search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kollywood"

    சமீபத்தில் வட நாட்டில் இருந்து வந்த நடிகைக்கு மடமடவென பட வாய்ப்புகள் குவிந்ததாம்.
    சமீபத்தில் வட நாட்டில் இருந்து வந்த நடிகைக்கு மடமடவென பட வாய்ப்புகள் குவிந்ததாம். அவர் நடனம் ஆடும் அழகை பார்த்தே பல ஹீரோக்கள் அசந்து தங்கள் படங்களுக்கு பரிந்துரை செய்தார்களாம்.

    அம்மணிக்கு பட வாய்ப்புகள் வந்த குவிந்த நிலையில் லைட்டா தலைக்கனமும் ஏறியதாம். சர்ச்சை நடிகையை விரட்டிக் காட்டுகிறேன் பார் என்று சவால்விட்டாராம். இதை கேட்டு சர்ச்சை நடிகை ஒன்றுமே சொல்லவில்லையாம். இதற்கிடையே சீனியர் நடிகருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டாராம் நடிகை.

    அம்மணிக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாம். அதற்கு காரணம் நடிகையின் தலைக்கனம் காரணம் என்று பலரும் பேசி வருகிறார்களாம். 
    மூன்றெழுத்து நடிகை கதாநாயகியாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றதாம்.
    மூன்றெழுத்து நடிகை கதாநாயகியாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றதாம். இந்த வெற்றியை தொடர்ந்து அந்த நாயகிக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். அவரிடம் கதை சொல்வதற்கு புது டைரக்டர்கள், ‘கியூ’வில் நிற்கிறார்களாம்.

    தன்னை தேடி வருகிற அத்தனை படங்களையும் ஏற்றுக் கொள்ளாமல், இதுவரை நடிக்காத கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து, நடிக்க சம்மதிக்கிறாராம், அந்த மூன்றெழுத்து நடிகை!
    நம்பர்-1 இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வரும் வாரிசு நடிகை திடீரென்று ஓய்வு எடுக்கப் போகிறேன் என்று அறிவித்தது,
    நம்பர்-1 இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வரும் வாரிசு நடிகை திடீரென்று ஓய்வு எடுக்கப் போகிறேன் என்று அறிவித்தது, பட அதிபர்களை அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறதாம். இந்த வயதிலேயே ஓய்வு எடுப்பதா? என்று தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்களாம்.

    வெளிநாடு சென்று ஓய்வு எடுக்கிற அளவுக்கு அப்படியென்ன உழைத்து விட்டார்?” என்று சில புது டைரக்டர்கள் கேள்வி எழுப்பு கிறார்களாம்.
    நாயகியாக அறிமுகமான லட்சுமியான நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம்.
    நாயகியாக அறிமுகமான லட்சுமியான நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம். இதனால், ஒரு பாடலுக்கு நடனம் ஆட முடிவு செய்தாராம். அது அவருக்கு பெயர் தரவே பல படங்களில் குத்துப்பாடலுக்கு நடனம் ஆடினாராம். ஆனால், தற்போது ஒரு பாடலுக்கு நடனம் ஆட நடிகையை அணுகி இருக்கிறாராம்.

    ஆனால், அவர் நேரடியாக மறுக்காமல் அதிக சம்பளம் கேட்டாராம். இதைகேட்ட படக்குழுவினர் நடிகை வேண்டும் என்றே ஆட மறுக்கிறார் என்று பேசிக்கொண்டே சென்றார்களாம்.
    நாடோடியாக இருந்த நடிகரின் புதுப்படங்கள் ஏதுவும் சரியாக ஓடவில்லையாம்.
    நாடோடியாக இருந்த நடிகரின் புதுப்படங்கள் ஏதுவும் சரியாக ஓடவில்லையாம். இதனால், தன்னை வைத்து ஹிட் கொடுத்த இயக்குனர் படத்தில் நடிக்க முடிவு செய்தாராம். இதற்காக நடிகையின் தேடல் விறுவிறுப்பாக நடைபெற்றதாம். இதில் முதல் சாய்ஸாக வாரிசு நடிகை பெயர் இடம்பிடித்ததாம். ஆனால், நடிகை அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டாராம்.

    இதனால், இயக்குனர் வேறு நடிகையை தேர்வு செய்ய, அவரும் அதிக சம்பளம் கேட்க, கடைசியாக நடிகர், பிரேமமான நடிகையை சிபாரிசு செய்திருக்கிறாராம். நடிகையும் வாய்ப்பு இல்லாததற்கு இதாவது கிடைத்ததே என்று சந்தோஷத்தில் இருக்கிறாராம்.
    சமீபத்தில் அறிமுகமாகி, குறுகிய காலத்தில் பிரபலமாகி விட்ட வாரிசு நடிகை, ‘நம்பர்-1’ நடிகைக்கு...
    சமீபத்தில் அறிமுகமாகி, குறுகிய காலத்தில் பிரபலமாகி விட்ட வாரிசு நடிகை, ‘நம்பர்-1’ நடிகைக்கு இணையாக சம்பளம் கேட்பது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறாராம்.

    சண்டை போடும் கோழி நடிகருடன் அவர் நடித்த புதிய படம் திரைக்கு வரட்டும். அதுவரை பொறுத்திருக்கலாம். படம் திரைக்கு வந்ததும், சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விடலாம் என்று திட்டவட்டமாக முடிவெடுத்து இருக்கிறாராம்.

    ஏறக்குறைய அவர் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்து விட்டார். வீரமான நடிகருடன்தான் இன்னும் இணையவில்லையாம். அதனால் அந்த வாரிசு நடிகையின் கவனம், நடிகரின் பக்கம் திரும்பியிருக்கிறதாம்!
    வீரமான நடிகை தற்போது தமிழ், இந்தி, தெலுங்கில் உருவாகி வரும் படத்தில் பிசியாக நடித்து வருகிறாராம்.
    வீரமான நடிகை தற்போது தமிழ், இந்தி, தெலுங்கில் உருவாகி வரும் படத்தில் பிசியாக நடித்து வருகிறாராம். மேலும், தமிழில் இரண்டு படங்களையும் கைவசம் வைத்திருக்கிறாராம். இந்நிலையில், தெலுங்கில் பெரிய ஹீரோ நடிக்கும் படத்தில் நடிகையை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

    ஆனால், இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகை இதுவரை சம்மதம் சொல்லவில்லையாம். கால்ஷீட் காரணமாக தயங்குகிறாரா? இல்லை அவரது கதாபாத்திரம் பற்றிய சந்தேகமா? என்று பரபரப்பாக செய்தி பரவுகிறதாம். மேலும் நடிகை வேண்டும் என்றே இப்படி செய்கிறார் என்றும் பேசி வருகிறார்களாம்.
    நான்கெழுத்தில் பெயரை கொண்ட வாரிசு நடிகர் தனது படம் திரைக்கு வருவதற்கு உதவும்படி, ஒரு தயாரிப்பாளரிடம் கேட்டாராம்.
    நான்கெழுத்தில் பெயரை கொண்ட வாரிசு நடிகர் தனது படம் திரைக்கு வருவதற்கு உதவும்படி, ஒரு தயாரிப்பாளரிடம் கேட்டாராம். வாரிசு நடிகர் உத்தரவாதம் அளித்ததன் பேரில், அந்த தயாரிப்பாளர் ஒரு பெரிய தொகையை கொடுத்தாராம். படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லையாம். கடனாக கொடுத்த தொகையை திருப்பி தரும்படி வாரிசு நடிகரிடம் அந்த தயாரிப்பாளர் கேட்க நான் உங்களுக்கு ஒரு படம் நடித்து கொடுக்கிறேன் என்று வாரிசு நடிகர், தயாரிப்பாளரை சமாதானப்படுத்தி இருக்கிறாராம்.

    இப்போது, வாரிசு நடிகர் சொன்னபடி நடித்து கொடுக்க மறுக்கிறாராம். தயாரிப்பாளர் தன்னை சந்திக்கிறவர்களிடம் எல்லாம், வாரிசு நடிகர் பற்றி புகார் செய்து வருகிறார்.
    பல வெற்றி படங்களை கொடுத்த பேய் இயக்குனர், தற்போது நடிகராகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறாராம்.
    பல வெற்றி படங்களை கொடுத்த பேய் இயக்குனர், தற்போது நடிகராகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறாராம். இவர் ஒரு புதுமுக நடிகரிடம் உன்னை வைத்து படம் எடுக்கிறேன் என்று கூறி, பல கோடிகளை முன்பணமாக வாங்கி இருக்கிறாராம். அந்த பணத்தை செலவு செய்துவிட்டு, படம் விரைவில் ஆரம்பிக்கிறேன் என்று நடிகரிடம் கூறி வேறு படத்தை தயாரிக்க சென்று விட்டாராம்.

    அந்த எதிர்பார்த்தளவிற்கு லாபம் பெறவில்லையாம். இதையடுத்து, சங்க தலைவரை வைத்து படம் இயக்க சென்று விட்டாராம். இதையெல்லாம் பொறுத்துக் கொண்ட புதுமுக நடிகர், அடுத்தது என்னை வைத்து தான் படம் இயக்குவார் என்று காத்துக் கொண்டிருந்தாராம்.

    ஆனால், இயக்குனரோ, மீண்டும் வேற நடிகரை வைத்து படம் இயக்க சென்று விட்டாராம். அந்த கதை, புதுமுக நடிகருக்கு உருவாக்கப்பட்ட கதையாம். இதையறிந்த நடிகர் இயக்குனர் மீது கோபப்பட்டு கேட்க, அதற்கு இயக்குனர் உன்னை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால் இன்னும் அதிக பணம் வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம்.
    தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களில் நடித்து வரும் வித்தக நடிகை, கதாநாயகியாகவும் வில்லியாகவும் நடித்து இருக்கிறாராம்.
    தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களில் நடித்து வரும் வித்தக நடிகை, கதாநாயகியாகவும் வில்லியாகவும் நடித்து இருக்கிறாராம். சமீபத்தில் 2 குழந்தைகளுக்கு தாயாகவும் நடித்து ஆச்சரியப்படுத்தினாராம். சில தெலுங்கு படங்களில், கவர்ச்சி நடனமும் ஆடியிருக்கிறாராம்.

    சமீபத்தில் அவர் கவர்ச்சி ஆட்டம் போட்ட ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பலரிடத்தில் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறாராம். இதனால், ஒரு பாடலுக்கு நடனம் ஆடலாம் என்று முடிவுக்கு வந்திருக்கிறாராம்.!
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் வீரமான நடிகை, சரித்திரமான படத்தில் நடித்து தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானாராம்.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் வீரமான நடிகை, சரித்திரமான படத்தில் நடித்து தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானாராம். இவர் ஒரு பாடலுக்கும் ஆடுவதை தவிர்த்து கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று குறிக்கோளாக இருந்து வந்தாராம்.

    தற்போது அந்த கொள்கையை மாற்றி இருக்கிறாராம். தெலுங்கில் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட சம்மதித்திருக்கிறாராம். நடிகைக்கு பட வாய்ப்பு குறைப்பதால் கொள்கையை மாற்றி இருப்பதாக பலரும் கூறி வருகிறார்களாம்.
    பீச் போராட்டத்தில் கலந்துக் கொண்டு வீரமான பெண் என்று மிகவும் பிரபலமானவர், பெரிய முதலாளி வீட்டிற்கு சென்றாராம்.
    பீச் போராட்டத்தில் கலந்துக் கொண்டு வீரமான பெண் என்று மிகவும் பிரபலமானவர், பெரிய முதலாளி வீட்டிற்கு சென்றாராம். அங்கு போராட்டத்தில் கலந்துக் கொண்டு பெற்ற நல்ல பெயரை கெடுத்துக் கொண்டாராம். அப்போது அவரை கிண்டல் செய்து பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்களாம்.

    வெளிவந்த அவர் தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகி நடிகையாக மாறியிருக்கிறாராம். இந்த நிலையில், அவரை மீண்டும் பெரிய முதலாளி வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்களாம். ஆனால், அவரோ மீண்டும் பெரிய முதலாளி வீட்டிற்கு வர மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.

    மீண்டும் பெரிய முதலாளி வீட்டிற்கு சென்றால், மீண்டும் அவரை கலாய்க்க ஆரம்பித்து விடுவார்கள் என்ற பயமாம்.
    ×