search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New pension"

    • புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 3 நாள் நடை பயணமாக வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    • சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் நீதி கேட்டு 3 நாட்கள் நடை பயணம் நடந்தது.

    ராமநாதபுரம்

    சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அப்துல்கலாம் நினைவிடத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி நீதி கேட்டு 3 நாட்கள் நடை பயணம் நடந்தது. நேற்று மாலை பட்டினங்காத்தான் இ.சி.ஆர். சாலையில் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அரசு அலுவலர்கள் நடைபயணம் மேற்கொண்டு கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு நடந்த விளக்க கூட்டத்திற்கு சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநில தணிக்கையாளர் ஊரக வளர்ச்சித் துறை சோமசுந்தர் வரவேற்றார். தமிழ்நாடு விடுதிகள் காப்பாளர் சங்கத்தின் மாநில செயலாளர் மணிமொழி, சி.பி.எஸ்.ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், வருவாய்த்துறை சீனி முகம்மது உள்பட பலர் பேசினர். ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பத்திரப் பதிவுத்துறை சுரேஷ், கருவூலத்துறை கிருஷ்ணமூர்த்தி, மருத்துவத்துறை சின்னபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமநாதன் நன்றி கூறினார். இதைத் தொடர்ந்து சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க நிர்வாகிகள் கலெக்டர் ஜானி டாம் வர்கீசை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி நடைபயணம் தொடங்குகிறது.
    • சி.பி.எஸ். இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஊரக வளர்ச்சி துறை விஜயகுமார் கூறி உள்ளார்.

    ராமநாதபுரம்

    சி.பி.எஸ்.இயக்கத்தின் மாநில இணை ஒருங்கி ணைப்பாளர் ஊரக வளர்ச்சி துறை விஜயகுமார் கூறியதாவது:-

    தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள், சீருடைப் பணியாளர்களுக்கு 1.4.2003 முதல் புதிய ஓய்வூதியத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை சுமார் 6 லட்சம் ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வு கால பலன்கள் இந்த திட்டத்தில் இல்லாததால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்கள் பல கட்ட போராட்டங்கள் மூலமாக தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வந்தது.

    அதன் அடிப்படையில் 2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவி த்தார்.

    பங்களிப்பு ஓய்வூதியச் சட்டத்தின்படி ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்து ணர்வு ஒப்பந்தம் மாநில அரசுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலையில் இன்று வரை தமிழக அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

    மேலும், இந்த திட்டத்தில் சேருவது மாநில அரசுகளின் விருப்புரிமையைப் பொறுத்தது. வாக்குறுதி வழங்காத ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநில முதலமைச்சர்கள் மாநில அரசு ஊழியர்களுக்கு கேடு விளைவிக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அந்தந்த மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு கால வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து உள்ளனர்.

    இவர்களைத் தொடர்ந்து பஞ்சாப் மாநில முதல்வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துள்ளார். புதிய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய போதிலும் மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கும், பணியின் போது இறந்தவர்களுக்கும் பணிக்கொடை வழங்கி உள்ளனர்.

    ஆனால் தமிழகத்தில் அவ்வாறு பணிக் கொடையும் வழங்கவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் பல கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளோம். தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி நீதி கேட்டு 3 நாட்கள் நடை பயணம் மேற்கொள்கிறோம்.

    இதில் 100-க்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×