search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குருவித்துறை திருத்தலம்
    X
    குருவித்துறை திருத்தலம்

    குருவித்துறை குருப்பெயர்ச்சி விழா: 2 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

    குருவித்துறை குரு பகவான் கோவில் குருப்பெயர்ச்சி விழாவில் 13-ந்தேதி மற்றும் 14-ந்தேதி ஆகிய 2 நாட்கள் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    சோழவந்தான் அருகே குருவித்துறை குரு பகவான் குரு பெயர்ச்சி விழா நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு் பாஸ்கரன் உத்தரவின்பேரில் சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தர் ஆலோசனையின் பேரில் குருப்பெயர்ச்சி விழாவில் 13-ந்தேதி மற்றும் 14-ந்தேதி ஆகிய 2 நாட்கள் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதனை சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், காடுபட்டி சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் காவல்துறை சார்பாக அறிவித்துள்ளனர்.
    Next Story
    ×