search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயங்கி விழுந்து"

    • பொன்னாளுக்கு திடீரென தலைசுற்ற ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.
    • பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பொன்னாள் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி இச்சிபாளையம் காலனியை சேர்ந்தவர் தங்கவேல் (65). இவரது தாயார் பொன்னாள் (86). இவர் தனது மகனின் வீட்டின் அருகிலேயே தனியாக வசித்து வருகிறார்.

    100 நாள் வேலைக்கு சென்று வரும் பொன்னாள் சம்ப வத்தன்று காலையில் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். சுமார் 10 மணியளவில் பொன்னாளுக்கு திடீரென தலைசுற்ற ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.

    அருகில் இருந்தவர்கள் உடனடி யாக அவரை மீட்டு கொடுமுடி யில் உள்ள தனியார் மருத்துவம னையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பொன்னாள் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திடீரென நடந்து சென்றவர் மயங்கி கீழே விழுந்தார்.
    • பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே தென்னரசு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் தவிட்டுப்பா ளையம் பகுதியை சேர்ந்த வர் தென்னரசு (30). சம்பவத்த ன்று இவர் அந்தியூர் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை பகுதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென நடந்து சென்றவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே தென்னரசு இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

    • வேலைக்கு சென்ற ஜீவா திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார்
    • அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே ஜீவா இறந்து விட்டதாகத் தெரிவித்தார்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கோவிந்தராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால் (72). சத்தியமங்கலத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி ஜீவா (60). இவரும் சத்திய மங்கலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்.மகனுக்கு திருமணமாக வில்லை.

    நேற்று காலை வழக்கம் போல ஜீவா வேலைக்கு சென்றுள்ளார். மாலை சுமார் 5.30 மணியளவில் அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார். உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே ஜீவா இறந்து விட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து, சத்தியங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சம்பவத்தன்று சுப்பிரமணி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
    • டாக்டர் பரிசோதனை செய்து விட்டு சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள விண்ணப்பள்ளி தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (63). இவருக்கு கடந்த ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லை.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சுப்பிரமணி திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரது மனைவி சுசீலா சுப்பிரமணியை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகாலை 3 மணிக்கு நாடகத்தில் ஆடிப்பாடி மிக வேகமாக உச்சகட்டத்தில் பாடி கொண்டு நடனம் ஆடி கொண்டிருந்தார் ராஜய்யன். அடுத்த சில வினாடியிலேயே அவர் அப்படியே சரிந்து கீழே விழுந்தார்.
    • அவரது உடலுக்கு ஏராளமான நாடக நடிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். நாடக கலைஞர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்துள்ள உக்கடம் அருகே குப்பன்துறை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் மழை வேண்டி இரணியன் நாடகம் நடத்துவது வழக்கம்.

    இந்த நாடகத்தில் அதே ஊரை சேர்ந்த ராஜய்யன் (62) என்பவர் முன் நின்று நடத்துவதோடு அவரும் நாடகத்தில் நரசிம்மன் வேடத்திலும், நாரதர் வேடத்திலும் நடித்து வந்தார்.

    இவருடைய பாடலையும், நடிப்பையும் பலரும் ரசித்து கொண்டு இருப்பதால் பல வருடங்களாக இந்த நாடகம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2 நாட்கள் இந்த நாடகம் நடைபெறுவது வழக்கம்.

    அதேப்போல் இந்த வருடத்திற்கான நாடகம் நடந்து கொண்டிருந்தது. இரவு வழக்கம்போல் நடந்து கொண்டிருந்தது. ராஜய்யன் நாடகத்தில் பங்கேற்று பாட்டு பாடிய படி நடித்துக் கொண்டிருந்தார். விடிய, விடிய நாடகம் நடந்து கொண்டிருந்தது.

    அதிகாலை 3 மணிக்கு நாடகத்தில் ஆடிப்பாடி மிக வேகமாக உச்சகட்டத்தில் பாடி கொண்டு நடனம் ஆடி கொண்டிருந்தார் ராஜய்யன்.

    அப்போது திடீரென அவர் ஒரு நிமிடம் அப்படியே நின்றார். அடுத்த சில வினாடியிலேயே அவர் அப்படியே சரிந்து கீழே விழுந்தார்.

    உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கார் மூலம் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜய்யன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரிய வந்தது.

    பின்னர் அவரது உடல் குப்பன்துறைக்கு எடுத்து செல்லப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமான நாடக நடிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். நாடக கலைஞர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×