search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai Panthers"

    தமிழ்நாடு பிரீமியர் லீக் குவாலிபையர் 2-ல் மதுரை பாந்தர்ஸ்க்கு கோவை கிங்ஸ் 126 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. #ENGvIND
    தமிழ்ந்நாடு பிரீமியர் லீக் தொடரின் 2-வது குவாலிபையர் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. மதுரை பாந்தர்ஸ்க்கு எதிராக டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் தொடக்க வீரர் ஷாருக்கான் 4 ரன்னிலும், அபிநவ் முகுந்த் 28 ரன்னிலும், அதன்பின் வந்த ரவி குமார் ரோஹித் 5 ரன்னிலும் வெளியேறினார்கள்.



    அதன்பின் வந்த அஸ்வின் வெங்கடராமன் 45 ரன்களும், பிரசாந்த் ராஜேஷ் 29 ரன்களும் அடிக்க கோவை கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் சேர்த்தது. மதுரை பாந்தர்ஸ் அணியின் அபிஷேக் தன்வர் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
    இறுதிப் போட்டிக்குள் நுழையும் 2-வது அணி யார் என்பதை தீர்மானிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியும் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றனர். #TNPL2018 #NammaOoruNammaGethu
    நத்தம்:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் 20 ஓவர் போட்டிதொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நேற்று மாலை நடந்த முதல் தகுதி சுற்று (குவாலிபையர் 1) ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 75 ரன் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    இதே மைதானத்தில் இரவு நடந்த வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) போட்டியில் கோவை கிங்ஸ் வெற்றி பெற்றது. அந்த அணி காரைக்குடி காளையை 24 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து வெளியேற்றியது.

    இறுதிப் போட்டிக்குள் நுழையும் 2-வது அணி யார் என்பதை தீர்மானிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் (குவாலிபையர்-2) இன்று நத்தத்தில் நடக்கிறது. இப்போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த மதுரை பாந்தர்ஸ் அணியும், வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற கோவை கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    மதுரை லீக் ஆட்டத்தில் 7 போட்டியில் 5 வெற்றி பெற்று 2-வது இடத்தை பிடித்தது. முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் நிர்ணயித்த 203 ரன் இலக்கை நோக்கி விளையாடிய மதுரை 128 ரன்னில் சுருண்டது.

    இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று முழு திறமையை வெளிபடுத்துவது அவசியம். அந்த அணியில் அருண் கார்த்திக், தலைவன் சற்குணம், ரோகித், காவுசிக், தன்வார், வருண் சக்ரவர்த்தி, ரகில்ஷா போன்ற வீரர்கள் உள்ளனர். மேலும் பந்து வீச்சில் முன்னேற்றம் காண்பது அவசியம். அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணியில் ஷாருக்கான், ரோனித், அந்தோணிதாஸ், அகில்ஸ்ரீநாத் அஜித்ராம், அஸ்வின் வெங்கடராமன் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    வெளியேறுதல் சுற்றில் காரைக்குடியை வீழ்த்தி உள்ளதால் கோவை கிங்ஸ் நம்பிக்கையுடன் உள்ளது. அதே உத்வேகத்துடன் விளையாட முயற்சிக்கும்.

    இறுதிப் போட்டிக்கு நுழைய இரு அணிகளும் மல்லு கட்டும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    தமிழ்நாடு பிரீமியர் லீக் குவாலிபையர் 1-ல் மதுரை பாந்தர்ஸை 75 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர்-1 திண்டுக்கல்லில் நடைபெற்றது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிராக மதுரை பாந்தர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. ஹரி நிஷாந்த் 57 ரன்களும், என் ஜெகதீசன் 43 ரன்களும், ஆர் விவேக் 54 ரன்களும் சேர்த்தனர்.



    பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் களம் இறங்கியது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சால் மதுரை பாந்தர்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தது. இதனால் 19.3 ஓவரில் 128 ரன்னில் சுருண்டது. இதனால் திண்டுக்கல் டிராகன்ஸ் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் குவாலிபையர் 1-ல் மதுரை பாந்தர்ஸ்க்கு 204 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல் டிராகன்ஸ் #TNPL2018 #DindigulDragons #MaduraiPanthers
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் குவாலிபையர்-1 திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இதில் மதுரை பாந்தர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் களம் இறங்கியது.

    தொடக்க வீரர்களாக ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி 9.1 ஓவரில் 90 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது. ஹரி நிஷாந்த் 31 பந்தில் 57 ரன்களும், ஜெகதீசன் 34 பந்தில் 43 ரன்களும் குவித்தனர்.

    அதன்பின் வந்த ஆர் விவேக் 25 பந்தில் 54 ரன்கள் குவித்தார். இந்த மூவரின் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்துள்ளது. #TNPL2018 #DindigulDragons #MaduraiPanthers
    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கவிருக்கும் ஆட்டத்தில் திண்டுக்கல், மதுரை அணிகள் மோதுகின்றனர். #TNPL2018 #NammaOoruNammaGethu
    திண்டுக்கல்:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

    ‘லீக்‘ ஆட்டத்தின் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்தது. ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்ஸ், திருச்சி வாரியர்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

    ‘குவாலி பையர்’ ஆட்டம் நெல்லையில் நேற்று முன்தினமும், எலிமினேட்டர் ஆட்டம் திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் நேற்றும் நடைபெற இருந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி இந்த இரண்டு ஆட்டங்களும் தள்ளிவைக்கப்பட்டன. அந்த இரண்டு ஆட்டங்களும் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது.

    மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இரு அணிகளும் லீக் ஆட்டத்தில் 5 போட்டியில் வெற்றி பெற்று இருந்தன. இதனால் இறுதிப்போட்டியில் நுழைய கடுமையாக போராடும். திண்டுக்கல் அணி லீக் ஆட்டத்தில் மதுரையை வீழ்த்தி இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையில் உள்ளது.

    தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறும், குவாலிபையர் 2 ஆட்டத்தில் விளையாடும்.

    இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டமான எலிமினேட்டரில் கோவை கிங்ஸ்- காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன.

    வெற்றி பெறும் அணி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்துக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும். கோவை அணி ‘லீக்‘ ஆட்டத்தில் காரைக்குடி காளையை வீழ்த்தி இருந்தது.

    ‘குவாலிபையர் 2’ ஆட்டம் நாளை நத்தத்திலும் இறுதிப் போட்டி 12-ந்தேதி சென்னையிலும் நடக்கிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது? என்பதை நிர்ணயிக்கும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் நெல்லையில் இன்று மோதுகின்றன. #TNPL2018
    நெல்லை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த ஜூன் 11-ந் தேதி தொடங்கி நெல்லை, நத்தம் (திண்டுக்கல்), சென்னை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி விட்டது. நேற்று முன்தினத்துடன் 28 லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்தன.

    லீக் ஆட்டங்கள் முடிவில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிகர ரன்-ரேட் (+0.992) அடிப்படையில் முதலிடம் பிடித்தது. மதுரை பாந்தர்ஸ் அணி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றாலும், நிகர ரன்-ரேட் (+0.124) அடிப்படையில் 2-வது இடம் பெற்றது. கோவை கிங்ஸ் அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றதுடன், நிகர ரன்-ரேட் (+0.577) அடிப்படையில் 3-வது இடத்தை பிடித்தது. காரைக்குடி காளை அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றாலும், நிகர ரன்-ரேட் (+0.505) அடிப்படையில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் 5-வது இடத்தையும், திருச்சி வாரியர்ஸ் 6-வது இடத்தையும், காஞ்சி வீரன்ஸ் 7-வது இடத்தையும், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கடைசி இடத்தையும் பிடித்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின. இந்த போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதலாவது தகுதி சுற்று (பிளே-ஆப்) ஆட்டத்தில் முதலிடம் பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, 2-வது இடம் பெற்ற மதுரை பாந்தர்ஸ் அணியுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி வருகிற 12-ந் தேதி சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். இதில் தோல்வி காணும் அணி நத்தத்தில் 10-ந் தேதி நடைபெறும் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாட வேண்டும். அதில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.

    திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கடந்த ஆண்டில் 6-வது இடம் பிடித்து இருந்தது. இந்த சீசனில் அந்த அணியின் கேப்டன் ஆர்.அஸ்வின் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருப்பதால் பெரும்பாலான ஆட்டங்களில் ஜெகதீசன் தான் அணியை வழிநடத்தினார். அவர் இதுவரை 3 அரைசதம் உள்பட 302 ரன்கள் குவித்துள்ளார். விவேக், ஹரி நிஷாந்த் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் முகமது, அபினவ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    கடந்த 2 சீசனிலும் ஒரு வெற்றியை கூட பெறாத மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளர் மற்றும் வீரர்கள் மாற்றத்தால் புதுப்பொலிவு பெற்றுள்ளது. டி.ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணி இந்த சீசனில் இதுவரை 2 ஆட்டத்தில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. மதுரை பாந்தர்ஸ் அணியின் பேட்டிங்கில் அருண் கார்த்திக் (3 அரை சதம் உள்பட 307 ரன்கள்) முதுகெலும்பாக விளங்கி வருகிறார். தலைவன் சற்குணம், கவுசிக், ஷிஜித் சந்திரன் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பை அளித்து வருகின்றனர். பந்து வீச்சில் ரஹில் ஷா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க மதுரை பாந்தர்ஸ் அணி முயற்சிக்கும். அதே நேரத்தில் இறுதிப்போட்டியை எட்ட திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தனது முழு பலத்தையும் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. 3 தடவையும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தான் வெற்றி பெற்றுள்ளது. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    இந்த போட்டி குறித்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பயிற்சியாளர் வெங்கட்ரமணா கருத்து தெரிவிக்கையில், ‘வீரர்கள் தேர்வு முறை காரணமாக இந்த சீசனில் புதிய சாம்பியன் உருவாக வாய்ப்பு கிடைத்துள்ளதாக நினைக்கிறேன். நாங்கள் சிறந்த வீரர்களை தக்க வைத்தோம். அவர்கள் தங்கள் திறமையை நிரூபித்து காட்டினார்கள். சூழ்நிலைக்கு தகுந்தபடி தான் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்கிறோம். எங்கள் அணியில் வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. யார் குறிப்பிட்ட நேரத்தில் பொறுப்பேற்று கொள்கிறார்களோ? அவர்கள் அணியை முன்னெடுத்து செல்கிறார்கள்’என்றார். திண்டுக்கல் அணியின் கேப்டன் ஜெகதீசன் அளித்த பேட்டியில், ‘இந்த சீசனில் எங்கள் அணி நல்ல சமபலத்துடன் உள்ளது. எங்கள் வீரர்கள் அனைவரும் பொறுப்பை உணர்ந்து விளையாடுகிறார்கள். இது எங்களுக்கு சிறப்பான சீசன் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் முன்னேற்றம் கண்டு வருகிறோம். இருப்பினும் எங்கள் பந்து வீச்சில் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்’ என்று தெரிவித்தார்.

    மதுரை பாந்தர்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் தலைவன் சற்குணம் அளித்த பேட்டியில், ‘மிகவும் நேர்மறையான மனநிலையுடன் இந்த ஆட்டத்தை நாங்கள் அணுக வேண்டும். எதிரணியை வீழ்த்தி எங்களது மன உறுதியை நிரூபித்து காட்ட இது நல்ல வாய்ப்பாகும். அணியில் எல்லா பேட்ஸ்மேன்களும் நல்ல நிலையில் உள்ளனர். இதனால் என்னால் நெருக்கடி இன்றி விளையாடுவதுடன் இயல்பான ஷாட்களை விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. கடந்த முறை நான் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக ஆடினாலும், பொதுவான ஆட்டங்களில் மதுரை அணி வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவேன். இந்த முறை மதுரை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்பது எனது சவாலாக இருந்தது. கடவுள் அருளால் எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது. தற்போது நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறோம்’ என்று தெரிவித்தார்.

    இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:-

    திண்டுக்கல் டிராகன்ஸ்: ஜெகதீசன் (கேப்டன்), ஹரி நிஷாந்த், விவேக், சதுர்வேத், அனிருத், முகமது, அபினவ், சிலம்பரசன், திரிலோக் நாத், யாழ் அருண்மொழி, தோதாத்ரி.

    மதுரை பாந்தர்ஸ்: டி.ரோகித் (கேப்டன்), அருண் கார்த்திக், தலைவன் சற்குணம், கார்த்திகேயன், நாதன், கவுசிக், ஷிஜித் சந்திரன், அபிஷேக் தன்வார், கிரண் ஆகாஷ், வருண் சக்ரவர்த்தி, ரஹில் ஷா. #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இன்று நடைபெற்ற போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது கோவை கிங்ஸ் அணி. #TNPL2018 #LKKvSMP
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 26 - வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் கோவை கிங்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  இதையடுத்து, மதுரை பாந்தர்ஸ் அணியின் அருண் கார்த்திக், ரோஹித் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ஆனால், கோவை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மதுரை பாந்தர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

    அந்த அணியின் ஜெகதீசன் கவுசிக் 32 ரன்களும், கடைசியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 20 ரன்களும் எடுத்தனர். கோவை அணி சார்பில் கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் 2 விக்கெட் வீழ்த்தினார். 
    இதையடுத்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை கிங்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் ஷாருக் கான், அபினவ் முகுந்த் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    அபினவ் முகுந்த் 12 ரன்களில் அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 27 ஆக இருந்தது. அடுத்து இறங்கிய ரவிகுமார் ரோஹித் ஷாருக் கானுடன் ஜோடி சேர்ந்தார். அணியின் எண்ணிக்கை 52 ஆன போது ஷாருக் கான் 29 ரன்களில் அவுட்டானார்.

    அடுத்து ஆடிய அஷ்வின்  வெங்கட்ராமன் ரோஹித்ஹுடன் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், கோவை கிங்ஸ் அணி 17. 2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரவிகுமார் ரோஹித் 34 ரன்களுடனும், அஷ்வின் வெங்கட்ராமன் 28 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். #TNPL2018 #LKKvSMP 
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற 104 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது மதுரை பாந்தர்ஸ் அணி. #TNPL2018 #LKKvMP
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 26 - வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் கோவை கிங்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  இதையடுத்து, மதுரை பாந்தர்ஸ் அணியின் அருண் கார்த்திக், ரோஹித் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ஆனால், கோவை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மதுரை பாந்தர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

    அந்த அணியின் ஜெகதீசன் கவுசிக் 32 ரன்களும், கடைசியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 20 ரன்களும் எடுத்தனர்.

    கோவை அணி சார்பில் கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. #TNPL2018 #LKKvMP 
    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் கோவை கிங்ஸ் மதுரை பாந்தர்ஸ் அணியுடன் இன்று மோதுகிறது. #TNPL2018
    நெல்லை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று (சனிக்கிழமை) இரவு நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 26-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணி 6 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் 10 புள்ளிகள் குவித்து அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறி விட்டது. அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்றைய ஆட்டம் கோவை கிங்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் தான் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெற முடியும். கடந்த லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி 14 ரன் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. அந்த தோல்வியில் இருந்து மீண்டு வர கோவை அணி முயற்சிக்கும். மதுரை பாந்தர்ஸ் அணி கடைசி லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி காளையை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் அந்த அணி வீரர் அருண் கார்த்திக் 85 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    முந்தைய வெற்றி உத்வேகத்தை தொடருவதுடன், புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்க மதுரை பாந்தர்ஸ் அணி முனைப்பு காட்டும். வெற்றிக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் ஏற்கனவே 2 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் ஒரு ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இன்று இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.  #TNPL2018

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் காஞ்சி வீரன்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்து மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. #TNPL2018 #KVvMP
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 15-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் காஞ்சி வீரன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. மதுரை பாந்தர்ஸ் அணியின் அருண் கார்த்திக், டி ரோகித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    அருண் கார்த்திக் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய சற்குணம் 40 பந்தில் 7 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 62 ரன்கள் குவித்தார். டி ரோகித் 30 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார்.

    அதன்பின் வந்த வீரர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜெகதீசன் கவுசிக் 20 பந்தில் 27 ரன்களும், அபிஷேக் தன்வார் 10 பந்தில் 22 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்துள்ளது.

    காஞ்சி வீரன்ஸ் சார்பில் தீபன் லிங்கேஷ், திவாகர் ஆகியோர் 3 விக்கெட்டும், ஆஷிக் ஸ்ரீனிவாஸ் 2விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காஞ்சி வீரன்ஸ் களமிறங்கியது. ஆனால் மதுரை பாந்தர்ஸ் அணியின் துல்லிய பந்துவீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    காஞ்சி அணியில் விஷால் வைத்யா 31 ரன்களும், பாபா அபராஜித் 29 ரன்களும், மோகித் ஹரிஹரன் மற்றும் சஞ்சய் யாதவ் ஆகியோர் 34 ரன்களும் எடுத்தனர்.

    இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத்தொடர்ந்து மதுரை பாந்தர்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது தலைவன் சற்குணத்துக்கு வழங்கப்பட்டது.
    #TNPL2018 #KVvMP
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் காஞ்சி வீரன்ஸ்க்கு 168 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மதுரை பாந்தர்ஸ். #TNPL2018 #KVvMP
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 15-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இதில் காஞ்சி வீரன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் விளையாடு வருகின்றன. டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மதுரை பாந்தர்ஸ் அணியின் அருண் கார்த்திக், டி ரோகித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அருண் கார்த்திக் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து டி ரோகித் உடன் தலைவன் சற்குணம் ஜோடி சேர்ந்தார். சற்குணம் 40 பந்தில் 7 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 62 ரன்கள் குவித்தார். டி ரோகித் 30 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார்.



    அதன்பின் வந்த வீரர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜெகதீசன் கவுசிக் 20 பந்தில் 27 ரன்களும், அபிஷேக் தன்வார் 10 பந்தில் 22 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்துள்ளது.
    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்று நடக்கவிருக்கும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியும் காஞ்சி வீரன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றனர். #TNPL2018 #NammaOoruNammaGethu
    திண்டுக்கல்:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 3 இடங்களில் நடைபெற்று வருகிறது.

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    நேற்றுடன் 14 ஆட்டங்கள் முடிந்து விட்டன. அதன்படி திண்டுக்கல் டிராகன்ஸ் 4 வெற்றி, 1 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது. காரைக்குடி காளை, டூட்டி பேட்ரியாட்ஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. காஞ்சி வீரன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆகியவை புள்ளிகள் எதுவும் பெறவில்லை.

    டி.என்.பி.எல். போட்டியின் 15-வது ‘லீக்’ ஆட்டம் திண்டுக்கலை அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் மதுரை பாந்தர்ஸ்- காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மதுரை அணி தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதை தொடர்ந்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (26 ரன்), டூட்டி பேட்ரியாட்ஸ் (7 விக்கெட்) அணிகளை வீழ்த்தியது.

    பலவீனமாக காணப்படும் காஞ்சி வீரன்சை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் ஆர்வத்தில் மதுரை அணி இருக்கிறது.

    பாபா அபராஜித் தலைமையிலான வி.பி.காஞ்சி வீரன்ஸ் அணி தான் மோதிய 3 ஆட்டத்திலும் தோற்று இருந்தது.

    அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 48 ரன் வித்தியாசத்தில் டூட்டி பேட்ரியாட்சிடமும், 8 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்சிடமும், 7 விக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்சிடமும் தோற்றது.

    தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் காஞ்சி வீரன்ஸ் இருக்கிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    ×