என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » kollywood
நீங்கள் தேடியது "Kollywood"
இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமாகி, குறுகிய காலத்தில் உச்ச நடிகருடன் ஜோடி போட்ட ஆம்பள் நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லையாம்.
இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமாகி, குறுகிய காலத்தில் உச்ச நடிகருடன் ஜோடி போட்ட ஆம்பள் நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லையாம். அவர் நடித்த ஒரு படம் மட்டும் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறதாம்.
சமீபத்தில் தான் நாயகிக்கு திருமணம் நடந்ததாம். திருமணத்திற்கு பிறகும் சினிமாவை விட்டு பிரிய மனமில்லாத நாயகிக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லையாம். அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வந்தாராம். சமீபத்தில் நடந்த விழாவில் ஒன்றில் நடிகை கவர்ச்சி உடையில் வந்தாராம்.
இதைப் பார்த்த ரசிகர்கள், நடிகைக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை. வயதான காலத்தில் இப்படி கவர்ச்சியில் உடையிலா வருவது என்று கிண்டல் செய்திருக்கிறார்கள்.
சுமார் மூஞ்சி நடிகர் தனக்கு வந்து சேரும் பெயரையும், புகழையும் தக்க வைத்துக் கொள்வதில், தீவிர கவனம் செலுத்தி வருகிறாராம்.
சுமார் மூஞ்சி நடிகர் தனக்கு வந்து சேரும் பெயரையும், புகழையும் தக்க வைத்துக் கொள்வதில், தீவிர கவனம் செலுத்தி வருகிறாராம். தன்னை வைத்து ஏற்கனவே வெற்றி படம் கொடுத்த டைரக்டர்களின் படங்களில் மட்டும் நடிப்பது என்று முதல் கட்டமாக ஒரு முடிவை எடுத்து இருக்கிறாராம். இதனால் அறிமுக இயக்குனர்கள் பலரும் வருத்தமடைந்திருக்கிறார்களாம்.
அதுபோக, ஏற்கனவே அவர் நடிப்பதாக ஒப்புக்கொண்ட படங்களில் விரைவாக நடித்துக் கொடுப்பது என்றும் புதிய கொள்கை முடிவுக்கு வந்து இருக்கிறாராம் நடிகர்!
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிசியாக இருந்த வீரமான நடிகைக்கு, தற்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாம்.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிசியாக இருந்த வீரமான நடிகைக்கு, தற்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாம். இதனால், பல இயக்குனர்களுக்கு தூது அனுப்பி வருகிறாராம். அந்த தூதுக்கு பலனாக கலகலப்பான இயக்குனர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விட்டதாம்.
அந்த இயக்குனர் ஒரு சரித்திர படம் எடுக்க திட்டமிட்டாராம். அதில் நடிக்க நடிகை அப்போவே தூது அனுப்பினாராம். ஆனால், பலனளிக்க வில்லையாம். தற்போது அதற்கு பலன் கிடைத்திருக்கிறதாம்.
இயக்குனரும் நிறைய தடவை வாய்ப்பு கேட்டுவிட்டாரார். இந்த முறை கொடுத்து விடலாம் என்று நடிகையின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறாராம்.
தமிழில் அறிமுகமான ரெயின் நடிகைக்கு ஆரம்பம் முதலே கவர்ச்சி விசயத்தில் படுதாராளம் காட்டியதால், நடிகைக்கு எக்கச்சக்கமான படங்கள் கமிட் ஆனதாம்.
தமிழில் அறிமுகமான ரெயின் நடிகைக்கு ஆரம்பம் முதலே கவர்ச்சி விசயத்தில் படுதாராளம் காட்டியதால், நடிகைக்கு எக்கச்சக்கமான படங்கள் கமிட் ஆனதாம். பல முன்னணி நடிகர்கள் நடிகைக்கு வலியவந்து தங்கள் படங்களில் சான்ஸ் கொடுத்தார்களாம்.
இப்படி உச்சத்தில் இருந்த நடிகையின் மார்க்கெட் புதுவரவுகளால் டல்லடிக்க தொடங்கியதாம். இதையடுத்து, தெலுங்கு, கன்னடம் என வெளியூர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகைக்கு தமிழில் ரீஎண்ட்ரியாகும் வாய்ப்பே இல்லாம் போனதாம். அங்கும் போதிய சான்ஸ் இல்லாததால், திருமணம் செய்து செட்டிலாகலாம் என்ற முடிவுக்கு வந்தாராம்.
தனது காதலரான வெளிநாட்டுக்காரரை கரமும் பிடித்தாராம். ஆனால் மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதால், பழையபடி கவர்ச்சி மழை பொழிய தயார் என இயக்குனர்களுக்கு தூதுவிட ஆரம்பித்திருக்கிறாராம். தனது பிகினி படங்களை இயக்குனர்களுக்கும், ஹீரோக்களுக்கும் அனுப்பி இதை வெளிப்படையாக தெரிவித்து வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கிறார்களாம்.
வாரிசு நடிகை படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகிறாராம்.
வாரிசு நடிகை படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகிறாராம். இனிமேல் பிரபல கதாநாயகர்களின் படங்களில் மட்டுமே நடிப்பது என்று அவர் புதிய கொள்கை முடிவு எடுத்து இருக்கிறாராம்.
பிரபல கதாநாயகர்களின் ஜோடியாகி விட்டால், பெரிய தொகை சம்பளமாக கிடைக்கும் என்று அவர் கணித்து இருக்கிறாராம். இதற்கு வசதியாக எல்லா பெரிய கதாநாயகர்களிடமும், “நான் உங்க ரசிகை” என்று ‘ஐஸ்’ வைக்கிறாராம்!
தளபதி, தல ஆகிய இரு பெரும் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த இனிப்புக்கடை நடிகை அடுத்து, ஜெயமான நாயகனுடன் ஜோடி சேருவதற்கு தீவிர முயற்சிகளில் மேற்கொண்டிருக்கிறாராம்.
தளபதி, தல ஆகிய இரு பெரும் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த இனிப்புக்கடை நடிகை அடுத்து, ஜெயமான நாயகனுடன் ஜோடி சேருவதற்கு தீவிர முயற்சிகளில் மேற்கொண்டிருக்கிறாராம். இதற்காக பல தூதுக்கள், சிபாரிசு என பல முயற்சிகளும் அடங்கியதாம்.
மேலும் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் தயார் என்கிறாராம். அவருடைய ஆசை அநேகமாக நிறைவேறி விடுமாம். விரைவில் அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவர இருக்கிறதாம்.
மும்பையில் இருந்து இறக்குமதியான வனமகளான நடிகைக்கு மளமள என்று புதிய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.
மும்பையில் இருந்து இறக்குமதியான வனமகளான நடிகைக்கு மளமள என்று புதிய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். சக நாயகிகள் அனைவரும் அவருடைய அதிர்ஷ்டத்தை பார்த்து பொறாமைப்படுகிறார்களாம்.
இந்த நிலையில், “தமிழ் பட உலகில், முதல் இரண்டு இடங்களில் இருக்கும் 2 நடிகைகளையும் விரட்டி காட்டுகிறேன், பார்” என்று தனது மானேஜர் முன்னிலையில் சபதம் எடுத்து இருக்கிறாராம், அந்த நடிகை.
பரபரப்புக்கு பெயர் போன மூன்றெழுத்து நாயகன் புதிதாக நடிக்கும் படத்துக்கு கதாநாயகி வேட்டை மும்முரமாக நடக்கிறதாம்.
பரபரப்புக்கு பெயர் போன மூன்றெழுத்து நாயகன் புதிதாக நடிக்கும் படத்துக்கு கதாநாயகி வேட்டை மும்முரமாக நடக்கிறதாம். தனக்கு ஜோடியாக ‘வாரிசு’ நடிகையை ஒப்பந்தம் செய்யும்படி கூறுகிறாராம், பரபரப்பு நாயகன்.
அதைத்தொடர்ந்து ‘வாரிசு’ நடிகையுடன் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். பரபரப்பு நாயகனுடன் ஜோடி சேர ‘வாரிசு’ நடிகை தயங்குகிறாராம். அவருடைய தயக்கத்தை போக்கி, படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறாராம்.
யோகா டீச்சராக இருந்த நடிகைக்கும், பிரபல தெலுங்கு நடிகருக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் அதிகம் வந்ததாம்.
யோகா டீச்சராக இருந்த நடிகைக்கும், பிரபல தெலுங்கு நடிகருக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் அதிகம் வந்ததாம். ஆனால், நடிகை இதைப்பற்றி கண்டுக்கொள்ள வில்லையாம். ஆனாலும், இவர்களுக்குள் காதல் இருப்பதாகவும் பெற்றோர்கள் சம்மதிக்க மறுப்பதாகவும் கூறினார்களாம்.
மாறாக நடிகையின் திருமணத்திற்கு பல தோஷங்கள் இருப்பதாகவும் அதற்கு கோவில்களில் பூஜை செய்தால் சரியாகி விடும் என்று ஜோசியர் சொல்ல, நடிகையும் அனைத்தையும் செய்தாராம். ஆனால், பலன் இல்லையாம். தற்போது புதியதாக கோவிலுக்கு சென்று பூஜை போட்டிருக்கிறாராம் நடிகை.
இதையறிந்த ரசிகர்கள் நடிகைக்கு வேற வேலை இல்லை. எப்போ பார்த்தாலும், கோவில், பூஜை என்று சுற்றிக் கிட்டே இருக்கிறார். எதற்கு சுற்றுகிறார் என்று சொல்ல மாட்டுகிறார் என்று சமூக வலைத்தளத்தில் கிண்டலடித்து பேசியிருக்கிறார்களாம்.
பல வெற்றி படங்களை கொடுத்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பெரிய நம்பர் நடிகைக்கு அடுத்துடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்.
பல வெற்றி படங்களை கொடுத்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பெரிய நம்பர் நடிகைக்கு அடுத்துடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். நடிகையும் பல கதைகளை கேட்டு வருகிறாராம்.
நடித்த படங்கள் எல்லாம் வரிசையாக வெற்றி பெற்று வருவதால் சந்தோஷத்தில் இருக்கும் நடிகைக்கு, ஒரு வருத்தம் இருந்துக் கொண்டே இருக்கிறதாம். காரணம், தன்னுடைய காதலரை ஹீரோவாக்க வேண்டும் என்ற கனவு நடக்காமல் இருக்கிறதாம். நீண்ட நாட்களாக கதை கேட்டாலும், அவருக்கு ஏற்ற கதை இன்னும் அமையவில்லையாம்.
இயக்குனரை விவாகரத்து செய்த பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வரும் பால் நடிகை, இதுவரை ரூ.40 லட்சம் சம்பளம் தான் வாங்கி வந்தாராம்
இயக்குனரை விவாகரத்து செய்த பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வரும் பால் நடிகை, இதுவரை ரூ.40 லட்சம் சம்பளம் தான் வாங்கி வந்தாராம். அவர் தற்போது தனது சம்பளத்தை திடீரென ஒரேயடியாக ரூ.1 கோடியாக உயர்த்தி விட்டாராம்.
இந்த திடீர் சம்பள உயர்வு பற்றி நடிகையிடம் தயாரிப்பாளர் ஒருவர் கேட்டதற்கு, “நான் இந்தி பட நாயகி ஆகிவிட்டேன். அதற்கு தகுந்தாற்போல் சம்பளம் கேட்க வேண்டாமா?” என்று கேட்டு சிரிக்கிறாராம். இந்தி படத்தில் நடிக்க சென்றால் அவ்வளவு பணம் கேட்பாரா? என்று தயாரிப்பாளர் புலம்பிக் கொண்டே சென்றாராம்.
சுமார் மூஞ்சி நடிகர் நடித்து தயாரித்த மூன்றெழுத்து படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெற முடியவில்லை என்றாலும், வசூல் ரீதியாக திரையிட்ட அனைவருக்கும் திருப்தி அடைந்தார்களாம்.
சுமார் மூஞ்சி நடிகர் நடித்து தயாரித்த மூன்றெழுத்து படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெற முடியவில்லை என்றாலும், வசூல் ரீதியாக திரையிட்ட அனைவருக்கும் திருப்தி அடைந்தார்களாம். ஆனால், அந்த படத்தை மொத்தமாக வாங்கிய நடிகர், திருப்தி அடையவில்லையாம்.
தயாரிப்பாளரான நடிகரிடம், பணத்தை திருப்பி கேட்கிறாராம். “பணத்தை கொடு...அல்லது புதுசாக ஒரு படத்தை நடித்துக் கொடு” என்று நெருக்குகிறாராம். இருவருக்கும் இடையே பஞ்சாயத்து நடக்கிறதாம்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X