என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஏரியில் தவறி விழுந்த வாலிபர் சாவு
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த பால்நாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாதுஷா.
அவரது மகன் ஷாதிக்பாஷா (வயது 33). இவர் பக்கிரிதக்கா பகுதியில் உள்ள மாமியார் வீட்டில் மனைவி முபினா மற்றும் குழந்தைகளுடன் தங்கி வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் வெளிநாட்டில் இருந்து அவரது உறவினர் வந்துள்ளார்.
தொடர்ந்து உறவினருடன் இரவில் ஏலகிரிகிராமம் ஏரிக்கரையில் அமர்ந்து மது அருந்தினர். பின்னர் வீட்டிற்கு செல்ல உறவினர் பைக்கை எடுத்த போது சாதிக் பாஷா சிறுநீர் கழித்து விட்டு வருவதாக கூறிவிட்டு ஏரிக்கரைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வராததால் உறவினர் அங்கு சென்று பார்த்தபோது அவர் இல்லாததால் வீட்டுக்கு சென்று இருப்பார் என்று நினைத்து வீட்டிற்குச் சென்றார். அங்கு சென்று பார்த்தபோது சாதிக் பாஷா இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சாதிக் பாஷாவின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடிப் பார்த்தபோது அவரது செருப்பு அங்கேயே இருந்தது.
இரவு நேரம் என்பதால் அவர்கள் அங்கிருந்து வந்து விட்டனர். நேற்று காலையில் மதகு அருகே ஏரியில் சாதிக் பாஷா தண்ணீரில் மூழ்கி இறந்து கிடப்பது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் நாற்றம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரில் மிதந்து இருந்த சாதிக் பாஷாவின் உடலை மீட்டனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மது போதையில் ஏரியில் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்