search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்ய அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு
    X

    மனு அளிக்க வந்த வியாபாரிகள். 

    திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்ய அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு

    • தேசிய கொள்கைப்படி மாநகராட்சி நிர்வாகம் சாலை யோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளது.
    • பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் பழைய பேருந்து நிலையம் உள் பகுதியில் சுமார் 30 ஆண்டு காலமாக பொதுமக்களுக்கு மலிவு விலையில் 2க்கு 2 அளவுள்ள தள்ளுவண்டியில் 30 பேர் கடலை, பொரி வியாபாரம் செய்து வருகிறோம்.

    தேசிய கொள்கைப்படி மாநகராட்சி நிர்வாகம் சாலை யோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளது. தற்போது திருப்பூர் பழைய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. அங்கு போக்குவரத்து , பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    Next Story
    ×