search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kolamaavu Kokila"

    தமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா நடித்து வரும் படத்திற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் சிறப்பு பாடல் ஒன்றை எழுதியுள்ளார். #Nayanthara #VigneshShivan
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `இமைக்கா நொடிகள்', `கொலையுதிர் காலம்', `கோலமாவு கோகிலா' அஜித்தின் விஸ்வாசம், தெலுங்கில் ஜெயசிம்ஹா, மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார்.

    இதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 6 பாடல்களுக்கும் அனிருத் இசையமைத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இருந்து `எதுவரையோ' என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் சிவகார்த்திகேயன் எழுதிய ‘கல்யாண வயசு’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

    அடுத்ததாக மூன்றாவது பாடலை வெளியிட இருக்கிறார் அனிருத். இந்த ‘ஒரே ஒரு...’ என்று தொடங்கும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதி இருக்கிறார். நாளை இரவு 7 மணிக்கு இந்த பாடலை அனிருத் வெளியிட இருக்கிறார்.



    விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில், நயன்தாராவிற்காக இந்த பாடலை அவர் எழுதியிருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #KolamaavuKokila #Nayanthara
    விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 62 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் யோகி பாபுவை, நடிகர் விஜய் பாராட்டியிருக்கிறார். #CoCo #YogiBabu
    நயன்தாரா அடுத்து நடிக்கும் கோலமாவு கோகிலா படத்துக்காக ஒரு பாடல் வெளியிடப்பட்டு பிரபலமாகி இருக்கிறது. யோகிபாபு நயன்தாராவிடம் காதலை சொல்வதை போல அமைந்திருக்கும் இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். 

    யோகிபாபு இந்த பாடல் பற்றி கூறியது ‘இந்தப் படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் மளிகைக் கடைக்காரராக நடித்துள்ளேன். படம் முழுக்க நயன்தாராவை சைட் அடித்துக் கொண்டே இருப்பேன். முன்பு ஒரு நடிகையுடன் பேருந்தில் ஆடி பாடுவது போல எடுத்தபோது அந்த நடிகை என்னை தொட்டு நடிக்க மறுத்துவிட்டார்.



    ஆனால் நயன்தாராவுக்கு பெரிய மனது என்று சொல்லும் யோகிபாபு, ஒரே நேரத்தில் அஜித், விஜய் என இருவருடனும் நடித்து வருகிறார். பாடலை விஜய் பார்த்துவிட்டு யோகிபாபுவை பாராட்டி இருக்கிறார். விரைவில் அஜித்திடமும் பாடலை காண்பிக்க உள்ளார் யோகிபாபு. #CoCo #YogiBabu #Nayanthara #Vijay

    இயக்குனர் விக்னேஷ் சிவன், தன்னுடைய திருமண ஆசையை வெளிப்படையாக சொல்லி, நயன்தாராவின் முடிவுக்காக காத்திருக்கிறார். #VigneshShivn #Nayanthara
    நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இருவரும் ஜோடியாக பல நாடுகளை சுற்றி வருகிறார்கள். சென்னையில் ஒரே வீட்டில் தங்குவதாகவும் கிசுகிசுக்கள் வந்தன.

    ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். இருவரும் நெருக்கமாக இருக்கும் படத்தை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் ‘எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சி டி’ என்ற பாடல் நேற்று வெளியானது. அனிருத் இசையில், சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில் வெளியான இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.



    இந்த பாடல் வரியான ‘எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சி டி’ என்று பதிவு செய்து, வெய்ட் பண்ணவா என்று கேள்வி கேட்டிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். மேலும் தங்கள் பெரியரின் முதல் எழுத்துடன் கூடிய தொப்பியை அணிந்து கொண்டிருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். #VigneshShivn #Nayanthara
    தமிழில் நம்பர் ஒன் நடிகை என்று பெயர் பெற்றிருக்கும் நயன்தாரா, தற்போது போதை மருத்து கடத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Nayanthara #COCO
    நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படத்தில் நயன்தாரா போதை மருந்து கடத்தும் பெண்ணாக நடிக்கிறார். அனிருத் அளித்திருக்கும் பேட்டியில் இதை சொல்லி இருக்கிறார். மேலும் அனிருத் கூறுகையில், ’ஒரு பெண் தன் வறுமையைப் போக்க போதை மருந்துக் கடத்தல் செய்து வாழலாம் என்று முடிவு செய்கிறார். என்ன ஆகிறது என்பதுதான் கதை.

    இதை நெல்சன், பிளாக் ஹியூமர் பாணியில் காமெடியாப் பண்ணியிருக்கார். நயன் எனக்கு நெருக்கமான தோழி. சமயத்தில் விருந்து மாதிரி சாப்பாடு சமைத்து அனுப்புவார். அவருக்கு என் இசை பிடிக்கும். ‘நான் உங்க பெரிய விசிறி என்று சொல்வார். அவங்க வாழ்க்கையில் அவ்வளவு ஏற்ற இறக்கங்கள்.



    ஆனால் இன்னும் முன்னணி கதாநாயகியாகவே இருக்கிறார் என்பது பாராட்டப்பட வேண்டிய வி‌ஷயம்’ என்று சொல்லியிருக்கும் அனிருத் விரைவில் மீண்டும் தனுஷுடன் இணைந்து ஒரு படம் பண்ணப்போகிறார். ஜனவரி மாதம் படம் துவங்க இருக்கிறது என்றும் கூறி இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன், நயன்தாராவுக்காக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். #CoCo #Nayanthara
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகராக அறிமுகமான சிவா சமீபத்தில் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருந்த நிலையில், தற்போது பாடலாசிரியராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். 

    நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோலமாவு கோகிலா’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் `கல்யாண வயசு' என்ற பாடல் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். இந்த பாடல் வருகிற 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

    இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியாகிய `எதுவரையோ' பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 



    `வேலைக்காரன்' படத்தை தொடர்ந்து `எஸ்.கே.13' படத்திலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #CoCo #Sivakarthikeyan #Nayanthara #KalyanaVayasu

    நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அடுத்த பாடல் குறித்த சர்ப்ரைஸ் வெளியாகி இருக்கிறது. #KolamaavuKokila #Nayanthara
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `இமைக்கா நொடிகள்', `கொலையுதிர் காலம்', `கோலமாவு கோகிலா' அஜித்தின் விஸ்வாசம், தெலுங்கில் ஜெயசிம்ஹா, மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார்.

    இதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 6 பாடல்களுக்கும் அனிருத் இசையமைத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் படத்தில் இருந்து `எதுவரையோ' என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் படத்தில் இருந்து அடுத்த பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 



    `கல்யாண வயசு' என்று துவங்கும் அந்த பாடலை புதுமுக பாடலாசிரியர் ஒருவர் எழுதியிருப்பதாகவும், அவர் என்பது சர்ப்ரைசாக வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை கண்டுபிடிக்க முடியுமா என்றும் படக்குழுவினர் புதிர் வைத்துள்ளனர். இந்த பாடல் வருகிற 17-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #KolamaavuKokila #Nayanthara
    ×