search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LTTE"

    சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரை தாக்க விடுதலைப் புலிகள் முன்னர் திட்டமிட்டதாக இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்துள்ளார். #LTTE #planefromChennai #MaithripalaSirisena
    கொழும்பு:

    ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றிருந்த இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அங்கு வாழும் சிங்களத்தவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    கடந்த 2009-ம் ஆண்டில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரை தாக்க விடுதலைப் புலிகள்  திட்டமிட்டதாக அப்போது மைத்ரிபாலா சிறிசேனா குறிப்பிட்டார்.

    அந்த காலகட்டத்தில் இலங்கையின் அந்நாள் அதிபர், பிரதமர், பாதுகாப்புத்துறை செயலாளர் மற்றும் ராணுவ தளபதி அனைவருமே வெளிநாடுகளுக்கு சென்றிருந்தனர். தற்காலிக ராணுவ மந்திரியாக அப்போது நான் பொறுப்பேற்றிருந்தேன்.


    சென்னையில் இருந்தோ, வேறேதாவது காட்டுப் பகுதியில் இருந்தோ கொழும்பு நகரில் உள்ள சில முக்கிய பகுதிகளில் விடுதலைப் புலிகள் வான்வழியாக வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப் போவதாக உளவுத்துறை மூலம் தகவல் வந்தது. இதை தொடர்ந்து அனைவரும் வெளியேறி விட்டனர்.

    தாக்குதலுக்கு பயந்து நானும் கொழும்புவை விட்டு வெளியேறி வெவ்வேறு பகுதிகளில் அப்போது தங்கி இருந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த 2007 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் கொழும்பு நகரின்மீது இருமுறை விமான தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #LTTE #planefromChennai #MaithripalaSirisena
    விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வைகோ வழக்கு தொடர உரிமை இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. #Vaiko #LTTE
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர், விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது. இந்த தடையை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்க, ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் கீழ் தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்கும்.

    அந்த தீர்ப்பாயம், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் விசாரணை நடத்தி, விடுதலைப்புலிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதா? இல்லையா? என்பதை ஆய்வு செய்து, தடையை நீட்டிப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும். அதன்படி மத்திய அரசு இறுதி உத்தரவு பிறப்பிக்கும்.

    இதன்படி, கடந்த 2014-ம் ஆண்டு நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான தீர்ப்பாயம் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உத்தரவிட்டது. இதன்படி விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.



    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்தார். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு, நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    வைகோ கோர்ட்டில் ஆஜரானார். அப்போது மத்திய அரசு வக்கீல் வி.டி.பாலாஜி ஆஜராகி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ‘விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வைகோ வழக்கு தொடர உரிமை இல்லை. இந்த உத்தரவை எதிர்த்து விடுதலைப்புலிகள் இயக்கம்தான் வழக்கு தொடர முடியும். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து இந்த வழக்கை வருகிற 14-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #Vaiko #LTTE
    இலங்கையில் தமிழர்கள் அனுபவிக்கும் பிரச்சினையை எழுப்புவோரை, விடுதலைப்புலி ஆதரவாளர்களாக முத்திரை குத்துவதாக சமீபத்தில் பதவி விலகிய தமிழ் பெண் மந்திரி விஜயகலா மகேஸ்வரன் கூறினார். #SriLanka #LTTE #Vijayakala
    கொழும்பு:

    இலங்கை வடக்கு மாகாணத்தில் இருந்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயகலா மகேஸ்வரன் (வயது 45), குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தார். பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மந்திரி சபையில் இருந்த ஒரே தமிழ் பெண் மந்திரியான விஜயகலா கடந்த வாரம் கொழும்புவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.

    அப்போது அவர், ‘வடக்கு மாகாணத்தில் தற்போது குற்ற செயல்கள் அதிகரித்து இருப்பதை பார்க்கும் போது, விடுதலைப்புலிகள் மீண்டும் வரவேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது’ என்று கூறியதாக தகவல் வெளியானது. இது இலங்கை அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.

    விஜயகலாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சிங்கள எம்.பி.க்கள், அவர் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்றத்தில் போர்க்கொடி தூக்கினர். மேலும் அவரது சொந்த கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியது.

    எனவே இது குறித்து விசாரணை நடத்துமாறு கட்சித்தலைவரும், பிரதமருமான ரனில் விக்ரமசிங்கே கேட்டுக்கொண்டார். மேலும் விஜயகலாவின் கருத்து அரசியல் சாசனத்துக்கு எதிரானதா? என அட்டார்னி ஜெனரலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    இவ்வாறு தனது கருத்துக்கு எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து விஜயகலா மகேஸ்வரன், கடந்த 5-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.



    ராஜினாமா நடவடிக்கைக்குப்பின் முதல் முறையாக, வடக்கு மாகாணத்தில் நேற்று முன்தினம் நடந்த கூட்டம் ஒன்றில் விஜயகலா பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஒருவர் பேசினால், அவரை விடுதலைப்புலியாக தெற்கு (சிங்களர்கள்) பார்க்கிறது. விடுதலைப்புலி ஆதரவாளராகவே அவர்களை முத்திரை குத்துகின்றனர். நான் வடக்கு மாகாண மக்களின் மனதில் இருப்பதைத்தான் பேசினேன். அவர்களுக்காகத்தான் எனது பதவியை ராஜினாமா செய்தேன்’ என்றார்.

    ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில் இருந்ததை விட தற்போது தமிழர்களின் நிலை மேம்பட்டு இருப்பதாக கூறிய விஜயகலா, தனது முயற்சிகளுக்கு எதிர்ப்பு வந்தாலும், மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக தொடர்ந்து போராடுவேன் என்றும் தெரிவித்தார். #SriLanka #LTTE #Vijayakala
    விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இலங்கை பெண் மந்திரி விஜயகலா மகேஸ்வரன் மீது கடும் நடவடிக்க எடுக்க அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
    கொழும்பு:

    இலங்கை பெண் மந்திரி விஜயகலா மகேஸ்வரன். தமிழரான இவர் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர். குழந்தைகள் நலத்துறையை கவனித்து வரும் விஜயகலா யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், ‘‘இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ வேண்டும் என்றால் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகம் நடைபெற்ற போது சமூகத்தில் எந்த குற்ற சம்பவமும் நடைபெறவில்லை. இந்த 3 ஆண்டு கால ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை’’ என்றார்.


    இந்த பேச்சு இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று கடும் அமளியும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. மந்திரி விஜயகலாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

    இதுகுறித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா கருத்து கூறியுள்ளார். அதில், ‘‘ராஜாங்க மந்திரி பதவியில் உள்ள ஒருவர் அவ்வாறு கருத்து வெளியிட முடியாது என்றார். மேலும் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். #SrilankanPresident #MaithripalaSirisena #SrilankanMinister
    இலங்கையில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ விடுதலை புலிகள் மீண்டும் வர வேண்டும் என வடக்கு மாகாண பெண் மந்திரி தெரிவித்துள்ள கருத்து இன்று பாராளுமன்றத்தில் கடும் அமளியை ஏற்படுத்தியது. #Srilanka #LTTE
    கொழும்பு:

    இலங்கை வடக்கு மாகாண அரசில் மந்திரியாக இருப்பவர் விஜேயகலா மகேஷ்வரன். ஆளும் ஐக்கிய தேதிய கட்சி உறுப்பினரான இவர் நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசுகையில், “2009-ம் ஆண்டுக்கு முன்னர் நாம் எப்படி இருந்தோம். நாம் தலைநிமிர்ந்து வாழ, தெருவில் சுதந்திரமாக நடமாட, நமது குழந்தைகள் பத்திரமாக பள்ளி சென்று வர தற்போது உள்ள சூழலில் விடுதலை புலிகள் மீண்டும் வந்தால் மட்டுமே சாத்தியம்” என கூறினார்.

    சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்புனர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இதனை மேற்கோள் காட்டி பேசிய விஜயகலா, ‘இதற்காகவா மைத்திரிபால சிறிசேனாவுக்கு நாங்கள் வாக்களித்தோம்’ என்றார். வடக்கு மாகாண பகுதியில் எந்த வளர்ச்சி திட்டமும் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

    விஜேயகலாவின் இந்த பேச்சு அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று அமளியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆளும் கட்சி விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய கல்வி மந்திரி அகில விராஜ் கரியவாசம், “விஜேயகலாவின் பேச்சு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது” என்றார்.
    இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது காணாமல் போனதாக கூறப்படும் 280 பேரின் விவரங்களை சமர்பிக்குமாறு இலங்கை அரசு அறிவுறுத்தியுள்ளது. #SrilankaWar

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற உச்சகட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்திடம் சரண் அடைந்தனர்.

    இவர்களில் பலர் உரிய விசாரணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து பின்னர் சரண் அடைந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இவர்களில் சுமார் 6 ஆயிரம் பேர் சீர்திருத்த முகாம்களில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக அரசு கூறி வருகிறது.

    இவர்களை தவிர மேலும் சில ஆயிரம் பேர் மாயமானதாக குற்றச்சாட்டுகள் பெருகி வருகின்றன. இலங்கையில் உள்நாட்டுப்போர் தொடங்கிய 30 ஆண்டுகளில் சுமார் 20 ஆயிரம் பேர் இவ்வகையில் காணாமல் போனதாக தெரிகிறது.

    இந்நிலையில், 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற உச்சகட்ட போரின்போது ராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனவர்களின் நிலை என்னவானது? அவர்களை உடனடியாக ஆஜர்படுத்த வேண்டும் என முல்லைத்தீவு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவின்மீது இரண்டாவது முறையாக கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் எம்.எஸ்.எம். சம்சுதீன், உச்சகட்ட போரின்போது சரணடைந்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு தாக்கல் செய்ய இலங்கை ராணுவத்துக்கு உத்தரவிட்டார்.

    இம்மனு மீதான முந்தைய விசாரணையின்போது, சரணடைந்த விடுதலைப் புலிகள் என்றொரு பெயர் பட்டியலை இலங்கை ராணுவம் அளித்திருந்தது. அந்தப் பட்டியலில் சீர்திருத்த முகாம்களில் பயிற்சி பெற்ற தமிழர்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தது.



    காணாமல் போனதாக குடும்பத்தினரால் தேடப்படும் நபர்களின் பெயர் விபரங்கள் அந்தப் பட்டியலில் இல்லாமல் போனதால், ஒட்டுமொத்தமாக இலங்கை ராணுவத்திடம் சரண் அடைந்தவர்களின் பட்டியலை கோர்ட் கேட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையில், “காணாமல் போக்கடிக்கப்பட்ட” தங்களது உறவுகள் தொடர்பாக தமிழர்கள் புகார் அளிக்க வசதியாக கொழும்பு நகரில் சிறப்பு அலுவலகம் எனப்படும் உண்மையை கண்டறியும் புலனாய்வு முகமை Office of the Missing Persons (OMP) ஒன்று திறக்கப்பட்டது. 

    இந்நிலையில், சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் என்னும் அமைப்பு கடந்த மாதம், போரின்போது காணாமல் போன 280 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இதில் 29 குழந்தைகளும் அடங்குவர். இதுவே இலங்கையில் ஒரே நேரத்தில் ஒரே இடத்திலிருந்து காணமல் போனதாக கூறப்படும் மிகப்பெரிய குழுவாகும். 

    இந்த எண்ணிக்கை பின்னர் 351 ஆக அதிகரித்தது. இவர்கள் அனைவரும் 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளனர் என கூறப்படுகிறது.

    இதையடுத்து, காணாமல் போனதாக அந்த அமைப்பு வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களின் தகவல்களை அளிக்குமாறு அந்த அமைப்பிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

    விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத அமைப்பு இல்லை என்று சுவிட்சர்லாந்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. #Switzerlandcourt #LTTE

    ஜெனீவா:

    இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காக ‘தமிழீழம்’ என்ற தனி நாடு கேட்டு விடுதலைப்புலிகள் இயக்கம் போராடி வந்தது. அதன் தலைவராக பிரபாகரன் இருந்தார்.

    ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே 27 ஆண்டுகள் உள்நாட்டு போர் நடைபெற்றது. கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார்.


    தற்போது இந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்ததாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பெலின்சோனா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சுவிட்சர்லாந்து அரசு சார்பில் விடுதலைப்புலிகள் இயக்கம் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    ஆனால் அந்த ஆவணங்களை கோர்ட்டு நிராகரித்தது. விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் விடுதலைப்புலிகள் குற்ற செயல்களில் ஈடுபடவில்லை. அது ‘தீவிரவாத அமைப்பு இல்லை’ என கூறப்பட்டுள்ளது.

    மேலும், விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டோரை வழக்குகளில் இருந்து விடுவித்தும் சுவிட்சர்லாந்து கோர்ட்டு உத்தரவிட்டது. #Switzerlandcourt #LTTE

    விடுதலைப் புலிகள் அடையாளத்தை அழிக்க முடியவில்லை. அவர்கள் வெளிநாடுகளில் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறியுள்ளார். #LTTE #MaithripalaSirisena
    கொழும்பு:

    இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டு போர் முடிந்த 9-வது ஆண்டு நினைவு தினம் கொழும்பில் நடந்தது. அதில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து விட்டோம். ஆனால் அவர்களது அடையாளத்தை அழிக்க முடியவில்லை. அவர்கள் வெளிநாடுகளில் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். இலங்கையில் சுதந்திரம் (தமிழ் ஈழம்) பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

    அதற்காக வெளிநாடுகளில் மிகவும் தீவிரமாக உள்ளனர். காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க கடந்த மாதம் லண்டன் சென்று இருந்தேன். அப்போது அங்கு எனக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.

    விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் 2009-ம் ஆண்டு மே 18-ந்தேதி போரில் கொல்லப்பட்டார். அதன்பிறகு வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் வெளிநாடுகளில் வாழும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா கடந்த 2015-ம் ஆண்டு ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு தமிழர்கள் பெரும் ஆதரவு அளித்தனர். #LTTE #SrilankanPresident #MaithripalaSirisena
    ×