என் மலர்
நீங்கள் தேடியது "The teenager died"
- திடீரென மனோஜ்குமாருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
- பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த கே.ஜி.வலசு, மேற்கு தலவுமலை, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்வகுமார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இதில் 2-வது மகன் மனோஜ்குமார் (20). டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்டோர் இன்சார்ஜாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் மனோஜ்குமாருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு சரியாக சாப்பிட முடியாமல் உடல் எடை குறைந்தது.
இதனையடுத்து அவர் தான் வேலை பார்த்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது குடல் பகுதியில் புண் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதற்காக அவர் மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டார்.
பின்னர் மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது மனோஜ்குமாருக்கு கல்லீரல் பாதிப்பு மற்றும் தைராய்டு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
மருத்துவரின் அறிவுரையின் பேரில் ஈரோட்டில் மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மனோஜ்குமார் சேர்ந்தார்.
இந்நிலையில் திடீரென மனோஜ்குமாருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவரை மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மனோஜ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தண்டவாளத்தில் மயங்கி கிடந்தார்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
காட்பாடி விரிஞ்சிபுரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே வடுகன்பட்டி என்ற இடத்தில் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ஒரு ரெயிலில் பயணம் செய்த வாலிபர் ஓடும் ரெயிலில் தவறி விழந்த அடிபட்டு மயங்கி கிடந்தார்.
அவரை அங்கிருந்து பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
- படிக்கட்டில் பயணம் செய்ததால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஒரிசா மாநிலம் ரூர்கேலா ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநில பெங்களூர் வரை செல்லும் விரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வாணியம்பாடி கேத்தாண்ட ப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது.
அப்போது படிக்கட்டில் பயணம் செய்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் திடீரென தவறி விழுந்து அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் புஷ்பா வழக்கு பதிவு செய்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாடு விடும் விழாவில் விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
திருப்பத்தூர் மாவட்டம் உமராபாத் அருகே உள்ள புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் என்பவரது மகன் வெங்கடேசன் (வயது 24) ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 17-ந் தேதி லத்தேரி அருகே உள்ள பனமடங்கி கிராமத்தில் மாடு விடும் விழா நடந்தது. இதில் வேடிக்கை பார்ப்பதற்காக வெங்கடேசன் சென்றார்.
அப்போது வேகமாக ஓடி வந்த காளை ஒன்று வெங்கடேசனை முட்டி தூக்கி வீசியது.
இதில் அவரது தலை தொண்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பனமடங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுபோதையில் விபரீதம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த பால்நாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாதுஷா.
அவரது மகன் ஷாதிக்பாஷா (வயது 33). இவர் பக்கிரிதக்கா பகுதியில் உள்ள மாமியார் வீட்டில் மனைவி முபினா மற்றும் குழந்தைகளுடன் தங்கி வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் வெளிநாட்டில் இருந்து அவரது உறவினர் வந்துள்ளார்.
தொடர்ந்து உறவினருடன் இரவில் ஏலகிரிகிராமம் ஏரிக்கரையில் அமர்ந்து மது அருந்தினர். பின்னர் வீட்டிற்கு செல்ல உறவினர் பைக்கை எடுத்த போது சாதிக் பாஷா சிறுநீர் கழித்து விட்டு வருவதாக கூறிவிட்டு ஏரிக்கரைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வராததால் உறவினர் அங்கு சென்று பார்த்தபோது அவர் இல்லாததால் வீட்டுக்கு சென்று இருப்பார் என்று நினைத்து வீட்டிற்குச் சென்றார். அங்கு சென்று பார்த்தபோது சாதிக் பாஷா இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சாதிக் பாஷாவின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடிப் பார்த்தபோது அவரது செருப்பு அங்கேயே இருந்தது.
இரவு நேரம் என்பதால் அவர்கள் அங்கிருந்து வந்து விட்டனர். நேற்று காலையில் மதகு அருகே ஏரியில் சாதிக் பாஷா தண்ணீரில் மூழ்கி இறந்து கிடப்பது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் நாற்றம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரில் மிதந்து இருந்த சாதிக் பாஷாவின் உடலை மீட்டனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மது போதையில் ஏரியில் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது.
- புத்தாண்டு தினத்தில் அதிக மது குடித்த நிலையில் விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் கொசப்பேட்டை அவல்காரர் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 38). இவரது மனைவி மோனிகா தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.
குடி பழக்கத்திற்கு ஆளான அருண்குமார் வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால் மோனிகா கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார்.
கடந்த புத்தாண்டு தினத்தன்று இரவு அருண்குமார் அளவுக்கு அதிகமாக மது குடித்தார்.
வீட்டின் அருகே நடந்து சென்ற அவர் அந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் தவறி விழுந்தார்.
இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் மோனிகா அவரை தேடிச் சென்றார்.அப்போது கால்வாயில் அருண்குமார் விழுந்து கிடந்தை கண்டு திடுக்கிட்டார்.
உடனடியாக அவரை மீட்டு வேலூர் பென்ட்லெண்ட் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அருண்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் வேலூர் தெற்கு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
- யார் அவர்? விசாரணை
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா அடுத்த கிங்கினி அம்மன் கோவில் அருகே 38 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று முன்தினம் பைக்கில் இருந்து தவறி சாலை ஓரம் விழுந்து கிடந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அந்த வழியாக வந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து யார் அவர் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தன்னிடம் தகவல் தெரிவிக்காததால் விரக்தி
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி,
வாணியம்பாடி அருகே கலந்திரா கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி (வயது 25). இவர் வெளியூரில் பொக்லைன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.
தீபாவளி விடுமுறையையொட்டி ரஜினி ஊருக்கு வந்துள்ளார். அப் போது அவருடைய அண்ணன் ராஜே சுக்கு இன்னும் 2 நாட்களில் திருமணம் நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தன்னிடம் எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் அண்ணனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததால் மனமுடைந்த ரஜினி வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்க வில்லை. இந்த நிலையில் ரஜினிக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் மற்றும் அவரது உடைகள், செல்போன் ஆகியவை கிராமத்துக்கு அருகில் உள்ள பாப்பானேரி குளம் பகுதியில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் மற்றும் தாலுகா போலீசார் விரைந்து சென்றனர். தீயணைப்பு துறையினர் சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின்பு ரஜினியை பிணமாக மீட்டனர். உடலை தீயணைப்பு துறையினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்குப்ப திவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அண்ணனின் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் தம்பி உயிரிழந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 4 கிலோ மீட்டர் தூரம் உடல் இழுத்து வரப்பட்டது
- பயணிகள் அலறி அடித்து ஓட்டம்
வேலூர்:
சென்னையில் இருந்து மங்களூரு நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் நள்ளிரவு சேவூர் பகு தியை தாண்டி வந்து கொண் டிருந்தது.
வாலிபர் சாவு
அப்போது ரெயி லில் சுமார் 30 வயது மதிக்கத் தக்க வாலிபர் ஒருவர் அடிப் பட்டு இறந்தார் . அவரது உடல் ரெயில் என்ஜினில் மாட்டிக்கொண்டது. இதையறிந்த ரெயில்வே ஊழியர்கள் ரெயிலை நிறுத்தி உடலை மீட்க முயன்றனர்.
இரவு நேரம் என்பதாலும், உடலை மீட்க முடியாததாலும் அந்த முயற்சியை கைவிட்டனர். பின்னர் ரெயிலை காட் பாடி ரெயில் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இத னால் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் என்ஜின் முன்பு சிக்கிய உடலுடன் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தது.
பயணிகள் அதிர்ச்சி
அப்போது ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் என் ஜின் முன்னால் உடல் இருந் ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பெண்கள் சிலர் அலறியடித்து ஓடினர். இதனால் அங்கு பரபரப்புஏற்பட்டது. இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத் துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் காட்பாடியில் இருந்து 20 நிமிடங்கள் தாமதமாகரெயில் மங்களூரு நோக்கி புறப்பட்டு சென்றது.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாக்கியதால் இறந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் மகன் சுதாகர் (வயது 26) கட்டிடம் மேஸ்திரி வேலை செய்து வந்தார்.
விபத்து
கடந்த புதன்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் சுதாகர் தனது வீட்டிலிருந்து குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பெரும்பாடி அருகே உள்ள துரைப்பட்டி என்ற கிராமத்துக்கு அருகே வரும்போது லட்சுமி (65) என்ற பெண் மீது மோதியதாக கூறப்படுகிறது.
அப்போது இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சுதாகர் குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
லட்சுமி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சுதாகரின் தாயார் பொன்னியம்மாள் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் எனது மகன் சுதாகர் மோட்டார் சைக்கிளில் வரும்போது விபத்து ஏற்பட்டதாகவும் அப்போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் எனது மகன் சுதாகரை சரமாரியாக தாக்கியதால் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக கூறியுள்ளார்.
இதனிடையே சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் சுதாகர் பரிதாபமாக இறந்தார். அந்த விபத்து தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இறந்து போன சுதாகரின் உறவினர்கள் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு வந்து போலீசாரிடம் விபத்து என்ற வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்ய வேண்டும்.
விபத்து நடந்த போது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தாக்கியதால்தான் சுதாகர் இறந்துவிட்டார் என கூறினார்கள்.
இதனை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி கிராம மக்களிடம் சுதாகரின் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கையின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி அளித்தார்.
இறந்துபோன சுதாகருக்கு மோனிஷா என்ற மனைவி உள்ளார். திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது.
- அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நியூ ஜலால் பேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது முவம்மில் என்பவரின் மகன் முகமது மன்சூர் (வயது 19).
சோமாலபுரத்தை சேர்ந்த இவரது நண்பர் சுஜாய் ( 20) ஆகிய இருவரும் கடந்த 28-ந் பைக்கில் ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்தனர்.
சுற்றுலா முடிந்து மலை உச்சியில் இருந்து கீழே இறங்கியபோது முன்னால் சென்ற பைக் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். முகமது மன்சூர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஏலகிரிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.