search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Introduction"

    • மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டது.
    • பேஷன் வடிவமைப்பு அனைவராலும் மிகவும் விரும்பப்படும் துறையாக மாறி வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இந்த ஆண்டு புதிய பாடப்பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இதுகுறித்து கல்லூரியின் செயலர் எம்.விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, இயக்குநர் பிரபு ஆகியோர் கூறியதாவது:-

    மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரியில் இந்த ஆண்டு இளநிலை பிரிவுகளில் பி.எஸ்.சி.சி.எஸ், செயற்கை நுண்ணறிவு, பி.எஸ்.சி. ஆடை வடிவமைப்பு, பேஷன் டெக்னாலஜி ஆகிய புதிய படிப்புகள் சேர்க்கப்பட்டன. ஆடை வடிவமைப்புத் துறை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. எனவே ஆடை வடிவமைப்பாளர்கள் இந்தத் துறையில் தொழில் நுட்ப அறிவு, நடைமுறை திறன்களை பெறுவது அவசியமாகிறது. சமீப காலங்களில் பேஷன் வடிவமைப்பு அனைவராலும் மிகவும் விரும்பப்படும் துறையாக மாறி வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் அதிகளவில் வேலை வாய்ப்புகளை நிர்ணயிக்கும் படிப்பாக இது உள்ளது. சுய வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளும் வகையிலும் இந்த படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது.
    • இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் நன்கொடை மற்றும் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக, பிரத்யேகமாக கியூ.ஆர்.கோடு அடங்கிய பலகை தயாரிக்கப்பட்டது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் நன்கொடை மற்றும் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக, பிரத்யேகமாக கியூ.ஆர்.கோடு அடங்கிய பலகை தயாரிக்கப்பட்டது.

    இந்த பலகை நேற்று திருச்செங்கோடு பாரத வங்கி தலைமை மேலாளரால், கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவர் தங்கமுத்து, கோவில் உதவி ஆணையர் ரமணிகாந்தன் மற்றும் அறங்காவலர்கள் முன்னி லையில் வழங்கப்பட்டு, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் சுரேஷ், திருச்செங்கோடு சரக ஆய்வர் நவீன்ராஜா மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரை அருகே புதிய ரக வாழைக்கன்று அறிமுகம் செய்யப்பட்டது.
    • பேப்ஸ் இயக்குநர் அருள், சிபோ பழனிவேல் உள்பட தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    சிறுமலை வாழை உற்பத்தியை அதிகப்படுத்தும் விதத்தில் வாழை புத்தாக்க திட்டத்தில் புதிய ரக திசுகள் சார் வாழைக்கன்று அறிமுகம் வாடிப்பட்டியில் நடந்தது. கிரட்செயலாளர் அழகேசன் தலைமை தாங்கினார். நபார்டுமாவட்ட மேலாளர் சக்தி பாலன் முன்னிலை வகித்தார். கிரட் இயக்குநர் கண்மணி வரவேற்றார். மாவட்ட மேலாளர் பாலசந்திரன், சிறுமலை வாழை புத்தாக்க திட்டத்தின் கீழ் திசுக்கள் சார் முதல் வாழை கன்றை சிறுமலை காய்கறி உற்பத்தியாளர்கள் நிறுவன இயக்குநர் கீதாவுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் பேப்ஸ் இயக்குநர் அருள், சிபோ பழனிவேல் உள்பட தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். சீனிவாசன் நன்றி கூறினார்.

    • பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.396-ல், ரூ10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
    • 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்ட அஞ்சல் கோட்ட கண்கா ணிப்பாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் டாடா ஏ.ஐ.ஜி ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.396-ல், ரூ10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

    18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.விண்ணப்ப படிவம், அடையாள, முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகித பயன்பாடுமின்றி, தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன், விரல் ரேகை மூலம், வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் சிறப்பம்சங்களாக ரூ.10லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு மற்றும் விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகளில் உள்நோயாளி செலவு களுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரையும், புறநோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.30ஆயிரம் வரையும், விபத்தினால் மரணம், ஊனம், பக்கவா தம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு ரூ.1 லட்சம் வரையும், விபத்தினால் மருத்துவமனையில் அனும திக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகை ஒரு நாளைக்கு ரூ.1000 வீதம் 10 நாட்களுக்கும், விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினரின் பயண செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.25,000 வரையும், விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரியைகள் செய்ய ரூ.5,000 வரையும் காப்பீடு வழங்கப்படுகிறது.

    பொது மக்கள் அனை வரும் பரமத்தி வேலூர், பொத்தனூர், பரமத்தி, ஜேடர்பாளையம், பாண்ட மங்கலம் உள்ளிட்ட பல்வேறு அஞ்சலகங்கள், தபால்காரர்கள் மூலம் இந்த குழு விபத்து காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன்பெறுலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

    • மதுரை கோட்டத்தில் பயண சீட்டு சோதனை செய்ய கையடக்க கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    • இந்த நடைமுறை அமலுக்கு வந்தது பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை

    தமிழகத்தில் முதல்முறையாக மதுரை கோட்டத்தில் முன்பதிவு ரெயில் பெட்டிகளில் டிக்கெட் சோதனை செய்வதற்காக, கையடக்க கருவிகள் நடைமுறைக்கு வந்து உள்ளன. இதன் மூலம் டிக்கெட் பரிசோதகர்கள் முன்பதிவு பெட்டிகளில் பயண சீட்டுகளை சுலபமாக சோதனை செய்ய இயலும்.

    இதற்கு முன்பு டிக்கெட் பரிசோதகர்கள், அச்சிடப்பட்ட பட்டியலை பார்த்து பயணச்சீட்டுகளை சோதனை செய்வார்கள். தற்போது இந்த பட்டியல் கணினி மயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதற்காக மதுரை கோட்டத்தில் பயண சீட்டு பரிசோதகர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டு உள்ளது.

    மதுரை கோட்டத்தில் முதல் கட்டமாக தேஜாஸ், பாண்டியன் ஆகிய விரைவு ரெயில்களில் மேற்கண்ட கருவிகள், பரிசோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. தென்னக ரெயில்வே அளவில் முதன்முறையாக மதுரை கோட்டத்தில் பெண் பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் பயண சீட்டுகளை எளிதாக சரிபார்க்க முடியும். அடுத்தபடியாக காலியாக உள்ள இருக்கைகள், படுக்கைகள் ஆகியவற்றை பயணிகள் முன்பதிவு தரவு நிலையத்திற்கு உடனடியாக அனுப்ப முடியும். இதன் மூலம் வழியில் உள்ள ரெயில் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள், மேற்கண்ட காலியிடங்களை முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும். மதுரை ரெயில்வே கோட்டத்தில் டிக்கெட் பரிசோதனைக்காக நவீன கையடக்க கருவிகள் நடைமுறைக்கு வந்தது, பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சேவை செய்வதற்காக 2 ரோபோக்கள் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. #ChennaiAirport #Robot
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சேவை செய்வதற்காக 2 ரோபோக்கள் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த உள்ளது. 3 மாத சோதனைக்கு பிறகு அதை நிரந்தரமாக செயல்படுத்தப்படும் என சென்னை விமான நிலைய ஆணையக அதிகாரி தெரிவித்தார்.



    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு வரும் பயணிகள் பாதுகாப்பு சோதனை, விமான டிக்கெட் பரிசோதனை, உடைமைகள் சோதனை செய்யும் இடங்கள், விமான நிலையம் உள்ளே சென்றதும் விமானங்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள விமான சேவை மையம் செயல்பட்டது.



    அதற்கு பதிலாக சென்னை விமான நிலையத்தில் ரோபோவை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக பெங்களூருவில் இருந்து 2 ரோபோக்கள் பரிசோதனைக்காக 3 மாதங்களுக்கு வாடகை அடிப்படையில் பெறப்பட்டு உள்ளன.

    அந்த ரோபோக்கள் சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையம் வருகை மற்றும் புறப்பாடு முனையங்களில் 3 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட உள்ளது.

    இந்தநிலையில் நேற்று சுதந்திர தினவிழா என்பதால் அந்த ரோபோக்கள் மூலம் விமான நிலையம் வரும் பயணிகளுக்கு சுதந்திர தினவிழா வாழ்த்து தெரிவித்து, இனிப்புகள் வழங்க அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

    சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சந்திரமவுலி தலைமையிலான அதிகாரிகள் இதை தொடங்கி வைத்தனர். அந்த ரோபோக்கள் விமான நிலையம் வந்த மாணவ-மாணவிகள், குழந்தைகள், பயணிகளை வரவேற்று அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி, சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தது.

    இதை கண்டு மகிழ்ச்சி அடைந்த பயணிகள் மற்றும் குழந்தைகள் பதிலுக்கு ரோபோக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    இது குறித்து சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சந்திரமவுலி கூறியதாவது:-

    தற்போது அந்த ரோபோக்களில் பயணிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் விமானத்தில் செல்ல எந்த கவுண்ட்டருக்கு செல்லவேண்டும். விமான நேரங்கள், பாதுகாப்பு சோதனை, விமான டிக்கெட் பரிசோதனை நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யும் பணி நடைபெறுகிறது. இன்னும் 3 நாட்களில் அந்த பணிகள் முடிவடைந்து விடும். அதன்பிறகு ரோபோக்கள் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படும்.

    இந்த ரோபோக்களுக்கு பயணிகள் மத்தியில் உள்ள வரவேற்பு மற்றும் அதன் செயல்பாடுகளை பொறுத்து சென்னை உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகளுக்கு சேவை செய்ய இவை நிரந்தரமாக பயன்படுத்தப்படும்.

    இந்திய விமான நிலைய ஆணையகத்தின் கீழ் செயல்படும் விமான நிலையங்களில் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சேவை செய்ய ரோபோக்கள் பயன்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×