search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Life"

    • இளமை பருவத்தில் புதிய விஷயங்களை முயற்சித்து பார்ப்பதற்கு வயது தடையாக இருக்காது.
    • இளமை பருவ நாட்கள் பலவும் நண்பர்களுடன்தான் கழியும்.

    வயது என்பது வெறும் எண் மட்டுமே. முதுமையிலும் இளமை துடிப்போடு செயல்பட்டு பலரும் அதனை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் இளமை பருவத்தில் புதிய விஷயங்களை முயற்சித்து பார்ப்பதற்கு வயது தடையாக இருக்காது. இளமை பருவத்தை பூர்த்தி செய்வதற்குள் திருமணம், குடும்ப பொறுப்பு, குழந்தை வளர்ப்பு, தொழில், நிதி நிலைமை போன்ற பல்வேறு விஷயங்களை எதிர்கொண்டு குடும்ப வாழ்வியலுக்குள் முழுமையாக தங்களை அர்ப்பணிக்க வேண்டியிருக்கும். அந்த பந்தத்திற்குள் நுழைவதற்கு முன்பு இளமை பருவத்திற்கே உரித்தான வாழ்வியலையும், அவை கற்றுத்தரும் பாடங்களையும் பலரும் தவறவிட்டுவிடுகிறார்கள். வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கு 20 வயதில் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கு...

    தனிமை பயணம் மேற்கொள்ளுங்கள் :

    இளமை பருவ நாட்கள் பலவும் நண்பர்களுடன்தான் கழியும். குழுவாக ஒன்று சேர்ந்து சாகச பயணங்களை மேற்கொண்டு பலரும் பொழுதை போக்குவார்கள். அத்தகைய பயணங்களுக்கு நடுவே தனிமை பயணங்களை மேற்கொள்வதும் அவசியமானது. 20களின் பிற்பகுதியில் தொழில், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், மனதை தெளிவுபடுத்தவும், வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டத்தை வழங்கவும் தனிமை பயணம் உதவும். நெருக்கடியான காலகட்டத்தில் தன்னிச்சையாகவும், தைரியமாகவும் முடிவெடுக்கும் ஆற்றலையும் வழங்கும்.

    வெவ்வேறு மொழிகளை பேச கற்றுக்கொள்ளுங்கள் :

    எந்த விஷயத்தையும் கற்றுக்கொள்வதற்கு வயது தடையில்லை. மொழிக்கும் இது பொருந்தும். 20 வயதில் இளமை துடிப்பும், சுறுசுறுப்பும், உற்சாகமும் குறையாமல் இருக்கும். எதையும் ஆர்வமாக கற்றுக்கொள்ளவும் மனம் தயாராக இருக்கும். உலக விஷயங்களை தெரிந்து கொள்ளவும், ஒவ்வொரு பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலை புரிந்து கொள்ளவும் தொடர்பு சாதனமாக மொழி விளங்கும். அதனால் எந்தவொரு மொழியையும் கற்றுக்கொள்வதற்கு தயக்கம் கொள்ளக்கூடாது. படிப்பை முடிக்கும்போதோ, எதிர்காலத்திலோ ஏதாவதொரு வகையில் கற்றுக்கொண்ட மொழி பயன்படலாம்.

    முகாமிடுங்கள் :

    நண்பர்களுடன் குழுவாகவோ, தனியாகவோ வருடத்திற்கு ஒருமுறையாவது மலையேற்ற பயணங்களை மேற்கொள்ளுங்கள். வீடு, அலுவலகம் என இரண்டுவிதமான சூழலில் மட்டுமே வாழ்க்கையை நகர்த்துபவர்கள் அதில் இருந்து சில நாட்கள் விலகி இயற்கையுடன் ஒன்றிணைவதற்கு மலையேற்றம் உதவும். அமைதியான சூழல், சுத்தமான காற்று, என இயற்கை பின்னணியுடன் ஓர் இரவையாவது செலவிட வேண்டும். அங்கு முகாமிட்டு இரவில் தெளிவான வானத்தையும், அதில் மின்னும் நட்சத்திரங் களையும் ரசித்தபடி 'பயர் கேம்பிங்' எனப்படும் நெருப்பின் அரவணைப்பில் நண்பர்களுடன் உற்சாகமாக பொழுதை போக்கலாம். மனதிற்கு பிடித்தமான இசையை கேட்டு மகிழலாம்.

    சாலை மார்க்கமாக செல்லுங்கள்:

    இருசக்கர வாகனத்தில் நீண்ட தூர சாலை பயணங்களை மேற்கொள்வதும் புது அனுபவத்தை கொடுக்கும். மனதில் தேங்கி இருக்கும் எல்லாவிதமான கவலைகளை போக்கவும். பதற்றமான மன நிலையில் இருந்து விடுபடவும் சாலை பயணங்கள் கைகொடுக்கும். 20களில் செய்யக்கூடிய முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று. வருடத்திற்கு ஒருமுறையாவது தனியாகவோ, நண்பர்களுடனோ இருசக்கர வாகனத்தில் சாலை பயணம் மேற்கொள்ள மறக்காதீர்கள்.

    ஆரோக்கியத்தை பேணுங்கள் :

    இளமையாக இருக்கும்போது பலரும் உடல் ஆரோக்கியம் மீது அக்கறை கொள்ளாமல் புறக்கணித்துவிட்டு, பின்பு வருந்துகிறார்கள். 20 வயதுக்கு பிறகு உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழத் தொடங்கும். நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும் வரை எந்த பிரச்சினையும் வெளியே தெரியாது. வயது அதிகரிக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைய தொடங்கும். சிலருக்கு 30 வயதை நெருங்குவதற்குள்ளாகவே கடுமையான உடல்நல பிரச்சினைகள் எட்டிப்பார்க்க தொடங்கிவிடும். அதனை தவிர்க்க இளம் வயதிலேயே உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை மேற்கொள்வதும் அவசியமானது.

    • ஒரு சமூகத்தில் நிறைய நன்மைகள் மற்றும் தீமைகளும் உண்டு.
    • இங்கே சமூகம் நமக்கு பெருமை தரும் கருவியாக பயன்படுகிறது.

    சமூகம் என்பது ஒருவரோ, இருவரோ ஒருங்கிணைந்து உருவாக்குவது அல்ல. ஒழுக்கம் நிறைந்த சமூகம் என்பது ஒரு நாட்டில் உள்ள அனைவரின் பங்களிப்பால் உருவாக வேண்டியது. அப்படிப்பட்ட சமூகம் சில நபர்களின் சுயநலனுக்காக சமூகத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி சீர்குலைய செய்கின்றனர். நாம் ஒற்றுமையை வளர்த்து சமூகத்தை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

    சமூகம் என்பது ஒரு மழலையைப் போல் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக் கொள்ளும். அது நல்லவர்களின் கையில் கிடைத்தால் தூய சமூகம். கள்வர்களின் கையில் கிடைத்தால் ஒழுக்கமில்லாத சமூகம். ஒரு சமூகத்தில் நிறைய நன்மைகள் மற்றும் தீமைகளும் உண்டு. நன்மைகளுள் சிலவற்றை குறிப்பிடுகின்றேன். சமூகத்தில் ஒருவர் உயர்ந்த பதவியில் இருந்தால் அவர் சமூகத்தில் உயர்ந்து காணப்படுகிறார் என்று தான் கூறுவோம். இங்கே சமூகம் நமக்கு பெருமை தரும் கருவியாக பயன்படுகிறது. அதுபோல் ஒவ்வொருவருக்கும் அவரவர் நாடு, அவரவர்களின் வீடு, அதுதான் அவர்கள் அடையாளம். நாங்கள் இந்தியர்களாக ஒன்றுபட்டு வாழ்ந்து வருகிறோம்.

    சமூகம் என்பது ஒரு மழலையைப் போல் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக் கொள்ளும். அது நல்லவர்களின் கையில் கிடைத்தால் தூய சமூகம். கள்வர்களின் கையில் கிடைத்தால் ஒழுக்கமில்லாத சமூகம். ஒரு சமூகத்தில் நிறைய நன்மைகள் மற்றும் தீமைகளும் உண்டு. நன்மைகளுள் சிலவற்றை குறிப்பிடுகின்றேன். சமூகத்தில் ஒருவர் உயர்ந்த பதவியில் இருந்தால் அவர் சமூகத்தில் உயர்ந்து காணப்படுகிறார் என்று தான் கூறுவோம். இங்கே சமூகம் நமக்கு பெருமை தரும் கருவியாக பயன்படுகிறது. அதுபோல் ஒவ்வொருவருக்கும் அவரவர் நாடு, அவரவர்களின் வீடு, அதுதான் அவர்கள் அடையாளம். நாங்கள் இந்தியர்களாக ஒன்றுபட்டு வாழ்ந்து வருகிறோம்.

    • 'எங்கும் கடன், எதற்கும் கடன்' என்று தாராளமாக வழங்கும் நிலை உருவாகியுள்ளது.
    • வரவையும், செலவையும் கணக்கிட்டு வாழ்க்கைமுறையை வகுத்துக்கொண்டனர்.
    • வெற்றியில் துள்ளிக்குதிப்பதும், தோல்வியில் துவண்டுபோவதும் வேண்டாம்.
    • பகட்டான வாழ்க்கையும், அடுத்தவர்கள் முன்பு ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற கொள்கையும் தவறானது.

    இந்த பூமிப்பந்தில் வாழும் ஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வெவ்வேறாக இருக்கிறது. இதுபோன்ற மாறுபாட்டுக்கு அதன் இதய துடிப்பே காரணமாக சொல்லப்படுகிறது. இதயத்துக்கும், ஆயுளுக்கும் அப்படி என்ன சம்பந்தம் இருக்கிறது என்று பார்த்தால், விரைவாக துடிக்கும் இதயத்தை கொண்ட உயிரினத்துக்கு ஆயுள் குறைவு என்றும், மெதுவாக துடிக்கும் இதயத்தை கொண்ட உயிரினத்துக்கு ஆயுள் அதிகம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலில் வாழும் கிளிஞ்சல் என்ற உயிரினம்தான் அதிகபட்சமாக 507 ஆண்டுகள் வாழ்கிறது.

    ஆறறிவு கொண்ட மனிதனின் முழு ஆயுட்காலம் 120 ஆண்டுகள். இந்த உலகத்தில் பிறக்கும் அத்தனை மனிதர்களும் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்துவிடுவதில்லை. வயதில் சதம் (100) அடித்தவர்களை விரல்விட்டு எண்ணிவிட முடியும். ஒருவர் 100 ஆண்டுகள் வாழ்வதாக எடுத்துக்கொண்டாலும், அதை நாட்களில் கணக்கிடும்போது 36,500 நாட்கள்தான் வருகின்றன. 460 கோடி வயதுடைய இந்த பூமியில் மனித வாழ்க்கை என்பது மிகவும் சொற்பம்தான்.

    வாழ்க்கையை ஒரு வரியில் சொல்லிவிடுவது என்றால், பிறப்புக்கும், இறப்புக்கும் இடையேயான போராட்டம்தான். படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், குழந்தைகள், பொருள் சேர்த்தல், பணிநிறைவு, வயோதிகம் என்று பல நிலைகளை கடந்து சென்று இறுதியில் கரைந்துபோய் விடுகிறது.

    20-ம் நூற்றாண்டின் இறுதிவரைகூட மனித வாழ்க்கை இயல்பாக, நிம்மதியாக, எதார்த்தமாக பயணித்தது என்றே கூறலாம். வரவையும், செலவையும் கணக்கிட்டு வாழ்க்கைமுறையை வகுத்துக்கொண்டனர். கடன் வாங்கவேண்டிய நிலை வந்தாலும், அது மருத்துவம், புதிய வீடு, திருமணம் போன்ற நிகழ்வுகளுக்காகவே இருந்தது. ஆடம்பர வாழ்க்கைக்காக யாரும் கடன் வாங்கியதில்லை. கடன் அன்பை மட்டுமல்ல, சில நேரங்களில் உறவுகளையும், நண்பர்களையும் முறித்துவிடும்.

    ஆனால் தற்போதைய 21-ம் நூற்றாண்டில், வட்டிக்காரன் முகம் பார்த்து கடன் வாங்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியால், வட்டிக்கடைகள் நிதி நிறுவனங்களாக வளர்ச்சி பெற்றுவிட்டன. 'எங்கும் கடன், எதற்கும் கடன்' என்று தாராளமாக வழங்கும் நிலை உருவாகியுள்ளது. கடனுக்காக அலைந்த காலம் போய், வலிய வீட்டுக்கே வந்து கடன் வழங்கும் நிலை வந்துவிட்டது. சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வாழும் மக்கள், வீடு, வாகனம், ஏன் வீட்டுக்கு தேவையான டி.வி., பிரிட்ஜ், ஏ.சி. எதுவாக இருந்தாலும் ஈ.எம்.ஐ. என்று சொல்லக்கூடிய மாத தவணையில் வாங்கிவிட முடியும். போதாக்குறைக்கு, வங்கிகள் வழங்கும் 'கிரெடிட் கார்டு' (கடன் அட்டை) மூலமும் பொருட்களை வாங்கி குவித்துவிட முடியும்.

    இந்த 'கிரெடிட் கார்டு' முறையில், குறிப்பிட்ட நாட்களில் அதற்கான பணத்தை வட்டித்தொகை இல்லாமல்கூட திருப்பிச் செலுத்தும் வசதியை வங்கிகள் செய்துள்ளன. ஆனால், அதில் இருந்து தவறும்போதுதான், வட்டி, வட்டிக்கு மேல் வட்டி போன்ற தேவையில்லாத சிக்கல் ஏற்படுகிறது. முன்பெல்லாம் சேமிப்பு மீது மக்களுக்கு அதிக ஆர்வம் இருந்தது. சம்பளம் குறைவாக இருந்தாலும், அதில் ஒரு சிறுதொகையை ஒதுக்கி சேமித்து வைப்பார்கள். ஏன், வீட்டில் உள்ள குழந்தைகள்கூட உண்டியலில் பணத்தை சிறிது சிறிதாக சேமித்துவைப்பதை பார்த்திருக்கிறோம்.

    ஆனால், இன்றைக்கு கைநிறைய சம்பளம் வாங்கினாலும், மாதத்தில் பாதி நாட்கள் பணம் இல்லாமல் செலவுக்கே கஷ்டப்பட வேண்டியுள்ளது. காரணம், பகட்டாக வாழ விரும்பி, தேவைகள் அனைத்தையும் கடன் பெற்று நிறைவேற்றிக்கொண்டு, பின்பு அதற்கான பணத்தை திருப்பிக்கட்ட அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறோம். இதனால், வாழ்வில் மகிழ்ச்சித்துள்ளல் குறைந்துவிடுகிறது.

    இன்றைய மக்களின் பெரும்பாலானோரின் வாழ்க்கைமுறை இப்படியாகத்தான் உப்புச்சப்பில்லாமல் கழிந்து கொண்டிருக்கிறது. நாட்கள் செல்லச்செல்ல மன இறுக்கத்துக்கு ஆளாகி, பின்பு மனஅழுத்தத்துக்கு ஆட்படுகிறோம். இதனால், மனநிலையில் பாதிப்பு ஏற்படுவதுடன், உடல்நலமும் பாதிக்கப்படுகிறது. ரசித்து வாழவேண்டிய வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்படத் தொடங்குகிறது. 'ஏதோ வாழ்கிறோம்' என்றே நாட்களை கடக்க வேண்டியிருக்கிறது.

    மனஅழுத்தத்தால் நேர்மறையான சிந்தனை குறைந்து, எதிர்மறையான சிந்தனை அதிகரிக்கத்தொடங்குகிறது. இந்த ஆபத்தான கட்டத்தில்தான் சிலர் மிருகத்தனமான முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள். கடந்த சில காலங்களாகவே பத்திரிகைகளில், 'கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை' என்று வரும் செய்திகளை அடிக்கடி பார்க்கிறோம். இந்த ஒவ்வொரு செய்திக்கு பின்பும் வெவ்வேறு சோகக்கதைகள் இருக்கின்றன.

    இப்போதுகூட, சென்னை பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில், கடன் தொல்லையால் பிரகாஷ் என்ற சாப்ட்வேர் என்ஜினீயர், மனைவி, மகள், மகன் ஆகியோரை எந்திர ரம்பத்தால் அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    வீடு, கார் என ஆடம்பரமாக வாழ 9 பேரிடம் ரூ.80 லட்சத்துக்கும் அதிகமாக, வார வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். என்ஜினீயரான இவர் ரூ.1½ லட்சம் மாத சம்பளம் வாங்கியும் கடனை கட்டமுடியாத நிலை. கைநிறைய சம்பளம் வாங்கினாலும் குடும்பத்தை கைதூக்கி விடமுடியாத துயரம். ஒரே குடும்பத்தில் 4 உயிர் போனதுதான் மிச்சம்.

    பகட்டான வாழ்க்கையும், அடுத்தவர்கள் முன்பு ஆடம்பரமாக வாழ்ந்து காட்டவேண்டும் என்ற கொள்கையும் தவறானது. பணம்தான் வாழ்க்கைக்கு பிரதானம் என்றால், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் பில்கேட்சுக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரிவு வந்திருக்காது. பணத்தையும் தாண்டி நிம்மதி என்று ஒன்று இருக்கிறது. சென்னையில் இரவு நேரங்களில் எத்தனையோ பேர் ஆங்காங்கே சாலையோரம் நிம்மதியாக படுத்து தூங்குவதை பார்க்கிறோம். அவர்களிடம் எவ்வளவு பணம் இருந்துவிடப்போகிறது? வாழ்க்கையில் இன்றைக்கு பல பேர், பணத்தை தேடி ஓடியே நிம்மதியை தொலைத்துவிடுகிறார்கள். பிறகு, பணத்தை தொடர்ந்து தேடுவதா? அல்லது தொலைந்த நிம்மதியை திரும்பி வந்து தேடுவதா? என்று குழம்பிப்போய் தவறான முடிவை எடுத்துவிடுகிறார்கள்.

    இயற்கைகூட நமக்கு சலிப்பு தட்டிவிடக்கூடாது என்பதற்காக குளிர்காலம், மழைகாலம், கோடைகாலம் என பருவநிலைகளை மாற்றி மாற்றித் தருகிறது. அதுபோல, வாழ்க்கையும் நமக்கு பல விஷயங்களை மாறி மாறி கற்றுத்தந்து கொண்டிருக்கிறது. ஆகையால், வெற்றியில் துள்ளிக்குதிப்பதும், தோல்வியில் துவண்டுபோவதும் வேண்டாம். அனைத்தையும் சமமாக எடுத்துக்கொள்வோம். கிடைத்ததைக் கொண்டு ரசித்து வாழ்வதே அழகான வாழ்க்கை.

    நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை. விடாமுயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும்.
    முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று சொல்வார்கள். முடியாது என்று எண்ணும் கடினமான காரியங்களைக்கூட திரும்ப திரும்ப விடா முயற்சியுடன் செய்தால் கட்டாயம் வெற்றி அடைய முடியும். எந்த செயலை செய்வதற்கு விடாமுயற்சி எடுக்கிறோமோ அதனை சாதிக்க முடியும். எந்தக் காரியமுமே தொடங்கும்போது மலைப்பாகத்தான் தோன்றும். குழந்தைகள்கூட நடப்பதற்கு முன்பு விழுந்து எழுந்துதான் நடை பயிலுகின்றனர்.

    கீழே விழுகிறோமே என்று அவர்கள் முயற்சிக்காமல் விடுவதில்லை. விடாமுயற்சி மட்டும் இல்லாவிட்டால் பல சாதனைகள் நிகழ்ந்திருக்காது. புத்தகங்களை தொடர்ந்து படித்து வந்தால் பல அறிஞர்களின் பொக்கிஷங்களை நம்மால் அறிய முடியும். நாம் எல்லாம் படித்து முடித்துவிட்டோம் என்று எண்ணுவது சுலபம். ஆனால் கற்றது கை மண்அளவுதான் என்று புத்தகங்களை படிக்க படிக்க புரியும்.

    ஒவ்வொரு சாதனையாளரும் ஆரம்பத்தில் எவ்வளவு சோதனைகளை சந்தித்திருக்கிறார்கள். அரசியல், ஆராய்ச்சி, இலக்கியம், இசை என்று எந்தத் துறையிலும் புகழ் பெறுவதற்கு முன்பு எத்தனை முறை தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள் என்பதும் தெரியும். தோல்விகள் கதவை மூடும்போது தொடர்ந்து விடாமுயற்சியுடன் கதவுகளை தட்டித் திறப்பதுதான் வெற்றிக்கான சாவி. விவேகானந்தர் சொல்கிறார், “வெற்றி பெறுவதற்கு தேவையானது முடிவில்லா விடாமுயற்சியும், அதீதமான நம்பிக்கையும் தான் அவசியம். நன்றாக உழைத்திரு, உனது குறிக்கோளை நிச்சயம் நீ அடைவாய்” என்கிறார்.

    ஓரிரு முறை தோல்வியை சந்தித்துவிட்டால் பின் துவண்டுவிடாதே. தோல்வி நிரந்தரம் அல்ல, தோல்வியுற்றால் அதில் உள்ள தவறை ஒத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டு முன்னேறு. ஆனால் ஒருபோதும் முயற்சி செய்ய மறக்காதே. இதனை மறவாமல் இருந்தாலே வெற்றி நம் காலடியில் சரணடையும்.

    பெர்னாட்ஷாவின் வாழ்க்கை கொடுமையான வறுமை நிறைந்த வாழ்க்கை. அவரது அறிவோடு தினம் ஐந்து பக்கம் எழுதும் விடாமுயற்சியே அவரை உலக அறிஞராக்கியது. விடாமுயற்சிக்கு உதாரணங்களாக மேடம் கியூரி, மார்க்கபோலோ என்று அடுக்கிக் கொண்டே போகலாம். காந்திஜியின் விடாப்பிடியான அகிம்சை கொள்கைதானே நமக்கு சுதந்திரத்தையே வாங்கித் தந்தது. உலகில் சாதனையாளர்கள் எல்லாரிடத்திலும் அவரவர் துறைசார் அறிவோடு விடாமுயற்சியும் இருந்து வருகிறது.

    அதனாலே அவர்கள் வெற்றி பெற்றார்கள். சாதனை படைத்தார்கள். இந்த உலகில் முயற்சியை விட வேறொன்றும் சிறந்த இடத்தை பெற்றுவிட முடியாது. திறமை, மேதைத்தனம், கல்வி இருந்தாலும் அதனுடன் விடாமுயற்சியும், எதை அடையவேண்டும் என்ற தெளிவான முடிவும் மட்டுமே வெற்றிக்கு வழிகாட்டும் சர்வ வல்லமை படைத்தது. திருவள்ளுவரும் இதைத்தானே சொல்கிறார். முயற்சி திருவினையாக்கும், முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் என்று.

    நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை. விடாமுயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும்.
    உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.
    * உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பழிவாங்கிட அல்ல, தப்பித்தவறி கூட அதே தவறை இன்னொருவருக்கு செய்துவிடக்கூடாது.

    * யாரையும் இளக்காரமாக பார்க்காதீர்கள். அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் ஏதாவது ஒன்று இருக்கும்.

    * நமக்கு பிடிக்காதவாரகவே இருந்தாலும் அவரின் சிறு வெற்றிக்கு மனதார ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு செல்லுங்கள்.

    * மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்புக் கொடுங்கள்.

    * ‘என்ன வாழ்க்கைடா இது’ என்று நினைப்பதை விட, ‘இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை’ என்று எண்ணி வாழுங்கள்.

    * மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தை ஒழித்துக்கட்டுங்கள். அது தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடும்.

    * நீங்கள் நேசிப்பவர்கள் பிரிந்து சென்றால் சபிக்காதீர்கள். அவர்கள் நல்லபடியாக வாழ பிரார்த்தனை செய்யுங்கள். உண்மையான அன்பு என்பது அதுதான்.

    * சிறிய வாய்ப்புகள் என்றாலும் அவற்றை சிறப்பாகச் செய்து முடியுங்கள். பெரிய வாய்ப்புகள் தேடி வரும்.

    * பிறரை தவிர்க்கும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள். உங்களை பிறர் தவிர்த்தால் தாங்கிக் கொள்ள முடியுமா என்று.

    * எதிரே வருபவரின் தகுதியை பாராமல் சிறு புன்னகை உதித்தபடி கடந்து செல்லுங்கள்..

    * உங்களைப் பிடிக்காமல் ஒருவர் விலகிச் செல்கிறார் என்றால் அமைதியாக ஒதுங்கிவிடுங்கள்….
    கோபம் உங்கள் உறவுகளை சேதப்படுத்தி, உங்கள் தரப்பு நியாயத்தை கெடுப்பதோடு, உங்களின் மீதான சுற்றியிருப்பவர்களின் பார்வையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது
    கோபத்தைப் பற்றிய சில தவறான நம்பிக்கைகளும் இருக்கின்றன. கோபத்தை உள்ளுக்குள் போட்டு அடக்காதே. அதை கொட்டிவிடுவதுதான் நல்லது என்பார்கள். ஆனால், கோபத்தை உள்ளே அடக்குவது, வெளியே கொட்டுவது இரண்டுமே ஆபத்தானது. அதற்காக, யாரிடம் போய் கோபத்தில் வெடிக்கலாமென பார்த்துக்கொண்டிருக்க அவசியமில்லை. கோபத்தில் கொப்பளிக்காமலேயே உணர்ச்சிகளைத் தெரிவிக்க உங்களால் பழகிக்கொள்ளலாம்.

    இதேபோல் நான் எனக்குக்கீழ் இருப்பவர்களிடம் மென்மையாக நடந்துகொண்டால் என்னை ஏறி மிதிப்பார்கள் என்ற நம்பிக்கையும் பலருக்கு உண்டு. கோபத்தை அடக்கி சுயக்கட்டுப்பாடுடன் நடந்து கொள்வதற்கு மிகுந்த நெஞ்சுரம் தேவை. நீங்கள் அப்படி நடக்கும்போது அவர்கள் உங்களை இன்னும் அதிகமாக மதிப்பார்கள்.

    நான் கோபப்படவில்லையென்றாலும், ஒண்ணுமில்லாத விஷயத்துக்குக்கூட தேவையில்லாமல் வீண் வாக்குவாதம் செய்து நம்மை டென்ஷனாக்குவதற்கென்றே சிலர் இருக்கிறார்களே... அப்படி நம்மை சீண்டுகிறவர்களிடம் எப்படி கோபப்படாமல் நிதானமாக இருக்க முடியும்? இந்தக் கேள்வி நியாயமானதுதான். உங்கள் கோபம் சரியானதாக இருந்து, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் உண்மையில், கோபம் உங்கள் உறவுகளை சேதப்படுத்தி, உங்கள் தரப்பு நியாயத்தை கெடுப்பதோடு, உங்களின் மீதான சுற்றியிருப்பவர்களின் பார்வையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த இடத்தில்தான் கோபத்தை நிர்வகிக்க வேண்டிய கட்டாயம் வருகிறது.

    அடிக்கடி ‘மூட் அவுட்’ ஆவது உங்களது சுபாவமாக இருந்தால், இதுவரை உங்களுடைய கோபத்திற்கான பழியை அடுத்தவர் மீது சுமத்தியிருக்கலாம். அவர்கள்தான் என்னை கோபப்பட வைத்தார்கள் என்று உங்களுடைய உணர்ச்சிகளின் ரிமோட் கன்ட்ரோலை மற்றவர்களிடம் கொடுத்திருப்பீர்கள். இனி அந்த ரிமோட் கன்ட்ரோலை உங்கள் கைக்கு கொண்டுவந்துவிடுங்கள். அதற்கு முதலில், ‘நான்தான் ஆத்திரப்பட்டுவிட்டேன். இதற்கு முழுவதும் நான் மட்டும்தான் காரணம்’ என்று உங்களுடைய செயல்களுக்கு நீங்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் சூழலை கட்டுப்படுத்துவது எளிதாகிவிடும்.

    உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் சூழல் எது? அப்போது என்ன நடந்தது? கோபம் வரும்போது எப்படி நடந்துகொண்டீர்கள்? எப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்? இவற்றையெல்லாம் ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டால், அடுத்த முறை அதேபோன்ற சூழல் வரும்போது அதை எதிர்கொள்ள வசதியாக இருக்கும்.

    யாராவது நம்மை கோபப்படுத்தினால் சட்டென்று யோசிக்காமல் எதையும் பேசாதீர்கள். நிதானமாக யோசித்துப் பிறகு பேசலாம். மூச்சை நன்றாக இழுத்துவிட்டோ அல்லது ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டோ பிறகு பேசலாம். அப்போது கோபம் அடங்கி நிதானமாக பேச முடியும்.

    ஏதாவது பிரச்னை வரும்போது உங்கள் பக்கத்திலிருந்து மட்டும் யோசித்திருப்பீர்கள். எதிரில் இருப்பவரின் சூழலையும் யோசிக்க வேண்டும். பிரச்னையை அவருடைய கோணத்திலிருந்து யோசித்து பார்க்கலாம். குறிப்பாக சின்ன விஷயமாக இருந்தால் பெரிசு பண்ண
    வேண்டாமே…

    எதிரில் இருப்பவர் என்ன பேசினால் நமக்கு கோபம் வரும்? எந்தச் சூழலில் எனக்கு கோபம் தலைக்கேற வாய்ப்புள்ளது? என்பதை முன்கூட்டி கணித்து விட்டால் அதற்கு எப்படி நாம் எதிர்வினையாற்றுவது என்பதை தீர்மானித்து வைத்துக் கொண்டால் பிரச்னையை எளிதில் சமாளித்துவிடலாம் அல்லது அந்த சூழல் வரும்போது, அங்கிருந்து நகர்ந்து விடலாம். அது சூழலின் தீவிரத்தன்மையை குறைத்துவிடும்.

    சில நேரங்களில் அலுவல் ரீதியான கோபத்தையோ, வயதில் மூத்தவரிடம் உண்டாகும் கோபத்தையோ வெளிக்காட்ட முடியாது. அதற்கு சிறந்த வழி. ஒரு பேப்பரில் அவரைத் திட்ட நினைப்பதையெல்லாம் எழுதி, அதை கிழித்தெறிந்து விடுங்கள். 
    வாழ்க்கையில் இன்று முன்னேறிய நிலையில் இருக்கும் பல பெண்கள் மனோபலத்தை தங்கள் வாழ்க்கை அனுபவம் மூலம் பெற்றிருக்கிறார்கள். பெண்கள் மனோபலத்தை பெறுவதற்கான வழிகளை பார்க்கலாம்.
    மனபலம் நிறைந்த பெண்களால் மட்டுமே வாழ்க்கையில் சாதனை படைக்க முடியும். மனபலம் என்பது இன்னொருவரிடம் இருந்து பெறப்படும் விஷயம் அல்ல, ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் தானே அதனை உருவாக்கிக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் இன்று முன்னேறிய நிலையில் இருக்கும் பல பெண்கள் மனோபலத்தை தங்கள் வாழ்க்கை அனுபவம் மூலம் பெற்றிருக்கிறார்கள். இந்த அனுபவம் என்பது பொருள் பொதிந்த வார்த்தையாகும், வாழ்க்கையில் ஒருவருக்கு வெற்றியை விட தோல்விகளே அதிக அனுபவத்தைத் தரும். வெற்றியில் கிடைக்கும் அனுபவம் எல்லைக்கு உட்பட்டது, ஆனால் தோல்வியில் கிடைக்கும் அனுபவங்கள் எல்லை இல்லாதது. அதனால் தோல்விகளை கண்டு ஒருபோதும் துவண்டுவிடாதீர்கள்.

    பெண்கள் மனோபலத்தை பெறுவதற்கான வழிகள்:

    நிறைய புத்தகங்களைப் படியுங்கள். சாதனையாளர் களின் சுய சரிதைகளை படித்து அவர்கள் கடந்து சென்ற பாதைகளையும், கஷ்டங்களையும் புரிந்துகொள்ளுங்கள். வாழ்க்கையில் கஷ்டங்களையும், தோல்விகளையும் சந்திக்கும்போதெல்லாம், ‘நாம் கஷ்டங்களை சந்திப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்’ என்று நினைத்தால் மனம் சோர்ந்து போகும். மாறாக அந்த மாதிரியான நேரங்களில், ‘நாம் வாழப் பிறந்திருக்கிறோம். நிச்சயம் வெற்றியடைவோம்’ என்ற தன்னம்பிக்கையை மனதில் அதிகரிக்கச் செய்யவேண்டும்.

    நீங்கள் எந்த துறையில் இறங்கினாலும் உங்களுக்கு அதைப்பற்றிய அடிப்படை அறிவு தேவை. அதனை கல்வி மூலமும், பக்குவம் மூலமும் பெற்றிடுங்கள். கல்வியும், பக்குவமும், பண்பான செயல்பாடுகளும் உங்கள் மனோபலத்தை அதிகரிக்கச்செய்யும்.

    குறைகள் இல்லாத பெண்கள் இல்லை. வெற்றியடைந்த எல்லா பெண்களுமே, குறை என்ற அந்த சுமையையும் சுமந்துகொண்டுதான் வெற்றியை நோக்கி பயணித்திருக்கிறார்கள். குறைகளை முடிந்த அளவு நிவர்த்திசெய்யுங்கள். அதன் மூலம் சுமைகள் குறைந்து, வெற்றிக்கான உங்கள் பயணம் சுகமானதாக மாறும்.

    குறைகள் எல்லா பெண்களிடமும் இருப்பதுபோல் நிறைகளும் எல்லா பெண்களிடமும் இருக்கின்றன. அந்த நிறைகளை அடையாளங்காணவேண்டும். அவைகளை மேம்படுத்தவேண்டும். மேம்படுத்தும் அந்த பயணத்தில் தொடக்கத்தில் சிலவித தயக்கங்களும், தடுமாற்றங்களும் ஏற்படத்தான் செய்யும். தொடர்ந்து முயற்சித்தால் தயக்கம் அகலும். மனோபலம் மேம்படும்.

    பெண்கள் ஒருபோதும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடாது. பொது இடங்களில் நிற்கவும் பொதுமக்களிடம் பேசவும் தயங்குகிறவர்கள் மனோபலம் இல்லாதவர்கள். அத்தகைய குறைகள் உங்களை குடத்தில் இட்ட விளக்காய் மாற்றிவிடும். அதனால் உங்களுக்குரிய அங்கீகாரத்தைப்பெற எல்லோரிடமும் சகஜமாகப் பழகுங்கள். அது அன்பானதாகவும், எல்லைகொண்டதாகவும், அர்த்தமிக்கதாகவும் இருக்கவேண்டும்.

    பெண்கள் என்றாலே பலகீனமானவர்கள் என்ற எண்ணம் தவறு. இன்றைய சமுதாயத்தில் பெண்களின் கல்விக்கும், முன்னேற்றத்திற்கும் நல்ல அங்கீகாரம் கிடைக்கிறது. எல்லா துறைகளிலும் அவர்களால் சிறந்துவிளங்கமுடியும். ‘நானும் ஒரு பெண். என்னாலும் பிரகாசிக்கமுடியும்’ என அடிக்கடி உங்கள் மனதிடமே சொல்லிக் கொள்ளுங்கள். மனோபலம் அதிகரிக்கும்.

    உங்கள் மனோபலத்தை சிதைப்பது மனநெருக்கடிதான், அந்த மன நெருக்கடியை களைந்து மனோபலத்தை பெருக்க முதலில், எந்த நேரம் உங்களுக்கு அதிக மன நெருக்கடி ஏற்படுகிறது என்பதை கணியுங்கள், அந்த நேரத்தில் குறைந்தது 15 நிமிடம் அமைதியாக நடந்தால் மனநெருக்கடி நீங்கும். தினமும் குறைந்தது 10 நிமிடம் தியானம் செய்யுங்கள். அந்த நேரத்தில் வேறு சிந்தனைகள் எதுவும் இல்லாமல் மனது அமைதியாகும். குடும்பத்தினருடனோ, நண்பர்களுடனோ செலவிட வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கி வையுங்கள். அன்று முழுக்க உங்கள் மனதில் சந்தோஷம் பொங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

    உங்களுக்கென்று ஒரு பொழுதுபோக்கு அவசியம் தேவை. அது இசை கேட்பதற்காகவோ, நடனம் ஆடுவதாகவோ, அல்லது பார்ப்பதாகவோ, ஓவியம் வரைவதற்காகவோ எதுவாகவும் இருக்கலாம். வீட்டு அருகில் பூஞ்செடிகள் வைத்து பராமரியுங்கள். வளர்ப்பு பிராணிகளிடமும் அன்பு செலுத்துங்கள். மனநெருக்கடிகளில் இருந்து நீங்கள் விடுபட்டுவிட்டால் மனம் அமைதிபெறும். அப்போது சிந்தனையும், செயல்திறனும் நன்றாக இருக்கும். புதிய நம்பிக்கையும் பிறக்கும். நம்பிக்கை மனோபலத்தை அதிகரிக்கும்.
    எண்ணம் போல் வாழ்வு என்பார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மைதான். நம் எண்ணங்களில் எவையெல்லாம் நீந்துகின்றனவோ அவைகளே வாழ்க்கையில் நடக்கும்.
    நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும், நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் நம்முடைய எண்ணங்களின் பிரதிபலிப்பே என்கிறார் அறிஞர் ஆலன் கோஹென்.

    அது எப்படி நடக்கும். விளக்கமாக கூறுங்களேன்...

    ஒரு விஷயம் உண்மை என்பதோ பொய் என்பதோ நீங்கள் பார்க்கும் பார்வையில் இல்லை, காதால் கேட்பதில் இல்லை. தீர விசாரிப்பதில்தான் இருக்கிறது.
    விசாரணை என்றால் வேறு யாரிடமும் அல்ல. உங்களிடம்தான்... அதாவது உங்கள் ஆழ் மனதிடம். உங்கள் ஆழ் மனதில் உள்ள எண்ணங்களை பொறுத்துதான் நீங்கள் காணும் விசயம் அமைகிறது.

    என்ன குழப்பமாக இருக்கிறதா? உங்களை சுற்றிலும் இருந்து நீங்கள் அறிந்தும் அறியாத நிலையிலும் ஒரு நிமிடத்திற்கு 400 மில்லியன் தகவல் துணுக்குகள் கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐம்பூலங்கள் மூலமாக உங்களை வந்தடைகிறது. இதில் வெறும் 2000 தகவல்களை மட்டுமே உங்கள் மனதால் கிரகிக்க முடியும். சுற்றிலும் இருந்து செய்திகள் வந்து விழுந்தாலும் உங்கள் மனதுக்குள் இருக்கும் தகவல் வடிகட்டி அவற்றை எல்லாம் பல வகைகளில் பிரித்து வடிகட்டி உங்களுக்குள் அனுப்புகிறது.

    உங்களுக்கு எதில் விருப்பமும் ஈடுபாடும் இருக்கிறதோ, உங்கள் கவனம் எதை நோக்கி செல்லுகிறதோ, உங்கள் மனம் எதை ஈர்க்கிறதோ என்பதை பொறுத்து அத்தகைய செய்திகளை மட்டும் எடுத்துக் கொள்கிறது. இது ஆளுக்கு ஆள் மாறுபடும். அதனால்தான் ஒரு விஷயம் குறித்து எல்லோரும் ஒரே கருத்தை தெரிவிப்பதில்லை. தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு கூறுகிறார்கள்.

    உதாரணமாக ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு பலதரப்பட்ட மக்களும் வருகிறார்கள். ஆனால் எல்லோரும் ஒரே பொருளை வாங்குவதில்லை. கணவன்-மனைவி குழந்தைகள் என குடும்பத்துடன் சென்றாலும் ஒவ்வொருவருடைய தேவையும் வெவ்வேறாகத்தான் இருக்கும். அப்படித்தான் மனமும் தன்னை சுற்றி வரும் செய்திகளில் தனக்கு பரிச்சயமானதை, விருப்பமானதை மட்டும் வடிகட்டி எடுக்குக்கொள்ளும்.

    இதில் மனம் எப்படி செயல்படுகிறது?

    நீக்குதல், விலக்குதல், பொதுமைப் படுத்துதல் ஆகிய மூன்று விதங்களில் மனம் தகவல்களை வடிகட்டுகிறது. முதலில் நீக்குதல் என்பதை பார்ப்போம். உங்கள் சிந்தனை நேர்மறையாக இருந்தால் உங்களை சுற்றிலும் நடக்கும் விஷயங்களில் நேர் மறையானவற்றை மட்டும் தனக்குள் ஈர்க்கும். உங்கள் சிந்தனை எதிர்மறையாக இருந்தால் அத்தகைய எதிர்மறையான செய்திகளை மட்டுமே கவரும்.

    உதாரணமாக ஒருவர் உங்களை புகழ்ந்து பாராட்டினால் உங்களுக்கு நேர்மறை எண்ணம் இருந்தால் அதை நினைத்து மகிழும். எதிர்மறை எண்ணம் இருந்தால் இவர் நம்மை புகழ்வது போல் இகழ்கிறாரோ என்று நினைத்து மனம் அங்கலாய்க்கும். அடுத்து விலகுதல், இது உங் களை சுற்றி என்ன நடந் தாலும் இவர்கள் இப்படிதான் சொன்னார்கள், இது இப்படித்தான் நடந்தது என்று நினைக்கும் உங்கள் மனம் அதை தான் விரும்பவது போல் மாற்றி எடுத்துக்கொள்ளும்.

    நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் மேல் அதிகாரியிடம் 2 நாட்கள் லீவு கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர் அவசியம் லீவு வேணுமா? என்று கேட்கிறார். அந்த சமயத்தில் நீங்கள் நேர்மறை சிந்தனையுடன் இருந்தால் உங்கள் மனம் லீவு தருவார், ஆனால் விளக்கம் கேட்கிறாரே என்று எண்ண வைக்கும். எதிர்மறை எண்ணத்துடன் இருந்தால் லீவு தரமாட்டார் என்று நினைத்து வருந்தச் செய்யும்.

    எனவே நேர்மறை சிந்தனை கொண்டிருந்தால் எந்த சூழலையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். அவர்கள் மனம் சாதகமான செய்திகளை மட்டுமே தனக்குள் எடுத்துக்கொள்ளும். அது எப்படி சொல்லப்பட்டாலும் தனக்கு ஏற்ப நேர்மறையாக மாற்றிக் கொள்ளும். நேர்மறையான நல்ல எண்ணங்கள் கொண்டவர்களையே தன்னிடம் ஈர்க்கும்.

    அதுவே எதிர்மறை சிந்தனை கொண்டிருந்தால் நல்லதே நடந்தாலும் அதனை எதிர்மறை விஷயமாக எண்ண வைக்கும். எதிர்மறையான மனிதர்களையும் செயல்களையுமே தன்பால் ஈர்க்கும். அவர்கள் மனம் அவ்வாறே செயல்படும். அதனால்தான் இனம் இனத்தோடு சேரும் என்பார்கள். சூழ்நிலையை கையாளும் விதத் தில்தான் உங்கள் வாழ்வின் வெற்றியும் தோல்வியும் அமைகிறது. நல்லவற்றை நினைத்தால் நல்லதே நடக்கும். எதிர்மறை எண்ணம் கொண்டிருந்தால் எதிலும் அதிருப்தியே நிலவும்.

    அடுத்து பொதுமைப்படுத்துதல் குறித்து பார்ப்போம். உங்கள் வாழ்க் கையில் எதிர்மறையான விஷயங்கள் தொடர்ந்து ஒரிரு முறை நிகழ்ந்து விட்டால் அதன் பிறகு உங்கள் மனம் இனி எப்போதும் அப்படியே தான் நடக்கும் என்று நினைத்து வருத்தப்படும். இதனால் அடுத்து எடுக்கும் எந்த முயற்சிக்கும் ஒத்துழைக்காமல் முரண்டு செய்யும். உங்கள் மனம் எல்லாவற்றையும் எதிர்மறையாகவே பொதுமைப் படுத்தி பார்ப்பதால் உண்டாகும் பிரச்சினை இது.

    எனவே அடுத்த முறை உங்கள் மனம் “ஏன் எனக்கு மட்டும் எப்போதும் இப்படி நடக்கிறது-?” என வருந்தும் போது, நீங்கள் விழிப்புணர்வோடு இருந்து “எப்போதுமேவா இப்படி நடக்கிறது?” என்ற எதிர் கேள்வியை அதனிடம் கேளுங்கள். அவ்வளவுதான். உங்கள் வாழ்க்கை பயணத்தில் உங்களுடைய முயற்சிகள் வெற்றி பெற்ற தருணங்களும் நினைவுக்கு வரும். எப்போதும் தோல்வியே தொடரவில்லை. பல முறை வெற்றியும் பெற்றிருக்கிறோம் என்பது புரியும்.
    இப்படி பகுப்பாய்வு செய்தால் மனதுக்குள் தன்னம்பிக்கை பிறக்கும். அடுத்த முயற்சிக்கு உங்கள் மனம் தயாராகும். பிறகு என்ன? தொட்டக் காரியம் எல்லாம் வெற்றிதான்.

    பொதுவாக அனைவரது மனமும் பாராட்டை, தட்டிக்கொடுத்தலை விரும்பும். அதே சமயம் பிறரது குறைகளை கண்டுபிடிப்பதே பாராட்டை பெறுவதற்கான எளிய வழி என்று நினைப்பதால் மனம் குறைகளையே ஈர்க்கிறது. அதுவே மற்றவர்களை மனம் விட்டு பாராட்டும் போது அவர்கள் மனம் மகிழும். அதோடு உங்கள் மனதும் அதனை ஈர்த்து உங்களை மகிழ் விக்கும்.

    உங்கள் மனம் நேர்மறை சிந்தனை உடையதாக இருந்தால் நீங்கள் எதை பார்த்தாலும் அதிலிருக்கும் நல்லவை மட்டுமே உங்கள் கண்களுக்கு தென்படும். நீங்கள் எதை கேட்டாலும் அதிலுள்ள நல்லவை மட்டுமே உங்கள் செவியில் நுழைந்து மனதில் புகும். எனவே நம் மனதை எப்போதும் நேர்மறை எண்ணங்களால் நிரப்பி வைத்து இருந்தால் நல்லவையே உங்களை சூழ்ந்து நிகழும். நல்லவர்களே உங்களை நாடி வருவார்கள். நல்லவையே உங்களை வந்தடையும். மகிழ்ச்சியுடன் நிறைவாக வாழலாம்.

    Email:fajila@hotmil.com
    திருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தவும், வரம்புமீறும் பட்சத்தில் உறவுகள் சீர்குலையவும் வாய்ப்பிருக்கிறது.
    திருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக் கூடும். (love relationship tips) இதில் ஆண்கள் வரம்பு மீறினாலும், பெண்கள் தான் ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும். அன்றைய காலத்தில் உற்றார் உறவினர்கள் ஒன்று சேர்ந்து திருமண உறவில் இணையவிருக்கும் மணமக்களுக்கு நிச்சயதார்த்தம் நடத்தி வைப்பார்கள்.

    நிச்சயதார்த்தம் என்ற இந்த சடங்கு நாம் இருவரும் (ஆண்- பெண்) திருமணம் செய்துகொள்வதற்கு நிச்சயிக்கப்பட்டு விட்டோம் என்பதை உணர்த்துகிறது.
    “நிச்சயதார்த்தம் டூ திருமணம்” இந்த இடைப்பட்ட காலம் நிச்சயிக்கப்பட்ட இருவரும், ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வெற்றிகரமாக திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்க அச்சாரமிடுகிறது.

    ஆனால், இந்த நேரத்தில் வரம்புமீறும் பட்சத்தில் உறவுகள் சீர்குலையவும் வாய்ப்பிருக்கிறது. உதாரணத்திற்கு அளவுக்கதிமாக மொபைல்களில் உரையாடுவது, டேட்டிங் செல்வது, அளவுக்கதிமான அன்பளிப்புகளை பரிமாறிக்கொள்வது.



    அளவுக்கதிகமாக மொபைல்களில் உரையாடுவதன் மூலம், இக்காலத்து பெண்கள் மற்றும் ஆண்களின் மனது உடலுறவில் ஈடுபடுவதற்கு துடிக்கிறது.
    திருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக்கூடும், இதில் ஆண்கள் வரம்பு மீறினாலும், பெண்கள் தான் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும்.

    ஏனெனில் இருபாலரும் தவறு செய்யும் பட்சத்தில், இதில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள்தான். நிச்சயதார்த்தத்துக்குப் பின், திருமணத்துக்கு முன் என்ற இடைவெளியில் அதிகம் நெருக்கமும் தவிர்க்கப்பட வேண்டியது. பேசுவது, சந்திப்பது என்றபோதிலும், அதை ஆவணமாக மாற்றும் சாத்தியங்களை தவிர்ப்பதும் புத்திசாலி பெண்ணுக்கு அழகு.

    குறிப்பாக, சேர்ந்த மாதிரி புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம். தனித்த படங்களை பகிர்ந்து கொள்வதிலும்கூட ஆபத்து இருக்கிறது. பேச்சு, நெருக்கம், பகிர்வு ஆவணம் அனைத்திலும் எச்சரிக்கையும் முன் யோசனையும் அவசியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
    மனதில் உறுதி இருந்தால் மலைகளைக்கூட காலில் விழுந்து மண்டியிட வைத்துவிடலாம். மன உறுதி இல்லாதவர் கூழாங்கற்களுக்கே கூட குனிந்து வணக்கம் சொல்ல வேண்டியிருக்கும்.
    வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம்; விழுப்புண் பெறாமல் போர்க்களத்தில் வெற்றிகாண முடியுமா? வாழ்க்கை என்பது காட்டாறு; எதிர் நீச்சல் போடாமல் காட்டாற்றில் நீந்தி எதிர்க்கரை சேர முடியுமா? விழியில் நீரோட்டமும், வழியில் போராட்டமும் நிறைந்ததுதான் வாழ்க்கைப் பயணம்.

    மனதில் உறுதி இருந்தால் மலைகளைக்கூட காலில் விழுந்து மண்டியிட வைத்துவிடலாம். மன உறுதி இல்லாதவர் கூழாங்கற்களுக்கே கூட குனிந்து வணக்கம் சொல்ல வேண்டியிருக்கும். மனஉறுதி படைத்தவர் எதிர்ப்பு, ஏளனம், இடையூறுகளை எதிர்த்து முன்னேறிச் செல்கின்றனர்.

    குப்பைக்கழிவுகளை உரமாக்கிக் கொண்டு பூக்கவில்லையா குண்டுமல்லிகள்? காய்க்கவில்லையா கொய்யாக்கனிகள்? வரும் சோதனைகளை உரமாக்கிக்கொண்டு வாழ்கிறவன் வாசலில்தான் தினம் மாலைகள் அவன் கழுத்துக்காக காத்துக்கிடக்கின்றன.

    மன உறுதியை நாள்தோறும் இதயத்தில் விதைத்து வந்தவர்கள், மகத்தான சாதனைகளையே மகசூல் செய்திருக்கிறார்கள். சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜியத்துக்கு சொந்தக்காரர்கள் நாங்கள் என்று எக்காளமிட்டவர்கள் ஆங்கிலேயர்கள். மகாத்மா காந்தியின் மனஉறுதிக்கு முன்னால் அவர்களின் எதேச்சதிகாரம் என்ன ஆனது? இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுத்துவிட்டு வந்த வழியே திரும்பி ஓடவேண்டியதாயிற்று.



    எதிரியின் கூடாரத்திற்கு உளவறிய சென்றான் நெப்போலியன். பகைவரின் படைகள் அவனை கண்டுபிடித்துவிட வேகமாக குதிரையைச் செலுத்தினான். தப்பிப்பதற்குள் மூன்று திசைகளிலிருந்தும் எதிரியின் படைகள் நெருங்கி வந்தன. நான்காவது திசையை நோக்கினாலோ, ஆழமான பெரும் பள்ளத்தாக்கு. குதிரையால் முழுப்பள்ளத்தையும் தாண்ட முடியாது என்பது நெப்போலியனுக்கே தெரியும்.

    இருந்தும் மனதில் உறுதி இருந்ததால் குதிரையைச் செலுத்தினான் அவன். குதிரை பள்ளத்தாக்கின் முக்கால் பகுதியை தாண்ட அது தவறி விழுவதற்கு முன்பே அக்குதிரை மீது நின்றபடி தாவி எதிர்ப்புற மலைச்சரிவில் குதித்து தப்பித்தான் அம்மாவீரன். எதிரிகளே வியக்கும் வண்ணம் இப்பேற்பட்ட மன உறுதி இருந்ததால்தான், ‘முடியாது என்ற சொல் முட்டாள்களின் அகராதியில்தான்’ என்று சொல்ல முடிந்தது நெப்போலியனால்.

    ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். வெப்பத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மை இல்லாவிட்டால் மத்தாப்புக்களால் பிரகாசமாய் ஒளிர்ந்துவிட முடியாது. எனவே எந்த செயலானாலும் சரி, மன உறுதியுடன் அதில் முனைப்புடன் செயல்படுவோம். வெற்றிக்கனி நம் கைகளில் விழும். தோல்விகள் நம் கால்களில் விழும்.

    எழுத்தாளர் எல்.பிரைட்
    ×