search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Livelihood"

    • காரைக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தற்போதைய மத்திய அரசு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.

    காரைக்குடி

    காரைக்குடி 5 விளக்கு அருகில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அத்தியாவசிய பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி முன்னிலை வகித்தார். அவர் பேசுகையில், இந்திய மக்கள் கொரோனா பேரிடர் கால துயரத்தை தாங்கி வலியோடு வாழ்ந்து வரும் காலத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை உயர்த்தியது.தற்போது அதற்கும்மேலாக அரிசி, பருப்பு, எண்ணெய், பால், தயிர், பென்சில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் மீது ஜி.எஸ்.டி. வரியை விதித்துள்ளது.

    ஏழை, எளிய மக்களின் மீது வரிச்சுமைகளை விதித்து விட்டு பெரு முத லாளிகளுக்கு மானியம், வரிவிலக்கு அளிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின்போது மன்மோகன்சிங், ப.சிதம்பரம் ஆகியோர் உலகமே பொருளாதார நெருக்கடி யில் சிக்கியபோதும் விலை வாசியை கட்டுக்குள் வைத்து பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்தி மக்கள் நலனை பாதுகாத்தனர்.

    தற்போதைய மத்திய அரசு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. மக்களை வதைக்கும் விலைவாசி உயர்வை திரும்ப பெற வேண்டும்.அத்தியாவசிய பொருட்களின் ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும் என்றார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் பழனியப்பன், மாவட்ட கவுன்சிலர் கோவிலூர் அழகப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், நகர செயலாளர் குமரேசன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி இமய மடோனா, கவுன்சிலர்கள் அமுதா, ரத்தினம், அஞ்சலி தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர தலைவர் பாண்டி நன்றி கூறினார்.

    • பிளஸ்-2 வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மீன்வள பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்களுக்கு இதுவரை வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவில்லை.
    • இவர்களுக்கு பல்கலைக்கழகமும், தமிழக அரசும் எவ்வித வேலைவாய்ப்பையும் இதுவரை ஏற்படுத்தி தரவில்லை.

    வேதாரண்யம்:

    தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் கடந்த 2015 முதல் மீன்வள பொறியியல் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டு இதுவரை ஐந்து பேட்ச் மாணவர்கள் படிப்பை முடித்து வெளியே வந்துள்ளனர். இதில் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் பிளஸ்-2-வில் அதிக மதிப்பெண்கள் பெற்று கவுன்சிலிங் அடிப்படையில் சேர்ந்து மிகுந்த எதிர்காலம் இருக்கும் என்று கனவோடு படித்து முடித்த உடன் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வெளியேறினர். ஆனால், இவர்களுக்கு பல்கலைக்கழகமும், தமிழக அரசும் எவ்வித வேலைவாய்ப்பையும் இதுவரை ஏற்படுத்தி தரவில்லை.

    சுமார் 150 பொறியியல் பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்காக காத்துள்ளனர். எனவே, தமிழக அரசும், மீன்வள பல்கலைக்கழகமும் மற்றும் மீன்வள பல்கலைக்கழகத்தினுடைய ஆட்சி மன்ற குழு உறுப்பினர் மற்றும் மீன் வளர்ச்சி கழகத்தினுடைய தலைவர் ஆகியோர் இந்த வாழ்வாதார பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் இராமசாமி தமிழக அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், இதுகுறித்து மீன்வள பொறியாளர்களை ஒன்றுதிரட்டி விரைவில் முதல்-அமைச்சரை சந்தித்து நேரிடையாக கோரிக்கை தெரிவிப்பது எனவும் தெரிவித்தார்.

    • கடலூர் அருகே ஜமாபந்தி நிறைவு நாளில் 402 பயனாளிகளுக்கு ரூ.18.43 கோடி நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.
    • விழாவில் பல்வேறு வட்டங்களில் இருந்து பெறப்பட்ட மனுக்களில் 251 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா விற்கான ஆணையினையும் வழங்கினார்.

    கடலூர்:

    கடலூர் அருகே குறிஞ்சிப்பாடி கருங்கூழி ஊராட்சியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், திருமுட்டம் ஆகிய வட்டங்களில் வருவாய் தீர்வாயத்தின் வாயிலாக பெறப்பட்ட மனுக்களில் தீர்வு காணப்பட்டது.

    இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியன், முன்னிலை வகித்தார்அதனை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி அருகே ஆண்டிக்குப்பம் பகுதியில் கால்நடைபராமரிப்பு துறையின் மூலம் கிராமப்புற பெண்களின் தொழில் முணைவோர் திட்டத்தின் கீழ் வெள்ளாடுகள், செம்மறியாடுகளை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு வழங்கி பேசியதாவது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொது மக்கள் நலன் கருதி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் என்னற்ற திட்டங்களை செய்யப்படுத்தி வருகிறார்.

    வருவாய் தீர்வாய நிறைவு விழாவில் பல்வேறு வட்டங்களில் இருந்து பெறப்பட்ட மனுக்களில் 251 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா விற்கான ஆணையினையும், 75 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினையும், 10 பயனாளிகளுக்கு பாரத பிரதமர் அவர்களின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஆணையினையும், 25 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை மற்றும் 41 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணையினையும் ஆக மொத்தம் 402 பயனாளிகளுக்கு ரூ.18.43 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அரசு பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் பல்வேறு துறைகளின் வாயிலாக 3774 பணிகள் ரூ.85.45 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளது. இந்த அரசு மக்களுக்கான அரசாக திகழ்ந்து வருகிறது.

    கிராமப்புற ஏழை பெண்களுக்கு வெள்ளாடு, செம்மறியாடுகள் வழங்கி தொழில் முனைவோர் ஆக்கும் திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டில் ரூ. 2.67 கோடி மதிப்பீட்டில் ஏழ்மை நிலையில் இருக்கும் விதவை பெண்கள் கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கு ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 1400 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒருவருக்கு தலா 5 ஆடுகள் வீதம் வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த 46 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் மேம்படுத்துதல் மற்றும் குறிப்பாக பெண்களுக்கு தொடர் வருமானம் ஈட்டித்தரும் வகையில் அரசு இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இத்திட்டங்களை கிராமப்புற பெண்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைய கேட்டுக்கொண்டார்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) பரமேஸ்வரி, மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) குபேந்திரன் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,பயனாளிகள் கலந்து கொண்டனர்.

    • நகர்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் விதமாக தனிநபர் வேலைவாய்ப்புத் திட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது.
    • இப்பணிக்கு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ.363 மதிப்பூதியமாக நேரடியாக பணியாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மதியம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் மாமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, நகர் நல அலுவலர் நமச்சிவாயம், உதவி பொறியாளர் சந்திரபோஸ், கண்காணிப்பாளர் கிளமண்ட் மற்றும் கவுன்சிலர்கள், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில், மேயர் சண். ராமநாதன் பேசியதாவது:-நகர்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் விதமாக தனிநபர் வேலைவாய்ப்புத் திட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் கீழ் முதல் தவணையாக, மாநகராட்சியில் உள்ள மண்டலம் 3-க்கு உட்பட்ட வார்டு எண்.29 முதல் 41 வரையிலான பகுதிகளில் 7 எண்ணிக்கையிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்படி, மண்டலம் 3-க்கு உட்பட்ட வார்டு எண்.29 முதல் 41 வரையிலான பகுதிகளில் மரம் வளர்க்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அதன்படி ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 25,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    இப்பணிக்கு அப்பகுதிவாழ் பொதுமக்கள் மட்டுமே பணியாளர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். இப்பணிக்கு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ.363 மதிப்பூதியமாக நேரடியாக பணியாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.பணியாளர்களினால் மேற்கொள்ளப்படும் பணிகள் மரக்கன்றுகள் நடுவதற்கு குழி ஏற்படு த்துதல், மரக்கன்றுகள் நடுதல், 50 நாளைக்கு குடிநீர் விட்டு பராமரித்தல் ஆகும்.மாநகராட்சி மூலம் 25,000 மரக்கன்றுகள் கொள்முதல் செய்தல், குடிநீர் விநியோகம் செய்தல், சுமார் 4000 எண்ணிக்கையிலான மரக் கூண்டுகள் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×