என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாரி மோதி வாலிபர் சாவு
- வடமாநிலத்தை சேர்ந்தவர்
- சாலையை கடந்த போது விபரீதம்
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வாலிபர் ஒருவர் காட்பாடி சாலையை கடக்க முயன்றார். அப்போது காட்பாடியில் இருந்து வேலூர் நோக்கி வந்த லாரி வாலிபர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். வாலிபரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வாலிபரின் சட்டையை சோதனை செய்தபோது அவரது ஆதார் கார்டு இருந்தது. அதில் அசாம் மாநிலம் சிராங் பகுதியை சேர்ந்த பிக்கின் முச்சாரி (வயது 30) என தெரிய வந்தது.
விபத்தில் சிக்கி இறந்த வாலிபர் வேலூரில் வேலை செய்து வருகிறாரா அல்லது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்தாரா என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






