என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரேஷன் கார்டு திருத்தம், கடைதொடர்பான குறைதீர் முகாம்
- 8ம் தேதி குறைதீர் முகாம் நடைபெறுகிறது
- அந்தந்த வட்டங்களில் நடைபெறும் என்று கலெக்டர் கவிதா ராமு அறிவிப்பு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் கடைகள் தொடர்பான குறைதீர் கூட்டம் அந்தந்த வட்டங்களில் நடைபெற உள்ளது. வரும் சனிக்கிழமை(8ம்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடும்ப அட்டைகள், அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்புடைய தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெறும். குடும்ப அட்டைகளில் பெயர்சேர்த்தல், பெயர்நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைபேசி எண் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு முகாமில் கலந்து கொண்டு தீர்வு காணலாம். நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள், தனியார்சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர்பாதுகாப்பு சட்டம் 2019 ன் படி மேற்கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர்கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.






