search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெற்றோரிடம் ஒப்படைப்பு"

    • இருவரையும் நேற்று காலை காணவில்லை என திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார்.
    • வீட்டுக்கு தெரியாமல் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள இளந்துறை மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் மணிகண்டன்(வயது23) டிப்ளமோ மெக்கானிக் படித்துள்ளார். என்பவரும் இதே ஊரை சேர்ந்த மணிகண்டன் மகள் ரேனுகா(23) பி.எஸ்.சி. படித்துள்ளார். ஆகிய இருவரையும் நேற்று காலை காணவில்லை என திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் செல்போ னில்தொடர்பு கொண்டு இருவரையும் திருவெண்ணை நல்லூர் போலீஸ் நிலையம் வர வைத்து விசாரணை செய்தனர்.

    மணிகண்டனும் ரேணுகாவும் கடந்த 8 வருடங்களாக வீட்டுக்கு தெரியாமல் காதலித்து வந்ததாகவும் இரு விட்டாரம் திருணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவி த்தனர். இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதில் மணிகண்டன் ரேணுகா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததால் திருவெண்ணைநல்லூர் போலீசார் அறிவுரைகளை வழங்கி மணிகண்டன் ரேணுகாவையும் பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். அதன் பின்னர் மயிலம் முருகன் கோவிலுக்கு சென்று இருவருக்கும் திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

    • பிரகாஷ் (வயது 26). சற்று மனநலம் பாதித்த இவர், திடீரென மாயமானார்.
    • சீலநாயக்கன்பட்டி ஊத்து மலையில் சுற்றித்திரிந்த அர்ஜூன் பிரகாஷை மீட்டு அவரது பெற்றோருக்கும் திருப்பூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சேலம்:

    திருப்பூர் மாவட்டம் காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைப்பாண்டியன். இவரது மகன் அர்ஜூன் பிரகாஷ் (வயது 26). சற்று மனநலம் பாதித்த இவர், திடீரென மாயமானார். இது குறித்து அர்ஜூனின் பெற்றோர் திருப்பூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வழக்கு பதிவுசெய்த போலீசார், நேற்று இதுகுறித்து சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு ரோந்து பணியில் இருந்த அன்னதானப்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன், சீலநாயக்கன்பட்டி ஊத்து மலையில் சுற்றித்திரிந்த அர்ஜூன் பிரகாஷை மீட்டு அவரது பெற்றோருக்கும் திருப்பூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து அர்ஜூன் பிரகாஷின் பெற்றோர் நேற்று நள்ளிரவு சேலம் வந்து பிரகாஷை மீட்டுச் சென்றனர். 

    ×