search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guru Bhagavan"

    தமிழ் நாட்டில் அனைத்து கோவில்களிலும் வாக்கியப் பஞ்சாங்கப்படி விழாக்கள் அனுசரிக்கப்படுவதால் 13.11.2021 அன்று குருப்பெயர்ச்சி விழா நடைபெறும்.
    பிலவ வருடம் கார்த்திகை மாதம் 4-ம் நாள் சனிக்கிழமை 20.11.2021 அன்று இரவு 11.31 மணிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

    தமிழ் நாட்டில் அனைத்து கோவில்களிலும் வாக்கியப் பஞ்சாங்கப்படி விழாக்கள் அனுசரிக்கப்படுவதால் 13.11.2021 அன்று குருப்பெயர்ச்சி விழா நடைபெறும்.
    நவகிரகங்களில் முழுச் சுபரான  குருபகவானுக்கு மட்டுமே தன் பார்வை பலத்தால் அனைத்தையும் வளம் பெறச் செய்யும் சக்தி உள்ளது. குரு தான் நின்ற இடத்தை விட பார்த்த இடத்தை புனிதப் படுத்துவார். குரு பார்த்த இடம் கோடி நன்மை பெறும்.

    தன் பார்வை பலத்தால் அனைத் தையும் கட்டுப்படுத் தும் சக்தி படைத்த ஒரே ராஜகிரகம் குருபகவான் மட்டுமே என்பது நிதர்சனமான உண்மை. அது மட்டுமல்ல குருபகவான் மட்டுமே பணம், திருமணம், புத்திர பாக்கியம், தொழில், உத்தியோக உயர்வு என பாக்கியம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் விருத்தியாக்கும் சக்தி படைத்தவர் என்பதால் தான் மக்களுக்கு குருப்பெயர்ச்சியின் மேல் அதீத ஈடுபாடு உள்ளது.

    அதன்படி குருவின் பார்வை பதியும் மிதுனம், சிம்மம், துலாம் ஆகிய ராசியினரும், தன லாப ஸ்தானத்தில் நிற்கும் மகரம், மேஷ ராசியினரும் ஏதாவது ஒரு வகையில் மேன்மை அடைவார்கள். மற்ற ராசிகளுக்கு தான் நின்ற வீட்டிற்கு ஏற்பவும்  தான் பயணம் செய்யும் அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்கள் ரீதியாகவும் சுய ஜாதக ரீதியான தசாபுத்திக்கு அடிப்படையிலும் குரு நற்பலன்களை வழங்குவார்.

    அவரவரின் தசாபுத்தியை சாதகப்படுத்தும்  வழிபாட்டு முறைகளை கடைபிடிக்க அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியாகும். ஒரு ராசியில் தோராயமாக ஓராண்டு சஞ்சரிக்கும் குருபகவான் மகரம், கும்பம் என்ற இரண்டு ராசிகளிலும் வக்ரம், அதிசாரம் என மாறி மாறி கடந்த ஒரு வருடமாக சஞ்சாரம் செய்தார்.

    தற்போது கும்பத்தில் 5 மாதங்கள் மட்டுமே சஞ்சரிக்கப் போவதால் எந்த ராசியினருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படாது என்பதை உறுதியாகக் கூறலாம். ஏப்ரல் 2022ல் குரு மீனத்திற்குச் செல்கிறார். ராகு மேஷத்திற்கும் கேது துலாத்திற்கும் செல்வதால் பல பெரிய நல்ல மாற்றங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்படப்போவது உறுதி. எனவே இந்த குறுகிய காலத்தை சிறிய எளிமையான இறைவழிபாடு மற்றும் பரிகாரங்கள் மூலம் கடக்க முடியும்.

    மேலும் இந்த காலகட்டத்தில் சனி பகவான் மகரத்திலும், ராகு பகவான் ரிஷபத்திலும் கேது பகவான் விருச்சிகத்திலும் உலாவும் கிரக அமைப்பைப் பொறுத்தும் இந்த குருப்பெயர்ச்சி புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

    இந்த குருப் பெயர்ச்சி அனைவருக்கும் விரும்பிய மாற்றங்களையும் ஏற்றங்களையும் தந்திட பிரபஞ்சத்தையும் நவகிரகங்களையும் மண்டியிட்டு பிரார்த்தனை செய்யலாம்.
    குருப்பெயர்ச்சி விழாவான இன்று அதிகாலை 2-வதுகால யாகபூஜையும், அதனை தொடர்ந்து அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட உள்ளது.
    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடி கிராமம் உள்ளது. இங்கு ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இன்று(சனிக்கிழமை) மாலை 6.31 மணிக்கு பெயர்ச்சியடைகிறார். இதனை முன்னிட்டு ஆலங்குடி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. உலக நன்மை வேண்டி விநாயகர் வழிபாட்டுடன், குருபரிகார யாகம் நேற்று மாலை நடைபெற்றது.

    குருப்பெயர்ச்சி விழாவான இன்று அதிகாலை 2-வதுகால யாகபூஜையும், அதனை தொடர்ந்து அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட உள்ளது. குருபகவானுக்கு தங்ககவச அலங்காரமும், கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், சுப்பிரமணியர், சனீஸ்வரபகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெறும். அதனை தொடர்ந்து மாலை 6.31 மணிக்கு குருப்பெயர்ச்சியின் போது குருபகவானுக்கு தீபாராதனை காட்டப்படும்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார்-உதவிஆணையர் ஹரிஹரன், உதவி ஆணையர்-செயல்அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    குருப்பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் நலன் கருதி திருவாரூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு வசதிகளை செய்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் வலங்கைமான் போலீசார் செய்துள்ளனர்.
    குருவித்துறை குருபகவான் குருப்பெயர்ச்சி விழா இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
    சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோவில் முன்பு பெருமாளை நோக்கி தவக் கோலத்தில் குருபகவான் வீற்றிருக்கிறார். அருகே சக்கரத்தாழ்வார் உள்ளார். இங்கு ஒவ்வொரு குரு பெயர்ச்சியும் 3 நாட்கள் நடைபெற்று விழாக்கோலமாக இருக்கும்.

    இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் இருப்பார்கள். தற்போது கொரோனா தொற்றுநோய் காரணமாக பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

    இந்தநிலையில் பக்தர்கள் கோரிக்கையை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், வெங்கடேசன் எம்.எல்.ஏ. தாசில்தார் நவநீதகிருஷ்ணன், சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தர், இந்து அறநிலையத்துறை உதவிஆணையர் விஜயன், யூனியன் ஆணையாளர்கள் பாண்டியன், சத்தியகலாவதி, வருவாய் ஆய்வாளர் சதீஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு யாகசாலை பூஜையில் பங்கேற்க அனுமதி இல்லை. சாமி தரிசனம் செய்ய மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    நேற்று காலை 2-ம் நாள் லட்சார்ச்சனை நடைபெற்றது.

    இன்று (சனிக்கிழமை) காலை 3-ம் நாள் லட்சார்ச்சனை தொடங்கி பகல் வரை நடைபெறும். பிற்பகல் 3 மணி அளவில் பரிகார பூஜை நடைபெறுகிறது.

    மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடிய மாலை 6.10 மணி அளவில் குருபகவானுக்கு சிறப்பு அபி ஷேகம் நடைபெற்று பூஜைகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
    இந்த கோவிலில் உள்ள குரு பகவானுக்கு, மஞ்சள் வஸ்திரம் சாத்தி, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் சகல விதமான தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
    சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி, அம்பத்தூர் வழியில் இருக்கிறது, பாடி என்ற ஊர். இங்குள்ள லூகாஸ் டி.வி.எஸ். பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, சுமார் 5 நிமிடம் நடந்தால், திருவலிதாயநாதர் திருக்கோவிலை அடையலாம். இந்த ஆலயம் குரு பகவானின் பரிகாரத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் இங்கு குரு பகவான் வந்து தங்கியிருந்து, சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றுள்ளார். வியாழ பகவான் எனப்படும் குரு, தன்னுடைய சகோதரரின் மனைவி மேனகையின் சாபத்தால் பெரும் பாதிப்பை சந்தித்தார். அதில் இருந்து விடுபட வழி தெரியாமல் தவித்தவர், சிவபெருமானை நினைத்து வழிபட்டார்.

    இதையடுத்து குரு பகவானின் முன்பாக தோன்றிய சிவபெருமான், “நீ.. திருவலிதாயம் திருத்தலம் சென்று என்னை நினைத்து தவம் செய்து வா.. உனக்கான பலன் கிடைக்கும்” என்றார்.

    அதன்படியே இத்திருத்தலம் வந்த குரு பகவான், இங்கேயே நெடுங்காலம் தங்கியிருந்து சிவனை நினைத்து தவம் செய்து, தன்னுடைய சாபம் நீங்கப்பெற்றார். குரு பகவான், சிவ பூஜை செய்து வழிபட்ட திருத்தலம் என்பதால், இது குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது.

    இந்த ஆலயத்தில் குரு பகவானுக்கு மட்டும் தனிச் சன்னிதி அமைந்திருக்கிறது.

    இங்குள்ள குரு பகவானுக்கு, மஞ்சள் வஸ்திரம் சாத்தி, முல்லைப் பூவைக் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் சகல விதமான தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்தத் திருத்தலத்தில் அருளும் குரு பகவானுக்கு, வியாழக்கிழமை அன்று காலை மற்றும் மாலை வேளைகளிலும், குருப்பெயர்ச்சி காலத்தின் போதும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படும். இதில் கலந்து கொண்டு குரு பகவானை வணங்கினால், தோஷங்கள் அனைத்தும் நீங்கி, நற்பலன்களை அடையலாம்.
    குருவித்துறை குரு பகவான் கோவில் குருப்பெயர்ச்சி விழாவில் 13-ந்தேதி மற்றும் 14-ந்தேதி ஆகிய 2 நாட்கள் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    சோழவந்தான் அருகே குருவித்துறை குரு பகவான் குரு பெயர்ச்சி விழா நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு் பாஸ்கரன் உத்தரவின்பேரில் சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தர் ஆலோசனையின் பேரில் குருப்பெயர்ச்சி விழாவில் 13-ந்தேதி மற்றும் 14-ந்தேதி ஆகிய 2 நாட்கள் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதனை சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், காடுபட்டி சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் காவல்துறை சார்பாக அறிவித்துள்ளனர்.
    இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா நாளை நடக்கிறது.
    குருபகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. நாளை மதியம் 2.48 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா நாளை நடக்கிறது.

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் நாளை அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை நடைபெறும். மாலை 4.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து பக்தர்கள் தங்களது பரிகாரங்களை நிவர்த்தி செய்யும் வகையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை, வெள்ளை அரளி மாலை, மஞ்சள் துண்டு, முல்லைப்பூ மாலை, மற்றும் தங்களது ராசி பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்துகொள்வார்கள். மேலும் பரிகார பூஜைகளும் செய்வார்கள்.

    இதைப்போல் சுசீந்திரம் தாளகுளம் பிள்ளையார் கோவில், களியல் மகாதேவர் கோவில், நாகர்கோவில் வடசேரி சோழராஜா கோவில், காசி விஸ்வநாதர் கோவில், பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில், தெரிசனங்கோப்பு ராகவேஸ்வர் கோவில், கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில், தாழக்குடி ஜெயந்தீஸ்வரர் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், களியங்காடு சிவன் கோவில், ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் குமரி மாவட்டத்தில் குருபகவான் சன்னதிகள் உள்ள கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா மற்றும் சிறப்பு வழிபாடுகள் நாளை நடக்கிறது.
    பரிகார யாகத்தில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் மகா அபிஷேகம் நடைபெறும். இதையொட்டி கோவில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடு செய்துள்ளனர்.
    சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரதவல்லப பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் குருபகவான் சுயம்புவாக வீற்றிருக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார். இங்கு ஒவ்வொரு குருபெயர்ச்சி விழாவும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு குருபெயர்ச்சி விழாவையொட்டி நேற்று காலை ஸ்ரீதர் பட்டர், ரெங்கநாத பட்டர், சடகோப பட்டர், ஸ்ரீபாலாஜி பட்டர், ராஜா பட்டர் உள்பட 21 பேர் லட்சார்ச்சனை நடத்தினர். லட்சார்ச்சனையுடன் குருபெயர்ச்சி விழா தொடங்கியது.

    விழாவை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையர் விஜயன், செயல்அலுவலர் சுரேஷ்கண்ணன், ஆய்வாளர் மதுசூதனன்ராயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு வெளியூரில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து குருபகவானை தரிசித்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன்மாறன், ரேகா வீரபாண்டி, இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் வெற்றிச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கர்நாடக கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமன் லட்சார்ச்சனை விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இவரை முன்னாள் ஊராட்சி தலைவர் கர்ணன், தொழில் அதிபர் எம்.கே.எம்.ராஜா, மணிவேல் உட்பட பலர் வரவேற்றனர். சமயநல்லூர் துணைசூப்பிரண்டு பாலசுந்தர், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.குருவித்துறை ஊராட்சி சார்பாக கூடுதல் தெருவிளக்கு, கூடுதல் குடிநீர் வசதி, முழு சுகாதார பணி செய்யப்பட்டது. மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இன்று லட்சார்ச்சனை தொடர்ந்து நடைபெறும். இரவு நிறைவுபெற்று நாளை பகல் 3 மணி அளவில் பரிகார மகா யாகம் நடைபெறும். 6.10 மணி அளவில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு குரு பெயர்ச்சி ஆவதால் குருபகவானுக்கு 21 அபிஷேகம் நடைபெறும்.

    பின்னர் பரிகார யாகத்தில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் மகா அபிஷேகம் நடைபெறும். இதையொட்டி கோவில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடு செய்துள்ளனர். காவல்துறை, சுகாதாரத் துறை, வருவாய் துறை, தீயணைப்புத் துறை, அரசு போக்குவரத்து துறை மற்றும் அறநிலையத்துறை இணைந்து கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக அரசு உத்தரவின்படி அனைத்து விழிப்புணர்வு ஏற்பாடுகளும் செய்துள்ளனர். வரக்கூடிய பக்தர்கள் முககவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
    வரும் நவம்பர் 13-ம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குள் பிரவேசிக்கிறார். இந்த நன்னாளில் குருவித்துறை யோக குருவை தியானித்து அருள்பெறுவோம்.
    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ளது, குருவித்துறை என்ற திருத்தலம். இங்குள்ள சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில், ஒரே சன்னிதியில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாக வீற்றிருந்து காட்சி தருகின்றனர். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி யுத்தம் நடைபெறுவது வாடிக்கை. அதுபோன்ற காலத்தில் எல்லாம் இரு பக்கங்களிலும் பலர் உயிரிழப்பார்கள்.

    அசுர குருவான சுக்ராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ‘மிருத சஞ்சீவினி’ என்ற மந்திரத்தை கற்றறிந்திருந்தார். இதனால் தன் பக்கம் உயிரிழந்த அசுரர்களை எல்லாம், அந்த மந்திரத்தை உச்சரித்து உயிர்ப்பித்து விடுவார் சுக்ராச்சாரியார். இதனால் அசுரர்களின் பலம் கூடிக்கொண்டே இருந்தது. தேவர்களின் படையோ குறைந்து கொண்டே இருந்தது.

    இதையடுத்து சுக்ராச்சாரியாரிடம் இருந்து ‘மிருத சஞ்சீவினி’ மந்திரத்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையில் இருந்து ஒருவரை சுக்ராச்சாரியாரிடம் கல்வி கற்பதற்காக அனுப்ப முடிவு செய்தனர். அப்படி கல்வி கற்கும்போது, ‘மிருத சஞ்சீவினி’ மந்திரத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவர்களின் யோசனையாக இருந்தது. இதற்காக தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன் தேர்வு செய்யப்பட்டான்.

    சுக்ராச்சாரியாரிடம் சென்ற கசன், அவரிடம் கல்வி கற்றபடியே அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். சுக்ராச்சாரியாரிடம் கல்வி கற்க வந்த கசன், தேவ குலத்தைச் சேர்ந்தவன் என்பதை அசுரர்கள் அறிந்தனர். மேலும் கசன், ‘மிருத சஞ்சீவினி’ மந்திரத்தை கற்கவே இங்கு வந்திருப்பதையும் அவர்கள் தெரிந்துகொண்டனர். எனவே கசனை எரித்து சாம்பலாக்கி, சுக்ராச்சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்து விட்டனர்.

    கசனைக் காணாத தேவயானி, தந்தையான சுக்ராச்சாரியாரிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்ராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார். இதற்கிடையில் மகனைக் காணாத குரு பகவான், அவனை அசுரலோகத்தில் இருந்து மீட்டு வர அருளும்படி, இத்தலப் பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி, சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வந்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார். இதனாலும் இது குரு தலமாக கருதப்படுகிறது. இங்கு வழிபட்டாலும் குருவால் கிடைக்கும் நன்மைகள் பல நம்மை வந்தடையும்.

    வியாழன் என்று அழைக்கப்படும் குரு பகவான், நவகிரக வரிசையில் முக்கியமானவர். இவரை வணங்கினால் ஞானம், செல்வம் முதலானவற்றை அடையலாம். 'குரு' என்றால், 'இருளை நீக்குபவர்' என்று பொருள். அதாவது, நம்மிடம் இருந்து வரும் அறியாமையாகிய இருளை நீக்குபவர். பொதுவாக, சிவாலயங்களில் குரு பகவான் எழுந்தருளி இருப்பது சாதாரணமாகப் பார்க்கக் கூடிய ஒன்று. ஆனால், வைணவத் தலம் ஒன்றில் குருபகவான் எழுந்தருளி இருப்பது, சற்று வித்தியாசமானதுதான்.

    மூன்று பிராகாரங்களைக் கொண்ட விரிவான இந்தக் கோயில், வைகைக் கரையில் அமைந்துள்ளது. பெருமாளை தரிசனம் செய்யச் செல்வதற்கு முன் வெளியே குரு பகவானின் திருச்சந்நிதி. பெருமாள் கிழக்கு நோக்கிக் காட்சி தர, அவரை தரிசிக்கும் கோலத்தில் மேற்கு நோக்கிக் காணப்படுகிறார் குரு. இவருக்கு அருகே ஸ்ரீசக்கரத்தாழ்வார் எழுந்தருளியிருக்கிறார். இங்கே குரு பகவான், யோக குருவாகக் காட்சிகொடுக்கிறார். கைகளை நெஞ்சில் குவித்து வணங்கும் பாவனையில் காட்சி தருகிறார்.

    குருவித்துறை குருபகவான்கோவில் குருபெயர்ச்சி விழா 11-ந்தேதி லட்சார்ச்சனையுடன் தொடங்குகிறது. 13-ந் தேதி பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு சித்திர ரத வல்லப பெருமாளை நோக்கி குருபகவான் தவக்கோலத்தில் சுயம்பு வாக இருக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார்.

    ஒவ்வொரு குருபெயர்ச்சி அன்றும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குரு பெயர்ச்சியாவதை முன்னிட்டு இங்கு 3 நாட்கள் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும். விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகை புரிந்து குரு பகவானைத் தரிசித்து செல்வார்கள்.

    இந்த ஆண்டு வருகிற 11-ந் தேதி வியாழக்கிழமை 10.45 அளவில் லட்சார்ச்சனையுடன் குருபெயர்ச்சி விழா தொடங்குகிறது.

    13-ந் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை தொடர்ந்து 3 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும். அன்று மாலை 3 மணி அளவில் யாகசாலை பூஜை தொடங்கி 6.10 மணிக்குள் பரிகார மகாயாகம், மஹாபூர்ணாகுதி, திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள்படி குருபெயர்ச்சி விழாவின் போது 13-ந் தேதி (சனிக்கிழமை) அன்று ஒரு நாள் முழுவதும் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    குருபெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகாரம் செய்யவேண்டும். விழா ஏற்பாடுகளை செயல்அலுவலர் சுரேஷ்கண்ணன், தக்கார் வெண்மணி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
    அரிய சாதனைகளை செய்வதற்கு குரு பலமே பிரதானமாக இருக்கிறது. வேத சாஸ்திரம், விஞ்ஞானம் ஆகியவற்றில் புகழ் அடைவதற்கு மூலபலம் குருபலம்தான்.
    பக்தி, சிரத்தை, வழிபாடு, புனித சிந்தனை, யாத்திரை, நல்லொழுக்கத்தைக் கடைபிடித்தல் போன்ற விஷயங்கள் குரு பலத்தால் பெறக் கூடியதாகும்.

    ஒருவர் பெரிய மத குருவாக இருக்கிறார் என்றால் அவருக்கு குரு நல்ல பலம் பெற்றிருக்கிறார் என்று பொருள்.

    ஒழுக்கசீலராக இருப்பவர்களின் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருப்பார். உலகத்தார் அனைவரும் ஒருவரை மதிக்கிறார்கள் என்றாலும் அவரின் ஜெனன கால ஜாதகத்தில் குரு பலம் நிறைந்திருக்கிறது என பொருள்.

    அரிய சாதனைகளை செய்வதற்கு குரு பலமே பிரதானமாக இருக்கிறது. வேத சாஸ்திரம், விஞ்ஞானம் ஆகியவற்றில் புகழ் அடைவதற்கு மூலபலம் குருபலம்தான்.
    ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் அருள் பூரணமாக இருந்தால், அவரின் வாழ்க்கை நிலை பன்மடங்கு உயரும் என்பது ஜோதிட வாக்கு.
    பிரம்ம தேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதா என்பவருக்கும் பிறந்த குரு பகவான் நவகிரகங்களில் சுபகிரகமாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் அருள் பூரணமாக இருந்தால், அவரின் வாழ்க்கை நிலை பன்மடங்கு உயரும் என்பது ஜோதிட வாக்கு.

    “குணமிகு வியாழக் குரு பகவானே
    மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
    ப்ருகஸ்பதி வியாழப் பாகுரு நேசா
    க்ரகதோஷம் இன்றிக் கடாக்ஷித்தருள்வாய் போற்றி”
    இத்துதியை வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியின் படத்தின் முன் தம்பதி சமேதராய் அமர்ந்து கூறி வர குருவருளால் குடும்ப வளமும், தாம்பத்திய ஒற்றுமையும் கிட்டும்.
    வாமோரூபரிஸம்ஸ்திதாம் கிரிஸுதாமன்யோன்யமா லிங்கிதாம்
    ஸ்யாமாமுத்பலதாரிணீம் ஸஸிநிபாஞ்சாலோகயந்தம் ஸிவம்
    ஆஸ்லிஷ்டேன கரேண புஸ்தகமதோ கும்பம்ஸுதாபூரிதம்
    முத்ராம் ஞானமயீம் ததானமபரை: முக்தாக்ஷமாலாம் பஜே

    ஸ்ரீ தட்சிணாமூர்த்தி நவரத்னமாலிகா ஸ்தோத்திரம்.

    பொதுப்பொருள்:

    தன் இடது மடியில் பர்வத ராஜகுமாரியாகிய பார்வதி தேவியை இருந்தி அணைத்துக் கொண்டிருக்கும் ஈசனே, வணக்கம். கையில் நீலோத்பல மலரை ஏந்தி இளமை மிக்கவராய், சந்திர ஒளி போன்ற முகத்தையுடைய அம்பிகையை காதலுடன் பார்க்கின்றவரே, வணக்கம். அம்பாளை அணைத்த தன் திருக்கரத்தினால் புத்தகத்தையும், கீழ்க் கரத்தில் அமிர்தம் நிரம்பிய கும்பத்தையும், இன்னொரு கரத்தில் ஞான முத்திரையையும், வேறொரு கரத்தில் முத்துமயமான ஜபமாலையையும் தரித்திருக்கிறவரே, தட்சிணாமூர்த்தியே! தங்களுக்கு நமஸ்காரம்.

    ×