search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ekadasi"

    • தானத்தில் சிறந்தது அன்னதானம்.
    • அன்னதானத்தை ஏகாதசி அன்று செய்யக்கூடாது.

    இன்று (வியாழக்கிழமை) ஷட்திலா ஏகாதசி ஆகும். ஷட் என்றால் ஆறு என்ற பொருள். தில என்றால் எள் என்று பொருள்.

    ஆறு வகையான எள் தானத்தை முன்னிலைப்படுத்தி இருப்பது ஷட்திலா ஏகாதசி. இந்த ஏகாதசி நிறைவின் போது (துவாதசியில்) அன்னத்தை அளிப்பதன் மூலமாக பெரும் பலனை அடைய முடியும்.

    தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னதானம் செய்து அற்புதமான பலன்களை அடைவதற்கான ஏகாதசி விரதத்தில் ஒன்று ஷட்திலா ஏகாதசி. ஆனால், இந்த அன்னதானத்தை ஏகாதசி அன்று செய்யக்கூடாது. துவாதசி அன்று செய்யவேண்டும்.

    இந்த மாதம் ஏகாதசி விரதம், குரு வாரத்தில் வருகிறது. அதாவது பசிப் பிணி தீர்ப்பதற்கு வழி சொன்ன குருவின் தினமாகிய வியாழக்கிழமை இந்த ஏகாதசி விரதம் வருவது மிக மிகச் சிறப்பு.

    • ஏகாதசியில் விரதம் இருந்து, பெருமாளை ஆராதிப்பார்கள்.
    • விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வார்கள்.

    பௌர்ணமி விரதம், அமாவாசை விரதம், சஷ்டி விரதம் என பல வகையான விரதங்கள் உள்ளது. ஆனால் ஏகாதசி விரதத்துக்கு தனித்துவமான மகத்துவம் உண்டு.  நம்மை செம்மையாகவும் சிறப்புடனும் குறைவின்றி வாழச் செய்வார் ஏழுமலையான். பெருமாளை வணங்குவதற்கும் வழிபடுவதற்கும் நாம் வரங்களைப் பெறுவதற்கும் எத்தனையோ நாட்கள் இருக்கின்றன. அதேபோல், மார்கழியின் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுவது போல, ஒவ்வொரு மாதமும் வருகிற ஏகாதசியும் ரொம்பவே விசேஷம். ஏகாதசியில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் ஏராளம்.

    ஏகாதசியில் விரதம் இருந்து, பெருமாளை ஆராதிப்பார்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வார்கள். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கம்.

    திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனவேதான், ஏகாதசியன்று விரதம் அனுஷ்டிப்படுகிறது.

    இந்த விரதத்தை அனுஷ்டித்தால்,நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார் எனது ஐதீகம்.

    சர்வ ஏகாதசி நாளான நாளை, பெருமாளை நினைத்து வீட்டில் விளக்கேற்றுங்கள். பெருமாளின் திவ்ய நாமங்களைச் சொல்லி பாராயணம் செய்யுங்கள்.

    ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். ஏகாதசி உபவாசம் இருப்பது, இந்த ஜன்மாவை நமக்குக் கொடுத்த பரம்பொருளுக்கு, நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கை என்றே தர்மசாஸ்திரம் கூறுகிறது. 

    இதேபோல், ஏகாதசி நாளில் இருந்து எவருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குவதும் மிகுந்த புண்ணியத்தைத் தரக்கூடியது. வீட்டில் புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து பெருமாளைப் பிரார்த்தித்து, நைவேத்தியத்தை அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவது வளம் சேர்க்கும்.

    ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை செய்துவிட்டு மகாவிஷ்ணுவை மனதில் வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது. தாகசாந்திக்காக தண்ணீர் குடிக்கலாம். அதேபோல் உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம்.

    புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்யுங்கள். ஒரு கை துளசி பெருமாளுக்கு சார்த்துங்கள். அதேபோல், துளசி தீர்த்தம் பருகுங்கள். எல்லா நல்லதுகளும் தந்தருள்வார் வேங்கடநாதன். இன்னல் என்பதையெல்லாம் இல்லாது போகச் செய்வார் ஏழுமலையான்!

    • இன்று ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
    • வட மாநிலங்களில் பீஷ்ம ஏகாதசியை நிர்ஜலா ஏகாதசி என்று கொண்டாடி வருகிறார்கள்.

    பகவான் கிருஷ்ணரை, பீஷ்மர் வணங்கி விஷ்ணு சகஸ்ரநாமத்தை அருளி, உயிர் துறந்த அந்த நாள் தான் பீஷ்ம ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

    அந்த நன்னாளில் விரதமிருந்து, ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால், சகல செல்வ வளத்தையும் பெறலாம் என்பது நிச்சயம். பீஷ்ம ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் எந்த தடையுமின்று நேரடியாகவே சொர்கத்திற்கு செல்வார்கள் என்பது நம்பிக்கையாகும்.ஒவ்வொரு மாதத்திலும் பிரதமை முதல் சதுர்த்தசி வரை இரண்டு திதிகள் வருவதுண்டு. அதாவது வளர்பிறை பிரதமை முதல் பவுர்ணமி திதி வரையிலும், தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரையிலும் என இரண்டிரண்டு திதிகள் மாதந்தோறும் வருவது வழக்கம். இதில் ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி முதல் சதுர்தசி வரையிலும் வரும் ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு பலாபலன்களை நமக்கு வழங்கும்.

    உத்தராயண காலத்தில் வரும் அஷ்டமி, ஏகாதசி போன்ற தினங்களில் விரதமிருந்து வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். அந்த பருவத்தில் உயிர் நீத்தால் மோட்சம் கிடைக்கும் என்பது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். மஹாபாரதப் போரில் பிதாமகர் என்றழைக்கப்பட்ட பீஷ்மருக்கு, உத்தராயண காலத்தின் முதல் அஷ்டமி தினத்தில் தான் பகவான் கிருஷ்ணர் தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை காட்டி அவருக்கு மோட்சம் அளித்தார். அதன் காரணமாகவே அந்த தினத்தை இந்துக்கள் அனைவரும் பீஷ்மாஷ்டமி என்று கொண்டாடி வருகிறோம்.

    பகவான் கிருஷ்ணரை, பீஷ்மர் வணங்கி விஷ்ணு சகஸ்ரநாமத்தை அருளி, உயிர் துறந்த அந்த நாள் தான் பீஷ்ம ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இன்று பீஷ்மர் ஏகாதசி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நன்னாளில் விரதமிருந்து, ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால், சகல செல்வ வளத்தையும் பெறலாம் என்பது நிச்சயம்.

    வட மாநிலங்களில் பீஷ்ம ஏகாதசியை நிர்ஜலா ஏகாதசி என்று கொண்டாடி வருகிறார்கள். நிர்ஜலா ஏகாதசி என்றால் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல், ஸ்ரீமத் நாராயணனின் திருநாமங்களை உச்சரித்துகொண்டு இருக்க வேண்டும். ஒரு ஆண்டில் வரும் 24 ஏகாதசிகளில் முக்கியமான ஏகாதசி இந்த பீஷ்ம ஏகாதசி நாளாகும்.

    பீஷ்ம ஏகாதசி தினத்தன்று (இன்று) பானகம், பழங்கள், ஆடைகள், அன்னதானம் என தங்களால் இயன்றதை தானம் அளிப்பது முக்கியமாகும். மனிதர்கள் செய்யும் நல்லது கெட்டதுகளுக்கு ஏற்ப அவர்களுக்கு சொர்க்கமோ அல்லது நரகமோ கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால், இந்த பீஷ்ம ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் எந்த தடையுமின்று நேரடியாகவே சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பது நம்பிக்கையாகும்.

    • இந்த விழா வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • பகல் பத்து உற்சவம் 5 நாட்களும், ராப்பத்து உற்சவம் 5 நாட்களும் நடைபெறும்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று முதல் உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து உற்சவம் முதல் நாள் நிகழ்ச்சியுடன் தொடங்கி, வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    பகல் பத்து உற்சவம் 5 நாட்களும், ராப்பத்து உற்சவம் 5 நாட்களும் நடைபெறும். இன்று முதல் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே பகல் பத்து உற்சவமான இரண்டாயிரம் திருமொழி பாசுரங்களை 5 நாட்கள் தினமும் மாலையில் கேட்டருளுவார்.

    ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழி திருநாள் வருகிற 18-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    • கடந்த 2-ந் தேதி மட்டும் 2 லட்சத்து 16 ஆயிரத்து 39 பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • தினமும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கிய வைகுண்ட ஏகாதசி விழா நேற்று காலை நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெற்றது.

    வைகுண்ட ஏகாதசி விழா தொடக்க நாள் முதல் நேற்று வரை 20 நாட்களில் 14 லட்சத்து 45 ஆயிரத்து 289 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதில் சொர்க்கவாசல் திறக்கப்பட்ட கடந்த 2-ந் தேதி மட்டும் 2 லட்சத்து 16 ஆயிரத்து 39 பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த மாதம் 23-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மூலவர் ரெங்கநாதர் முத்தங்கியில் சேவை சாதித்தார். இதை காண தினமும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் சிறப்பு கட்டண சீட்டு முறையும் அமல்படுத்தப்பட்டு இருந்தது.

    மூலவரை தரிசிக்க நடப்பு ஆண்டு ரூ.1 கோடியே 92 லட்சத்து 93 ஆயிரத்து 600-க்கு கட்டண சீட்டு விற்கப்பட்டுள்ளது.

    • வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 22-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.
    • இன்று அதிகாலை 4 மணி முதல் காலை 5 மணி வரை சாற்றுமறையும் நடைபெற்றது.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 22-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் கடந்த 2-ந் தேதி நடைபெற்றது. ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளன்று திருக்கைத்தல சேவையும், 8-ம் நாளன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    10-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து நம்பெருமாள் நேற்று முன்தினம் இரவு முழுவதும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று நம்பெருமாள், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இயற்பா பிரபந்தம் தொடங்கியது.

    அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணி முதல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணி வரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெற்றது. மேலும் அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் காலை 5 மணி வரை சாற்றுமறையும் நடைபெற்றது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றது.

    • சொர்க்க வாசல் திறப்பு அன்று மட்டும் 2 லட்சத்து 16 ஆயிரத்து 39 பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • கடந்த 7 நாட்களில் ராப்பத்து உற்சவத்தில் 7.35 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 23-ந்தேதியிலிருந்து பகல் பத்து உற்சவம் தொடங்கி நடந்தது. பகல் பத்து உற்சவத்தின்போது ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வேறு அலங்காரங்களில் புறப்பாடாகி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஒவ்வொரு நாளும் அரையர்கள் சேவையுடன் நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பகல் பத்து உற்சவத்தின் 10 நாட்களில் மொத்தம் 4 லட்சத்து 99 ஆயிரத்து 87 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 10-ம் நாள் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாளை தரிசிக்க 81 ஆயிரத்து 754 பக்தர்கள் குவிந்தனர். இதைத்தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவம் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. 7-ம் திருநாளான நேற்று திருக்கைத்தல சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 7 நாட்களில் ராப்பத்து உற்சவத்தை 7 லட்சத்து 34 ஆயிரத்து 955 பேர் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்துள்ளனர்.

    ராப்பத்து உற்சவத்தில் முதல் நாள் நம்பெருமாள் பரமபத வாசல் வழியாக எழுத்தருளினார். நம்பெருமாளுடன் சேர்ந்து சொர்க்கவாசலை கடந்தால் சொர்க்கத்தை அடையலாம் என்ற நம்பிக்கையின் காரணமாக ஏராளமான அன்று மட்டும் 2 லட்சத்து 16 ஆயிரத்து 39 பக்தர்கள் கலந்து கொண்டனர். வைகுண்ட ஏகாதசி விழா தொடக்க நாள் முதல் நேற்று வரை 17 நாட்களில் 12 லட்சத்து 34 ஆயிரத்து 42 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இன்று இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
    • 11-ந்தேதி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

    பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். விழாவின் ராப்பத்து நிகழ்ச்சிகள் நடைபெறும்போது பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறக்கப்படும்.

    7-ம் திருநாளான வருகிற 8-ந்தேதி மட்டும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். 8-ம் திருநாளான 9-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. 9-ம் திருநாளான 10-ந் தேதி பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

    ராப்பத்து நிகழ்ச்சியின் 10-ம் நாளான 11-ந்தேதி காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். இன்று திறக்கப்படும் சொர்க்கவாசல், மேலும் 8 நாட்களுக்கு தினமும் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட நாட்களில் மூலவர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ராப்பத்து நிகழ்ச்சிகளிலும் நம்பெருமாள் ரத்தின அங்கி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    • ஸ்ரீரங்கம் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது.
    • 12-ந்தேதி நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடக்கிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது மட்டுமல்ல, பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்ற வரலாறும் இதற்கு உண்டு. அந்த ஆழ்வார்கள் யார் யாரென்று பார்ப்போமா?

    திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், திருமழிசை ஆழ்வார், பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார், ராமானுஜர், மதுரகவி ஆழ்வார் என்பவர்களே இந்த பன்னிரு ஆழ்வார்கள் ஆவர். இவர்களில் நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுப்பதற்காக ரெங்கநாதரால் உருவாக்கப்பட்டதே வைகுண்ட ஏகாதசி விழா என்பது சிறப்புக்குரியதாகும்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் ராப்பத்து திருவாய்மொழி திருநாளான வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றுடன் வைகுண்ட ஏகாதசி விழாவும் நிறைவு பெறுகிறது.

    • வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் நமக்கு காட்சி தருகிறார்.
    • வைகுண்ட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது நல்லது என்பது நம் முன்னோர்களின் கூற்று.

    வைகுண்டத்தில் தான் விஷ்ணு வசிக்கிறார். 'ஏகம்' என்பது 'ஒன்றை' குறிக்கின் றது. 'தசம்' என்பது பத்தை குறிக்கின்றது. ஒன்றையும் பத்தையும் கூட்டினால் 11. அமாவாசை வளர்பிறையில் பதினோராவது நாளில் ஒரு ஏகாதசியும், பவுர்ணமி தேய் பிறையில் பதினோராவது நாளில் மற்றொரு ஏகாதசி வருகிறது. மொத்தம் வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும்.

    இதில் மார்கழி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியை நாம் வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடி வருகிறோம். மற்ற ஏகாதசியில் நம்மால் விரதத்தை கடைபிடிக்க முடியவில்லை என்றாலும் இந்த மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது நல்லது என்பது நம் முன்னோர்களின் கூற்று. ஏகாதசி விரதமானது முதலில் தொடங்கப்பட்ட மாதமும் மார்கழி தான்.

    பெருமாள் கோவில்களில் இருக்கும் சொர்க்க வாசல் என்று கூறப்படும் அந்த கதவினை குறிப்பாக ஏன் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கிறார்கள் என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு இன்னும் இருந்துதான் வருகிறது. அந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக இந்த பதிவு.

    நம்முடைய இந்து புராண கதைகள் என்றாலே அது ஒருவருடைய கர்வத்தை அடக்குவதற்காகவோ அல்லது தீயவர்களிடமிருந்து நல்லவர்களை காப்பாற்றுவதற்காகவோ அல்லது அதர்மத்தை அழிப்பதற்காகவோ தான் இருக்கும். நம் வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக நம் முன்னோர்கள் நமக்கு கூறிவிட்டு சென்றுள்ள வழிபாடுகளும் விரதங்களும் நமக்கு நன்மை தரும் வகையில் அமைந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு நல்ல புராணக்கதையைத்தான் நாம் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

    ஒரு நாள் இந்த பூலோகத்தில் உயிர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் விஷ்ணுவிற்கு வந்தது. உயிர்களைப் படைக்கும் வேலையை செய்வதற்கு ஒரு வரை நியமிக்க வேண்டும் அல்லவா? அதற்காக பிரம்மனை படைத்தார். உயிர்களையெல்லாம் இந்த பூலோகத்தில், பிரம்மாவான நான் தான் படைக்கப் போகிறேன், என்ற கர்வமானது பிரம்மனுக்கும் வந்துவிட்டது. தலைக் கணம் ஏறிவிட்டது. இந்த பிரம்மனின் தலைக்கணத்தை அடக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்த விஷ்ணு தன் காதுகளில் இருந்து இரு அசுரர்களை வெளிக்கொண்டு வந்தார். அந்த இரண்டு அரக்கர்களின் பெயர் லோகன், கண்டன்.

    இந்த இரண்டு அசுரர்களின் கோரதாண்டவத்தை கண்ட பிரம்மாவின் கர்வமானது அடங்கி விட்டது. ஏனென்றால் இந்த இரண்டு அரக்கர்களும் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டவர்கள் அல்லவா? இவர்களுக்கு சக்தி அதிகம். அதாவது ஒரு நல்ல செயலுக்காக உருவாக்கப்பட்ட அரக்கர்கள் இவர்கள்.

    'பிரம்மனின் தலைக் கணத்தை நீக்கிய உங்களுக்கு என்ன வரம் வேண்டும்' என்று விஷ்ணு அந்த இரண்டு அரக்கர்களையும் நோக்கி கேட்டார். அந்த இரண்டு அரக்கர்களும் வித்தியாசமான ஒரு வரத்தை விஷ்ணுவிடம் கேட்டனர். விஷ்ணு பகவானால் படைக்கப்பட்ட அரக்கர்கள் அல்லவா, இவர்களுக்கும் தலைக்கணம் வந்து விட்டது.

    அப்போது விஷ்ணு பகவானான நீங்கள் அரக்கர்களான எங்கள் இருவரிடமும் போர்புரிய வேண்டும்' என்ற ஒரு கோரிக்கையை வைத்தனர். விஷ்ணுவும் இதை ஏற்றுக் கொண்டார். விஷ்ணு பகவான் வடக்கு வாசலின் வழியாக வந்து இந்த இரண்டு அரக்கர்களிடமும் போரினை தொடங்கினார். விஷ்ணுவிடம் பரமபதத்தில் போரிட்ட அந்த இரண்டு அரக்கர்களும் தோல்வி அடைந்து விஷ்ணுவின் பாதங்களில் சரண் அடைந்தனர்.

    பகவானே! 'தங்களின் சக்தியால் உருவாக்கப்பட்ட நாங்கள் வைகுண்டத்தில் உன்னிடமே இருக்க வேண்டும்' என்று வேண்டி வரத்தை கேட்டனர். தோல்வியுற்ற இந்த இரண்டு அரக்கர்களும் வடக்கு வாசலின் வழியாக பெருமாளை சென்றடைந்தனர். இரண்டு அரக்கர்களும், பெருமாளை சென்றடைந்த இந்த நாளைத்தான் வைகுண்ட ஏகாதேசி திருநாளாக கொண்டாடி வருகிறோம். இரண்டு அரக்கர்களும் இன்றுவரை பெருமாளின் இருபுறங்களிலும் சங்கு சக்கரமாக மாறி காட்சி தருகின்றனர். இந்த வடக்குவாசல் தான் சொர்க்க வாசலாக கூறப்படுகிறது.

    இதன்மூலம் 'வைகுண்ட ஏகாதசிஅன்று சொர்க்க வாசல் வழியாக வெளியில் தரிசனத்திற்காக வரும் பெருமாளை தரிசிப்பவர்களுக்கும், பெருமாளை சொர்க்கவாசல் வழியாக பின் தொடருபவர்களுக்கும் பாவங்கள் நீங்கி முக்தி அளிக்க வேண்டும்' என்று அந்த அசுரர்கள் பெருமாளிடம் வரத்தை வாங்கிக்கொண்டனர். இதன் மூலமாகத்தான் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் நமக்கு காட்சி தருகிறார்.

    அந்த விஷ்ணுவால் படைக்கப்பட்ட அசுரர்கள், தெரியாமல் செய்த தவறினை மன்னித்து அவர்களுக்கு மோட்சம் தந்து தன்னுடனே வைத்துக் கொண்ட அந்தப் பெருமாள், மனித பிறப்பு எடுத்து தெரியாமல் தவறு செய்யும் நம்மையும் மன்னித்து மோட்சத்திற்கு அழைத்துச் செல்வார். ஆகவே நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளில் இருந்து விமோசனம் பெற வேண்டுமென்றால் பெருமாளை இந்த ஏகாதசி அன்று சொர்க்க வாசலில் தரிசனம் செய்யுங்கள்.

    • இன்று இரவு 10 மணி வரையிலும் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
    • 12-ந்தேதி வைகுண்ட ஏகாதாசி திருவிழா நிறைவடைகிறது.

    பூலோக வைகுண்டமாகவும், 108 வைணவ திருத் தலங்களில் முதன்மையானதாகவும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    பகல் பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் 20 நாட்களும் பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் ரெங்கநாதர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார்.

    பகல் பத்து உற்சவத்தின் போது நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலும், ராப்பத்து உற்சவத்தின்போது திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் எழுந்தருளி சேவை சாதிப்பார். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 23-ந்தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். பகல் பத்து உற்சவத்தின் 10-வது நாளான நேற்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்பட்டது. முன்னதாக 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பாண்டியன் கொண்டை, ரத்தின அங்கி, கிளி மாலை மற்றும் திருவாபரணங்கள் அணிந்து புறப்பட்டார்.

    பின்னர் ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியாக குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்க கொடிமரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்க வாசலை வந்தடைந்தார். சரியாக 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ரெங்கா, ரெங்கா கோஷத்துடன் சொர்க்கவாசலை கடந்தனர். சொர்க்கவாசலை கடந்த நம்பெருமாள் மணல் வெளியில் உள்ள திருக்கொட்டகையில் 5 மணி வரை காட்சி அளித்தார்.

    இந்த நிகழ்வில் தமிழக அரசின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கலெக்டர் மா.பிரதீப்குமார், மாதவரம் எம்.எல்.ஏ. மூர்த்தி, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். வைகுண்ட ஏகாதசி தினமான இன்று காலை 4.45 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

    சொர்க்கவாசல் திறப்பு தினமான இன்று முதல் ராப்பத்து எனப்படும் திருவாய் மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்து உற்சவத்தின் போது உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பார்.

    ராப்பத்து உற்சவத்தின் ஏழாம் திருநாளான வருகிற 8-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 9-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 11-ந்தேதி தீர்த்த வாரியும், 12-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதாசி திருவிழா நிறைவடைகிறது.

    பக்தர்கள் வசதிக்காக குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தன. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருச்சி போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் உள்பிரகாரத்தில் 117 சி.சி.டி.வி. கேமராக்களும், கோவிலுக்கு வெளியே 92 சி.சி.டி.வி. கேமராக்களும் என மொத்தம் 209 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

    • ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து திருமாலைத் துதித்தால் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றோடு, வைகுண்டவாசமும் வழங்குவாரென புராணங்களில் கூறப்படுகிறது
    • உலகில் பிறந்தவர் வைகுந்தத்தில் இருந்து அருளும் நாராயணன் திருவடியை இறுதியில் அடைவர் என்பது உலக இயல்பு.

    மாதத்தில் ஏகாதசி திதி 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும். 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்து வரும் 11ம் நாள் சுக்கில பட்ச ஏகாதசி. பவுர்ணமி அடுத்த 11ம் நாள் கிருஷ்ணபட்ச ஏகாதசி ஆகும். சில ஆண்டில் இருபத்தைந்து ஏகாதசிகள் வரும். பத்ம புராணத்தில் உத்தர காண்டத்தில் இவற்றுக்குத் தனித்தனிப் பெயர்களும், பயனடைந்தவர்கள் வரலாறும் உள்ளது.

    ஏகாதசி வரலாறு

    முரன் என்னும் அசுரன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை தந்தான். அவனிடமிருந்து காக்க ஈசனை வேண்ட மகாவிஷ்ணுவிடம் சரணடைய கூறினார் சிவன். நம்பியோரைக் காக்கும் நாராயணன், அசுரனோடு 1000 ஆண்டுகள் போர் புரிந்து களைத்து பத்ரி காஸ்ரமத்தில் ஒரு குகையில் சிறிது படுத்து ஓய்வெடுத்தார். அந்நேரம் திருமாலை 'முரன்' கொல்ல முனைந்தபோது, அவரின் சக்தி ஒரு பெண் வடிவில் உடலிலிருந்து வெளிப்பட்டது. அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது. விழித்தெழுந்த நாராயணன், அந்த சக்திக்கு "ஏகாதசி" எனப் பெயரிட்டு "உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன்" என வரமளித்து அச்சக்தியை உள்வாங்கிக் கொண்டார்.

    முக்கோடி ஏகாதசி

    ராவணனின் கொடுமைகளால் முக்கோடி தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி மாத சுக்லபட்ச (வளர்பிறை) ஏகாதசியன்று திருமாலை வணங்கித் தங்கள் துன்பங்களைக் கூறினர். திருமாலும் காட்சி தந்து அவர்களைக்காத்து துன்பத்தை போக்கி காத்ததால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனப்பட்டது.

    ஏகாதசி விரத பலன்

    தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைய அமுதம் வெளிப்பட்டது . துவாதசியன்று மகாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளிப்பட்டு திருக்காட்சி தந்தாள். அதிலிருந்து ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து திருமாலைத் துதித்தால் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றோடு, வைகுண்டவாசமும் வழங்குவாரென புராணங்களில் கூறப்படுகிறது.

    வைணவ ஆகமங்களில் மகாவிஷ்ணு ஆனி மாத சுக்ல ஏகாதசி முதல் ஐப்பசி மாத சுக்ல ஏகாதசி வரை உள்ள நாட்களில் யோகநித்திரை செய்கிறார். ஆனி சுக்ல ஏகாதசிக்கு சயனி ஏகாதசி என்றும் ஆவணி சுக்ல ஏகாதசி திருமால் வலப்பக்கம் திரும்பி படுப்பதை பரிவர்த்தன ஏகாதசி என்பர். கார்த்திகை மாத சுக்ல ஏகாதசியன்று எழுந்திருப்பதால் உத்தான ஏகாதசி என்றும் பிரபோத ஏகாதசி என்றும் பெயர் பெற்றன. கார்த்திகை ஏகாதசிக்கு கைசிக ஏகாதசி என்றும் பெயர். மார்கழி மாதம் வளர்பிறையில் வருவது 'மோட்ச ஏகாதசி'. இதையே வைகுண்ட ஏகாதசியாகக் கொண்டாடுகிறோம். வைகுண்ட ஏகாதசி தனிமனிதனுக்கும் சமுதாய விரதமாய் இருப்பதால் தனி மனித உடல்நலமும் மனநலமும் அதிகரிக்கின்றன.

    முன்னோருக்கும் அருளும் ஏகாதசி

    கம்பம் நகர மன்னர் வைகானசர் வேதத்தில் கரை கண்டவர்களை அழைத்தார். நேற்று வந்த கனவில் என் முன்னோர்கள் நரகத்தில் இருந்து தங்களை விடுவிக்க ஏதாவது வழி செய்யக் கேட்டனர்? என்று கதறி அழுதார்கள். இதற்கு என்ன செய்ய வேண்டும் எனக்கேட்க, பர்வதர் என்னும் முனிவர் உன் தந்தை, அரச பதவி போதையில் மனைவியை அலட்சியம் செய்து மறைந்தான். அதனால் அவனுக்கு நரகம் கிடைத்திருக்கிறது.

    உன் மனைவி மக்களுடன், மோட்ச ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து, நாராயணனை பூஜை செய்து பலனை உன் முன்னோர்களுக்கு அர்ப்பணம் செய்வாயெனக் கூற, அவ்வாறே செய்ய, முன்னோர்கள் நரகத்தில் இருந்து விடுதலை பெற்று, மகனை ஆசிர்வதித்தனர். விதர்ப்ப மன்னன் ருக்மாங்கதன் நந்தவனத்தில் தேவலோகப் பெண்கள் மணமிகு பூக்கள் மீது ஆசை கொண்டு தினமும் பறித்துக் கொண்டு போனார்கள். மன்னன் திருடனைப் பிடிக்க குமட்டி விதைகளை விதைத்தான். ஒருநாள் தேவலோகப் பெண்காலில், வளர்ந்த கொடியொன்று சிக்கிட அவள் பூமியில் இருக்க வேண்டியதாயிற்று. மன்னனிடம் தேவலோகப்பெண் தேவலோகம் போக வழி செய்யும்படி கேட்டாள். மன்னன் உபாயம் கேட்க அவள் ஏகாதசியின் பெருமையை கூறி, ஏகாதசி விரதப்பலனை தானமாகத் தந்தால் தான் போக முடியும் என்றாள். மன்னன் யாராவது அதுபோல் இருந்தால் தெரிவிக்கக் கூறினான். அரண்மனையில் இருக்கும் துணி வெளுக்கும் பெண் ஏகாதசி விரதம் இருப்பவள் . அவள் ஏகாதசி பலனை தேவலோக மங்கைக்குத்தர அவள் தேவலோகம் போய் சேர்ந்தாள். ஏகாதசி விரத மகிமையை அறிந்த மன்னன் நாட்டு மக்கள் அனைவரையும் ஏகாதசி விரதம் கடைபிடிக்கக் கூறி அவனும் கடைபிடித்து நடந்தான்.

    திருக்கோவில்களில்…

    தனுர் மாதமான மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை பிரம்ம முகூர்த்தம். இனிமையாகவும் இருப்பதால் ஸ்ரீமன் நாராயணனை பூசை செய்ய மிகச்சிறந்த காலமாக விளங்குகிறது. மார்கழி மாதத்தில் சுக்ல பட்ச பிரதமை தொடங்கி 20 நாட்கள் பெருமாளுக்கு அத்யயன உற்சவம் நடக்கும். இதனை திருமொழித் திருநாள் திருவாய்மொழித் திருநாள் என்றும் குறிப்பிடுவார்கள் . பகல் பொழுதில் பத்து நாட்களும் இரவுப் பொழுதில் 10 நாட்களும் நடைபெறும். இதை "அத்யயன உற்சவம்" என்று குறிப்பிடுவார்கள். நடுநாயகமாய் அமையும் ஏகாதசிக்கு முந்தய 10 நாட்கள் நடக்கும் வைபவம் மோட்ச உற்சவம் எனப்படுகிறது.

    அப்போது நடுநாயகமாக பெருமாள் வீற்றிருக்க அவருக்கு எதிரில் அனைத்து ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் வரிசைக் கிரமப்படி எழுந்தருளியிருப்பார்

    பகல்பத்து ராப்பத்து வரலாறு

    திருமங்கையாழ்வாரால் திருவரங்கன் ஆணைப்படி வைகுண்ட ஏகாதசி் உற்சவம் திருவரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது. தனது திவ்யதேச யாத்திரைகளை முடித்த திருமங்கையாழ்வார் திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் போது திருக்கார்த்திகை மகோற்சவத்தன்று திருவரங்கன் எதிரில் திருநெடுந்தாண்டகத்தை தேவகானமாக பாடி அபிநயம் பிடித்தார்.

    திருவரங்கன் ஆழ்வாரிடம் "உமது கானத்தில் மகிழ்ந்தோம். உமக்கு என்ன வேண்டும்?" எனக்கேட்க அவரும் அரங்கனிடம் வேதத்தைவிட பொருள் செறிந்த நம்மாழ்வாரின் திருவாய்மொழியை மார்கழி சுக்ல ஏகாதசி முதல் வேதங்களோடு கேட்டு அருள வேண்டும் என்றார். அரங்கனும் ஏற்றார். உடன் ஆழ்வார் திருநகரியில் உள்ள நம்மாழ்வாருக்கு ஸ்ரீமுகம் அனுப்பி மதுரகவி ஆழ்வார் அவருடைய சடகோபரையும் எழுந்தருளச் செய்து அதற்கு நம்மாழ்வார் என்ற திருநாமம் சார்த்தி ஏகாதசி அன்று வேதங்கள் தொடங்கியதும் இரவில் மதுரகவியாழ்வார் கானம் செய்த நம்மாழ்வாரின் திருவாய்மொழியை கேட்டருளினார். பத்தாம் நாள் வேதங்களை பூர்த்தி செய்து ஆழ்வாரின் திருவாய்மொழி நிறைவுடன் நம்மாழ்வாரைத் தன் திருவடியில் சேர்த்துக் கொண்டு அவருக்கு தம்முடைய மாலை பரிவட்டம் முதலியவற்றை அளித்து ஆழ்வார் திருநகரிக்கு அனுப்பி வைத்தார் என்பது வரலாறு.

    பகல்பத்து பொதுவாக திருக்கோயில்களில் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இருபது நாட்களிலும் பெருமாளுக்கு விசேஷ அலங்காரங்கள், அவதார லீலைகள், பரமபதநாதன், அன்று ஓதப்படும் திவ்யதேச பெருமாள் ஆகிய திருக்கோலங்களில் அருள்வார். பத்தாம் நாள் பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் காட்சி நல்குவார். சொர்க்கவாசல் பள்ளி கொண்ட பெருமாள் நாபிக் கமலத்தில் உருவான பிரம்மனுக்கு அகந்தை உண்டானது. பகவானின் காதுகளில் இருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டு பிரும்மாவைக் கொல்ல முயல பெருமாள் அவர்களைத் தடுத்து 'அவரைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கு வேண்டும் வரம் தருவேன்' என்றார். அசுரர்களோ அலட்சியமாக, "நாங்கள் உனக்கே வரம் தருவோம்" என்றார்கள்.

    பகவான் அவர்களிடம் "அகங்காரம் அதிகமான நீங்கள் என்னால் வதம் செய்யப்படுவீர்கள். பிறகு ராட்சசர்களாகவே பிறப்பிர்கள்" எனக் கூறினார். அசுரர்கள் திகைத்து "தங்களோடு ஒரு மாத காலம் நாங்கள் சண்டையிட்டு சித்தி அடைய வேண்டும்" என வேண்டினர். அவர்கள் விரும்பியபடி போரிட்டு, வதைத்தார். மாலவனின் குணமுணர்ந்த அசுரர்கள், "தெய்வமே! நாங்களினி பரமபதத்தில் நித்திய வாசம் செய்ய வேண்டும்" என வேண்டினர். ஒரு மார்கழி மாதம், வளர்பிறை ஏகாதசியன்று (பரமபதத்தின்) வடக்கு நுழைவாயிலைத் திறந்து, அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்தார்.

    அவர்களும் மகிழ்ந்து "மார்கழி சுக்ல ஏகாதசியன்று எங்களுக்கென சொர்க்க வாசல் திறந்த திருநாளை பூவுலகில் உள்ள திருக்கோவில்களில் திருவிழாவாகக் கொண்டாடப்பட வேண்டும்" என வேண்டினர். அதுமுதல் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி தினத்தில் இல்லத்தில் உபவாசமோ குறை உணவு உண்டோ விரதம் இருந்து வழிபடுவதுடன் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தில் கலந்துகொள்வதாலும், பெருமாளைத் தரிசித்து வழிபடுவதாலும் மறுநாள் துவாதசி உணவு கொண்டு விரதம் முடித்தால் இம்மை செழிக்கும்; மறுமை சிறக்கும். சகலசவுபாக்கியங்களும் கிடைக்கும்.

    சொர்க்கவாயில் அமைவிடம்

    கோவில்களின் நாற்புறவாயிலில் வடக்குப்புறவாயில் சொர்க்கவாசலுக்காகவே பயன்படுகிறது. கோவிலுக்குள் அமைந்திருக்கும் சொர்க்கவாசல் அனேகமாக வடதிசையில் அமைந்திருக்கிறது. பகல்பத்தில் இந்த வாயில் திறக்கப்படுவதில்லை. வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை அல்லது வழக்கப்படி பெருமாள் உட்புறம் இருக்க வெளியில் நம்மாழ்வார் நிற்க சுப நேரத்தில் கதவுகள் திறக்கப்பட்டு எதிர்சேவையுடன் தீபாராதனை நடந்து வாயிற்படி கடந்து வெளிவர நம்மாழ்வாருடன் பக்தர்களும் தரிசனம் செய்வர். ராப்பத்தின் 10 நாட்களும் சொர்க்கவாயில் திறந்து இருக்கும். தொண்டைநாட்டில் சொர்க்கவாசல் பகல்பத்து இறுதியன்று திறக்கப்பட்டு தரிசனம் நடைபெறும். காஞ்சிபுரத்தில் அஷ்டபுஜப்பெருமாள் கோவிலில் மட்டும் சொர்க்கவாசல் உள்ளது.

    பகல்பத்து அன்று அனைத்து நவதிருப்பதி கோவில்களிலும் சயனக்கோல தரிசனம் நடைபெறும். இரவில் ராப்பத்து தொடங்கும் முன் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் இரவு 8 மணிக்கு மேல், தென் திருப்பேரை மகர நெடுங்குழைநாதர் கோவிலில் இரவு 1 மணி சுமாருக்கும் ஆழ்வார்திருநகர் ஆதிநாத ஆழ்வார் திருக்கோவிலில் இரவு இரண்டு மணிக்கு மேலும் சொர்க்கவாசல் திறந்து சேவையாகும்.

    உலகில் பிறந்தவர் வைகுந்தத்தில் இருந்து அருளும் நாராயணன் திருவடியை இறுதியில் அடைவர் என்பது உலக இயல்பு. அதன்படி ஜீவாத்மா தன்னை தயார் செய்து கொள்ள ஏகாதசி விரதங்களும் சேவை சாற்றுமுறை போன்றவை பயன்படுகின்றன.

    ×