search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் அருகே கேட்பாரற்று கிடந்த கண்டெய்னரை திறந்து போலீசார் சோதனை
    X

    திண்டிவனம் அருகே விளைநிலத்தில் கேட்பாரற்று இருந்த கண்டெயினரை திறந்து போலீசார் சோனையிட்டனர்.

    திண்டிவனம் அருகே கேட்பாரற்று கிடந்த கண்டெய்னரை திறந்து போலீசார் சோதனை

    • கல்குவாரிக்கு தேவையான வெடி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா? என அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் எழுந்தது.
    • கண்டெய்னர் இங்கு வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஏவலூர் கிராம எல்லை விவசாய நிலத்தில் கடந்த சில மாதங்களாக கண்டெய்னர் ஒன்று கிடந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் கல்குவாரி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் விவசாயம் சங்கம் சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக கல்குவாரி அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த பணிக்கான கண்டெய்னர் கொண்டுவரப்பட்டதா? இந்த கண்டெய்னரில் கல்குவாரிக்கு தேவையான வெடி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா? என அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் எழுந்தது.

    இது தொடர்பான புகாரின் பேரில் ரோஷனை இன்ஸ்பெக்டர் அன்னகுடி, வெள்ளிமேடுபேட்டை சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மணி மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். கேட்பாரற்று இருந்த கண்டெய்னரின் பூட்டை உடைத்து பார்த்தனர். இதில் கண்டெய்னர் காலியாக இருந்தது. இதனை தொடர்ந்து இந்த கண்டெய்னர் யாருடையது?, இது எவ்வாறு இங்கு வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கண்டெய்னர் காலியாக இருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் நீங்கி நிம்மதியடைந்தனர்.

    Next Story
    ×