என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "first place"
- சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர்.
- வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணி, தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கையுந்து பந்து போட்டியில் மேலோர் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளை, பள்ளி தலைமை ஆசிரியை வீ.சாந்தி, உதவி தலைமை ஆசிரியர் சுப.கார்த்திகேயன், உடற்கல்வி ஆசிரியர்கள் அ.ரெங்கேஸ்வரி, ம.அன்னமேரி, எஸ்.நீலகண்டன், பயிற்சியாளர் மற்றும் மாநில நடுவர் பாரதிதாசன், ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் பாராட்டினர்.
அதேபோல், அசோக்குமார் எம்.எல்.ஏ, பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர் ஆகியோரும் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
- தூத்துக்குடி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி ஆறுமுகநேரி தருவை மைதானத்தில் நடைபெற்றது.
- 44 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 32 அணிகள் பங்கேற்றன.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி ஆறுமுகநேரி தருவை மைதானத்தில் நடைபெற்றது. ட்ரூ ஸ்பார்டன்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் நடந்த இந்த சுற்று போட்டியை பா.ஜ.க பிரமுகரான கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து 44 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 32 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் காயல்பட்டினம் கொம்புத்துறை சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று பரிசு கோப்பையை தட்டி சென்றது. அத்துடன் ரூ.20 ஆயிரம் பரிசு தொகையையும் வென்றது. ஆறுமுகநேரி யங் சூப்பர் கிங்ஸ் அணி 2-வது பரிசாக ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பையை வென்றது.
தூத்துக்குடி நைட் ரைடர்ஸ் அணி 3-வது பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையையும், ஆறுமுகநேரி தருவை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது பரிசாக ரூ.5 ஆயிரமும் பெற்றன. கொம்புத்துறை அணி வீரர் வினோத் தொடர் நாயகன் விருது மற்றும் சிறப்பு பரிசை பெற்றார். வெற்றி பெற்ற அணிகளுக்கு கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் பரிசுகளை வழங்கினார். போட்டியில் பங்கேற்ற வீரர்கள் அனைவருக்கும் டி-சர்ட்டுகளையும் அவர் வழங்கினார்.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் கானம் பேரூராட்சி முன்னாள் தலைவர் செந்தமிழ் சேகர், மேல புதுக்குடி தொழிலதிபர் ஜெயராஜ், குமரேசன், குமரன், ஆறுமுகநேரி அரிமா சங்க நிர்வாகி சண்முக வெங்கடேசன், சமத்துவ மக்கள் கட்சி திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் சீமான், கீரனூர் முத்துகிருஷ்ணன், காயல்பட்டினம் அ.ம.மு.க நகரச் செயலாளர் யாசின், முகமது பிலால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ட்ரூ ஸ்பார்ட்டன்ஸ் கிரிக்கெட் கிளப் ஒருங்கிணைப் பாளர்கள் அருண், தேரடி முத்து மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் வளைகோல் பந்து முதலிடம்.
- 19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் கூடைப்பந்து முதலிடம், பூப்பந்து முதலிடம்.
சீர்காழி:
சீர்காழியில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிளான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் சுமார் 57 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் 125 ஆம் ஆண்டுகள் கல்வி பணியாற்றி இவ்வாண்டு விழாக்காணும் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளி மாணவ.-மாணவிகள் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 17 பதக்கங்களும், 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 25 பதக்கங்களும், 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 42 பதக்கங்களும் பெற்று 171 புள்ளிகள் பெற்று இப்பள்ளி மாணவ -மாணவிகள் சாதனை படைத்தனர்.
குழுப்போட்டிகளில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில் வளைகோல்பந்து இரண்டாம் இடம், கபடி போட்டி முதலிடம், கால்பந்து இரண்டாம் இடம், மாணவிகள் பிரிவில் கூடைபந்து முதலிடம், வளையபந்து இரண்டாம் இடமும், 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் வளைகோல் பந்து முதலிடம், கூடைபந்து இரண்டாம் இடம், கபடி போட்டி முதலிடம், கால்பந்து இரண்டாம் இடம், மேசைபந்து முதலிடம். மாணவிகள் பிரிவில் கூடைபந்து முதலிடம், வளையபந்து போட்டியில் முதலிடமும் பெற்றனர்.
19 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் வளைகோல் பந்து இரண்டாம் இடம். கூடைப்பந்து முதலிடம், பூப்பந்து முதலிடம்.
மாணவிகள் பிரிவில் கூடைப்பந்து முதலிடம், வளையப்பந்து முதலிடம், பூப்பந்து முதலிடம் பெற்று பள்ளிக்கு சிறப்பு சேர்த்த மாணவ, மாணவிகளையும் பயிற்றுவித்த உடற்கல்வி இயக்குநர் முரளிதரன் உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, பி.மார்கண்டன், .சக்திவேல், .ஹரிஹரன், .ராக்கேஷ் ஆகியோரை பள்ளி செயலர் ராமகிருஷ்ணன், முன்னாள் செயலர் பாலசுப்ரமணியன், பள்ளி குழுதலைவர்.சொக்கலிங்கம், பள்ளி தலைமையாசிரியர் அறிவுடைநம்பி, உதவித்த லைமை ஆசிரியர்கள்.துளசிரெங்கன், . வரதராஜன் மற்றும் பள்ளி ஆசிரியரிகள், ஆசிரியைகள், அலுவலர்கள் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நேற்று சேலம் மாநகர், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-
அ.தி.மு.க. அரசில் கல்வி, சுகாதார துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 8 வழி பசுமை சாலையை பொதுமக்கள் எதிர்க்கவில்லை. நான் விவசாயி என்பதால் எந்தவிதத்திலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். ஆனால் இந்த திட்டத்தை சில கட்சிகளை சார்ந்தவர்கள் மட்டுமே எதிர்க்கிறார்கள். குறிப்பாக தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்புகளை சார்ந்தவர்கள் மட்டுமே அரசியல் ஆதாயத்திற்காக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
போக்குவரத்து துறையில் முந்தைய தி.மு.க.அரசு ரூ.6 ஆயிரம் கோடி கடனில் விட்டு விட்டு சென்றது. டெப்போக்களையும் அடமானம் வைத்துவிட்டு சென்றுவிட்டனர். எதற்கு எடுத்தாலும் இப்படி செய்யலாம், அப்படி செய்யலாம் என்று கூறும் மு.க.ஸ்டாலின் அவர் இருக்கும் போதே செய்ய வேண்டியது தானே?. இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய மாநகராட்சியில் சென்னை மாநகராட்சி முதல் இடத்தில் உள்ளது. சட்டமன்றத்தில் மாற்றி, மாற்றி கேள்வி கேட்கிறார்கள். அதற்காகவே தினமும் 3 மணி நேரம் அனைத்து துறை தகவலையும் படித்து, அனைத்திற்கும் பதில் சொல்கிறேன்.
மு.க.ஸ்டாலின் போராட்டம் செய்தால் உடனே ராஜினாமா செய் என்று கூறுகிறார். அந்த அளவிற்கு நாற்காலி ஆசை. நான் ஒன்றும் பிடித்து கொண்டு இல்லை, மக்களாலும், ஒவ்வொரு தொண்டர்களாலும் கிடைத்தது. தமிழகம் முழுவதும் நான்கு வழிச்சாலைகளாக 40 சாலைகள் அமைக்க மத்தியஅரசிடம் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதில் 19 சாலைகளுக்கு அனுமதி கிடைத்து விட்டது. 21 சாலைகள் பரிந்துரையில் உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலைகள் அமைத்தால் அமெரிக்காவிற்கு இணையாக தமிழகம் மாறிவிடும்.
எனது உறவினர் டெண்டரில் ஊழல் செய்ததாக கூறுகிறார்கள். ஆனால் அத்தனையும் பொய். சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து டெண்டர்களும் விடப்படுகிறது. தி.மு.க. ஒரே நாளில் ஒருவருக்கு 8 முறை டெண்டர் கொடுத்துள்ளனர். தி.மு.க.வினரே ஊழலிலே பிறந்து ஊழலிலே திளைத்தவர்கள். திருப்பதி கோவிலில் அணைகள் எல்லாம் நிரம்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்தற்கு கிண்டல் செய்தார்கள். ஆனால் இப்போது மேட்டூர் அணை ஒரே மாதத்தில் நிரம்பி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகிறது.
வழக்கு முடிவு பெறும் நிலையில் உள்ளதால் உள்ளாட்சி தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. இதேபோல் நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலை உள்ளது. எனவே எந்த தேர்தல் வந்தாலும் சந்திக்க கட்சியினர் ஆயத்தமாக இருக்க வேண்டும். மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுகளிலும் குறைந்தது 25 விண்ணப்பங்கள் சேர்க்க வேண்டும். நிறைய விஷயம் (தி.மு.க.) பற்றி சொல்ல வேண்டியுள்ளது. தடுமாற்றத்திலும், துக்க நேரத்தில் இருப்பதாலும் மனிதாபிமானத்தோடு பேசவில்லை.
இவ்வாறு அவர் பேசினார். #ChennaiCorporation #EdappadiPalanisamy #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்