என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிஎன்பிஎல் - கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற 104 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது மதுரை பாந்தர்ஸ்
Byமாலை மலர்4 Aug 2018 3:45 PM GMT (Updated: 4 Aug 2018 3:45 PM GMT)
தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற 104 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது மதுரை பாந்தர்ஸ் அணி. #TNPL2018 #LKKvMP
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 26 - வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் கோவை கிங்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, மதுரை பாந்தர்ஸ் அணியின் அருண் கார்த்திக், ரோஹித் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
ஆனால், கோவை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மதுரை பாந்தர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
அந்த அணியின் ஜெகதீசன் கவுசிக் 32 ரன்களும், கடைசியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 20 ரன்களும் எடுத்தனர்.
கோவை அணி சார்பில் கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. #TNPL2018 #LKKvMP
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X