search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "egmore court"

    வெளிநாட்டில் வாங்கிய சொத்துக்களை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நளினி சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். #NaliniChidambaram #KartiChidambaram
    சென்னை:

    அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாட்டில் வாங்கிய சொத்துக்களை மறைத்ததாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் மீது வருமான வரித்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    இதுதொடர்பாக கடந்த வாரம் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்திக் சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி கார்த்திக் ஆகியோர் ஜன் 25-ம் தேதி ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.

    அதன்படி, இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம், மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் ஆஜராகினர்.

    இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையை அடுத்து, ஜூலை 23-ம் தேதி கார்த்திக் சிதம்பரத்தை மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்தது. #NaliniChidambaram #KartiChidambaram
    பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. #SVeShekar
    சென்னை:

    பா.ஜனதா கட்சி பிரமுகரும், காமெடி நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக வெளியிட்டிருந்த கருத்து கடும் எதிர்ப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், எஸ்.வி. சேகர் மீது சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள அல்லிகுளம் எழும்பூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

    இதனை தொடர்ந்து எஸ்.வி.சேகர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி எஸ்.வி.சேகர் இன்று காலை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் ஆனார். அப்போது அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். மனுவை பரிசீலித்த நீதிமன்றம், எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது. மேலும், ஜூலை 18ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்தது.



    பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் எஸ்.வி.சேகர் ஆஜரானதால், கோர்ட்டு வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #SVeShekar 
    பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகர் எழும்பூர் கோர்ட்டில் இன்று ஆஜரானார். #SVeShekar
    சென்னை:

    பா.ஜனதா கட்சி பிரமுகரும், காமெடி நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக வெளியிட்டிருந்த கருத்து கடும் எதிர்ப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் எஸ்.வி.சேகர் இந்த வழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்காக கோர்ட்டை நாடினார்.

    ஆனால் கோர்ட்டு முன் ஜாமீன் அளிக்கவில்லை. சாதாரண நபர்கள் மீது இதுபோன்ற வழக்குகளில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ? அதே நடவடிக்கையை எஸ்.வி.சேகர் மீது எடுக்கலாம் என்று கோர்ட்டு பரிந்துரைத்தது. இருப்பினும் எஸ்.வி.சேகரை போலீசார் கைது செய்யவில்லை.

    இதற்கிடையே எஸ்.வி. சேகர் மீது சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள அல்லிகுளம் எழும்பூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டால் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டியதில்லை என்று சட்டம் சொல்கிறது.

    இதன் காரணமாகவே மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் அவர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து எஸ்.வி.சேகர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதன்படி எஸ்.வி.சேகர் இன்று காலை 10 மணி அளவில் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் ஆனார். இதற்காக சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள அல்லி குளம் கோர்ட்டு வளாகம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.



    கோர்ட்டு வளாகத்தில் 3 வாயில்களிலும் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். துணை கமி‌ஷனர் சரவணன் தலைமையில் கோர்ட்டு வளாகம் முழுவதிலும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    எஸ்.வி.சேகர், கோர்ட்டில் ஆஜராவதை படம் பிடிப்பதற்காக ஏராளமான பத்திரிகையாளர்கள் திரண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் கோர்ட்டு வளாகத்தினுள் அனுமதிக்கப்படாமல் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

    எஸ்.வி.சேகர் காரில் கோர்ட்டு வளாகத்தில் நுழைந்ததும், பத்திரிகையாளர்களும் படம் எடுப்பதற்காக முண்டியடித்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் லேசான மோதல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பத்திரிகையாளர்கள் போலீஸ் எதிர்ப்பை தாண்டி முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

    எஸ்.வி.சேகருடன் காரில் போலீஸ்காரர் ஒருவரும் பாதுகாப்புக்காக உடன் வந்தார். காரில் இருந்து இறங்கியதும் எஸ்.வி.சேகரை சூழ்ந்து கொண்ட போலீசார் அவரை சுற்றி அரண் போல நின்றனர். பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்குள் எஸ்.வி.சேகர் ஆஜராவதற்காக அழைத்துச் செல்லப்பட்டார். எஸ்.வி. சேகருக்கு வரலாறு காணாத வகையில் போலீசார் பாதுகாப்பு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #SVeShekar

    சொகுசு கார் இறக்குமதி வழக்கிலிருந்து நடராஜனை விடுவிக்க அவரது இறப்பு சான்றிதழை வருகிற 27ந்தேதி தாக்கல் செய்யுமாறு எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சசிகலாவின் கணவர் நடராஜன், கடந்த 1994-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்தார். புதிய கார் என்றால், அதிக வரி செலுத்த வேண்டும் என்பதற்காக, இந்த கார் 1993-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாக போலி ஆவணங்கள் மூலம் இறக்குமதி செய்ததாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    இதனடிப்படையில், இதே குற்றச்சாட்டுக்காக மத்திய அமலாக்கப்பிரிவு தனியாக வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் நடராஜன் உள்பட பலர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கை எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

    இந்த வழக்கு நீதிபதி மலர்மதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடராஜன் இறந்து விட்டதாகவும், அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் அவரது வக்கீல் வாதிட்டார். இதையடுத்து நடராஜனின் இறப்பு சான்றிதழை வருகிற 27ந்தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.

    சொகுசு கார் இறக்குமதி செய்தது தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில், நடராஜன் உள்ளிட்டோர் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    எஸ்.வி.சேகர் ஜூன் 20-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை எழும்பூர் கோர்ட் மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பியுள்ளார். #SVShekher #EgmoreCourt #Summon
    சென்னை:

    நகைச்சுவை நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

    புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி. சேகர் மீது, பெண் வன்கொடுமைச் சட்டப்பிரிவு உள்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே, இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதேபோல, இவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று பத்திரிகையாளர் முரளிகிருஷ்ணன் சின்னத்துரை, நக்கீரன் பிரகாஷ், ஜெ.கவின்மலர், பெண் வக்கீல்கள் சங்கம் உள்பட ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர்.

    இதில் அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட், எஸ்.வி.சேகரை கைது செய்வதில் எந்தத் தடையும் இல்லை என உத்தரவிட்டது. ஆனாலும் போலீசார் அவரை இன்னும் கைது செய்யவில்லை.

    இந்நிலையில், ஜூன் 20-ல் சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் அளித்துள்ள சம்மனில், ஜூன் 20-ம் தேதி காலை 10 மணிக்கு எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #SVShekher #EgmoreCourt #Summon
    ×