search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "love couple"

    • பாதுகாப்பு கேட்டு ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
    • பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த கிராமத்தை சேர்ந்த இளம்பெண் (வயது19) 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த அக்ராவரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (22) கூலி தொழிலாளி.

    இளம்பெண்ணும் மோகனும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இவர்களது காதல் வீட்டில் தெரிய வரவே பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் நேற்று முன்தினம் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி ஒடுக்கத்தூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பெற்றோர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.

    • காரைக்காலில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில், காதல் ஜோடி, திருமணம் செய்ய நேற்று முன்தினம் அறை எடுத்து தங்கியுள்ளனர்
    • திடீரென்று அறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டதையடுத்து, விடுதி ஊழியர்கள் கதவை திறக்க முயற்சித்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில், திருவாரூர் குடவாசலைச்சேர்ந்த காதல் ஜோடி, திருமணம் செய்ய காரைக்கால் வந்துள்ளதாக கூறி, நேற்று முன்தினம் அறை எடுத்து தங்கியுள்ளனர். நேற்று காலை விடுதி ஊழியர் இருவருக்கும் உணவு வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் இருவரும் அறைய மூடிக்கொண்டு வெகு நேரம் ஆகியும் வெளியே வராமல் இருந்துள்ளனர். பின்னர், திடீரென்று அறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டதையடுத்து, விடுதி ஊழியர்கள் கதவை திறக்க முயற்சித்தனர். முடியாததால், காரைக்கால் நகர போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்   போலீஸ் சூப்பிரண்டு சுப்ரமணியம் மற்றும் போலீசார், விடுதிக்கு விரைந்து சென்று, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, காதல் ஜோடி இருவரும் கை, கழுத்து பகுதிகளில் கத்தியால் அறுத்து இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர். அறை முழுவதும் இரத்தம் சிதறி கிடந்தது. உடனடியாக, ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மீட்டு, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

    முதல் கட்ட விசாரணையில், திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(வயது25) அக்ஷரா(25) ஆகியோர் என்பதும், இவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், காரைக்கால் வந்து திருமணம் செய்துகொள்ள இருந்ததாகவும், அதற்குள், இருவரும் தங்கள் முடிவை மாற்றிகொண்டு, கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, காதல் ஜோடிகளின் பெற்றோர்களுக்கு தகவல் அளித்து, தொடர் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்வம, காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இருவரையும் நேற்று காலை காணவில்லை என திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார்.
    • வீட்டுக்கு தெரியாமல் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள இளந்துறை மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் மணிகண்டன்(வயது23) டிப்ளமோ மெக்கானிக் படித்துள்ளார். என்பவரும் இதே ஊரை சேர்ந்த மணிகண்டன் மகள் ரேனுகா(23) பி.எஸ்.சி. படித்துள்ளார். ஆகிய இருவரையும் நேற்று காலை காணவில்லை என திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் செல்போ னில்தொடர்பு கொண்டு இருவரையும் திருவெண்ணை நல்லூர் போலீஸ் நிலையம் வர வைத்து விசாரணை செய்தனர்.

    மணிகண்டனும் ரேணுகாவும் கடந்த 8 வருடங்களாக வீட்டுக்கு தெரியாமல் காதலித்து வந்ததாகவும் இரு விட்டாரம் திருணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவி த்தனர். இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதில் மணிகண்டன் ரேணுகா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததால் திருவெண்ணைநல்லூர் போலீசார் அறிவுரைகளை வழங்கி மணிகண்டன் ரேணுகாவையும் பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். அதன் பின்னர் மயிலம் முருகன் கோவிலுக்கு சென்று இருவருக்கும் திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

    • ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
    • இருவரும் வீட்டை விட்டு ஓடி ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் நாடியம்மாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்

    ஆலங்குடி:

    ஆலங்குடி கே.வி.எஸ். தெருவில் வசித்து வருபவர் ராமு மகன் வீராச்சாமி (வயது 32). இவர் படித்த பட்டதாரி ஆவார். மேலும் இவர் புதுக்கோட்டையில் ஜவுளி கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரும் புதுக்கோட்டை சந்தைப்பேட்டை தெற்கு பகுதியை சேர்ந்த கணேசன் மகள் முருகஜோதி (23) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு ஓடி ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் நாடியம்மாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி இரு குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த இரு குடும்பத்தாரும் சமரசமாக பேசிக்கொண்டனர். பின்னர் இரு குடும்பத்தார்களும் போலீசாரிடம் சமரசம் எழுதிக் கொடுத்தனர். பின்னர் தஞ்சம் அடைந்த காதல் ஜோடிகளை இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி மணமக்களை மணமகன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.


    • 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் காதலித்து வந்தனர்..
    • காதலர்கள் கோவளத்தில் உள்ள தர்காவில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் திவ்யா (வயது. 21). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தில் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மத் அசன் (22) என்பவரும் ேவலை பார்த்து வருகிறார். அப்போது 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் காதலித்து வந்தனர்.  இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் காதலர்கள் கோவளத்தில் உள்ள தர்காவில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

    அதன்பின்னர் இருவரும் பாதுகாப்பு கேட்டு திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    • போலீசார் விசாரணையில் காதலியுடன் நடுரோட்டில் ரொமான்சில் ஈடுபட்டது லக்னோவை சேர்ந்த இளைஞர் விக்கி சர்மா என்பது தெரியவந்தது.
    • விக்கி சர்மா ஒரு சிறிய ஜவுளிக்கடை வைத்திருப்பதோடு திருமண விழாக்களில் தொகுப்பு இசை நடத்தும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.

    சமூக ஊடகங்களில் பலவித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இதை பார்க்கும் பலரும் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையதளத்தை கலக்கி வருகின்றன.

    அதில் காதலர்களின் வீடியோக்கள் எப்போதும் சுவாரஸ்யமாக வைரல் ஆகின்றன. இதை பார்த்து ரசிக்க தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. உலகில் காதலுக்கு மட்டும் அசாத்தியமான விஷயங்களை, கிறுக்குத்தனமான விஷயங்களை செய்ய வைக்கும் ஆற்றல் உண்டு. ஏற்கனவே காதலுக்கு கண் இல்லை என்ற பழமொழி உண்டு.

    ஆனால், சமீபகாலமாக காதலுக்கு இடம், பொருள் என்று எதுவுமே இல்லை என்பது போல பல காதலர்கள் செயல்பட்டு வருகின்றனர். சமீபகாலமாக இளம் காதலர்கள் படங்களில் வருவது போல வித்தியாசமான சாகசங்களில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஒரு காதல் ஜோடி ஸ்கூட்டரில் சென்றபடியே ரொமான்சில் ஈடுபட்ட காட்சி தற்போது வைரலாகி வருகிறது. டாம் குரூஸ்-கேமரூன் டயஸ் நடித்த 'நைட் அண்ட் டே' ஹாலிவுட் திரைப்படத்தில் காதலர்கள் ஸ்கூட்டரில் சென்றவாறே ரொமான்சில் ஈடுபடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். அதுபோன்று இந்த காதல் ஜோடி லக்னோவின் நெரிசலான பகுதியில் அரங்கேற்றியுள்ளனர். இந்த லக்னோவின் பரபரப்பான சாலையில் காதலர்கள் இருவர் ஓடும் பைக்கில் ரொமான்ஸ் செய்துகொண்டே செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக இரு சக்கர வாகனத்தில் ஓட்டுபவர் முன்னால் அமர்ந்து இருக்க, பின்னால் உடன் செல்பவர் அமர்ந்திருப்பார். காதலர்கள் கூட வழக்கமாக அப்படித்தான் செல்வார்கள்.

    ஆனால், லக்னோவின் அந்த பரபரப்பான சாலையில் ஸ்கூட்டி ஒன்றில் காதலன் ஓட்டிச்செல்ல காதலியோ அவருக்கு முன்னால் அமர்ந்து சாலையின் பின்புறம் நோக்கி அமர்ந்து காதலனை கட்டிப்பிடித்துக் கொண்டு செல்கிறார். அதுவும் அந்த காதலி வாகனத்தை ஓட்டிச்செல்லும் தனது காதலனை கொஞ்சிக்கொண்டே செல்கிறார். இதைப்பார்த்த சக வாகன ஓட்டிகள் அதிர்ச்சியுடனே வாகனத்தை ஓட்டிச்சென்றனர்.

    காதலர்களின் இந்த ரொமான்ஸ் காட்சியை பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர் வீடியோவாக எடுக்க, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 14 வினாடிகள் கொண்ட வீடியோவில், பெண் இரு சக்கர வாகனத்தின் இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து வாலிபரை கட்டிப்பிடிப்பதும், கழுத்தைப் பிடித்து முத்தம் கொடுத்தது. இருவரும் ஹெல்மெட் அணியாமல் இருந்தனர். இந்த வீடியோவை பகிர்ந்த ஜாரிக் என்பவர் உத்தரபிரதேச போலீசாருக்கும் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தார்.

    இந்த வீடியோவை பார்த்த உத்தரபிரதேச போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காதலியுடன் நடுரோட்டில் ரொமான்சில் ஈடுபட்டது லக்னோவை சேர்ந்த இளைஞர் விக்கி சர்மா (23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவசர அவசரமாக வாகனம் ஓட்டியதற்காகவும், பொது இடத்தில் ஆபாசமாக பேசியதற்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி மைனர் என்பதால் எச்சரித்து விடுவிக்கப்பட்டார். விக்கி சர்மா ஒரு சிறிய ஜவுளிக்கடை வைத்திருப்பதோடு திருமண விழாக்களில் தொகுப்பு இசை நடத்தும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.

    இதுபற்றி லக்னோ கூடுதல் துணை கமிஷனர் ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் விக்கி சர்மா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் ஆபாச செயல்கள் (பிரிவு 294) மற்றும் அவசரமாக வாகனம் ஓட்டுதல் (பிரிவு 279) ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அந்த பெண் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி என்பதால் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    பொதுமக்கள் தங்கள் உயிரையும் மற்றவர்களையும் பணயம் வைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    • கவுசல்யா (28) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
    • இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 34). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கவுசல்யா (28) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரும் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    ஓட்டலில் தங்கினர்

    இதற்கு இடையே ராஜசேகருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர். ஆனால் அவர்களை உறவினர்கள் ஏற்றுக் கொள்ளாததால் நேற்று நாமக்கல்லில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். இன்று காலை வெகு நேரமாகியும் அறை கதவு திறக்காததால், ஓட்டல் ஊழியர்கள் சந்தேகத்தின் பேரில் கதவை தட்டினர். கதவு திறக்கப்படாததால், கதவை திறந்து உள்ளே சென்றனர்.

    தற்கொலை முயற்சி

    அப்போது, 2 பேரும் மயங்கி கிடந்தது தெரியவந்தது. இது குறித்து நாமக்கல் நகர போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார் 2 பேரையும் மீட்டு நாமக்கல்லில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில், இருவரும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை சாப்பிட்டு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், உறவினர்கள் ஏற்றுக் கொள்ளததால், வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர்கள், தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதுகுறித்து ராஜசேகர், கவுசல்யா உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது .இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • காதல் ஜோடியை அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    விழுப்புரம்:

    மயிலம் அருகே பெரும் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம்.அவரது மகன் விண்ணரசன் (28), பொக்லைன் எந்திரம் ஆப்ரேட் டராக உள்ளார். இவரும் பரிக்கல்பட்டு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகள் கிருபாசினி (19), என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர்.

    இவர்களின் காதல் இரு வீட்டார் பெற்றோருக்கும் தெரிய வந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் காதல் ஜோடியை அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முஸ்லிம் மக்கள் கழக நிறுவன ஜைனுதின் தலைமையில் மயிலம் போலீஸ்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.அங்கு போலீசார் விசாரணை செய்வதற்கு மறுத்ததாக தெரிவிக்கிறது.

    இதனால் நேற்று திண்டிவனம் அடுத்த தீவனூரில் விநாயகர் கோவிலில் திருமணம்செய்து கொண்டனர். பின் னர் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள் ளனர். அங்கிருந்து காதல் ஜோடியை திண்டிவனம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    அதன்படி டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு காதல் ஜோடி திருமண கோலத்தில் வந்து, பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா விசாரணை செய்ததில், இருவரின் சம்மதத்தின் பேரில் திருமணம் நடை பெற்றதாகவும், இருவரும் சேர்ந்து வாழப்போவதாக வும் தெரிவித்தனர்.இதனையடுத்து இருவரையும் விண்ண ரசன் பெற்றோருடன் அனுப்பிவைத்தனர்.

    • காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்
    • திருமணம் செய்து கொண்டனர்

    கரூர்

    கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பெற்றோரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு தஞ்சம்.

    கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நீலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் துர்கா தேவி (வயது 21). இவர், எதிர் வீட்டில் வசித்து வரும் அமீர் பாபு என்பவரின் மகன் ஏஹயா பாட்ஷா என்பவரை சுமார் ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இரண்டு பேரும் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் காதலர்கள் இருவரும் நண்பர்கள் உதவியுடன் இந்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

    காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள், தங்கள் பெற்றோர்களால் ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சி, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கையுடன், மனு வழங்கினர். இதனை தொடர்ந்து போலீசார் இரண்டு தரப்பு பெற்றோர்களையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால். வயதை காரணம் காட்டி, காதல் ஜோடிகளுக்கு அறிவுரை வழங்கி பாதுகாப்புடன் அனுப்பிவைத்தனர்.

    புதுமண தம்பதிகளாக மாலையும், கழுத்துமாக வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கோவிலில் தாலிக்கட்டி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
    • பெற்றோர்கள் எதிர்ப்பு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி திருப்பதி நரைச்சேர்ந்த வர் சொக்கலிங்கம் மகள் பிரியா (வயது 21 )இவர் பிஏ பட்டதாரி ஆவார்.

    இதே பகுதி கேவிஸ் தெருவைச்சேர்ந்த சுப்பையா மகன் சிவாஜி (29). இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்த இவர்கள், தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

    பெற்றோர்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் நெம்மக்கோட்டை சித்திவிநாயகர் கோவிலில் மாலை திருமணம் செய்து கொண்டனர்.

    தங்கள் திருமணத்தால் உறவினர்களிடமிருந்து எதிர்ப்பு வரும் என்ற அச்சதுடன் பாதுகாப்பு கருதி, ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

    மேலும் பிரியா கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர்சிறப்பு உதவி ஆய்வாளர் கவிதா வழக்கு பதிவு செய்து இரு பெற்றோர்களையும் வரவழைத்து பேசினார். ஆனால் இவர்களை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாததால்,

    வயதை காரணம் காட்டி போலீசார் இருவரையும் சமதானப்படுத்தி காதல் ஜோடிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    • மாணவன் கைது-மாணவி காப்பகத்தில் ஒப்படைப்பு
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் குடியாத்தம் நகரைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர்.

    குடியாத்தம் நகரைச் சேர்ந்த மாணவி ஒருவர் அங்கு பிளஸ் டூ படித்து வருகிறார் அந்த மாணவி படிக்கும் அதே பள்ளியில் குடியாத்தம் நகரத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவனுடன் பழகி உள்ளார்.

    கடந்த வாரம் அந்த மாணவி பள்ளிக்குச் செல்வதாக வீட்டை விட்டு கிளம்பி உள்ளார் அதேபோல் அந்த மாணவனும் வீட்டை விட்டு பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றனர். பள்ளி வகுப்பை ஆரம்பித்ததும் மாணவி வகுப்புக்கு வரவில்லை இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் அதேபோல் மாணவரும் பள்ளிக்கு வரவில்லை.

    அவரது பெற்றோருக்கும் தெரிவித்துள்ளனர் அப்போதுதான் இரண்டு பேரும் பள்ளிக்கு வரவில்லை என‌ தெரிய வந்தது.

    தொடர்ந்து மாணவியின் பெற்றோரும், மாணவனின் பெற்றோரும் தனித்தனியாக தங்கள் பிள்ளைகளை காணவில்லை என குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தனர்.

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்று காலையில் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே அந்த மாணவியும் மாணவனும் நின்று கொண்டு இருந்தனர். 2 ேபரையும் பிடித்து போலீஸ் நிலையத்தில் வந்து தீவிர விசாரணை செய்தபோது இருவரும் காதலித்து உள்ளனர். இந்த ஜோடி ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்துள்ளனர்.

    வீட்டிற்கு செல்ல வந்த போது போலீசாரிடம் பிடிபட்டது தெரியவந்தது இதனை தொடர்ந்து போலீசார் காணவில்லை என்ற வழக்கை போஸ்கோ வழக்காக மாற்றி அந்த மாணவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். நீதிபதி உத்தரவின் பெயரில் அந்த மாணவன் சென்னை கெல்லிசில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த மாணவி வேலூரில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    • போலீசில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்
    • பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டையை சேர்ந்தவர் மணி மகள் கார்த்திகா (வயது 19). பி.ஏ. பட்டதாரியான இவர் ஆலங்குடி அருகே உள்ள செம்பட்டி விடுதி கீழப்பட்டியைச் சேர்ந்த ராஜா (வயது 37) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி யாருக்கும் தெரியாமல் மதுரை அழகர் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே தனது மகள் கார்த்திகாவை காணவில்லை என்று அவரது தந்தை மணி ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதனை பெற்றுக்கொண்ட ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை, கார்த்திகாவை தேடி வந்தார்.

    இந்நிலையில் கார்த்திகாவுடன் அவரை திருமணம் செய்துகொண்ட ராஜா ஆலங்குடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். உடனே ஆலங்குடி போலீசார் இருவீட்டாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.

    விரைந்து வந்த இரு வீட்டார்களும் தங்களது மகளும், மகனும் பிரிந்து வரவில்லை என்றால் நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று உறுதியாக தெரிவித்தனர். மேலும் அவர்கள் தங்களுக்கு பிள்ளைகள் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் போலீசார் காதல் ஜோடிகள் இருவருக்கும் சட்டத்திற்கு உட்பட்டு வயது மூப்பை காரணம் காட்டி திருமணம் செய்து கொண்டதாக கூறி காதல் ஜோடியை கைகோர்த்து வழி அனுப்பி வைத்தனர்.

    ×