search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The actor"

    • அதிகாலை 3 மணிக்கு நாடகத்தில் ஆடிப்பாடி மிக வேகமாக உச்சகட்டத்தில் பாடி கொண்டு நடனம் ஆடி கொண்டிருந்தார் ராஜய்யன். அடுத்த சில வினாடியிலேயே அவர் அப்படியே சரிந்து கீழே விழுந்தார்.
    • அவரது உடலுக்கு ஏராளமான நாடக நடிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். நாடக கலைஞர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்துள்ள உக்கடம் அருகே குப்பன்துறை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் மழை வேண்டி இரணியன் நாடகம் நடத்துவது வழக்கம்.

    இந்த நாடகத்தில் அதே ஊரை சேர்ந்த ராஜய்யன் (62) என்பவர் முன் நின்று நடத்துவதோடு அவரும் நாடகத்தில் நரசிம்மன் வேடத்திலும், நாரதர் வேடத்திலும் நடித்து வந்தார்.

    இவருடைய பாடலையும், நடிப்பையும் பலரும் ரசித்து கொண்டு இருப்பதால் பல வருடங்களாக இந்த நாடகம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2 நாட்கள் இந்த நாடகம் நடைபெறுவது வழக்கம்.

    அதேப்போல் இந்த வருடத்திற்கான நாடகம் நடந்து கொண்டிருந்தது. இரவு வழக்கம்போல் நடந்து கொண்டிருந்தது. ராஜய்யன் நாடகத்தில் பங்கேற்று பாட்டு பாடிய படி நடித்துக் கொண்டிருந்தார். விடிய, விடிய நாடகம் நடந்து கொண்டிருந்தது.

    அதிகாலை 3 மணிக்கு நாடகத்தில் ஆடிப்பாடி மிக வேகமாக உச்சகட்டத்தில் பாடி கொண்டு நடனம் ஆடி கொண்டிருந்தார் ராஜய்யன்.

    அப்போது திடீரென அவர் ஒரு நிமிடம் அப்படியே நின்றார். அடுத்த சில வினாடியிலேயே அவர் அப்படியே சரிந்து கீழே விழுந்தார்.

    உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கார் மூலம் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜய்யன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரிய வந்தது.

    பின்னர் அவரது உடல் குப்பன்துறைக்கு எடுத்து செல்லப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமான நாடக நடிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். நாடக கலைஞர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×