    திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தை சேர்ந்த நெசவாளர் மக்கள் 20க்கும் மேற்பட்டோர் பணம் கேட்டு மிரட்டும் மின்சார ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    • வேகத்தடை அமைக்க வேண்டும்
    • ஆரம்ப பள்ளி ஒன்றை துவக்க வேண்டும்.

    திருப்பூர்:

    வீரபாண்டி அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் சார்பில் இன்று மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது; திருப்பூர் வீரபாண்டியில் தமிழ அரசால் கட்டப்பட்டு அண்மையில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறோம்.

    இங்கு கழிவு நீர் சுத்தகரிப்பு தொட்டி பாரமரிப்பு இல்லாத காரணத்தால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போதிய குடிநீர் கிடைக்கவில்லை. குடியிருப்பு பகுதி ரோட்டில் அடிக்கடி விபத்து நடப்பதால் வேகத்தடை அமைக்க வேண்டும்.

    குடியிருப்பு பகுதிகளை சுற்றி சுற்றுசுவர் அமைக்க வேண்டும். அருகில் உள்ள 3 மதுக்கடைகளை அகற்ற வேண்டும். எங்கள் பகுதியில் ரேஷன் கடை திறக்க வேண்டும். இந்த பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ஆரம்ப பள்ளி ஒன்றை துவக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    தங்களது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி கவனம் ஈர்த்தனர்.

    • கல்குவாரிக்கு தேவையான வெடி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா? என அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் எழுந்தது.
    • கண்டெய்னர் இங்கு வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஏவலூர் கிராம எல்லை விவசாய நிலத்தில் கடந்த சில மாதங்களாக கண்டெய்னர் ஒன்று கிடந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் கல்குவாரி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் விவசாயம் சங்கம் சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக கல்குவாரி அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த பணிக்கான கண்டெய்னர் கொண்டுவரப்பட்டதா? இந்த கண்டெய்னரில் கல்குவாரிக்கு தேவையான வெடி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா? என அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் எழுந்தது.

    இது தொடர்பான புகாரின் பேரில் ரோஷனை இன்ஸ்பெக்டர் அன்னகுடி, வெள்ளிமேடுபேட்டை சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மணி மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். கேட்பாரற்று இருந்த கண்டெய்னரின் பூட்டை உடைத்து பார்த்தனர். இதில் கண்டெய்னர் காலியாக இருந்தது. இதனை தொடர்ந்து இந்த கண்டெய்னர் யாருடையது?, இது எவ்வாறு இங்கு வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கண்டெய்னர் காலியாக இருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் நீங்கி நிம்மதியடைந்தனர்.

    • இந்திரா இவரது 2 மகள்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
    • மகாதேவன் உடலை கிராமத்திற்கு கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை ) மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொது மக்கள் தங்கள் கோரிக்கை கள் தொடர்பாக மனு அளிக்க நேரில் வந்தனர். இந்த நிலையில் புவனகிரி வட்டம் புதுப்பேட்டையை சேர்ந்த இந்திரா (வயது 48). இவரது 2 மகள்கள், உறவி னர்கள் மற்றும் மீனவம் காப்போம் மக்கள் இயக்கம் நிர்வாகி செந்தாமரை செல்வம் ஆகியோர் நேரில் வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

    கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மகாதேவன் (56). சவுதி அரேபியாவில் ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடி தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி மகா தேவன் உடன் பணி புரிந்து வந்த நபர்கள் தொலைபேசி மூலம் எங்களை தொடர்பு கொண்டு எனது கணவர் இறந்துவிட்டதாக தெரி வித்தனர். இதனை கேட்ட இந்திரா அதிர்ச்சி அடைந்தார். மேலும் எனது கணவர் மகாதேவன் உடலை சவுதி அரேபியாவில் இருந்து எங்கள் கிராமத்திற்கு கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது கணவர் இறந்த நிலை யில் எங்களது குடும்பத் திற்கு அரசு உதவிகள் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. 

    இந்த நிலையில் மனு அளிக்க கலெக்டர் அலுவல கத்தில் இருந்த இறந்த மகாதேவன் மகள் மதுமிதா என்பவர் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்ததால் திடீரென்று மயக்கம் அடைந்தார். பின்னர் மயக்கம் அடைந்த மது மிதாவை அங்கு இருந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் பாதுகாத்தனர். இதனைத் தொடர்ந்து மனைவி மற்றும் மகள்கள் கண்ணீர் மல்க இறந்த மகாதேவன் உடலை மீட்டு தர வேண்டி கோரிக்கை விடுத்தனர். இதன் காரண மாக கடலூர் கலெக்டர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்தனர்.
    • நடவடிக்கை எடுப்பதில் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் தமிழ்நாடு அனைத்து வகைமாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் எங்கள் சங்கத்தை சேர்ந்த 15 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி பல ஆண்டுகளாக மனுக்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது வரை நடவடிக்கை எடுப்பதில் காலம் தாழ்த்தி வருகின்றனர். மாற்று திறனாளிகள் வறுமையில் வாடும் நிலையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலையில் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முதல்வர் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கத்தின் ராமேசுவரம் கிளை தலைவர் குமார், செயலாளர் லட்சுமணன், ராபின்சன் தலைமையில் 15 மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் ஜானி டாம் வர்கீசிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
    • பஞ்சாயத்து தலைவர் கையாடல் செய்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மூக்கனூர் உலகுடை யாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில் கூறியுள்ளதாவது,   உலகுடையாம்பட்டு கிராமத்தில் பிரதம மந்திரி வீடுகட்ட திட்டம் மற்றும் தமிழக அரசின் வீடு கட்டும் திட்டத்தின் பயனாளிகள் பலரும் வீடு கட்டி வருகின்றனர். இதில் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை பஞ்சாயத்து தலைவர் கையாடல் செய்துள்ளார்.

    மேலும் வீடு கட்டும் பயனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய பணத்தையும், அரசு அறிவித்த கூடுதல் தொகையையும் பயனாளிகளிடம் எனக்கு சேர வேண்டிய பணம் எனக் கூறி பெற்றுக் கொண்டதாகவும், இவ்வாறு அரசின் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு முறைகேடு செய்துள்ள மூக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தவறான ஆபரேசன் செய்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
    • கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 19-ந் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

    கடலூர்

    பண்ருட்டி சிறுவத்தூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி. இவர்கள் தங்கள் குழந்தைகளுடன் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 19-ந் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தேன் அன்றைய தினம் எனக்கு ஆபரேஷன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து 11 நாட்கள் கழித்து எனக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்ததால் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மீண்டும் சேர்க்கப்பட்டேன்.

    ஆனால் வலி நிற்காத காரணத்தினால் அக்டோபர் மாதம் 15 -ந் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டேன். இந்த நிலையில் தவறான ஆபரேசன் செய்ததாக டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தோம்.

    இதனை தொடர்ந்து 2 முறை அரசு மருத்துவமனை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் இதற்கு இதனால் வரை பதில் மனு வழங்கவில்லை. ஆகையால் இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பத்மாவதி அளித்த புகாரின் அடிப்படையில் அது சம்பந்தமாக விசாரணை நடத்தியது தொடர்பாக ஆவண கோப்புகளை உடனடியாக எடுத்து வந்து இதற்கான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 

    • தேசிய கொள்கைப்படி மாநகராட்சி நிர்வாகம் சாலை யோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளது.
    • பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் பழைய பேருந்து நிலையம் உள் பகுதியில் சுமார் 30 ஆண்டு காலமாக பொதுமக்களுக்கு மலிவு விலையில் 2க்கு 2 அளவுள்ள தள்ளுவண்டியில் 30 பேர் கடலை, பொரி வியாபாரம் செய்து வருகிறோம்.

    தேசிய கொள்கைப்படி மாநகராட்சி நிர்வாகம் சாலை யோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளது. தற்போது திருப்பூர் பழைய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. அங்கு போக்குவரத்து , பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். 

    • சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
    • நாள் ஒன்றுக்கு ரூ.400 தினக்கூலி வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரியும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது, நாங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், வடக்கனந்தல், தியா கதுருகம் மணலூர்பேட்டை, சின்னசேலம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி ஆகிய நகராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் தமிழக அரசின் டெங்கு காய்ச்சல்,மலேரியா, யானைக்கால், கொரோனா உள்ளிட்ட நோய் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

    எங்களுக்கு தினமும் நாள் ஒன்றுக்கு ரூ.289 தினக்கூலியாக வழங்குகின்றனர். இந்த பணத்தை வைத்து வாழ்க்கை நடத்த மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் எங்களைப் போன்று ஊராட்சிகளில் பணிபுரியும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு ரூ.400 தினக்கூலி வழங்கப்படுகிறது. இதே போல் எங்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.400 தினக்கூலி வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேற்கண்டவாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    • புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 3 நாள் நடை பயணமாக வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    • சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் நீதி கேட்டு 3 நாட்கள் நடை பயணம் நடந்தது.

    ராமநாதபுரம்

    சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அப்துல்கலாம் நினைவிடத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி நீதி கேட்டு 3 நாட்கள் நடை பயணம் நடந்தது. நேற்று மாலை பட்டினங்காத்தான் இ.சி.ஆர். சாலையில் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அரசு அலுவலர்கள் நடைபயணம் மேற்கொண்டு கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு நடந்த விளக்க கூட்டத்திற்கு சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநில தணிக்கையாளர் ஊரக வளர்ச்சித் துறை சோமசுந்தர் வரவேற்றார். தமிழ்நாடு விடுதிகள் காப்பாளர் சங்கத்தின் மாநில செயலாளர் மணிமொழி, சி.பி.எஸ்.ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், வருவாய்த்துறை சீனி முகம்மது உள்பட பலர் பேசினர். ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பத்திரப் பதிவுத்துறை சுரேஷ், கருவூலத்துறை கிருஷ்ணமூர்த்தி, மருத்துவத்துறை சின்னபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமநாதன் நன்றி கூறினார். இதைத் தொடர்ந்து சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க நிர்வாகிகள் கலெக்டர் ஜானி டாம் வர்கீசை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    ×