search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரியில் தவறி விழுந்த வாலிபர் சாவு
    X

    ஏரியில் தவறி விழுந்த வாலிபர் சாவு

    • மதுபோதையில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த பால்நாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாதுஷா.

    அவரது மகன் ஷாதிக்பாஷா (வயது 33). இவர் பக்கிரிதக்கா பகுதியில் உள்ள மாமியார் வீட்டில் மனைவி முபினா மற்றும் குழந்தைகளுடன் தங்கி வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் வெளிநாட்டில் இருந்து அவரது உறவினர் வந்துள்ளார்.

    தொடர்ந்து உறவினருடன் இரவில் ஏலகிரிகிராமம் ஏரிக்கரையில் அமர்ந்து மது அருந்தினர். பின்னர் வீட்டிற்கு செல்ல உறவினர் பைக்கை எடுத்த போது சாதிக் பாஷா சிறுநீர் கழித்து விட்டு வருவதாக கூறிவிட்டு ஏரிக்கரைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வராததால் உறவினர் அங்கு சென்று பார்த்தபோது அவர் இல்லாததால் வீட்டுக்கு சென்று இருப்பார் என்று நினைத்து வீட்டிற்குச் சென்றார். அங்கு சென்று பார்த்தபோது சாதிக் பாஷா இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சாதிக் பாஷாவின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடிப் பார்த்தபோது அவரது செருப்பு அங்கேயே இருந்தது.

    இரவு நேரம் என்பதால் அவர்கள் அங்கிருந்து வந்து விட்டனர். நேற்று காலையில் மதகு அருகே ஏரியில் சாதிக் பாஷா தண்ணீரில் மூழ்கி இறந்து கிடப்பது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் நாற்றம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரில் மிதந்து இருந்த சாதிக் பாஷாவின் உடலை மீட்டனர்.

    இது குறித்து இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மது போதையில் ஏரியில் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது.

    Next Story
    ×