search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Notification"

    • மின்தடை பற்றி தகவல் தெரிவிக்க மின்பொறியாளர்கள் தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மின்பகிர்மான வட்டத்தில் மின்தடை ஏற்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் மற்றும் அலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதன்படி அரளிக் கோட்டை, ஜமீன்தார்பட்டி, வலையபட்டி, ஏரியூர், மாம்பட்டி, ஒப்பிலான்பட்டி, தும்பைபட்டி, பெருங்குடி, நாமனூர், ஒக்கூர், பர்மா காலனி, காளையார்மங்கலம் பகுதியினர் உதவிமின் பொறியாளர் மதகுபட்டி பகிர்மானம் 9445853073 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

    தமறாக்கி, குமாரபட்டி, கண்டாங்கி பட்டி, புதுப் பட்டி, இடையமேலூர், மங்காம்பட்டி, கோமாளி பட்டி, தேவன்கோட்டை, சிவந்திபட்டி பகுதியினர் உதவி மின்பொறியாளர் மலம்பட்டி பகிர்மானம் 9445853075 என்ற எண்ணிலும், சிவகங்கை நகர், ரோஸ்நகர், முத்துநகர், ராகினிபட்டி, சமத்துவபுரம், அரசனேரி, கிழமேடு பகுதியினர் சிவகங்கை நகர் மின்பகிர்மானம் உதவி மின்பொறியாளர் 9445853076 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    முளக்குளம், சருக னேந்தல், வேம்பத்தூர், பச்சேரி, கருங்குளம், படமாத்தூர், வாணியங்குடி, வீரவலசை, பனையூர், மானாகுடி, அரசனி பகுதியினர் ஊரகம் மின் பொறியாளர் 9445853077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். மேற்கண்ட பகுதியினர் மேலும் சந்தேகங்களுக்கு சிவகங்கை மின்பகிர்மானம் உதவி செயற்பொறியாளர் 9445853074 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

    மாந்தாளி, சீகூரணி, உசிலங்குளம், சருகனி, காட்டாத்தி, கல்லுவழி, குரந்தனி, கோபாலபுரம் பகுதியினர் காளையார் கோவில் உதவி மின்பொறி யாளர் 94458 53079 என்ற எண்ணையும், சோழபுரம், நாலுகோட்டை, விட்டனேரி, ஒருபோக்கி, செங்குளம், ஆலங்குளம், சூரக்குளம் பகுதியினர் நாட்ட ரசன்கோட்டை உதவி மின்பொறியாளர் 94458 53081 என்ற எண்ணையும், அஞ்சாம் பட்டி, மாராத்தூர், நந்தனூர், புலிக்கண்மாய், ஆண்டுரணி, சிறுவேலங்குடி பகுதியினர் மறவமங்கலம் உதவி மின்பொறியாளர் 94458 53082 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

    மேற்கண்ட பகுதியினர் தங்கள் சந்தேகங்களுக்கு உதவி செயற்பொறியாளர் காளையார்கோவில் பகிர்மானம் 9445853078 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். மேற்கண்ட அனைத்து மின்பகிர்மான எல்லைக் குட்பட்ட பகுதி யினர் சிவகங்கை மின்பகிர் மானம் செயற்பொறியாளர் 94458 53080 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

    இந்த தகவலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

    • கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மது விற்பனைகளுக்கு எதிராகவும் சிறப்பு சோதனைகளை நடத்தி குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
    • தகவல் கொடுக்கும் பொது மக்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்கும் வகையில் போதைக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும் போலீசாரால் புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மது விற்பனைகளுக்கு எதிராகவும் சிறப்பு சோதனைகளை நடத்தி குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக கள்ளச் சாராயம், போலி மதுபானம், கஞ்சா மற்றும் மெத்தனால் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள், கடத்தி வருபவர்கள் பதுக்கி வைப்பவர்கள் தொடர்பான புகாரை போலீசாரிடம் பொதுமக்கள் தெரிவிக்க செல்போன் எண்களை சென்னை போலீசார் வெளியிட்டு உள்ளனர்.

    மதுவிலக்கு அமலாக்க பிரிவு வடக்கு மண்டலத்தில் பூக்கடை, வண்ணாரப்பேட்டை புளியந்தோப்பு காவல் மாவட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் 8072864204 என்ற செல்போன் எண்ணிலும், மேற்கு மண்டலத்தில் அண்ணா நகர், கொளத்தூர், கோயம்பேடு காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 9042380581 என்ற செல்போன் எண்ணிலும், தெற்கு மண்டலத்தில் அடையாறு, புனித தோமையர் மலை, தி.நகர் காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 9042475097 என்ற செல்போன் எண்ணிலும், கிழக்கு மண்டலத்தில் திருவல்லிக்கேணி, கீழ்பாக்கம், மயிலாப்பூர் காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 6382318480 என்ற செல்போன் எண்ணிலும் பொது மக்கள் தொடர்பு கொண்டு வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என சென்னை காவல் துறை தெரிவித்து உள்ளது.

    தகவல் கொடுக்கும் பொது மக்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படும்.
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    காங்கயம் :

    காங்கயம் மின்சார வாரிய செயற்பொறியாளர் வெ.கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்குட்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் ஆகிய துணை மின் நிலைய பகுதியில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காங்கயம் துணை மின் நிலையத்திற்குப்பட்ட காங்கயம், திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்–மங்காளிபாளையம், அர்த்தநாரிப்பாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர்.

    சிவன்மலை துணை மின் நிலையத்திற்குப்பட்ட சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூர், மொட்டர்பாளையம், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயர்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆர்.பாளையம், ஜி.வி.பாளையம், புதூர், நாமக்காரன்புதூர், ரோகார்டன், கோயம்பேடு, மரவபாளையம், பரஞ்சேர்வழி, ராசிபாளையம், சிவியார்பாளையம், வளையன்காட்டுதோடடம், ஜெ.ஜெ.நகர், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம். ஆலாம்பாடி துணை மின் நிலையத்திற்குப்பட்ட நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டுவலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்திரெட்டிபாளையம் நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்லேரி.

    முத்தூர் துணை மின் நிலையத்திற்குப்பட்ட முத்தூர்,வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தாராபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை தாராபுரம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட தாராபுரம், வீராட்சி மங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், வண்ணாபட்டி, உப்பார் டேம், பஞ்சப்பட்டி, சின்னபுத்தூர், கோவிந்தாபுரம், செட்டிபாளையம் மற்றும் இதனை சார்ந்த பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பல்லடம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பல்லடம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், வெங்கிட்டாபுரம், பனப்பாளையம், மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், அனுப்பட்டி, அம்மாபாளையம், கள்ளக்கிணறு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2022-2023-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையில் கல்வி உதவி தொகை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
    • ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் வங்கி கணக்கு தொடங்கி கொள்ளலாம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -

    2022-2023-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையில் கல்வி உதவி தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் அருகிலுள்ள அஞ்சலகம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், மாணவர்களின் ஆதார் மற்றும் தொலைபேசி எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல்ரேகை மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கி கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது. 

    • விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது
    • விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது. மாரத்தான் போட்டிகள் 3 பிரிவாக பிரித்து பள்ளி, பொதுப்பிரிவினர் மற்றும் மாணவ/மாணவிகள், ஆண்கள், பெண்கள் என 4 பிரிவுகளாக 5 கிலோ மீட்டர் தூரமும், திருநங்கைகள் ஒரு பிரிவாக 3 கிலோமீட்டர் ஓட்ட போட்டியும் நடத்தப்ப டவு ள்ளது. இப்போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.1000 மற்றும் 4 முதல் 10 வரை ரூ.500 வீதம் 5 பிரிவினர்களுக்கும் பரிசளிக்கப்படும். இப்போ ட்டியில் கலந்துகொண்டு போட்டி தூரத்தை நிறைவு செய்யும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.    மாரத்தான் போட்டிகள் 01.05.2023 அன்று மாலை 3.30 மணியளவில் புதிய பஸ் நிலையம் அருகில் தளபதி திடல் வளாகத்திலிருந்து தொடங்கப்படும். போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயரினை எம்.ஜி.ஆர் உள்விளை யாட்டரங்கில் பதிவு மேற்கொள்ளலாம்.   இந்த மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டிகளில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ/மாணவி ய ர்கள், பொதுப்பிரிவினர்கள் மற்றும் திருநங்கைகள் பெரு மளவில் கலந்துகொண்டு பயன்பெறவேண்டியும் மற்றும் சுற்றுசூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    • அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை பெறலாம்
    • திருச்சி மாநகராட்சி அறிவிப்பு

    திருச்சி, ஏப்.20-

    திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-2024 முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30-ந்தேதிக்குள் செலுத்தி தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998, பிரிவு 84(1)ன் கீழ் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம். எனவே, திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30-ந்தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5,000 வரை ஊக்கத்தொகையினை பெற்றிடுமாறும், இம்மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மஞ்சள் பை விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்
    • மாநில அளவில் சிறந்த பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களுக்கு பணபரிசு வழங்கப்படும்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் இவற்றிற்கு மாற்றாக பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணியை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு மாநில அளவில் இந்த விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. முதல் பரிசாக ரூ.10 லட்சமும் வழங்கப்பட உள்ளது.இந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடைய வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாக பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில் முன் மாதிரியாகத் திகழும் பள்ளிகள்,கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன் வந்துள்ளது.இதற்கான விண்ணப்ப படிவங்கள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப படிவத்தில் தனிநபர் , நிறுவனத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் சிடி பிரதிகள் இரண்டினை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 01.05.2023 ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 8ம் தேதி குறைதீர் முகாம் நடைபெறுகிறது
    • அந்தந்த வட்டங்களில் நடைபெறும் என்று கலெக்டர் கவிதா ராமு அறிவிப்பு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் கடைகள் தொடர்பான குறைதீர் கூட்டம் அந்தந்த வட்டங்களில் நடைபெற உள்ளது. வரும் சனிக்கிழமை(8ம்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடும்ப அட்டைகள், அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்புடைய தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெறும். குடும்ப அட்டைகளில் பெயர்சேர்த்தல், பெயர்நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைபேசி எண் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு முகாமில் கலந்து கொண்டு தீர்வு காணலாம். நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள், தனியார்சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர்பாதுகாப்பு சட்டம் 2019 ன் படி மேற்கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர்கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

    • சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெறுவதை முன்னிட்டு மாற்றம்
    • போலீஸ் சூப்பிரண்டு ஷியாமளா தேவி தகவல்

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாமளா தேவி வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பெரம்பலூர் மாவட்டத் தில் உள்ள சிறுவாச்சூர் கிரா–மத்தில் பிரசித்தி பெற்ற மதுர காளியம்மன் கோவில் குடமுழுக்கு 21 வருடங்களுக்கு பிறகு நாளை (5-ந்தேதி) மிகவும் விமரிசையாக நடைபெற உள்ளது. குடமுழுக்கு விழா வில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.எனவே மக்களின் பயன் பாட்டிற்காகவும், போக்குவரத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும், பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினரால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாளை காலை 4 மணி முதல் மதியம் 2 மணி வரை கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அன்றைய தினம் திருச்சியில் இருந்து சென்னை மற்றும் வட மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் திருச்சி–சென்னை நெடுஞ்சாலையில் உள்ள காரை பிரிவு ரோட்டில் இருந்து வலது புறமாக திரும்பி அரியலூர் சென்று அங்கிருந்து சென்னை செல்ல வேண்டும்.சென்னையில் இருந்து திருச்சி மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் பெரம் பலூர் 4 ரோட்டில் இருந்து இடது புறமாக திரும்பி அரியலூர் வழியாக திருச்சி செல்லுமாறும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட் டுள்ளது.சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு திருவிழாவிற்காக திருச்சி மற்றும் தென் மாவட்டங் களிலிருந்து வாகனங்களில் வருபவர்கள் தங்கள் வாகனங்களை சிறுவாச்சூர் கிராமத்திற்கு முன்பு உள்ள ஆல்மைட்டி மெட்ரிகுலேசன் பள்ளி அருகில் வாகனங்களை நிறுத்தவும்,துறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து வரும் வாகனங்கள் புதுவேலூர் சாலையிலுள்ள ரஞ்சனி காமராஜ் திருமண மண்டபம் அருகிலும், சென்னை மற்றும் வட மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் வருபவர்கள் ராம் இன் பெட்ரோல் பங்கிற்கு எதிர்புறம் தேசிய நெடுஞ்சாலையில் சென்டர்மீடியனில் வலது புறமாக திரும்பி வலது புறமுள்ள கிராமசாலையில் இருந்து விளாமுத்தூர் சாலை மற்றும் நொச்சியம் சாலை ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார் பாக ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

    • பள்ளப்பட்டி விவசாயிகள் இலவசமாக உழவர் சந்தையில் கடை அமைத்து கொள்ள அனுமதி
    • வியாபாரம் ெசய்ய வேளாண்துறையினர் அழைப்பு

    கரூர்,

    அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறி விவசாயம் செய்யும் விவசாயிகளின் நலனுக்காக பள்ளப்பட்டி உழவர் சந்தை செயல்பட்டு வருகின்றது. தற்போது புதுப்பித்தல் பணிகள் முடிந்து உழவர் சந்தை மீண்டும் சிறப்பாக செயல்பட தொடங்கியுள்ளது. விவசாயிகள் உழவர் சந்தையில் விற்பனை செய்து லாபம் பெற வேளான் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காய்கறி விளைவிக்கும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள், மதிப்பு கூட்டிய பொருட்கள், மற்றும் உற்பத்தி செய்யப்படும் பழமரக்கன்றுகள் ஆகியவற்றை உழவர் சந்தையில் வைத்து விற்பனை செய்திட ஏதுவாக இலவசமாக கடை தராசு, மின்சாரம், குடிநீர் மற்றும் இலவச கழிப்பிடம் ஆகிய வசதிகள் செய்து தரப்படுகிறது.

    இங்கு வரும் விவசாயி களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்யப்படுவ துடன் இடைத்தரகர்கள் இல்லாமலும் கமிஷன் இல் லாமலும் நல்ல விலைக்கு விற்று லாபம் பெறலாம். மேலும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் பெறலாம். துறையுடன் இணைந்து உரம், விதைகள் மருந்து மற்றும் மானிய திட்டங் களுக்கு உழவர் சந்தைக்கு வந்து விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு முன்னு ரிமை வழங்கப்படுகிறது.மேலும் பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் திட்டத்தின் கீழ் விவசா யிகளுக்கு உணவு சம்பந் தப்பட்ட தொழில் புரிவ தற்காக இயந்திரங்கள் வாங்குவதற்கு 35சதவீத மானியத்துடன் வங்கி மூலமாக கடன் ஏற்பாடு செய்து தரப்படுகிறது.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆணைக்கிணங்க அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக ளில் காய்கறி பயிரிடும் விவசாயிகள் நல்ல விலை கிடைக்க பள்ளப்பட்டி உழவர் சந்தையில் வந்து விற்பனை செய்து லாபம் பெறலாம்.

    மேலும் உழவர் சந் தைக்கு வந்து விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு திட்டங்களில் முன்னு ரிமை வழங்கப்படும் என்றும் வேளாண் துறையினர் தெரிவித்தனர்.

    • ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
    • மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் அறிவிப்பு

    கரூர்,

    தொழில் பயிற்சி முடித்தவர்கள், இணையதள பதிவுகளை சரி செய்ய விண்ணப்பிக்கலாம் என, கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், 2014 முதல் 2021 வரை சேர்க்கை செய்யப்பட்டவர்கள், என்.சி.வி.டி., இணையதளத்தில் பதிவேற்றம் தகவல்களை சரி செய்து கொள்ளலாம். இதில், பயிற்சியாளர்களின் விபரங்களாகிய பயிற்சியாளரின் பெயர், தந்தையின் பெயர், தாயின் பெயர், புகைப்படம், பிறந்த தேதி ஆகியவற்றில் மாற்றம் இருப்பின் சரி செய்து கொள்ள விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. அதை பின் பற்றி அந்தந்த தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடம் காலி
    • நேரிலும், தபால் மூலமாகவும், இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் சகி}ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடத்துக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்தது:அரியலூர் மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் உணவு ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க சமூக நலத்துறையின் கீழ் "சகி} ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்படுகின்றது. அதில் பணிபுரிய கீழ்கண்ட நிலைகளில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்களுக்கு 8 வது தேர்ச்சி (அ) 10 வது தேர்ச்சி, தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்இதற்கு 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராகவும், சமையல் தெரிந்த பெண் பணியாளராக இருத்தல் வேண்டும். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும். உள்ளுரை சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். உதவியாளர் பணிக்கு ரூ.6,400}யும், பாதுகாவலர் பணிக்கு ரூ.10,000}மும் தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும்.விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை அரியலூர் மாவட்ட இணையதளத்தில்  பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி:  ஒருங்கிணைந்த சேவை மையம், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், அரியலூர் சித்தா மருத்துவம் எதிரில், அரியலூர்} 621704 என்ற முகவரிக்கு 23.03.2024 அன்று மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

    ×