search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kitchen"

    • இப்பொழுது புதுமையான பல சமையலறை உபகரணங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக வந்திருக்கின்றன.
    • சாதத்தை வடித்து சாப்பிடுபவர்களுக்கென்றே கஞ்சியை தனியாக வடிப்பது போன்று குக்கர்களும் வந்திருக்கின்றன.

    இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் வீட்டு வேலைகளில் பங்கெடுத்து செய்வதோடு வேலைகளை எளிதாக முடிக்க விருப்பப்படுகிறார்கள். இவர்களுக்காகவே இப்பொழுது புதுமையான பல சமையலறை உபகரணங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக வந்திருக்கின்றன என்றால் சற்று யோசிக்கத் தோன்றுகிறது அல்லவா. என்னதான் சமையல் வேலைகளில் ஆண்கள் பங்கெடுத்தாலும் மாவு அரைப்பது, சப்பாத்தி போடுவது போன்ற வேலைகளை செய்யத் தயங்குவார்கள். அதுபோன்ற வேலைகளையும் எளிதாக செய்வதற்கென்றே புதுமையான உபகரணங்களை பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன…

    * இப்பொழுது வந்திருக்கும் மாவு அரைக்கும் கிரைண்டர்கள் இடத்தையும், நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும் விதத்தில் இருக்கின்றன என்றால் நம்ப முடிகின்றதா. ஆமாம்., இந்த புதுமையான கிரைண்டர்கள் இடத்தை அடைக்காதவாறு மிகச் சிறிய இடத்திலும் வைத்துக் கொள்வது போல் மோட்டருக்கு மேலேயே மாவரைக்கும் பாத்திரமானது இருப்பது போல் வடிவமைத்திருக்கிறார்கள்.. இதில் அரிசி மற்றும் உளுந்தைப் போட்டுவிட்டு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடியை போட்டு மூடி கிரைண்டரை இயக்க வேண்டும்.. இடையில் தண்ணீர் தேவைப்பட்டால் மூடியின் மேற்புறத்தில் இருக்கும் சிறிய துளை வழியே தண்ணீரை ஊற்றிக் கொள்ளலாம். அதேபோல் மாவு அரைத்து முடித்தபிறகு நாம் கைகளால் மாவை அள்ள வேண்டிய அவசியமே இல்லை..

    இந்த கிரைண்டரில் மாவரைக்கும் பாத்திரம் சுற்றாமல் அதன் உள்ளிருக்கும் கற்கள் மட்டும் சுற்றுவதுபோல் வடிவமைத்திருக்கிறார்கள்..இந்த தொழில்நுட்பத்தின் மூலம் அரைக்கும் மாவானது சூடாவது தவிர்க்கப்படுகின்றது..இதனால் இட்லி கூடுதல் மிருதுவாக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகின்றது..மாவரைக்கும் பாத்திரத்திலேயே கீழ்ப்புறத்தில் மாவு வெளியேறுவதற்காக ஒரு துளையானது கொடுக்கப்பட்டுள்ளது.. மாவு அரைத்து முடித்தபிறகு அந்த துளையின் மூடியை அகற்றி பாத்திரத்தில் இருக்கும் மாவை கைகளில் தொடாமலேயே மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றிவிட முடியும்.. அதேபோல் அந்த மாவு பாத்திரத்தை கழுவுவதற்கும் மேற்புறத்தில் தண்ணீரை ஊற்றி கிரைண்டரை இயக்கினால் அது நன்றாக சுத்தமாகி அந்த தண்ணீரும் துளை வழியாக வெளியேறிவிடும். சாதாரண கிரைண்டர்கள் இயங்கும் அந்த நேரத்திலேயே மிகவும் அருமையாக மாவை அரைத்துத் தரும் இந்த புதுமையான கிரைண்டரை விரும்பாதவர்கள் இருக்க முடியாது.ஆண்கள்,உடல்நிலை முடியாதவர்கள் மட்டுமல்லாது வயதானவர்களும் இந்த கிரைண்டரை எளிதாக உபயோகிக்கலாம்..

    *சாதத்தை வடித்து சாப்பிடுபவர்களுக்கென்றே கஞ்சியை தனியாக வடிப்பது போன்று குக்கர்களும் வந்திருக்கின்றன.இந்த குக்கர் மூடியில் மேற்புறத்தில் தண்ணீர் குழாய் போன்று கொடுக்கப்பட்டுள்ளது. மூடியின் உட்புறம் நீளமான ஸ்ட்ரா போன்ற அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.இதன் வழியாக சாதத்தில் இருக்கும் கஞ்சி மூடியின் வெளிப்புறம் கொடுக்கப்பட்டுள்ள குழாயின் வழியாக வெளியேறிவிடும். இந்தக் குழாயின் மேற்புறத்தில் ஒரு சிறிய திருகு மூடி ஒன்று இருக்கின்றது. இந்த திருமுடியை திறப்பதன் மூலம் சாதத்தில் இருக்கும் கஞ்சி வெளியேற்றப்படுகிறது.. நம் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் இந்த குக்கர்களை விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள்..

    *வீட்டிலேயே நம் வசதிக்கேற்ப எண்ணையை அரைத்துக் கொடுக்கும் இயந்திரங்களும் மிகவும் கச்சிதமான அளவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன அரைக்கிலோ வேர்க்கடலையைக் கூட இந்த இயந்திரத்தில் போட்டு சுத்தமான எண்ணெயை எடுக்க முடியும் என்பதுதான் இதன் தனிச்சிறப்பு.. இந்த எண்ணெய் இயந்திரத்தின் மேற்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தில் அரைக்க வேண்டிய எள், வேர்க்கடலை,தேங்காய்,பாதாம், சூரியகாந்தி விதை என எவற்றை வேண்டுமானாலும் ஒருமுறை அரைப்பதற்கு அரை கிலோ என்ற அளவில் போடமுடியும்.இயந்திரத்தின் உள்ளே செல்லும் இவை எண்ணை தனியாகவும் சக்கை தனியாகவும் பிரித்து வெளியேற்றப்படுகின்றது.நம் கண்ணெதிரிலேயே மிகவும் சுத்தமாகவும் நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடியதுமான இந்த எண்ணை அரைக்கும் இயந்திரம் ஒவ்வொருவரது சமையலறையிலும் இருக்கவேண்டிய தவிர்க்கமுடியாத உபகரணம் என்று சொல்லலாம்.வாரத்திற்கு ஒரு முறை நம் வீட்டிற்குத் தேவையான எண்ணெயை நாமே அரைத்துக் கொள்ளலாம். அழகான வடிவமைப்புடன் இருக்கும் இந்த இயந்திரம் இடத்தை அடைக்காமல் இருப்பதுபோல் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    *சாதாரண டேபிள் டாப் கிரைண்டரின் வடிவத்தில் சப்பாத்தி தேய்த்துக் கொடுக்கும் இயந்திரம் விற்பனையில் உள்ளது என்றால் நம்ப முடிகின்றதா? இந்த இயந்திரத்தில் சப்பாத்தி தேய்க்கும் கல் மற்றும் பூரிக்கட்டையும் கொடுக்கப்பட்டுள்ளது. சப்பாத்தி தேய்க்கும் கல்லின் மீது வட்ட வடிவில் உறுதியான, மெலிதான பிளாஸ்டிக் தாள்கள் இருக்கின்றன.சப்பாத்தி உருண்டையை உருட்டி இரண்டு பிளாஸ்டிக் தாள்களின் இடையில் வைத்து அதன்மீது பூரி கட்டையை பிரஸ் செய்து இந்த இயந்திரத்தை இயக்கினால் பூரி கட்டையில் இருக்கும் இரண்டு உருளைகளும் எதிரெதிர் திசையில் இயங்கி சப்பாத்தியை மிகவும் மெல்லியதாக திரட்டித் தருகின்றன..ஐந்து நபர்கள் வரை இருக்கும் குடும்பத்திற்கு இந்த சப்பாத்தி திரட்டும் இயந்திரம் மிகவும் உபயோகமானதாக இருக்கும்.இப்பொழுது சொல்லுங்கள் இந்த இயந்திரம் வீட்டில் இருந்தால் ஆண்களும் எளிதாக பூரி மற்றும் சப்பாத்தி செய்ய முடியும் தானே?

    *சமையலறையில் சமைக்கும் பொழுது ஃபேனை இயக்கினால் கேஸ் அடுப்பு அணைந்து விடும்.. எனவே பெரும்பாலான நேரங்களில் வேர்த்து விறுவிறுத்து தான் எந்த ஒரு வேலையையும் செய்ய முடிகின்றது. இதனால் சீக்கிரமாகவே சோர்வு ஏற்பட்டு விடுகின்றது..இதுபோன்ற சோர்வு ஏற்படாமல் புத்துணர்ச்சியுடன் சமையலறையில் இருப்பதற்காகவே பிரத்தியேகமாக ஃபேன் களை வடிவமைத்திருக்கிறார்கள்.. இந்தப் ஃபேன்களை அடுப்பின் அருகிலேயே வைத்து இயக்கினாலும் அவை அடுப்பை அணைக்காமல் அதே நேரத்தில் நமக்கும் குளுமையான காற்றை தரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் உயரத்தை நமக்கு ஏற்றவாறு ஏற்றி இறக்கிக் கொள்ள முடியும்.சீலிங் ஃபேனிற்கு மாற்றாக வந்திருக்கும் இந்த ஃபேன்களை சமையலறையில் மட்டுமல்ல எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்

    * ஏசி பொருத்த முடியாத இடங்களிலும் வைத்துக் கொள்வது போல் போர்ட்டபிள் ஏசியை வடிவமைத்து விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த சிறிய வகை ஏசியை சமையலறை, படுக்கை அறை, அலுவலக அறை என எங்கு வேண்டுமானாலும் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் நம்முடனேயே எடுத்துச் செல்ல முடியும்.சிறிய ஏர் கூலர் வடிவில் இருக்கும் இந்த போர்ட்டபிள் ஏசி அதிகப்பட்ச குளிர்ச்சியை கொடுக்கின்றது.. இந்த ஏசியின் அடிப்புறத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்திச் செல்வதற்கு வசதியாக சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

    • கியாஸ் சிலிண்டருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை மட்டுமே ஆயுட்காலம் உண்டு.
    • காலாவதியான சிலிண்டரில் கியாசை மீண்டும், மீண்டும் நிரப்பி வினியோகம் செய்து வருகின்றன.

    காலாவதியான கியாஸ் சிலிண்டரை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். இதில் காலாவதியான சிலிண்டர் என்பது என்னவென்றால் நமது வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் கியாஸ் சிலிண்டருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை மட்டுமே ஆயுட்காலம் உண்டு.

    ஆனால் அதை மாற்றாமல் சில கியாஸ் நிறுவனங்கள் காலாவதியான சிலிண்டரில் கியாசை மீண்டும், மீண்டும் நிரப்பி வினியோகம் செய்து வருகின்றன. இதனால் கியாஸ் கசிவு ஏற்பட்டு ஆபத்தை விளைவிக்கும். அதனை கண்டுபிடிப்பது ரொம்ப சுலபமானது. சிலிண்டரில் மேல் பகுதியில் மூன்று கம்பிகள் இருக்கும். அது கழுத்து பகுதியாகும்.

    அதில் ஒரு கம்பியின் உள்பகுதியில் காலாவதியாகும் மாதம் ஆங்கிலத்திலும், வருடம் எண்களிலும் பொறிக்கப்பட்டிருக்கும். அதாவது ஆங்கிலத்தில் ஏ.பி.சி.டி. என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 'ஏ' என்றால் மார்ச் மாதம் (முதல் காலாண்டு), 'பி' என்றால் ஜூன் மாதம் (இரண்டாவது காலாண்டு), 'சி' என்றால் செப்டம்பர் மாதம் (மூன்றாவது காலாண்டு), 'டி' என்றால் டிசம்பர் மாதம் (நான்காவது காலாண்டு) ஆகும். உதாரணத்திற்கு ஏ- 16 என்று சிலிண்டரில் பொறிக்கப்பட்டிருந்தால் மார்ச்-2016 என்பதை குறிக்கிறது. இதை வைத்து காலாவதியான சிலிண்டரை கண்டுபிடித்துவிடலாம்.

    • பழுதடைந்த மின்சாதனங்களை உபயோகப்படுத்துவதை தவிர்ப்பதே நல்லது.
    • ஒரு சாதனம் பழுதாவதற்கு முன்பே, அதன் இயக்கத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    மின்சாதனங்களை பாதுகாப்பான முறையில் கையாளாதபோது, ஆபத்துகளை சந்திக்க நேரிடலாம். அவற்றை கவனமாக பயன்படுத்துவதற்கான சில வழிமுறைகள் இதோ…

    தேவையற்ற நேரங்களில் மின்சாதனங்களை, இணைப்பில் இருந்து துண்டித்துவிட வேண்டும். இதன் மூலம் அவை அதிக வெப்பமடைந்து விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். மின்சாதனங்களை பயன்படுத்தும்போது மின் கசிவு ஏற்படுவதை உணர்ந்தால், உடனே மின்னியல் வல்லுனரை அணுகி சரி செய்ய வேண்டும்.

    பழுதடைந்த மின்சாதனங்களை உபயோகப்படுத்துவதை தவிர்ப்பதே நல்லது. மின் உபகரணங்களை குறிப்பிட்ட காலவரையறையில் சர்வீஸ் செய்ய வேண்டியது முக்கியம். ஒரு சாதனம் பழுதாவதற்கு முன்பே, அதன் இயக்கத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இதனால் சிறிய மாற்றத்தையும் கண்டுபிடித்து, ஆரம்பத்திலேயே சரி செய்ய முடியும். புதிய உபகரணம் வாங்குவதற்கான செலவுகளையும் குறைக்க முடியும். மின்சாதனப் பொருட்களை வாங்கும்போது, அதில் குறிக்கப்பட்டிருக்கும் மின்சார பயன்பாட்டு அளவுகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

    இது ஒரு மணி நேரத்தில் அவற்றால் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவாகும். இதை கருத்தில் கொண்டு மின்சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம், மின்சாரத்தை சேமித்து மின்கட்டணத்தைக் குறைக்க முடியும். வெளியூருக்கு செல்லும்போது மெயின் சுவிட்சை அணைத்து விட்டு செல்வது சிறந்தது.

    இதனால் எதிர்பாராத மின்கசிவு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். தரமான தயாரிப்புக் கொண்ட மின் உபகரணங்களை பயன்படுத்துவதன் மூலம் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதோடு, அவை சேதமடையாமல் நீடித்து உழைக்கவும் செய்யும். சேதமடைந்த மின்கம்பிகளை அவ்வப்போது சரிபார்த்து மாற்றி விடுவது நல்லது.

    மின்சாதனங்களை சரியான கால இடைவெளியில் பழுதுநீக்கம் செய்வதன் மூலம் ஆபத்துகளை தவிர்த்து, அவற்றின் ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம். பழுதான மின் உபகரணங்களை தனிப்பட்ட முறையில், நீங்களாகவே சரி செய்ய முயற்சிப்பது ஆபத்தானது.

    • பிளாஸ்டிக் பொருட்களை அடுப்பின் அருகில் வைத்திருக்கக் கூடாது.
    • சமைக்கும்போது, நைலக்ஸ் புடவை கட்டிக்கொண்டு சமைக்கக் கூடாது.

    வீட்டில் பெண்கள் அதிகமாக நேரத்தை செலவிடும் இடம் சமையலறை. பரபரப்பாக சமையல் செய்வது, மற்ற வேலைகளை முடித்த களைப்போடு சமையல் வேலைகளில் ஈடுபடுவது என அவர்கள் மேற்கொள்ளும் வேலைக்கு ஏற்றவாறு, அந்த அறையின் அமைப்பு மற்றும் வசதிகள் இருக்க வேண்டும். தண்ணீர், மின்சாரம், நெருப்பு இவை மூன்றையும் ஒன்றாக பயன்படுத்தும் இடம் என்பதால், சமையல் அறையில் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமானது. அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

    தரை:

    பெரும்பாலான வீடுகளில் 'டைல்ஸ்' பதிக்கப்பட்ட தரை உள்ளது. இதில், எந்த வகையான திரவங்கள் சிந்தினாலும் எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. எதிர்பாராமல், அதில் கால் வைக்க நேர்ந்தால் வழுக்கி விழும் அபாயம் உள்ளது. எனவே, கீழே சிந்தும் திரவங்களை அவ்வப்போது துடைத்து, சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கண்ணாடி பாட்டில்கள் ஏதேனும் உடைந்தால், அதைத் துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

    தீ அணைக்கும் கருவி:

    சமையல் அறையில், சிறிது கவனக்குறைவாக இருந்தாலும், பர்னர்கள் அல்லது பிளம்பீட் டெசர்ட் ஆகியவற்றில் இருந்து தீப்பிழம்புகள் வந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சமைக்கும் பாத்திரத்தில் திடீரென தீப்பற்ற நேர்ந்தால், அதில் தண்ணீர் ஊற்றக் கூடாது. இது தீயை மேலும் அதிகரிக்கக்கூடும். பாத்திரத்தை ஒரு தட்டை போட்டு மூடி, அதன் மீது சிறிது பேக்கிங் சோடாவைப் போடலாம். இதனால், தீ உடனடியாக கட்டுக்குள் வரும். சமையல் அறையில், தீயணைக்கும் கருவியை வைத்திருப்பதும், அதைக் கையாளத் தெரிந்திருப்பதும் அவசியம்.

    சமையல் உபகரணங்கள்:

    கத்தி, அரிவாள், அரிவாள்மனை போன்ற கூர்மையான பொருட்களை சமையல் அறையின் பாதுகாப்பான இடத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டும். பாத்திரங்களில் திருகுகள் உள்ள கைப்பிடிகள் தளர்வாக இருப்பதைக் கவனித்து உடனே அவற்றை சரி செய்வதன் மூலம், விபத்துகளைத் தவிர்க்கலாம்.

    தினசரி கவனம்:

    தினமும் இரவில் குக்கரின் கேஸ்கட், வெயிட் முதலியவற்றை நன்றாக சுத்தம் செய்வதுடன், குக்கர் மூடியில் உள்ள சேப்டி வால்வையும் சரிபார்ப்பது அவசியம். அடுப்பை அணைப்பதோடு, எரிவாயு சிலிண்டரையும் மூடிய பின்னரே சுத்தம் செய்ய வேண்டும். குழம்பு தாளிக்கும் போது, குமிழ் வைத்த மூடியால் மூடியபடி தாளித்தால், கடுகு போன்ற பொருட்கள் தெறித்து விழுந்து சூடுபடாமல் இருக்கும். சமைக்கும்போது, நைலக்ஸ் புடவை கட்டிக்கொண்டு சமைக்கக் கூடாது. இது எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டது.

    மேலும், குழந்தைகள் அடுப்பிற்கு அருகில் சென்று கேஸ் குழாய்களை திருப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை அடுப்பின் அருகில் வைத்திருக்கக் கூடாது. இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு ரெகுலேட்டரும், அடுப்பின் வால்வும் மூடி உள்ளதா என்பதை சரி பார்ப்பது அவசியம். பாத்திர அலமாரிகளோ, மற்ற பொருட்களோ அடுப்பிற்கு மேல் பகுதியில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதை எடுக்க முயலும் போது, ஆடையில் தீப்பிடிக்கும் வாய்ப்புள்ளது. ஆடையில் நெருப்பு பற்றினால், உடனே உடலைச் சுற்றி கம்பளியை போர்த்தி, நெருப்பை அணைக்கலாம்.

    • 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் இருந்ததையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டது.
    • புதிதாக சமையல் கூடம் எதுவும் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்படவில்லை.

    பூதலூர்:

    தமிழ்நாட்டில் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன.தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கட்டிடங்கள், சுற்றுப்புறங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இதன் அடிப்படையில் பல்வேறு பள்ளி களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க தயார் நிலையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பூதலூர் ஒன்றியம் திருக்காட்டுப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த தொடக்கப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாய நிலையில் இருந்ததையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டது.

    பள்ளிக்கு மிக அருகில் பிரதான சாலை அமைந்துள்ளதால் எந்த நேரமும் பயணிகள் பஸ்கள, இரண்டு சக்கர வாகனங்கள், அதிகளவில் சென்று கொண்டிருக்கும் இதனால் சுற்றுச்சுவரை உடனடியாக கட்டித்தர வேண்டும் என்று பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி திருக்காட்டுப்பள்ளி நூல் நிலையத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வந்த தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மனு கொடுத்தனர்.அப்போது அவர் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விட்டது விரைவில் கட்டப்படும் என்று பெற்றோர் ஆசிரியர் கழகத்தின ரிடம்உறுதியளித்தார்.

    இரண்டு மாதங்கள் ஆன பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் சூழ்நிலையில் இதுவரை சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க பள்ளியில் சத்துணவு சமைப்பதற்கான சமையல் கூடம் இடித்து அகற்றப்பட்டுள்ளது.புதிதாக சமையல் கூடம் எதுவும் கட்டுவ தற்கான பணிகள் துவங்கப்படவில்லை. நாளை பள்ளிகள் திறக்கப்படும் போது சத்துணவு திறந்தவெளியில் சமைக்கப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இது பெற்றோர்கள் மனதில் ஒரு அச்சத்தை தோற்றுவித்துள்ளது.பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர்பாதுகாப்பாக வந்து செல்வதற்கும், மாற்று ஏற்பாடுகள் மூலம் பாதுகாப்பான முறையில் சத்துணவு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    சமையல் கூடத்திலிருந்து பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் விதமாக பெற்றோர்களிடம் கல்விச்சீராக சமையல் கூடத்திற்கு தேவையான எவர்சில்வர் மற்றும் மண் பாத்திரங்கள் பெறப்பட்டது.
    ஈரோடு:

    தமிழகத்தில் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகள் உள்கட்டமைப்பு வசதியுடன் இருந்து வருகிறது. இதற்காக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஈரோட்டில் ஒரு தலைமையாசிரியர் முயற்சியால் சமையல் கூடத்திற்கு ஐ.எஸ்.ஓ தர சான்றிதழ் கிடைத்துள்ளது.

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 1061 மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் சமையல் கூடம் சுகாதாரமற்ற முறையில், பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்துவதை கண்டு தலைமை ஆசிரியர் மாலா அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து சமையல் கூடத்தை அழகுப்படுத்தும் முயற்சியில் அவர் இறங்கினார். இதையடுத்து சமையல் கூடம் முழுவதும் டைல்ஸ் கொண்டு செப்பனிட்டு வர்ணம் அடிக்கப்பட்டது.

    மேலும் பிளாஸ்டிக் பொருட்களை சமையல் கூடத்திலிருந்து முற்றிலும் ஒழிக்கும் விதமாக பெற்றோர்களிடம் கல்விச்சீராக சமையல் கூடத்திற்கு தேவையான எவர்சில்வர் மற்றும் மண் பாத்திரங்கள் பெறப்பட்டது.

    மேலும் மாணவிகளுக்கு சுகாதார முறையில் சமைக்கும் பொருட்டு ஆர்.ஓ தண்ணீர் பொருத்தி, அந்த நீரில் மட்டுமே சமைக்க தலைமை ஆசிரியர் மாலா நடவடிக்கை எடுத்தார். மேலும் காய்கறிகளை சமைப்பதற்கு முன்பு மஞ்சள் நீரால் கழுவியும், சமைக்கும் சமையலர்கள் நகங்கள் வெட்டி இருக்க வேண்டும், வளையல் மற்றும் மோதிரங்கள் அணிந்து இருக்கக்கூடாது என்றும் முடி உணவில் விழாமல் இருக்க தலையில் தொப்பி அணிந்து மாணவிகளுக்கு சமையல் செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார்.

    ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற கருங்கல்பாளையம் மாநகராட்சி பள்ளி சமையல் கூடம்

    அதை முறையாக சமையலர்கள் கடைப்பிடிக்கிறார்களா? என்பதை அறிய ஆசிரியர் குழு ஒன்றை நியமித்தார் தலைமை ஆசிரியர். மேலும் பள்ளியிலேயே ஆர்கானிக் காய்கறி தோட்டம் அமைத்து அதில் விளையும் காய்கறிகளை வாரத்தில் ஒரு நாள் சமையலுக்கு பயன்படுத்தி வரப்படுகிறது. மேலும் மாணவிகள் சாப்பிட பயன்படுத்தும் தட்டுகள் வெந்நீரில் சுத்தம் செய்து தரப்படுகிறது. மேலும் அவர்களுக்கு வெந்நீர் மட்டுமே கொடுக்க உத்தரவிட்டார். மேலும் இவை அனைத்தும் முறையாக தவறாமல் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை அறிய 2 சிசிடிவி கேமராவை சமையல் கூடத்தில் பொருத்தி தனது அறையிலிருந்து தலைமை ஆசிரியர் கண்காணித்து வருகிறார். மாணவிகளின் பெற்றோர்களும் எந்த நேரமும் சமையல் அறையை சென்று பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே ஆய்வுக்கு வந்த சத்துணவு ஒருங்கிணைப்பாளர்கள் கொடுத்த உற்சாகத்தில் சமையல் கூடத்திற்கு என ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் வேண்டி விண்ணப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பள்ளியின் சமையல் கூடத்தில் 4 முறை ஆய்வு செய்த ஐ.எஸ்.ஓ தரச்சான்று அதிகாரிகள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை என்பதாலும், பணியாளர்களின் நேர்த்தியாலும், உணவின் சுவையாலும், மாணவிகளின் சுகாதாரத்தில் அக்கறை செலுத்துவதாலும் கடந்த மாதம் இந்த பள்ளியின் சமையல் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ சான்றிதழ் வழங்கினர்.

    தமிழகத்தில் முதன்முறையாக மாநகராட்சி பள்ளி சமையல் கூடத்திற்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் கிடைக்க ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் தலைமையாசிரியர் மாலா நன்றியை தெரிவித்துக்கொண்டார். சமையல் கூடம் மட்டுமின்றி பள்ளியில் ஒவ்வொரு கட்டிடங்களுக்கும் தமிழகத்தின் வீர மங்கைகள் பெயரும், பள்ளியின் நேரத்தில் ஏற்படும் மன அழுத்ததை போக்க வகுப்பு அறைகளின் முன் தூரி கட்டி விளையாடவும், மாணவிகளுக்கு இரும்புச்சத்து கிடைக்க முருங்கை சூப் வழங்குதல், டிஜிட்டல் நூலகம் அமைத்தல் என இந்த மாநகராட்சி பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராகவே திகழ்ந்து வருகிறது.



    இந்த ஏர்ஃப்ரையர்கள் இன்னும் சில மாற்றங்களோடு ஸ்டெயின்லஸ் ஸ்பீலினால் செய்யப்பட்டு அவன் வடிவில் வந்திருப்பது இப்பொழுது புதுவரவு என்று சொல்லலாம்.
    வீட்டில் குழந்தைகளுக்கு சிப்ஸ், சிக்கன்-65, ஃப்ரன்ச் ஃப்ரைஸ் போன்ற எண்ணெயில் பொரிக்கும் உணவுகள் மிகவும் பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல் நமக்கும் வடை, தந்தூரி சிக்கன், உருளைக்கிழங்கு டிக்கா என எண்ணெயுடன் மிகவும் நெருக்கமான உணவுகளை சாப்பிடுவது பிடிக்கும். ஆனால் உடல் நலத்தைத் கருத்தில் கொண்டு பிடித்தவற்றை விரும்பிச் சாப்பிடவும் முடியாமல், சாப்பிடாமல் இருக்கவும் முடியாமல் திண்டாடுகின்றோம்.

    இந்த திண்டாட்டத்திற்கு ஒரு பெரிய குட் பை சொல்வது போல் வந்தவை தான் ஏர்ஃப்ரையர்கள். இந்த ஏர்ஃப்ரையர்கள் இன்னும் சில மாற்றங்களோடு ஸ்டெயின்லஸ் ஸ்பீலினால் செய்யப்பட்டு அவன் வடிவில் வந்திருப்பது இப்பொழுது புதுவரவு என்று சொல்லலாம்.

    இந்த ஏர்அவன்கள் ஒரு எண்ணெய் டின் போல சமயம் மைக்ரோ அவன் போன்ற ேதாற்றத்தில் இருக்கின்றன.

    இவற்றில் உணவுப் பொருட்களை பொரிப்பது மட்டுமல்லாமல் டோஸ்ட்டும் செய்ய முடியும்.

    ப்ராயிலிங் ரோஸ்ட் செய்ய முடியும்.

    பேக்கிங் செய்யும் வசதியும் உள்ளது.

    சமைத்த உணவுகளை மறுபடியும் சூடுபடுத்திக் கொள்ளும் வசதி உள்ளது.

    டீ ஹைட்ரேட்டிங் செய்து கொள்ள முடியும். அதாவது ஆப்பிள், வாழைப்பழம், வாழைக்காய் போன்றவற்றை துண்டுகளாக இதனுள் அறுத்து வைத்தோமென்றால் அவை சிப்ஸ் போலக் கிடைப்பதே டீ ஹைட்ரேட்டிங் ஆகும்.

    மொறு மொறுப்பாக வறுக்க முடியும்.

    தந்தூரி, ஷவர்மா போன்றவற்றை கடையில் வாங்குவது போலவே அதே ருசியுடன் இந்த ஏர்ஃப்ரையர் அவனில் செய்ய முடியும்.

    இதற்கு முன்பு வந்த ஏர்ஃப்ரையர் மாடலில் ஒரு சிறிய குடும்பத்திற்கு உணவைப் பொரிக்க முடியுமென்றால் இப்பொழுது வந்திருக்கும் இந்த அவன் மாடலில் ஒரு பெரிய குடும்பத்திற்கே உணவைப் பொரிக்குமளவிற்கு வசாலமாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இந்த ஏர்ஃப்ரையரின் கதவு கண்ணாடியால் செய்யப்பட்டு மேலிருந்து கீேழ திறப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதவில் பொருத்தப்பட்டிருக்கும் கைப்பிடியானது உறுதியாக உள்ளது.

    ஏர்ஃப்ரையரின் உட்புறம் தகுந்த இடை வெளியில் வைத்துக் கொள்வது போல இரண்டு சதுர வடிவத்தட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் நாம் பொரிக்க மற்றும் வறுக்க வேண்டிய காய்கறிகளை வைத்து தேவைப்பட்டால் அதன் மேல் சிறிதளவு எண்ணெயை ப்ரஷ் கொண்டு தடவலாம். இந்த இரண்டு தட்டுகளுக்குக் கீழே ட்ரிப்பிங் ட்ரே அதாவது மேலே வைக்கப்பட்ட தட்டிலிருந்து ஒழுகும் மாசாலா உணவுத்துகள் மற்றும் எண்ணெயானது இந்தத் தட்டில் வந்து சேர்வதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. சமைத்து முடித்ததும் இந்த ட்ரிப்பிங் ட்ரேயை வெளியே எடுத்து சுலபமாகக் கழுவி விடலாம்.

    இத்துடன் ஸ்டெயின்லஸ் ஸ்டீலினால் செய்யப்பட்ட சுழலக்கூடிய கூடை ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூடையில் போடப்படும் பொருளானது அனைத்து பக்கத்திலும் சமமாக சமைக்கப் படுகின்றது. குறிப்பாக ஃப்ரன்ச் ஃப்ரைஸ், ஃபிஷ் ஃபிங்கர், காலி ஃப்ளவர் மன்ச் சூரியன், நக்கட்ஸ், சிக்கன் விங்ஸ் போன்றவை மிகவும் மொறுகலாகவும், ருசியாகவும் கடையில் வாங்குவது போன்ற தோற்றத்திலும் கிடைப்பது அருமை என்றே சொல்லலாம்.

    ஏர்ஃப்ரையரின் வெளிபுறத்தில் ஃப்ரைபேக், ப்ராயில், ஹீட், டீ ஹைட்ரேட்டிங் என தனித்தனியே டிஜிட்டல் பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதே போல் நேரத்தை கூட்டுவதற்கும் குறைப்பதற்கும், சூட்டை குறைப்பதற்கும், கூட்டுவதற்கும் பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நமக்கு விருப்பமான உணவுகளை தேர்வு செய்து தேவையான நேரத்தை தேர்வு செய்து சமைத்து கொள்ளலாம்.

    சமைக்கும் நேரத்தை தேர்வு செய்த பிறகு இடையிலேயே ஏர்ஃப்ரையரைத் திறந்து சமைக்கும் பொருளை புரட்டிப் போட்டும் சமைக்கலாம். இந்த ஏர்ஃப்ரையரில் கொடுக்கப்பட்டிருக்கும் தட்டுகள் மற்றும் ரொடேடிங் கூடை என அனைத்தையும் டிஷ் வாஷரில் கழுவுவதற்கு ஏதுவாக வடிவமைத்து இருக்கிறார்கள். சூடான காற்றானது சமைக்கக்கூடிய பொருளின் மீது பட்டு உணவைச் சமைப்பதால் எண்ணெயில் பொரிப்பது போன்ற சுவையை இந்த ஏர்ஃப்ரையர்களால் நமக்குத் தரமுடிகிறது.

    சமைக்க கூடிய எந்த உணவிற்கும் எண்ணெயானது மிக மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுவதால் நம் உடலில் சேரக்கூடிய கெட்ட கொழுப்பு குறித்து பயம் கொள்ளத் தேவையில்லை. கடையில் கிடைப்பது போலவே சுவை இருப்பதால் குறைந்த செலவில் ஆரோக்கியமாக நம் வீட்டிலேயே தயாரித்துக் கொள்ள முடிகின்றது.

    சிறிய அளவில் இருப்பதால் நாம் செல்லும் இடங்களுக்கு எடுத்துச் செல்வது எளிது. மொத்தத்தில் மிக ஆரோக்கியமான சமையலறை உபகரணம் என்று இதைச் சொல்லலாம்.
    பிரஷர் குக்கரை அதன் காலாவதி தேதிக்கு பின்னரும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு பயன்படுத்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    வேலைக்குச் செல்லும் பெண்கள் முதல் வீட்டை நிர்வகித்து வரும் இல்லத்தரசிகள் வரை அனைவருக்கும் உதவியாக இருப்பது பிரஷர் குக்கர். பெண்களுக்கு ‘பிரஷர்’ ஏறாமல், சமையலை எளிதாக முடிப்பதற்கு உதவும் பிரஷர் குக்கரை சரியான முறையில் பராமரிக்க வேண்டியது முக்கியம்.

    பிரஷர் குக்கரில் உணவு சமைக்கும்போது 90 முதல் 95 சதவிகித ஊட்டச்சத்துக்கள் வீணாகாமல் கிடைப்பதாக இத்தாலியின் ‘ஜேர்னல் ஆப் புட் சயின்ஸ்' எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

    பிரஷர் குக்கரின் வகைகள்:

    அலுமினியம், காப்பர், எஸ்.எஸ்.ஸ்டீல், டைட்டானியம் என பல வகையான உலோகங்களில் பிரஷர் குக்கர்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட பிரஷர் குக்கரை உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது.

    பிரஷர் குக்கரை பராமரிக்கும் முறைகள்:

    பிரஷர் குக்கரில் பயன்படுத்தும் ‘கேஸ்கட்’ எனும் ரப்பர் வளையத்தை, உபயோகப்படுத்தாதபோது குக்கரில் இருந்து கழற்றி, குளிர் சாதனப் பெட்டியின் பிரீஸரில் வைக்கலாம். இந்த வசதி இல்லாதவர்கள் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ‘கேஸ்கட்’டைப் போட்டு வைக்கலாம். இதன் மூலம்  ‘கேஸ்கட்' விரைவாக சேதம் அடைவதைத் தடுக்க முடியும். ஆறு மாதம் அல்லது வருடத்திற்கு ஒரு முறை கேஸ்கட்டை அவசியம் மாற்ற வேண்டும்.

    பிரஷர் குக்கரின் மூடியில் இருக்கும் துவாரங்களில் ஏற்படும் அடைப்பை, சிறிய ஊசியின் உதவியால் நீக்கி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சமையல் முடிந்த பின்பு, குக்கரில் சமைத்த உணவை வேறு பாத்திரத்தில் மாற்றி விட்டு சுத்தமாக கழுவி உலர வைக்க வேண்டும். வெயிலில் 10 நிமிடம் வரை உலர வைப்பது சிறந்தது.

    பிரஷர் குக்கரில் சமைக்கும் போது, அதில் பாதி அல்லது முக்கால் பாகம் தான் சமைக்கும் உணவுப்பொருள் இருக்க வேண்டும். முழு கொள்ளளவு வரை இருக்குமாறு சமைக்கக் கூடாது. குக்கரை மூடும் போதே ‘விசில்’ போடக்கூடாது. நீராவி நன்றாக வெளிவர ஆரம்பித்த பிறகே அதில் விசிலைப் பொருத்த வேண்டும். இதன் மூலம் குக்கர் சீராக இயங்குவதோடு நீண்ட நாள் உழைக்கும்.

    பிரஷர் குக்கரில் நேரடியாக சமைப்பதைத் தவிர்த்து, உள்ளே ஒரு எவர் சில்வர் பாத்திரத்தை வைத்து உணவு சமைப்பதே நல்லது. சமைத்து முடித்ததும் குக்கரின் அழுத்தம் முற்றிலும் அடங்கிய பின்னர் தான் திறக்க வேண்டும். பிரஷர் குக்கரில் இருக்கும் கைப்பிடிகளில் உள்ள திருகுகள் துருபிடிக்காமல் இருப்பதற்கு அதனை மாதம் ஒரு முறை கழற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

    திருகுகள் கழன்று வராமல் சரியாகப் பொருந்தி இருக்கிறதா என்பதையும் அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ள வேண்டும். பிரஷர் குக்கரை அதன் காலாவதி தேதிக்கு பின்னரும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு பயன்படுத்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    சமையல் வேலையை முடிந்தவரை எளிமையாக்கிக் கொள்ள வேண்டும். காலை வேளையில் எளிமையான உணவு வகைகளை மட்டுமே தயார் செய்ய வேண்டும்.
    பெண்கள் நேரத்தை அதிகமாக செலவிடும் இடங்களில் சமையல் அறையும் ஒன்று. சமையல் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதால், அன்றைய நாளில் முடிக்க வேண்டிய மற்ற வேலைகளிலும், பாதிப்பு ஏற்படுகிறது. திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இதனைத் தவிர்க்க முடியும். அதற்கான வழிகளை இங்கு பார்ப்போம்.

    சமையல் அறையில் உள்ள பொருட்களை சரியான முறையில் அடுக்கி வைக்க வேண்டும். பயன்படுத்தி முடித்ததும் மீண்டும் அவற்றை உரிய இடத்தில் வைப்பதன் மூலம் எந்த பொருள், எந்த இடத்தில் இருக்கிறது என்பதை எளிதாக அறிய முடியும்.

    அடிக்கடி பயன்படுத்தும் வாணலி, குக்கர், கரண்டி போன்ற பொருட்களை கைக்கு எட்டும் தூரத்தில் இருக்குமாறு வைக்கலாம். சமையல் எண்ணெய், உப்பு, தாளிப்பு பொருட்கள் ஆகியவற்றை எளிதாக எடுக்கும் வகையில் வைத்திருப்பது நல்லது.

    ஒரு வாரத்துக்கான சமையலை முன்பே திட்டமிட்டு பட்டியல் தயாரித்துக்கொள்ளலாம். அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் உணவு தயாரிப்பது நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு உதவும்.

    சமையல் வேலையை முடிந்தவரை எளிமையாக்கிக் கொள்ள வேண்டும். காலை வேளையில் எளிமையான உணவு வகைகளை மட்டுமே தயார் செய்ய வேண்டும்.

    வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி சில வேலைகளை முன்னேற்பாடாக செய்து கொள்ளலாம். பூண்டு தோலுரித்து வைக்கலாம். இஞ்சி - பூண்டு விழுது தயாரிக்கலாம். புளியை ஊறவைத்து, வடிகட்டி வைக்கலாம். இவற்றை குளிர் சாதன பெட்டியில் பாதுகாத்து வைப்பதன் மூலம் அந்த வாரம் முழுவதும் பயன்படுத்த முடியும்.

    ஒவ்வொரு வேலைக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்துக்குள் அதை முடிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் நிறைய வேலைகளைச் சுலபமாகச் செய்ய முடியும்.

    மேற்கண்ட வழிகளை கடைப்பிடிப்பதன் மூலம், ஒரு நாளில் நீண்ட நேரம் சமையல் அறையிலேயே கழிக்காமல் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். அந்த நேரத்தில் புத்தகம் படிப்பது, திறன்களை வளர்த்துக்கொள்வது போன்ற பயனுள்ள வகையில் செலவழிக்கலாம்.

    ஒரு சிலிண்டரில் B.21 என்று போட்டிருக்கிறது என்று வைத்து கொள்வோம். இதில் B என்பது இரண்டாம் காலாண்டையும், 21 என்பது 2021 ஆண்டையும் குறிக்கிறது.
    இன்று கியாஸ் சிலிண்டர் இல்லாத வீடுகளே இல்லை என்று ஆகி விட்டது. அனைவரின் வீடுகளிலும் கியாஸ் அடுப்பு இடம் பிடித்து உள்ளது. கியாஸ் அடுப்புக்கு பயன்படுத்தும் சிலிண்டரின் ஆயுள் காலத்தை ஒவ்வொரு குடும்ப பெண்களும் தெரிந்து கொள்வது நல்லது. அது பற்றி பார்ப்போம்:-

    நாம் பயன்படுத்தும் சமையல் சிலிண்டரின் ஆயுள் காலமும் அதில் குறிக்கப்பட்டே நமக்கு கிடைக்கிறது. அது மேலிருக்கும் 3 வட்டவடிவ கைப்பிடியை தாங்கி நிற்கும் மூன்று பட்டையான கம்பிகள் இருக்கிறதல்லவா? அதில் உட்பக்கம் பார்த்தால் சிலிண்டரின் ஆயுட்காலம், காலாவதியாகும் தேதி போட்டிருக்கும். அதை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்..

    அதில் ஒரு வருடத்தை நான்காக பிரித்து ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு எழுத்தை கொடுத்திருப்பார்கள். அதாவது முதல் காலாண்டிற்கு A எனவும், இரண்டாம் காலாண்டிற்கு B எனவும், மூன்றாம் காலாண்டுக்கு C..இப்படி மொத்தம் நான்காக A,B,C,D எனப்பிரித்து காலாவதியாகும் ஆண்டையும் குறிப்பிட்டிருப்பார்கள்.

    உதாரணமாக ஒரு சிலிண்டரில் B.21 என்று போட்டிருக்கிறது என்று வைத்து கொள்வோம். இதில் B என்பது இரண்டாம் காலாண்டையும், 21 என்பது 2021 ஆண்டையும் குறிக்கிறது.

    ஜனவரி, பிப்ரவரி, மார்ச் முதல் காலாண்டு A

    ஏப்ரல், மே, ஜூன் இரண்டாம் காலாண்டு B

    ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மூன்றாம் காலாண்டு C

    அக்டோபர், நவம்பர், டிசம்பர் நான்காம் காலாண்டு D

    உதராணமாக B-12 என்று போட்டிருந்தால், இரண்டாம் காலாண்டு ஜூன் முடிய 2012 என்று பொருள்படும்.

    அதுபோலவே தங்களுடைய சமையல் சிலிண்டரில் இருப்பதையும் ஒரு முறை பார்வையிட்டு சரியானதுதானா என்பதை சோதித்துக்கொள்ளுங்கள். ஒருவேளை முந்தைய வருடங்களாக இருந்தாலோ முந்தைய மாதங்களாக குறிக்கப்பட்டிருந்தாலோ அந்த சமையல் எரிவாயு சிலிண்டரை திருப்பி தந்துவிட்டு நடப்பு தேதியிட்ட, நடப்பாண்டிலிருக்கும் சிலிண்டரை பெற்றுக்கொள்ளுங்கள். அதுபோலவே பெற்றுக்கொண்ட சிலிண்டரை பாதுகாப்பான முறையில் திறந்து பழகிக்கொள்ள வேண்டும்.

    மேல் மூடியை அதில் இணைக்கப்பட்டுள்ள கயிற்றை நம்மை நோக்கி வருமாறு ஒரு கையில் இழுத்து வைத்துக் கொண்டு, மறு கையில் அம்மூடியை மேலே இழுத்து மூடியை அகற்றலாம்.
    பெண்களே இப்போதுதான் கிச்சன் பக்கம் முதன் முதலாகபோகிறீர்கள் என்றால் உங்களுக்கு நிறையவே தயக்கம் வரும். அந்த தயக்கத்தை விரட்ட சில டிப்ஸ்…
    பெண்கள் படிப்பு, வேலை என்று இறங்கிவிட்டதால் சமையல் அறை அவர்களுக்கு கொஞ்சம் தூரமாகிவிட்டது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் சமைக்கப் பழகுவதும், திருமணத்திற்குப் பிறகு சமைக்கப் படிப்பவர்களும் ஏராளம். பல பெண்கள் சமையல் கற்றுக் கொள்வதற்காக பயிற்சி வகுப்புகளுக்கு கூட செல்கிறார்கள்.

    பெண்கள் இப்படி மாறிவிட்டதால், ஆண்களுக்கும் சமைத்துப் பழகிக் கொண்டால்தான் நல்லது என்ற நிலை வந்துவிட்டது. குடும்பத்தினரை விட்டு தூரமாக இருந்து பணி செய்பவர்களும் தன் கையால் சமைத்து சாப்பிட வேண்டிய சூழலும் பெருகி இருக்கிறது.

    எது எப்படியோ… நீங்கள் இப்போதுதான் கிச்சன் பக்கம் முதன் முதலாகபோகிறீர்கள் என்றால் உங்களுக்கு நிறையவே தயக்கம் வரும். அந்த தயக்கத்தை விரட்ட சில டிப்ஸ்…

    * என்ன சமைக்கப் போகிறோம் என்பதை முதலில் முடிவு செய்து விடுங்கள். அதற்கு தேவையான பொருட்களையும் பட்டியலிடுங்கள். பிறகு தோலை உறிக்க வேண்டியது, வெட்டி துண்டுகளாக்க வேண்டியது, அரைத்து பக்குவப் படுத்த வேண்டியது போன்ற வேலைகளை செய்து விடுங்கள். அதன்பிறகு பிறகு அடுப்பை பற்ற வையுங்கள்.

    * உதவிக்கு ஏற்கனவே சமையல் அனுபவம் உள்ளவர்களையோ அல்லது சமையல் புத்தகங்களையோ பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உதவிக்கு புத்தகமோ, ஆட்களோ இல்லாவிட்டால் கூட உங்கள் மீது நம்பிக்கை வைத்து களத்தில் இறங்கி விடுங்கள்.

    * நம்பிக்கையுடன் சமைத்து விட்டு வாயில் வைத்துப் பார்க்கும்போதுதான் உப்பு, உறைப்பு கூடியிருப்பது தெரியவரும். கவலையே படாதீர்கள். நேரமும், அனுபவமும் சிறந்த ஆசிரியர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, தொடர்ந்து சமைத்துப் பாருங்கள். தவறுகளை மெள்ள மெள்ள திருத்திக் கொள்ளலாம்.

    * சமையலுக்கு முக்கியமானது பொருட்களின் அளவு தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எது எது தேவை என்பதைப்போலவே அவற்றை எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் மறக்கக்கூடாது. அதற்காக கரண்டி, கப் மற்றும் பாத்திரங்களின் அளவுகளை ஞாபகத்தில் வைத்திருப்பதன் மூலம் ஒவ்வொன்றின் அளவையும் மாற்றிவிடாமல் பயன்படுத்த முடியும்.

    * முதன் முதலாக சமைக்கும்போது எளிதாக சமைக்க முடிந்ததும், குறுகிய நேரங்களில் சமைக்கக் கூடியதுமான குழம்புகளை வைத்துப் பழகுங்கள்.

    அப்புறமென்ன! சீக்கிரமே நீங்களும் நளபாகனாக-நளபாகியாக மாறிவிடுவீர்கள்.
    மின்சாரத்தை மிச்சம் பிடித்து என்ன கோட்டையா கட்டப் போகிறோம் என மெத்தனமாக கேட்கிறோம். ஆனால் மின் ஆற்றலை சேமிப்பது நமக்கு மட்டுமல்ல, நமது நாட்டுக்கே நல்லது.
    தேவையே இல்லாத நேரத்திலும் வீட்டில் மின் விசிறி சுற்றும், மின் விளக்கு எரியும். இதை நாம் கண்டுகொள்வதே இல்லை. மின்சாரத்தை மிச்சம் பிடித்து என்ன கோட்டையா கட்டப் போகிறோம் என மெத்தனமாக கேட்கிறோம். ஆனால் மின் ஆற்றலை சேமிப்பது நமக்கு மட்டுமல்ல, நமது நாட்டுக்கே நல்லது.

    மின்சாரத்தை சேமிப்பதன் மூலம் காற்று மாசை குறைத்து சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். ஏனெனில் இரண்டு சாதாரண கார்கள் வெளியேற்றும் கார்பன்-டை ஆக்சைடை விட, ஒரு வீட்டின் மின்சார பயன்பாட்டால் அதிகமான கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறும். பொதுவாக ஒரு வீட்டின் மொத்த மின் பயன்பாட்டில் பிரிட்ஜ், ஏ.சி., மின்விளக்குகளுக்கு அதிகம் செலவாகிறது.

    ஏ.சி பொருத்தப்பட்டுள்ள அறையை முறையாக மூடி வைக்க வேண்டும், அதில் இடைவெளி இருந்தால் அதிக மின்சாரம் செலவாகும். ஆகவே இதைத் தவிர்க்க வேண்டும். சுவிட்சுகளும், அவற்றை நாம் பயன்படுத்தும் முறையும் கூட மின் ஆற்றலை வீணாக்கும் வகையில் அமைந்துவிடும். எனவே இவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.

    வீட்டின் மின் பயன்பாட்டில் கிட்டத்தட்ட 20 சதவீதம் ஏ.சி.க்கு செலவாவதால் ஏ.சி. எந்திரத்தின் பயன்பாட்டை முறைப்படுத்துதல் நல்லது. ஏ.சி.யின் ‘அவுட்டோர் யூனிட்’டை மரத்தடி போன்ற நிழலான இடத்தில் வைத்தால் 10 சதவீதம் அளவில் மின் ஆற்றலை சேமிக்க அது உதவும். வீட்டை கிழக்கு, மேற்காக அமைப்பதன் மூலமும், வீட்டைச் சுற்றி மரங்களை வளர்ப்பதன் மூலமும், பசுமைக் கூரை அமைப்பதன் மூலமும், மென்மையான, ஒளிரும் நிற பெயிண்ட்டை வீட்டின் வெளிச் சுவர்களில் பூசுவதன் மூலமும் மின் ஆற்றலை சேமிக்கலாம்.

    அதே போன்று பிரிட்ஜையும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமான குளிர் நிலவும்படி பிரீசர்களை வைத்திருத்தல் நல்லதல்ல. கூடுமான வரையில் பிரிட்ஜை அடிக்கடி மூடி திறப்பதைக் குறைத்து கொள்ள வேண்டும். நொடிக்கொரு முறை பிரிட்ஜை மூடித் திறந்தால் மின் ஆற்றல் வீணாகும்.

    பிரிட்ஜுக்கும் சுவருக்கும் இடையே போதிய இடைவெளி இருப்பது அவசியம். இதனால் பிரிட்ஜின் மின்சாரத் தேவை குறைய வாய்ப்புள்ளது. பிரிட்ஜின் கதவு நன்கு இறுக்கமாக மூடி இருக்க வேண்டும். அதில் இடைவெளி இல்லாமல் இருப்பது அவசியம்.

    வாஷிங் மெஷினைப் பொறுத்தவரை எப்போதும் முழுமையாக பயன்படுத்த வேண்டும். அதாவது அதன் மேக்ஸிமம் லோடு அளவுக்கு துணிகள் இடம் பெற வேண்டும். டிடர்ஜெண்ட் பவுடர் தேவையான அளவு போட வேண்டும். மிக அழுக்கான துணிகளுக்கு மட்டுமே சுடுநீரைப் பயன்படுத்த வேண்டும். எனவே வீடுதோறும் அனைவரும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசுவை தடுப்போம்.
    ×