search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NGK"

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா - சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி வரும் `என்ஜிகே' படத்தின் இசை பணிகள்துவங்கிவிட்டதாக செல்வராகவன் தெரிவித்துள்ளார். #NGK #Suriya
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர்.

    ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படத்தின் இசை பணிகள் துவங்கிவிட்டதாக செல்வராகவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செல்வராகவன் கூறியிருப்பதாவது,


    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா, அழகான சித் ஸ்ரீராம், திறமை வாய்ந்த பாடலாசிரியல் உமாதேவி உள்ளிட்டோருடன் என்ஜிகே படத்தின் இசை பணிகள் துவங்கிவிட்டது. சிறப்பான கூட்டணி. என்று கூறியுள்ளார்.

    படத்தில் சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தை வருகிற நவம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. #NGK #Suriya

    தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வரும் ரகுல் பிரீத் சிங், தற்போது இந்தி படத்திற்காக ஒரு விஷயம் ஒன்று செய்திருக்கிறார். #RakulPreetSingh
    ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். எல்லாமே முன்னணி கதாநாயகர்களின் படங்கள். சூர்யாவுடன் இணைந்து என்ஜிகே, கார்த்தியுடன் தேவ், சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் என தமிழில் முன்னணி நடிகர்களுடனும் அவர் நடித்து வருகிறார்.

    சில நடிகைகள் தெலுங்கு மற்றும் இந்தியில் பிஸியாக இருப்பார்கள், இன்னும் சிலர் தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாக இருப்பார்கள். ஆனால் தமிழ், தெலுங்கு, இந்தி என ஒரே நேரத்தில் மூன்றிலும் பிசியாக நடிக்கும் நடிகைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தப் பட்டியலில்தான் தற்போது இணைந்துள்ளார் ரகுல் பிரீத் சிங். 2014-ல் தனது முதல் இந்திப் படத்தில் நடித்த அவர் தற்போது தே தே ப்யார் தே படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், மீண்டும் ஓர் இந்திப்படத்தில் தான் நடிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார் ரகுல்.



    இயக்குநர் மிலாப் சாவேரி இயக்க, சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் நடிக்கும் மர்ஜவான் எனும் படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக சில மாதங்களாகவே கடுமையான உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த ரகுல் அதன் பலனாக உடல் எடையை கணிசமாக குறைத்து ஒல்லியான உடலுக்கு மாறி இருக்கிறார். சமீபத்தில் அவர் பகிர்ந்த படத்தை பார்த்த ரசிகர்கள் இது ரகுலா? இல்லை இலியானாவா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
    சூர்யா - ஹரி கூட்டணி இதுவரை 4 படங்களில் இணைந்திருக்கும் நிலையில், அடுத்ததாக மீண்டும் ஒரு புதிய படத்தின் மூலம் இருவரும் இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Suriya #Hari
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘என்.ஜி.கே.’. நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கம்தான் ‘என்.ஜி.கே’.

    இந்த படத்துடன் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார் சூர்யா. மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, பொமன் இரானி, சிராக் ஜானி ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். பிரதமர் வேடத்தில் மோகன்லால் நடிக்க, அவருடைய சிறப்புப் பாதுகாப்பு பிரிவின் தலைவராக சூர்யா நடிக்கிறார் என்கிறார்கள். 

    இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.



    இந்நிலையில், சூர்யாவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை, ஹரி இயக்குகிறார். இது ‘சிங்கம்’ படத்தின் நான்காவது பாகம் கிடையாது. புதிய கதைக்களத்துடன் இருவரும் களம் இறங்குகின்றனர். மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. #Suriya #Hari

    செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் என்ஜிகே படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் சூர்யா நவம்பரில் படக்குழுவில் இணையவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #NGK #Suriya
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் என்ஜிகே. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர்.

    ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்த நிலையில், எஞ்சிய காட்சிகளை விரைவில் படமாக்கி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. கடைசியாக ராஜமுந்திரியில் படப்பிடிப்பை முடித்த சூர்யா, கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் இணைந்தார்.

    சூர்யாவின் 37-வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டன் மற்றும் டெல்லியில் நடந்து வந்த நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பும் சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து வருகிற நவம்பரில் சூர்யா என்ஜிகே படப்பிடிப்பில் இணையவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் பிரபு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இந்த ஆண்டின் கடைசி வாரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. #NGK #Suriya

    தமிழில் சூர்யா, தனுஷுக்கு ஜோடியாக நடித்து வரும் சாய் பல்லவிக்கு ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை கண்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். #SaiPallavi
    பிரேமம் படம் மூலம், மலையாளம் மட்டும் அல்லாமல் எல்லா மொழி மக்களையும் ஈர்த்தவர் சாய் பல்லவி. பிரேமம் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் பிசியாக இருக்கிறார் சாய் பல்லவி.

    தமிழில் சூர்யா, தனுசுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இயல்பான அழகு மற்றும் நடிப்பால் பல ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கும் சாய் பல்லவியை டுவிட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டியுள்ளது.



    இதனால் மகிழ்ச்சியடைந்த சாய் பல்லவி தன் மேல் அன்பு வைத்து தன்னை இவ்வளவு தூரம் வாழ்க்கையில் கொண்டு வந்த தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
    சென்னையில் நடந்த குறும்பட போட்டியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூர்யா, எது உங்கள் மனதுக்கு நெருக்கமானதோ அதை செய்யுங்கள். இங்கு பாலும் விற்கலாம், கள்ளும் விற்கலாம் என்று கூறினார். #Suriya #NGK
    வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்க விரும்புபவர்களுக்கு குறும்படங்கள் சரியான வாய்ப்புகளை பெற்றுத் தருகின்றன. அந்தவகையில், மூவிபஃப் பர்ஸ்டகிளாப் சீசன்-2 குறும்பட போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வெற்றியாளர்களை க்யூப் சினிமா (பி) லிட் இன்று அறிவித்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, 2D  என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் CEO ராஜசேகர பாண்டியன், எடிட்டர் ரூபன், சென்சார் அதிகாரி லீலா மீனாட்சி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழையும், பரிசுத்தொகையையும் வழங்கினார்கள்.

    இந்த குறும்பட போட்டியில் 'கல்கி'யை இயக்கிய விஷ்ணு இடவன் முதல் பரிசான ரூ.3 லட்சத்தை பெற்றார். அவருக்கு சூர்யாவின் 2D  நிறுவனத்தில் கதை சொல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

    இவருக்கு அடுத்ததாக 'கம்பளிப்பூச்சி' இயக்குனர் வி.ஜி.பாலசுப்ரமணியன் ரூ.2 லட்சம் பரிசுத்தொகையும், பேரார்வம்' குறும்படத்திற்காக சாரங் தியாகு ரூ.1 லட்சம், குக்கருக்கு விசில் போடு குறும்படத்தை இயக்கிய ஷ்யாம் சுந்தர் மற்றும் 'மயிர்' குறும்படத்தை இயக்கிய யோகி ஆகியோர் தலா ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையும் பெற்றார்கள்.

    விழாவில் நடிகர் சூர்யா பேசுகையில், "ஒரு படம் எடுப்பது. சுலபம். ஆனால் நல்லபடம் எடுப்பது போருக்கு போவது மாதிரி அதையம் தாண்டி கல்ட் படங்கள் எடுப்பது என்பதெல்லாம் பேரதிசயம் மாதிரி. இந்த விழாவிற்கு வந்திருப்பது ஏதோ கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு வந்தது போல உணர்கிறேன். இந்த வயதில் யாராவது உதவி பண்ணினால் மேலே வந்துவிடலாம். ஆனால் இந்த வயதில் இருப்பவர்கள் தான் இனி வரும் நாட்களில் புதிய முயற்சிகளை உருவாக்க போகிறவர்கள். நானெல்லாம் எழுபதுகளின் குழந்தைப் பருவத்தை பார்த்தவன். ஆனால் இப்போதிருக்கும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு அனுபவம் கிடைக்கிறது.



    எந்த ஒரு விஷயம் பண்ணும்போதும், இன்னும்கொஞ்சம் நன்றாக பண்ணியிருக்கலாம் என்று நினைத்தால் அதை அப்போதே உடனே சரிசெய்து விடவேண்டும். எங்கேயும் குறைவந்துவிட கூடாது என இயக்குனர் பாலா அண்ணன் அடிக்கடி சொல்வார். அதனால் குறும்படங்கள் என்றாலும் அதில் சிறிய குறைகூட வந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் வாழ்நாளையும் தாண்டி இதுதான் உங்களுக்கான முக்கியமான பதிவாக இருக்கப்போகிறது.

    நிஜத்தில் நமக்கு நீதி கிடைக்கிறதோ இல்லையோ இதுபோன்ற குறும்படங்களின் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும். கம்பளிப்பூச்சி குறும்படத்தில் காட்டப்பட்டுள்ளது போல, அதை பார்த்து ஒரு சில நபர்கள் மனம் திருந்தினாலே அது நமக்கு கிடைத்த வெற்றிதான். பெற்றோர், பள்ளிக்கூடம், இந்த சமூகம் சொல்லி கேட்காதவர்கள் சினிமா பார்த்து திருந்தினேன் என்று சொன்னால் அதுதான் சினிமாவின் பலம்.

    இன்று எட்டு கோடி மக்களில் 50 லட்சம் பேர் படம் பார்த்தால் படம் ஹிட். 80 லட்சம் பேர் பார்த்தால் அது மெகா ஹிட். கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு அந்தப்படம் பார்த்தவர்கள் மத்தியில் விவசாயிகள் குறித்த பார்வையை மாற்றியிருக்கும் என்பது தான் சந்தோசம். 

    எது உங்கள் மனதுக்கு நெருக்கமானதோ அதை செய்யுங்கள். இந்த மார்க்கெட் வெளிப்படையானது, இதில் பாலும் விற்கலாம், கள்ளும் விற்கலாம். இரண்டுமே விலைபோகும். ஆனால் எதை விற்க வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்" என கூறினார். #Suriya #NGK #MoviebuffS2Awards2018

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் என்ஜிகே படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது குறித்து நடிகர் சூர்யா விளக்கம் அளித்துள்ளார். #NGK #Suriya
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகி வரும் ‘என்.ஜி.கே’ படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படம் தீபாவளிக்கு ரிலீசாகாது என்றும், விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது. இதனால் சூர்யா ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர். இந்த நிலையில், 2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் மூவிபஃப் இணைந்து நடத்தும் குறும்பட நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பங்கேற்றார்.

    அதில் சூர்யா பேசும் போது,

    படத்தை ஆரம்பிக்கும் போது, எப்படி முடிக்க நினைத்தோமோ அப்படி முடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். என்ஜிகே தீபாவளிக்கு வரமுடியவில்லை என்பதில் எங்களுக்கும் வருத்தம் இருக்கிறது. உங்களது நிலைமையும் புரிகிறது. அனைத்து இடங்களிலும் என்னனென்ன விஷயங்கள் நடக்கிறது, அதற்காக நீங்கள் என்னென்ன போராடுகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். அதற்கு இணையான பிரச்சனைகளை நாங்களும் சந்திக்கிறோம், அதை சமாளித்துக் கொண்டிருக்கிறோம். 



    இது வழக்கமான ஒரு படமாக இருக்காது. வித்தியாசமான ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் செல்வராகவனுடன் இணைந்தேன். படமும் சிறப்பாக உருவாகி வருகிறது. படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காகத் தான் ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருக்கிறது. தயாரிப்பு தரப்பும் அவர்களது கடமையை சரியாக செய்து வருகிறார்கள். படம் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக காத்திருப்போம் என்றார். #NGK #Suriya

    செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘என்.ஜி.கே’ படத்தில் பிசியாக நடித்து வரும் சூர்யா, தனது ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறார். #Suriya #NGK
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘என்.ஜி.கே’. அரசியல் திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கின்றனர்.

    ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு இரவு பகலாக நடந்து வருகிறது. பூந்தமல்லியில் படப்பிடிப்பை முடித்து, ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு சென்று படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இப்படம் ஆரம்பிக்கும் போதே தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

    தற்போது தீபாவளி அன்று ரிலீஸ் இல்லை என்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இதனால், சூர்யாவின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். தீபாவளி ரேசில் அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் என்.ஜி.கே, விஜய்யின் சர்கார் ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.



    ஆனால், விஸ்வாசம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சூர்யாவின் ‘என்.ஜி.கே’ திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாக வில்லை என்று அறித்திருக்கிறார்கள். இதனால், விஜய்யின் ‘சர்கார்’ திரைப்படம் மட்டும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே. படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. #NGK #Suriya
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் என்.ஜி.கே. அரசியல் திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர்.

    ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு இரவு பகலாக நடந்து வருகிறது. பூந்தமல்லியில் படப்பிடிப்பை முடித்து, ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு சென்று படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

    ராஜமுந்திரியில் என்ஜிகே படப்பிடிப்பில் இருப்பதாக இயக்குநர் செல்வராகவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் தெரிவித்திருந்தார். சூர்யாவும் படப்பிடிப்பில் பங்கேற்க ராஜமுந்திரி சென்றிருந்தார். படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு சற்று தொலைவில் கேரவனை நிறுத்தி படப்பிடிப்புக்காக மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். சூர்யா வந்த தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் சூர்யாவை பார்ப்பதற்காக படப்பிடிப்பு தளத்தில் திரண்டனர்.



    கேரவனில் இருந்து இறங்கிய அவரை முற்றுகையிட்டு செல்பி எடுக்கவும், கைகுலுக்கவும் முண்டியடித்தனர். ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாவலர்கள் திணறினார்கள். வழிநெடுகிலும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி இருந்ததால் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு சூர்யாவால் செல்ல முடியவில்லை. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

    இதையடுத்து, போலீசாரின் பாதுகாப்புடன் அடுத்த நாள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளாவிலும் சூர்யாவுக்கு அதிகளவில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    சூர்யா படங்களுக்கு ஆந்திராவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சிங்கம் படத்தின் மூன்று பாகங்களும் தமிழகத்தை விட ஆந்திராவில் அதிகம் வசூல் பார்த்தன என்பது குறிப்பிடத்தக்கது. #NGK #Suriya

    சூர்யாவை வைத்து ‘என் ஜி கே’ திரைப்படத்தை இயக்கி வரும் செல்வராகவன், தற்போது ரசிகர் ஒருவரை நெகிழ வைத்துள்ளார். #NGK #Selvaraghavan
    காதல் கொண்டேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, ‘7 ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘இரண்டாம் உலகம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 

    தற்போது இவரது இயக்கத்தில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் சூர்யாவை வைத்து ‘என்ஜிகே’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இவரது தீவிர ரசிகனை நேரில் சந்தித்து இருக்கிறார். இந்த சந்திப்பின் போது ரசிகர் ஒரு டிசர்ட்டை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். அந்த டிசர்ட்டை இன்று அணிந்துக் கொண்டு, புகைப்படம் எடுத்து அன்பு பரிசுக்கு நன்றி என்று பதிவு செய்திருக்கிறார்.



    இதைப் பார்த்த ரசிகர் மிகவும் நன்றி தெரிவித்து, என்னுடைய பெற்றோர் அளவிற்கு உங்கள் மீது மரியாதை உள்ளது என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.
    செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே. படத்தில் நடித்து வரும் சூர்யா, அந்த படத்தில் எம்.எல்.ஏ.,வாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #NGK #Suriya
    சூர்யா நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கி வரும் திரைப்படம் என்.ஜி.கே. இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி இரவு பகலாக நடந்து வருகிறது. இது ஒரு அரசியல் திரில்லர் படம் என்கிற செய்திகள் வெளியாகியுள்ள நிலையில். தற்போது. இந்த படத்தில் சூர்யா கதாபாத்திரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

    சூர்யா இந்த படத்தில் நந்த கோபால குமரன் என்ற கதாபாத்திரத்தில் எம்.எல்.ஏவாக நடிக்கிறாராம். இதற்கு முன் 2004-ம் ஆண்டு வெளியான ஆயுத எழுத்து திரைப்படத்தில் மாணவர்கள் அரசியலில் வருவது போன்ற கதையில் நடித்திருந்தார் சூர்யா. 



    இந்த நிலையில், நேரடி அரசியல்வாதியாக இந்த படத்தில் நடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சூர்யாவுடன் ரகுல் பிரீத்தி சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். 

    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்ஆர்.பிரபு தயாரித்து வரும் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எஸ்.ஆர்.பிரபு சமீபத்தில் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #NGK #Suriya

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘என்ஜிகே’ படம் குறித்து வதந்தி பரவிய நிலையில், அதுகுறித்து படத்தின் இயக்குநர் செல்வராகவன் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். #NGK #Suriya
    சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்ஜிகே’ படத்தல் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், இயக்குநர் செல்வராகவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், படப்பிடிப்பை தொடர முடியவில்லை என்றும், எனவே படம் தீபாவளிக்கு ரிலீசாகாது, கிறிஸ்துமசுக்கு தள்ளிப்போனதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவின. 

    இதற்கு பதிலளிக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள செல்வராகவன்,

    `நண்பர்களே, இது ஒரு எளிமையான மருத்துவ சிகிச்சை தான். நான் நலமுடன் இருக்கிறேன். இன்னும் ஒரு சில நாட்களில் என்ஜிகே படப்பிடிப்பு துவங்கும். உங்களது அன்பிற்கு நன்றி' என்று கூறியிருக்கிறார். 

    இதன்மூலம் படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாவது உறுதியாகி இருக்கிறது. விஜய்யின் சர்கார் படமும் தீபாவளிக்கு ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர். ஜெகபதிபாபு வில்லனாக நடிக்க, ராம்குமார் கணேசன், இளவரசு, பாலா சிங் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. #NGK #Suriya

    ×