search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காளை முட்டியதில் வாலிபர் சாவு
    X

    காளை முட்டியதில் வாலிபர் சாவு

    • மாடு விடும் விழாவில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் உமராபாத் அருகே உள்ள புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் என்பவரது மகன் வெங்கடேசன் (வயது 24) ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 17-ந் தேதி லத்தேரி அருகே உள்ள பனமடங்கி கிராமத்தில் மாடு விடும் விழா நடந்தது. இதில் வேடிக்கை பார்ப்பதற்காக வெங்கடேசன் சென்றார்.

    அப்போது வேகமாக ஓடி வந்த காளை ஒன்று வெங்கடேசனை முட்டி தூக்கி வீசியது.

    இதில் அவரது தலை தொண்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பனமடங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×