என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "MGR Century festival"
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பிறந்த நாள் மாவட்டந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நிறைவு விழா சென்னையில் நடக்கிறது.
இந்த நிலையில், எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சேலம் மத்திய ஜெயிலில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 30 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்களது பெயர் விபரம் வருமாறு:-
1.அய்யனார்
2.செல்வம்
3.ஈஸ்வரன்
4.சேகர்
5.மாது
6.மணிகண்டன்
7.சின்னதுரை
8.சுந்தரம்
9.அய்யனார்
10.வரதராஜன்
11.ஜோசு ஆசீர் சிங்
12.ரவி என்கிற ரவிக்குமார்
13.சுபாஷ்
14.பிரகாஷ்
15.சண்முகம்
16.சின்னதம்பி
17.விஜயசங்கர்
18.நடேசன்
19.குப்புசாமி
20.பத்மநாபன்
21.பெரியண்ணன்
22.புதராசு
23.மண்ணாதன்
24.மணியசாகம்
25.அண்ணாமலை
26.ராஜூ
27.பெரியண்ணன்
28.மாது
29.அபிமன்யூ
30.திம்மராயன்
தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி குமரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாளை (22-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.
விழாவில் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். மேலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி பேசுகிறார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி குமரி மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் அலங்கார வளைவுகளும், கொடி தோரணங்களுமாக காட்சி அளிக்கின்றன.
விழா நடைபெறும் ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. பந்தலின் முன்பகுதியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. விழா பந்தலின் முகப்பு பகுதியும் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை குமரி மாவட்டம் வருகிறார். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வரும் அவர் பின்னர் அங்கிருந்து காரில் நாகர்கோவில் வருகிறார்.
வரும் வழியில் அவருக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். இரவில் நாகர்கோவில் சுற்றுலா மாளிகையில் தங்கும் எடப்பாடி பழனிசாமி, நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கிறார்.
முன்னதாக நேற்று அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் நாகர்கோவில் வந்து விழா மைதானத்தை பார்வையிட்டு ஏற்பாடுகளை துரிதப்படுத்தினர்.
குமரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. பள்ளிகளில் நாளை நடைபெற இருந்த காலாண்டு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு அக்டோபர் மாதம் 3-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல நாகர்கோவில் நகர் முழுவதும் நாளை போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு உள்ளது. #MGRCenturyFestival
சென்னை:
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்டு வந்தது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் சென்னை மாவட்டத்திலும் நடத்தப்படாமல் இருந்தது.
இப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற 22-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா நடைபெற உள்ளது.
இதைதொடர்ந்து சென்னையில் 30-ந்தேதி நிறைவுவிழா நடைபெற உள்ளது. இதற்காக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று காலையில் கால்கோள் விழா நடைபெற்றது.
இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பூமி பூஜை நடத்தப்பட்டு முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதையொட்டி அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.
கண்காட்சி அரங்கம், மேடை அமைக்கும் பணிகள் பிரமாண்டமாக செய்யப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
30-ந்தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேசிய தலைவர்களும் பலர் சிறப்ப்புரையாற்ற உள்ளனர். #MGRcentenaryfunction
மதுரை:
தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாடும் கைதிகளை பொதுமன்னிப்பின் பேரில் விடுதலை செய்ய அரசு முடிவு எடுத்தது.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
மதுரை மத்திய சிறையில் இருந்து இன்று 7-வது கட்டமாக 68 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் பெண் கைதியும் ஒருவர்.
மதுரை மத்திய சிறையில் இருந்து 6 கட்டமாக 100 பேர் விடுதலை செய்யப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் 68 பேர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். #MGRcentenaryfunction
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளில் முதற்கட்டமாக 67 கைதிகள் விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 6-ந் தேதி, சென்னை புழல் சிறைச்சாலையில் 10 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவு பெற்ற (25.2.2018 அன்றைய தேதி அடிப்படையில்) 67 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 68 கைதிகளை விடுதலை செய்யப்பட உள்ளனர். அதன்படி புழல் மத்திய சிறையில் 44 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என 52 பேரும், இதர சிறைச்சாலைகளில் இருந்து 16 பேரும் என மொத்தம் 68 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்