search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fainted and died"

    • பாகூர் அருகே சமையல் தொழிலாளி மயங்கி விழுந்து இறந்து போனார். பாகூர் அருகே குருவி நத்தம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் பழனி. சமையல் தொழிலாளி இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
    • பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் படி பரிந்துரை செய்ததின் பேரில் ஆம்புலன்ஸ் மூலம் பழனியை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    புதுச்சேரி:

    பாகூர் அருகே சமையல் தொழிலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.

    பாகூர் அருகே குருவி நத்தம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் பழனி. (வயது 44). சமையல் தொழிலாளி இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

    கடந்த ஒருவருடமாக பழனிக்கு ரத்த அழுத்த நோய் இருந்து வந்தது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    இந்த நிலையில் பழனி வீட்டில் டிபன் சாப்பிட்டு விட்டு வங்கிக்கு செல்ல தயாரானார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரது மனைவி சுப்புலட்சுமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை பாகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் படி பரிந்துரை செய்ததின் பேரில் ஆம்புலன்ஸ் மூலம் பழனியை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பழனி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அவரது மனைவி சுப்புலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சம்பவத்தன்று சுப்பிரமணி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
    • டாக்டர் பரிசோதனை செய்து விட்டு சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள விண்ணப்பள்ளி தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (63). இவருக்கு கடந்த ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லை.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சுப்பிரமணி திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரது மனைவி சுசீலா சுப்பிரமணியை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • முத்திரையர் பாளையத்தில் காவலாளி மயங்கி விழுந்து இறந்து போனார். புதுவை முத்திரையர் பாளையம் ஜீவா வீதியை சேர்ந்தவர் கலைவாணன்(வயது48). இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், விக்னேஷ் மற்றும் தயாநிதி ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
    • உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    புதுச்சேரி:

    முத்திரையர் பாளையத்தில் காவலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.

    புதுவை முத்திரையர் பாளையம் ஜீவா வீதியை சேர்ந்தவர் கலைவாணன்(வயது48). இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், விக்னேஷ் மற்றும் தயாநிதி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இருவரும் லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரியில் படித்து வருகின்றனர். பாப்ஸ்கோவில் பணிபுரிந்து வந்த கலைவாணனை கடந்த 6 ஆண்டுகளுக்கு ஆட்குறைப்பு நடவடிக்கையால் பணியில் இருந்து நீக்கிவிட்டதால் அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இதற்கிடையே கலைவாணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவருக்கு நீரழிவு நோய் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கலைவாணன் வீட்டில் இருந்த போது திடீரென மயங்கி சாய்ந்தார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கலைவாணன் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மகன் விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றி தற்போது விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
    • திடீரென மயக்கம் ஏற்பட்டு இறந்துள்ளார்.

    நெல்லை:

    பாளை கே.டி.சி. நகர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னிருகை பெருமாள். இவரது மனைவி ஆனந்தி தேவி (வயது 53).

    இவர் சீவலப்பேரியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றி தற்போது விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

    சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த இவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

    உடனே அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    • மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது காண்டிராக்டர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
    • இவருக்கு ராணி என்ற மனைவியும், 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. மற்ற 2 மகள்கள் படித்து விட்டு வீட்டில் உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை எல்லைபிள்ளை சாவடி வாஞ்சிநாதன் வீதியை சேர்ந்தவர் அப்பாவு. இவர் மொசைக் காண்டிராக்டர் வேலை செய்து வந்தார். இவருக்கு ராணி என்ற மனைவியும், 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. மற்ற 2 மகள்கள் படித்து விட்டு வீட்டில் உள்ளனர்.

    கடந்த 25 நாட்களுக்கு முன்பு அப்பாவுவுக்கு கண் கோளாறு ஏற்பட்டது. இதற்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    வாரந்தோறும் அவர் தனது மனைவியுடன் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கண் பரிசோதனை செய்து கொண்டு வருவது வழக்கம்.

    அதுபோல் அப்பாவு தனது மனைவி ராணியுடன் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கண் பரிசோதனை செய்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பு கொண்டிருந்தார்.

    மறைமலை அடிகள் சாலையில் அந்தோணியார் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென அப்பாவுவுக்கு மயக்கம் ஏற்பட்டது.

    உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி ராணி கணவரை ஆட்டோ மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அப்பாவு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ராணி கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×