என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » mk stalin நகராட்சி
நீங்கள் தேடியது "MK Stalin தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம்"
கார்ப்பரேட் முதலாளியை எதிர்த்து நிற்கும் அப்பாவி பொதுமக்களை ஏ.கே.47 துப்பாக்கியை பயன்படுத்தி கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்வதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #SterliteProtest
சென்னை:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி, பொதுமக்களைக் கொடிய நோய் உபாதைகளிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற நியாயமான, நீண்டநாள் கோரிக்கைக்காக, அமைதியாக வந்த மக்கள் பேரணியை கலவரப்பேரணியாக மாற்றிய காவல்துறையினரின் அட்டகாசம், அராஜகம், இன்னும் தூத்துக்குடி மாவட்டத்தில் அடங்காமல் கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது.
நள்ளிரவுகளில் வீடுகளில் இருக்கும் பெண்களையும், இளைஞர்களையும் எல்லா வரம்புகளையும் மீறி, அடித்து உடைத்து கைது செய்வது, விசாரணை என்ற பெயரில் விபரீதமாகத் துன்புறுத்துவது போன்ற செயல்கள், ஏதோ சர்வாதிகார ஹிட்லரின் அட்டூழிய ஆட்சி நடைபெறுவதைப் போல திடீரென்று கொத்துக் கொத்தாக மக்களைக் கைது செய்து எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே தெரியாமல், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் தமிழ்நாடு காவல்துறையின் கொடுங்கோல் வேட்டைகளுக்குக் கடும் கண்டனத்தை தி.மு.க.வின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
சரியான தலைமை இல்லாமல் மாநில நிர்வாகம் முற்றிலும் நீர்த்துப் போய்விட்ட தமிழ்நாட்டின் காவல்துறை, தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தைத் தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருப்பது, ஜனநாயகத்திற்குப் பேரழிவைத் தந்துவிடும்.
அந்தளவிற்கு மிக மோசமான துன்புறுத்தலுக்கு மனிதநேயமே சிறிதும் இல்லாத இன்னல்களுக்கு அம்மக்கள் உட்படுத்தப்பட்டு, வாழ்வில் இதுவரை காணாத, அந்த பீதியில் இருந்து இன்னும் மீளமுடியாமல் தவித்துக் கதறிக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மட்டுமின்றி, வீடுகளில் உள்ள மக்களும் வேதனைத்தீயில் மூழ்கி, எந்தநேரத்தில் போலீஸ் வந்து என்ன கெடுபிடி செய்யுமோ என்ற பயத்திலும், சோகத்திலும், துயரத்திலும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினருக்கு யார் தலைமை வகிக்கிறார்கள்? யார் கட்டளை இடுகிறார்கள்? யாருடைய கட்டுப்பாட்டில் அவர்கள் எல்லாம் செயல்படுகிறார்கள்? அரசுக்காக பொதுமக்களுக்காக அவர்கள் செயல்படுகிறார்களா அல்லது ஸ்டர்லைட் ஆலை நிர்வாகத்திற்காக கூலிப்படையாக மாறி ஓவர்டைம் வேலை செய்கிறார்களா? என்பதெல்லாம் புரியாத புதிராக இருக்கிறது. ஒரு தனியார் ஆலைக்கு வேறு ஏதோ ஒரு நோக்கத்திற்காக, பாதுகாப்பு கொடுக்க மக்களாட்சி நெறிமுறைகளுக்கு முரணாக, மூன்று மாவட்டங்களில் இணையதளங்களை முடக்கி, காட்டுமிராண்டித்தனமாக, அப்பாவி மக்கள் மீது இருமுறை துப்பாக்கிச்சூடு நடத்தி, பலமுறை விருப்பம் போல் தடியடி நடத்தி, அங்கு ஒரு போர்க்கள ஒத்திகையை நடத்த உத்தரவிட்டது முதலமைச்சரா? காவல்துறை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யா? அல்லது தலைமைச் செயலாளரா? என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் எழுகிறது.
பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட யாரும் சட்டரீதியான நடவடிக்கையில் இருந்து நிச்சயம் தப்பிக்க முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன். ஆகவே, ஈழத்தில் கொடுங்கோலன் ராஜபக்சே நடத்தியதை நினைவுபடுத்துவதைப் போல, வேண்டுமென்றே ஊருக்குள் புகுந்து கைது செய்யப்பட்டவர்கள், பேரணியில் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் எங்கு இருக்கிறார்கள்? அவர்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறார்களா அல்லது அவர்களுடைய உயிருக்கு அச்சுறுத்தலா என்பது பற்றி அதிமுக அரசு உடனடியாக ஒரு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்.
அப்பாவி மக்களை விடுதலை செய்ய வேண்டும். படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களை, தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து மாற்றி தனியார் மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சை அளிக்கவும், அந்த செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்கவும் தயக்கமின்றி முன்வேண்டும்.
அதுமட்டுமின்றி, 144 தடை உத்தரவை உடனடியாக விலக்கிக் கொண்டு, ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து கொண்டிருக்கும் போலீசாரும், நள்ளிரவில் பெண்களைக் கைதுசெய்து துன்புறுத்தும் போலீஸாரும் அங்கிருந்து உடனே அகற்றப்பட வேண்டும். கலவரபூமியாக காட்சியளித்துக் கொண்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் நல்லிணக்கக் குழுவை அமைத்து, மக்களுடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி, சகஜ வாழ்க்கைக்கான அமைதி திரும்ப, அதிமுக அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #Thoothukudi #SterliteProtest #TuticorinUnrest #MKStalin
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X