search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
    X

    மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

    • மின் ஒயர் மீது கை உரசி பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த சின்ன வரிகம் ஊராட்சி மேக்னா பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் தினகரன் (வயது 24), லாரி டிரைவர்.

    இவர் இன்று காலை ஆம்பூர் பெரிய வரிகத்தில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலைக்கு லோடு ஏற்றி சென்றார்.

    தொழிற்சாலையில் லாரியின் பின்புறத்தில் கட்டப்பட்டிருந்த தார்பாயை கழற்றினார்.

    அப்போது தினகரனின் கை, லாரியின் மேல் புறத்தில் சென்ற மின் ஒயர் மீது உரசியது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் உடலில் மின்சாரம் பாய்ந்து, தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    தினகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×