என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கு செல்லாமல் வெளியில் சுற்றிய காதல் ஜோடி
- மாணவன் கைது-மாணவி காப்பகத்தில் ஒப்படைப்பு
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் குடியாத்தம் நகரைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர்.
குடியாத்தம் நகரைச் சேர்ந்த மாணவி ஒருவர் அங்கு பிளஸ் டூ படித்து வருகிறார் அந்த மாணவி படிக்கும் அதே பள்ளியில் குடியாத்தம் நகரத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவனுடன் பழகி உள்ளார்.
கடந்த வாரம் அந்த மாணவி பள்ளிக்குச் செல்வதாக வீட்டை விட்டு கிளம்பி உள்ளார் அதேபோல் அந்த மாணவனும் வீட்டை விட்டு பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றனர். பள்ளி வகுப்பை ஆரம்பித்ததும் மாணவி வகுப்புக்கு வரவில்லை இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் அதேபோல் மாணவரும் பள்ளிக்கு வரவில்லை.
அவரது பெற்றோருக்கும் தெரிவித்துள்ளனர் அப்போதுதான் இரண்டு பேரும் பள்ளிக்கு வரவில்லை என தெரிய வந்தது.
தொடர்ந்து மாணவியின் பெற்றோரும், மாணவனின் பெற்றோரும் தனித்தனியாக தங்கள் பிள்ளைகளை காணவில்லை என குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தனர்.
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று காலையில் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே அந்த மாணவியும் மாணவனும் நின்று கொண்டு இருந்தனர். 2 ேபரையும் பிடித்து போலீஸ் நிலையத்தில் வந்து தீவிர விசாரணை செய்தபோது இருவரும் காதலித்து உள்ளனர். இந்த ஜோடி ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்துள்ளனர்.
வீட்டிற்கு செல்ல வந்த போது போலீசாரிடம் பிடிபட்டது தெரியவந்தது இதனை தொடர்ந்து போலீசார் காணவில்லை என்ற வழக்கை போஸ்கோ வழக்காக மாற்றி அந்த மாணவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். நீதிபதி உத்தரவின் பெயரில் அந்த மாணவன் சென்னை கெல்லிசில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த மாணவி வேலூரில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.






