search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காப்பீட்டு"

    • ஆன்லைனில் பாலிசி வாங்குவது மிகவும் எளிதானது.
    • சில நேரங்களில் சிக்கலானதாக மாறலாம்.

    ஆயுள் காப்பீடு எவ்வளவு அவசியம் என்பது கடந்த காலங்களைவிட இப்போது அதிகமாகவே உணரப்பட்டிருக்கிறது.

    ஆயுள் காப்பீடு சார்ந்த திட்டங்களில் இப்போதுதான் வளர்ந்துவரும் பாலிசியாக 'டேர்ம் இன்சூரன்ஸ்' இருக்கிறது. குறைவான பிரீமியம் செலுத்தினால் போதும். அதிக கவரேஜ் கிடைக்கும். பாலிசிதாரருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் மட்டுமே கிளைம் செய்து கொள்ள முடியும். அப்படி இல்லை என்றால் பாலிசி முடிவில் முதிர்வு தொகை எதுவும் கிடைக்காது. அதாவது பாலிசிக்கு கட்டிய பிரீமியம் தொகை திரும்பக் கிடைக்காது. பொதுவாக ஒருவரது ஆண்டு வருமானத்தைப்போல 15 மடங்கு தொகைக்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும், என்கிறார்கள்.

    இதில் டேர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களை சமீப காலங்களில் ஆன்லைன் மூலமாக எடுப்பது அதிகரித்து வருகிறது. முகவர் மூலம் எடுக்கப்படும் பாலிசியைவிட ஆன்லைன் மூலம் எடுக்கப்படும் பாலிசிக்கான பிரீமியம் கணிசமாகக் குறைகிறது. ஆன்லைனில் பாலிசி வாங்குவது மிகவும் எளிதானது. ஆனால் சில நேரங்களில் சிக்கலானதாக மாறலாம். முகவரிடம் நேரடியாக விளக்கிச் சொல்லும் விஷயங்களை ஆன்லைனில் விளக்க முடியாது. ஆன்லைன் பாலிசி விண்ணப்பத்தை நாம் நிரப்பும்போது தவறுகள் நடக்கவும் வாய்ப்பு உள்ளது. சில உண்மைகளை மறைக்கவோ அல்லது தெரியாமலேயேகூட விட்டு விடலாம். பாலிசி எடுக்கும்போது நம்மைப் பற்றிய விவரங்களை தெளிவாகக் குறிப்பிட்டால்தான் கிளைம் செய்வதில் சிக்கல் இருக்காது.

    காப்பீடு பாலிசி எடுக்கும்போது சில நேரங்களில் மருத்துவ பரிசோதனைகள் அவசியமாக இருக்கும். முகவர் மூலம் எடுக்கும்போது உங்களுக்கு மருத்துவ பரிசோதனை தேவையா என்பதை சொல்லிவிடுவார். ஆன்லைன் மூலம் பாலிசி எடுக்கும்போது இந்த விவரங்களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு குறைவு. மேலும் மருத்துவப் பரிசோதனை தேவையாக இருந்தால் எந்த மருத்துவமனையில் எப்போது பரிசோதனை? என்பது போன்ற விவரங்களை திரும்பவும் கேட்டுத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.

    ஆனால் முகவர் மூலம் எடுக்கிற போது இந்த தகவல்கள் எளிதாக கிடைத்து விடும். ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து, பாலிசிக்குரிய பிரீமியம் கட்டி விடுவோம். பிறகு மருத்துவப் பரிசோதனை முடிவுகள் கிடைத்ததும் அதன் அடிப்படையில் பிரீமியம் அதிகரிக்கப்படலாம். அதிக கவனம் தேவைப்படும் பணியில் இருப்பவர்கள் மற்றும் ஆபத்தான பணியில் இருப்பவர்களுக்கு பிரீமியம் அதிகமாக இருக்கும். பிரீமியத்தை குறைக்க பொய் சொன்னால் பின்னால் கிளைம் செய்யும் போது சிக்கல் வந்துவிடும் என்று இத்துறையை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

    • மழையாலும், பனியாலும் பயிர்கள் முழுவதுமாக சேதமடைந்தது.
    • ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் செலுத்தி காப்பீடு செய்திருந்தார்.

    வேலூர் :

    வேலூர் மாவட்டம் கெங்காரெட்டி பள்ளியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் 5 ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்தார். அதற்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் செலுத்தி காப்பீடு செய்திருந்தார். நெற்பயிர் நன்கு வளர்ந்திருந்தது.

    இந்த நிலையில் தற்போது பெய்த மழையாலும், பனியாலும் பயிர்கள் முழுவதுமாக சேதமடைந்தது. இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனத்திடம் தெரிவிக்க ஒரு மாதமாக அலைந்துள்ளார். ஆனால் வேளாண்மைத் துறையும், காப்பீட்டு நிறுவனமும் காப்பீடு வழங்காமல் அவரை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் வேளாண்மைத்துறையின் கவனத்தை ஈர்க்க 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மேலும் சேதமடைந்த நெற் பயிர்களை தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.396-ல், ரூ10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
    • 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்ட அஞ்சல் கோட்ட கண்கா ணிப்பாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் டாடா ஏ.ஐ.ஜி ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.396-ல், ரூ10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

    18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.விண்ணப்ப படிவம், அடையாள, முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகித பயன்பாடுமின்றி, தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன், விரல் ரேகை மூலம், வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் சிறப்பம்சங்களாக ரூ.10லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு மற்றும் விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகளில் உள்நோயாளி செலவு களுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரையும், புறநோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.30ஆயிரம் வரையும், விபத்தினால் மரணம், ஊனம், பக்கவா தம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு ரூ.1 லட்சம் வரையும், விபத்தினால் மருத்துவமனையில் அனும திக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகை ஒரு நாளைக்கு ரூ.1000 வீதம் 10 நாட்களுக்கும், விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினரின் பயண செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.25,000 வரையும், விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரியைகள் செய்ய ரூ.5,000 வரையும் காப்பீடு வழங்கப்படுகிறது.

    பொது மக்கள் அனை வரும் பரமத்தி வேலூர், பொத்தனூர், பரமத்தி, ஜேடர்பாளையம், பாண்ட மங்கலம் உள்ளிட்ட பல்வேறு அஞ்சலகங்கள், தபால்காரர்கள் மூலம் இந்த குழு விபத்து காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன்பெறுலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

    ×