search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalyana Vayasu"

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் `கோலமாவு கோகிலா' படத்தின் விமர்சனம். #KolamavuKokilaReview #Nayanthara
    நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நயன்தாரா தனது அப்பா, அம்மா சரண்யா பொன்வண்ணன் மற்றும் தங்கை ஜாக்குலின் பெர்ணான்டசுடன் வாழ்ந்து வருகிறார். அவரது வீட்டிற்கு எதிரில் மளிகை கடை வைத்திருக்கும் யோகி பாபு, சாந்த சுபாவமுடைய நயன்தாராவை ஒருதலையாக காதலித்து வருகிறார்.

    குடும்ப பொறுப்பு காரணமாக சம்பளம் பத்தாமல் தவிக்கும் நயன்தாரா, முதலாளியின் தொல்லை காரணமாக வேறு வேலைக்கு செல்கிறார். இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு செல்லும் சரண்யா பொன்வண்ணனுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவருகிறது. அதை சரிசெய்ய முடியும் என்றும், அதற்கும் சில லட்சங்கள் தேவைப்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். 



    இதையடுத்து அவர்களுக்கு சொந்தமான இடத்தின் பத்திரத்தை வைத்து பணத்தை ரெடி பண்ண நயன்தாரா முயற்சி செய்கிறார். இந்த நிலையில், போதைப்பொருள் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். போலீசாரின் கெடுபிடியால் போதை பொருளை கடத்த முடியாமல் தவிக்கும் அந்த கும்பல் ஜாக்குலினை பிடித்து வைத்துக் கொண்டு, நயன்தாராவிடம் போதைப் பொருளை கொடுத்து ஒரு இடத்தில் கொண்டு கொடுக்க சொல்கிறது. ஜாக்குலினை காப்பாற்றுவதற்காக போதைப் பொருளை சரியான இடத்தில் கொண்டு சென்று சேர்க்கிறார்.

    இதையடுத்து தனது அம்மாவை காப்பற்ற பணம் தேவைப்படுவதால், போதைப் பொருளை கடத்த முடிவு செய்யும் நயன்தாரா அந்த கும்பலின் தலைவரிடம் பணம் வாங்குகிறார்.



    கடைசியில், இந்த போதைப் பொருள் கடத்தல் நயன்தாராவுக்கு எந்த மாதிரியான சிக்கல்களை ஏற்படுத்துகிறது? அந்த கும்பலை எப்படி சமாளிக்கிறார்? தனது அம்மாவை காப்பாற்றினாரா? யோகி பாபுவின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    தனது ஒவ்வொரு படத்தையும் தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா, இந்த படத்திலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு அமைதியான, அம்மாஞ்சியான தோற்றத்துடன் வந்து கில்லாடி வேலைகளை பார்க்கும் கதாபாத்திரத்தில் நயன்தாராவின் நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக யோகி பாபுவுடன் அவரது கதாபாத்திரம் வரும் காட்சிகள் ரசிர்களுக்கு துள்ளலை கொடுக்கிறது. 



    நயன்தாராவின் சாந்தத்தை பார்த்து காதலில் விழுந்த யோகி பாபு, நயன்தாராவின் மறுபக்கத்தை அறிந்து அதில் சிக்கிக் கொண்டதாக வரும் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். கல்யாண வயசு பாடலை பார்க்கவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. திரையரங்கில் அந்த பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

    சரண்யா பொன்வண்ணன் யதார்த்தமான கதாபாத்திரத்தில் வந்து ரசிக்க வைக்கிறார். ஜாக்குலினின் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. முதல் படம் போல இல்லாமல், ரசிகர்களை கவரும்படியாகவே ஜாக்குலின் நடித்திருக்கிறார். அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஹரிஷ் பேரிடி, சரவணன், மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், அறந்தாங்கி நிஷா என மற்ற கதபாத்திரங்களும் படத்திற்கு வலுவூட்டியிருக்கின்றன.



    தனது முதல் படத்திலேயே டார்க் காமெடி ஜானரில் ரசிகர்களை ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறார் நெல்சன் திலீப்குமார். அவருக்கு பாராட்டுக்கள். தனது அம்மாவை காப்பாற்ற போதை பெருள் கடத்தலில் ஈடுபடும் நயன்தாரா அதில் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி கதை நகர்கிறது. காமெடி கலந்த த்ரில்லர் படமாக திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. எனினும், படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருந்தால் படம் இன்னும் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். 

    அனிருத் இசையில் பாடல்கள் செம ஹிட்தான். திரையில் பார்க்கவும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `கோலமாவு கோகிலா' கொண்டாட்டம். #KolamavuKokilaReview #Nayanthara

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் `கோலமாவு கோகிலா' படத்தின் முன்னோட்டம். #CoCo #KolamavuKokila #Nayanthara
    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கோலமாவு கோகிலா. 

    நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கதையில் நயன்தாரா நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஹரிஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், அறந்தாங்கி நிஷா, ஆர்.எஸ்.சிவாஜி, நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - அனிருத், படத்தொகுப்பு - ஆர்.நிர்மல், ஒளிப்பதிவு - சிவக்குமார் விஜயன், கலை இயக்குனர் - ஏ.அமரன், ஸ்டில்ஸ் - சித்தராசு, ஆடை வடிவமைப்பு - அனு வர்தன், வீரா பாபு, மேக்கப் - ஷயீக் பாஷா தயாரிப்பு - சுபாஷ்கரன், தயாரிப்பு நிறுவனம் - லைகா புரொடக்‌ஷன்ஸ், எழுத்து, இயக்கம் - நெல்சன் திலீப்குமார்.



    தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #CoCo #KolamavuKokila #Nayanthara

    கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருபட்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படமும் அதேநாளில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #KolamaavuKokila #CoCo #Nayanthara
    நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக ‘கோலமாவு கோகிலா’ படம் ரிலீசாக இருக்கிறது. நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதேநாளில் தான் கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் 2 படமும் ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். #CoCo #KolamaavuKokila #Nayanthara


    நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், சமந்தாவும் படக்குழுவை வாழ்த்தியுள்ளார். #KolamaavuKokila #CoCo #Nayanthara
    நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், பாராட்டுக்களையும் பெற்றது. ஜூலை 5-ஆம் தேதி வெளியான இந்த டிரைலரை இதுவரை சுமார் 38 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர்.

    இந்த நிலையில், படத்தின் டிரைலரை பார்த்த நடிகை சமந்தா நயன்தாராவுக்கும், படக்குழுவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமந்தா தெரிவித்திருப்பதாவது,

    `இது கொஞ்சம் தாமதம் தான் என்பது எனக்கு தெரியும். கோலமாவு கோகிலா படத்தின் டிரைலர் அற்புதமாக இருக்கிறது. படத்தை திரையில் பார்க்க ஆவலோடு இருக்கிறேன். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். நயன்தாராவின் தைரியத்தை பாராட்டுகிறேன்' இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
    நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படம் போதை பொருள் கடத்தலை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. படத்தில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து `எதுவரையோ', `கல்யாண வயசு' என இரு பாடல்கள் வெளியாகி ஏகோபத்திய வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #CoCo #KolamaavuKokila #Nayanthara

    நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #KolamaavuKokila #CoCo #Nayanthara
    நயன்தாரா நடிப்பில் `இமைக்கா நொடிகள்' படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், அடுத்ததாக ‘கோலமாவு கோகிலா’ படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

    நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தணிக்கைக் குழுவில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 
    இந்த நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வருகிற ஜூலை 6-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து `எதுவரையோ', `கல்யாண வயசு' என இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #CoCo #KolamaavuKokila #Nayanthara

    நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #KolamaavuKokila #CoCo #Nayanthara
    நயன்தாரா நடிப்பில் `இமைக்கா நொடிகள்' விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், அடுத்ததாக ‘கோலமாவு கோகிலா’ படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

    நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட தணிக்கைக் குழு சோதனைக்கு அனுப்பப்பட்ட இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 
    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து `எதுவரையோ', கல்யாண வயசு என இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

    நயன்தாரா தற்போது `கொலையுதிர் காலம்', அஜித்துடன் விஸ்வாசம், சிரஞ்சீவியுடன் சயீரா நரசிம்ம ரெட்டி, நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார். விரைவில் அறிவழகன் இயக்கத்திலும், சர்ஜுன் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். #CoCo #KolamaavuKokila #Nayanthara

    தமிழ் சினிமாவில் பிசியான காமெடியனாக வலம் வரும் யோகி பாபு, `கோலமாவு கோகிலா' படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #YogiBabu #Nayanthara
    தனது உருவம், தலைமுடி மற்றும் கமெண்டுகளால் தமிழ் சினிமா ரசிகர்களின் செல்லப்பிள்ளையாகி விட்டார் யோகி பாபு. இவர் திரையில் வந்தாலே முன்னணி நடிகர்களுக்கு இணையான வரவேற்பு திரையரங்குகளில் கிடைக்கிறது. மிக வேகமாக 50 படங்களை கடந்து 100வது படத்திலும் நடித்து வருகிறார். 

    இவரும், நயன்தாராவும் நடித்திருந்த `கோலமாவு கோகிலா' படத்தின் `கல்யாண வயசு' எனும் பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. நயன்தாராவை யோகி பாபு காதலிக்க கேட்டு கெஞ்சுவது போல அமைந்த இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார்.



    `கோலமாவு கோகிலா' படத்தில் நடிகர் யோகிபாபுவின் அசாத்திய நடிப்பைப் பார்த்து வியந்த நயன்தாரா, இந்தப் படத்திலும் யோகி பாபுவை நடிக்க வைக்க சிபாரிசு செய்துள்ளார். அடுத்து நயன்தாரா நடிக்க உள்ள பேய் படம் ஒன்றில் யோகி பாபுவை காமெடியனாக நடிக்க வைக்க இயக்குனரிடம் கூறி இருக்கிறார். யோகி பாபுவின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிந்தாலும் நயன்தாராவுக்காக சம்மதித்துவிட்டாராம். #YogiBabu #Nayanthara

    விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 62 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் யோகி பாபுவை, நடிகர் விஜய் பாராட்டியிருக்கிறார். #CoCo #YogiBabu
    நயன்தாரா அடுத்து நடிக்கும் கோலமாவு கோகிலா படத்துக்காக ஒரு பாடல் வெளியிடப்பட்டு பிரபலமாகி இருக்கிறது. யோகிபாபு நயன்தாராவிடம் காதலை சொல்வதை போல அமைந்திருக்கும் இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். 

    யோகிபாபு இந்த பாடல் பற்றி கூறியது ‘இந்தப் படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் மளிகைக் கடைக்காரராக நடித்துள்ளேன். படம் முழுக்க நயன்தாராவை சைட் அடித்துக் கொண்டே இருப்பேன். முன்பு ஒரு நடிகையுடன் பேருந்தில் ஆடி பாடுவது போல எடுத்தபோது அந்த நடிகை என்னை தொட்டு நடிக்க மறுத்துவிட்டார்.



    ஆனால் நயன்தாராவுக்கு பெரிய மனது என்று சொல்லும் யோகிபாபு, ஒரே நேரத்தில் அஜித், விஜய் என இருவருடனும் நடித்து வருகிறார். பாடலை விஜய் பார்த்துவிட்டு யோகிபாபுவை பாராட்டி இருக்கிறார். விரைவில் அஜித்திடமும் பாடலை காண்பிக்க உள்ளார் யோகிபாபு. #CoCo #YogiBabu #Nayanthara #Vijay

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன், நயன்தாராவுக்காக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். #CoCo #Nayanthara
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகராக அறிமுகமான சிவா சமீபத்தில் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருந்த நிலையில், தற்போது பாடலாசிரியராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். 

    நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோலமாவு கோகிலா’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் `கல்யாண வயசு' என்ற பாடல் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். இந்த பாடல் வருகிற 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

    இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியாகிய `எதுவரையோ' பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 



    `வேலைக்காரன்' படத்தை தொடர்ந்து `எஸ்.கே.13' படத்திலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #CoCo #Sivakarthikeyan #Nayanthara #KalyanaVayasu

    நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அடுத்த பாடல் குறித்த சர்ப்ரைஸ் வெளியாகி இருக்கிறது. #KolamaavuKokila #Nayanthara
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `இமைக்கா நொடிகள்', `கொலையுதிர் காலம்', `கோலமாவு கோகிலா' அஜித்தின் விஸ்வாசம், தெலுங்கில் ஜெயசிம்ஹா, மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார்.

    இதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 6 பாடல்களுக்கும் அனிருத் இசையமைத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் படத்தில் இருந்து `எதுவரையோ' என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் படத்தில் இருந்து அடுத்த பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 



    `கல்யாண வயசு' என்று துவங்கும் அந்த பாடலை புதுமுக பாடலாசிரியர் ஒருவர் எழுதியிருப்பதாகவும், அவர் என்பது சர்ப்ரைசாக வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை கண்டுபிடிக்க முடியுமா என்றும் படக்குழுவினர் புதிர் வைத்துள்ளனர். இந்த பாடல் வருகிற 17-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #KolamaavuKokila #Nayanthara
    ×